சமீபத்திய பதிவுகள்

மனித வாழ்க்கையின் முடிவு இதுதானோ?என்னா ஒரு பரிதாபம்

>> Wednesday, May 14, 2008

குப்பையில் மூதாட்டி பிணம்: நாய்கள் குதறிய பரிதாபம்
புதன்கிழமை, மே 14, 2008  
    

சேலம்: சேலத்தில் குப்பையில் கிடந்த மூதாட்டியின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அம்மாபேட்டை கூட்டுறவு மேலாண்மை மையம் அருகே மாநகராட்சி குப்பைகள் கொட்டும் கிடங்கு உள்ளது. இந்த குப்பை மேட்டில் ஒரு மூதாட்டியின் சடலம் அநாதையாக கிடந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்குள் அந்த இடத்தில் குவிந்த தெரு நாய்கள் மூதாட்டியின் உடலை கடித்து குதறி விட்டன. இதனால் அப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து பொதுமக்கள் நாய்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அம்மாபேட்டை போலீசார், அந்தப்ப்பகுதி தங்களது லிமிட்டில் இல்லை என்று கூறி திரும்பிச் சென்று விட்டனர்.

இதனால் பல மணி நேரம் அந்த உடல் அப்படியே கிடந்தது. பின்னர் தகவலறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மூதாட்டியின் உடலை குப்பைக்கு அருகிலேயே குழி தோண்டி புதைத்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2008/05/14/tn-dog-tore-old-ladys-dead-body.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP