சமீபத்திய பதிவுகள்

தந்தை பெரியாரை பின்பற்றும் பேய்கள்

>> Thursday, January 31, 2008

தந்தை பெரியாரின் தவப்புதல்வர்களே!!!!

அன்புள்ள

இதுதான் உண்மை இணையத்தாருக்கு

உங்களின் இணைய கடிதம் கண்டவுடன் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
 
                  http://idhuthanunmai.blogspot.com/2008/01/to-z.html

மூடப்பழக்கவழக்கங்களை

துடைத்தெரிய வேண்டிய நீங்கள் அதைவிட்டு உண்மையான சமத்துவ சீர்திருத்தத்தை சொன்ன இயேசு கிறிஸ்துவை சாடி இருப்பது உங்களின் பக்குவமின்மையை அருமையாக எடுத்துக்காட்டியது.
 
1,
உலகில் முதன் முதலில் உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் இயேசுகிறிஸ்து மட்டுமே.கடவுளுக்கு மனிதர்கள் அடிமைகள்,சடங்காச்சாரங்களே கடவுளை அடையும் வழிமுறைகள் என்று பரவி இருந்த உலகில் மனிதர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்,மற்ற மனிதனை நேசிப்பதே கடவுளுக்கு செய்யும் தொண்டு என்று போதித்தவர் இயேசு.

2,

கடவுள் கோவிலில் குடியிருப்பார் அல்லது ஏதோ ஒரு சிலையில் கடவுள் இருப்பார் என்ரு நம்பிக்கை இருந்த காலத்தில் அவர் எங்கும் நிறைந்தவர்,எல்லா மனிதர்களும் கடவுள் குடியிருக்கும் கோவிலாக மாற முடியும்.ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் சமம் என்பதை உலகுக்கு அறிவித்தார் இயேசு.

3,

விபச்சாரம் செய்த ஆணை தப்ப விட்டு பெண்ணை மட்டும் பிடித்து வந்து அவளை கல் எறிந்து கொல்ல ஆசைப்பட்ட சமுதாயதாயத்தில் பாவமே செய்யதவன் இருந்தால் முதல் கல் எறியட்டும் என்று சொல்லி கடவுள் பெயரில் மனிதனை தண்டிக்க எவனுக்கும் அதிகாரம் இல்லை என்பதை இயேசு உலகுக்கு உணர்த்தினார்.

 

4,

குறிபிட்ட சந்ததி அல்லது ஜாதியில் பிறந்தவன் மட்டுமே கடவுளின் பணி செய்ய முடியும் என்ற நிலையில் இருந்த காலத்தில் சமுதாயத்தில் எந்த நிலையில் இருப்பவனும் இறை பணியாற்ற முடியும் என்று உலகுக்கு காண்பித்தவர் இயேசு கிறிஸ்து.

5,

உலகின் முதல் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியாவ்ர்கள் கிறிஸ்துவின் சீடர்களே என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.ஆனால் அது வரலாற்று உண்மை.

6,

ஆண்கள் தவறு செய்ய பெண்கள் தான் காரணம்.எனவே அவர்கள் தங்கள் கண்களையும்(முகத்தை என்று விவாதம் செய்பவர்கள் உண்டு),கைகளையும்,கால் பாதங்களையும் தவிர அனைத்தையும் மூடிய நிலையில் வெளியே வரவேண்டும் என்று பெண்ணடிமைத்தனத்திற்கு கட்டளையிட்டவர்கள் மத்தியில் பெண்களுக்கு சம உரிமை வழங்கியது கிறிஸ்துவே.

7,

கடவுள் பெயரில் மனிதனை கொல்லுவது,ஜாதியின் பெயரில் மனிதனை தீண்டத்தகாதவன் என்று ஒதுக்குவது இது போல் செய்யும் மதங்கள் நடுவில் மனிதனை நேசிப்பது எப்படி என்று உலகுக்கு காண்பிப்பது கிறிஸ்துவின் வழியே.

8,

ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்யலாம் ஏன் என்றால் ஆணுக்கு தன்னை அடக்கி கொள்ள முடியாது.வேண்டும் என்றால் வேறு நாட்டில் இருந்து பிடித்து வந்த அடிமைகளை அதாவது மற்ற ஆண்களின் மனைவிகளையும் அனுபவித்துக்கொள்ளட்டும் என்று விபச்சாரத்துக்கு வர்ணம் பூசி ஆண்டவன் பெயரில் அறிவித்தவர்களை எல்லாம் "உலகின் அழகிய முன் மாதிரி" என்று வர்ணிக்கப்படுகிற காலத்தில் திருமணம் என்பது இறைவனால் இணைக்கப்படுவது,அதில் எந்த பிரிவினையும் வரக்கூடாது.ஆணோ,பெண்னோ அந்த உறவில் தவறக்கூடாது என்ற அழகிய .முன்மாதிரியை தந்தவர் இயேசு.

தன்னைப்போல்

பிறரை நேசி,ஏழைக்கு இரங்குகிவன் கர்த்தருக்கே கடன் கொடுக்கிறான்,அனைத்து மக்களையும் நேசிக்கவேண்டும்,.ஒவ்வொரு மனிதனும் விலை மதிப்பற்றவன்.அவனை திட்டுவதே அவனை உண்டாக்கிய கடவுளை அவமதிப்பதாகும் என்றும் ,கடவுளின் பெயரில் மற்றவர்களை கொல்லச்சொல்லும் மதங்கள் நடுவில் மற்றவர்களுக்காக உயிர்தியாகம் செய் என்று கற்றுத்தருவது கிறிஸ்துவின் தெய்வீக வழியாகும்.இந்த அற்புதமான கொள்கைகளை தவிர மக்களுக்கு நன்மை உண்டாக்கும் வேறு கொள்கைகளை தந்தை பெரியார் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இப்படி

இருக்க தேவையில்லாமல் இயேசுவை பற்றி தவறாக எழுதி பெரியாரின் உண்மை வழியை மக்களிடன் இருந்து மறைத்துவிடாதீர்கள்.

பிரிவுகள்

என்பது எல்லா இடங்களிலும் உள்ளது.இந்த உலகத்தில் பிரிவு இல்லாத ஒன்றை நீங்கள் காட்ட முடியுமா? எந்த மதங்களில் பிரிவு இல்லை,எந்த கட்சியில் பிரிவுகள் இல்லை என்ரு சொல்லுங்கள் .ஏன் உங்கள் பெரியாரியத்தில் பிரிவு இல்லையா?அதை பற்றி விளக்கமாக எழுதவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்.

கடைசியாக

ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.பெரியாரை மதிக்கிறோம்,அவர் சொன்ன கருத்துகளில் உள்ள உண்மைகளை மதிக்கிறோம்.கிறிஸ்தவத்தில் தவறுகள் உண்டு.அதை சாடுங்கள் தவறில்லை.ஆனால் இயேசுகிறிஸ்துவையோ,அல்லது அவரது உபதேசத்தை பற்றியோ பெரியாரியம் என்ற பெயரில் நீங்கள் எழுதும் வாய்சவாடல்களை பொருத்துக்கொள்ள முடியாது.தேவையில்லாமல் எழுதுவதை நீங்கள் தொடர்ந்தால் பெரியாரியத்தை பற்றியும் உங்கள் தலைவர் கீ.வீரமணி பற்றியும் எழுத வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
 
 
http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_31.html
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

3 கருத்துரைகள்:

Unknown January 31, 2008 at 9:52 PM  

நன்பரே, நீங்கள் கிறிஸ்துவ மதத்தை பற்றி கூறியிருப்பவை எல்லாம் உண்மையா? கிறிஸ்துவ மதத்தில் மூட நம்பிக்கையே இல்லையா? இந்து மத்த்தில் உள்ள மூட நம்பிக்கைகளை விட இன்று கிறிஸ்துவ மதத்தில் தான் மூட நம்பிக்கைகள் அதிகமாக உள்ளது. சமீபத்தில் கோயமுத்துரில் இறந்த போன ஒருவரின் சடலத்தை ஒரு மாத காலம் வைத்துக் கொண்டு அவர் மீண்டும் உயிர் பிழைப்பார் என்று ஒரு குடும்பம் ஜபம் செய்து கொண்டிருந்ததே அது என்ன நம்பிக்கை?

கிறிஸ்துவ மதத்தில் சமத்துவமா? நீங்கள் விருதுநகர், தூத்துக்குடி பக்கம் போனால் அங்கு தலித் கிறிஸ்துவர்களுக்கு தனி சர்ச், மேல் ஜாதியனருக்கு தனி சர்ச் உள்ளது.

கிறிஸ்துவ மதம் எப்போதோ அதன் முற்போக்கு தன்மையை இழந்து விட்டது. இன்று உலகத்திலேயே அது தான் அதிக மூட நம்பிக்கைகளை கொண்ட மதம்.

ஆகவே நீங்கள் இந்த மாதிரி பதிவு போட்டால் உடனே பொய் உண்மையாகி விடாது. அது போல அய்யா பெரியாரை பற்றி விமர்சிக்கவோ உங்களுக்கு தகுதியில்லை. இன்று அய்யா மற்றும் உயிரோடு இருந்திருந்தால், அவர் கண்டிப்பாக கிறிஸ்துவ மத்த்தில் உள்ள மூட நம்பிக்கைகளை எதிர்த்து போராடியிருப்பார்.

அந்த இணையம் என்பது ஒரு தொழில்நுட்பம் அதில் இந்த மாதிரி ஒன்றுக்கும் உதவாத விஷயங்ளை விவாதிப்பதை விட்டு விட்டு, சமுதாயத்திற்கு உதவியாக ஏதாவது செய்யுங்கள்.

தெய்வமகன் February 1, 2008 at 12:14 AM  

அண்ணே இந்த கட்டுரை என்னுடையது இல்லை.வேறு தளத்தில் இருந்து பதித்தது.அந்த தளத்தில உங்க கருத்த கொடுக்கரேன்.நன்ரி

உண்மை அடியான் February 1, 2008 at 2:17 AM  

அன்பு சகோதரரே முதலாவது நீங்கள் அறிய வேண்டியது,உங்கள் தலைப்புக்கும் என் கட்டுரைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை


//நன்பரே, நீங்கள் கிறிஸ்துவ மதத்தை பற்றி கூறியிருப்பவை எல்லாம் உண்மையா? கிறிஸ்துவ மதத்தில் மூட நம்பிக்கையே இல்லையா? இந்து மத்த்தில் உள்ள மூட நம்பிக்கைகளை விட இன்று கிறிஸ்துவ மதத்தில் தான் மூட நம்பிக்கைகள் அதிகமாக உள்ளது. சமீபத்தில் கோயமுத்துரில் இறந்த போன ஒருவரின் சடலத்தை ஒரு மாத காலம் வைத்துக் கொண்டு அவர் மீண்டும் உயிர் பிழைப்பார் என்று ஒரு குடும்பம் ஜபம் செய்து கொண்டிருந்ததே அது என்ன நம்பிக்கை?//

கிறிஸ்தவ மதத்தை பற்றி நான் பேசவே இல்லை சகோதரரே.மூட நம்பிக்கை எங்கிருந்தாலும் அது எதிர்க்கப்படவேண்டியதுதானே.அடெஇல் என்ன சந்தேகம்.நான் உங்கள் முன் வைத்தது கிறிஸ்துவின் வழியை மட்டுமே.


//கிறிஸ்துவ மதத்தில் சமத்துவமா? நீங்கள் விருதுநகர், தூத்துக்குடி பக்கம் போனால் அங்கு தலித் கிறிஸ்துவர்களுக்கு தனி சர்ச், மேல் ஜாதியனருக்கு தனி சர்ச் உள்ளது.//

கிறிஸ்துவின் வார்த்தைக்கும் இதற்கும் ஏதாவதும் சம்மந்தம் உண்டா?



//கிறிஸ்துவ மதம் எப்போதோ அதன் முற்போக்கு தன்மையை இழந்து விட்டது. இன்று உலகத்திலேயே அது தான் அதிக மூட நம்பிக்கைகளை கொண்ட மதம்.//

நீங்கள் சொல்லுவது பாதி தவறு,பாதி சரி.கிறிஸ்தவம் இன்றைக்கும் அதன் தனித்தன்மையை இழக்கவில்லை.ஆனால் கிறிஸ்தவ மதத்திலும் மூட நம்பிக்கை உண்டு

//ஆகவே நீங்கள் இந்த மாதிரி பதிவு போட்டால் உடனே பொய் உண்மையாகி விடாது. அது போல அய்யா பெரியாரை பற்றி விமர்சிக்கவோ உங்களுக்கு தகுதியில்லை. இன்று அய்யா மற்றும் உயிரோடு இருந்திருந்தால், அவர் கண்டிப்பாக கிறிஸ்துவ மத்த்தில் உள்ள மூட நம்பிக்கைகளை எதிர்த்து போராடியிருப்பார்.//

பெரியாரை யார் ஐயா விமர்ச்சனம் பண்ணியது.பெரியாரியம் என்ற பெயரில் செய்ய வேண்டியதை செய்யுங்கள் என்று சொன்னோம்.பெரியார் உயிரோடு இருந்திருந்தால் பெரியாரோடு நாங்களும் சேர்ந்து கிறிஸ்தவத்தின் மூட நம்பிக்ககளை கழைய போராடி இருப்போம்.

//அந்த இணையம் என்பது ஒரு தொழில்நுட்பம் அதில் இந்த மாதிரி ஒன்றுக்கும் உதவாத விஷயங்ளை விவாதிப்பதை விட்டு விட்டு, சமுதாயத்திற்கு உதவியாக ஏதாவது செய்யுங்கள்.//

சமுதாயம் நல்ல நிலை அடைய வேண்டும் என்பதில் உங்களை விட எங்களுக்கு அதிக அக்கறை உண்டு.கவலைபடாதீர்கள்

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP