சமீபத்திய பதிவுகள்

ஒருவனுக்கு ஒருத்தி இந்தியாவின் போற்றத்தக்க கலாச்சாரமாக மாறி இருக்கிறது என்றால் அதுக்கு யார் காரணம்.

>> Tuesday, May 13, 2008

 

இப்படிக்கு ரோஸ் - ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !

சென்றவாரம் விஜய் டிவியில் 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியைக் கண்டேன். பாலியல் பற்றிய சுவையார்வமான கலந்துரையாடல்கள் (விவாதம்), அதில் கலந்து கொண்டவர்கள் அந்நிகழ்ச்சியை நடத்தும் திருநங்கை, சாரு, முன்பு பாலியல் தொழிலாளியாக இருந்த கேரளாவைச் சேர்ந்த ஜமிலா மற்றும் இன்னொரு பெண் பெயரைக் கவனிக்க வில்லை.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை நம்புகிறீர்களா ? என திருநங்கை கேட்க, சாரு அதனை மறுத்தார். ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் ஆண் அளவில் ஏமாற்றவது தான். ஆண்களில் பலர் ஒரு மனைவியுடன் திருப்திப் பட்டுக் கொள்வதில்லை. நமது இந்தியாவில் மூன்று தலைமுறைக்கு முன்பு வரை ஒரு ஆண் பலரை திருமணம் செய்துக் கொண்டிருந்தார்கள், தற்பொழுது சமூக சூழலில் பல திருமணங்கள் செய்து கொள்ளாவிட்டாலும், திருமணம் ஆன ஆண்கள் பலர் வேறு பெண்களை நாடிச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள் என்றார்.

அதையே ஜெமீலாவும் ஆமோதித்து, இந்தியாவில் ஒரு காலத்தில் தேவதாசிகள் என (கும்பகோணம்) கோவில்களில் பெண்களை வைத்து பாலியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டனர். இந்த பெண்களை பெரும்பாலும் (பாழாக்கியது) அரசர்கள், அவர்களின் கைக்கூலிகள், கோவில் தர்மகர்த்தாக்கள், கோவிலைச் சேர்ந்தவர்களே. அவர் மேலும் சொன்னார் 'எனது அனுபவ்தில் திருமணம் ஆன ஆண்களின் பெரும்பகுதியினர் வேற்று பெண்களை நாடுபவர்களாகவே இருக்கின்றன. சுகத்துக்காக அவர்களை நாடுபவர்கள் பலர், ஒரு சிலரே அதிலேயே விழுந்து கிடந்து குடும்பத்தையே மறந்துவிடுவார்கள்' என்றார்

மேலும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரமெல்லாம் வெள்ளைக்காரர்கள் நம்மீது திணித்தது, கிறித்துவ சமயத்தில் மட்டுமே ஒருவர் ஒரு சமயத்தில் ஒரு மனைவியைக் கொண்டிருப்பார், அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லை என்றால் விவகாரத்து செய்துவிட்டு அடுத்து திருமணம் செய்து கொள்வார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை ஒரே நேரத்தில் கிறித்துவர்கள் மணந்து கொள்ள அவர்களின் சட்டத்தில் இடமில்லை. மேலும் அதை அந்த பெண்களும் சகித்துக் கொண்டு அனுமதிப்பதில்லை. இந்தியாவில் சுதந்திர போராட்டத்துக்கு முன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரமெல்லாம் இருந்ததே இல்லை. நம் இந்து கடவுள்களுக்கு இருக்கும் மனைவிகளே நமது இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகத்தானே இருக்கிறது. என்றெல்லாம் சொன்னார்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நம்மீது திணிக்கப்பட்ட கலாச்சாரம் ஆகும், அந்த திணிப்பை ஏற்றுக் கொள்ளாதவனாக மன அளவில் இருப்பதாலேயே ஆண் வேலி தாண்டுபவனாக இருக்கிறான் என்று ஒரே போடாக போட்டார்.

சாரு மற்றும் ஜமீலா சொல்வதில் உண்மை இருக்கலாம், பலரின் தாத்தாக்கள் அந்த காலத்தில் வைப்பாட்டிகள் வைத்துக் கொண்டவர்களாகவும், பலதாரமணம் புரிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

********

தென்னகத்தில் இராமயணமும், இராமரும் போற்றப்பட்டதற்கு காரணமே, வடமொழி இராமயணங்களில் இல்லாத ஒன்றாக, 'ஒருவனுக்கு ஒருத்தி' எனற மையக்கருத்தாக கம்ப ராமயணத்தை கம்பர் ஆக்கி காவியம் படைத்திருந்ததால் தான். அந்த மையக்கருத்து இல்லை என்றால் கம்பராமயணம், வில்லி பாரதம் போல் மற்றொமொரு மொழிப்பெயர் கதையாகவே இருந்திருக்கும். தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள், அவன் மகனுக்கு ஒண்ணே ஒன்ணு என்றாலும், தசரதனுக்கு இருந்த மனைவிகள் வெறும் செய்தி அளவிலும், இராமர் - சீதை பாத்திரம் கதையின் ஓட்டமாக இருப்பதால் தசரதனின் பலதாரம் பேசப்படாமல் இராமனின் ஒரே மனைவியுடன் நின்றான் என்பது உயர்வாகப் பேசப்படுகிறது. அப்படி வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கதைப் பாத்திரமே உயர்வென்றால் உண்மையில்யே ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்துவந்த கிறித்துவ சமூகமே போற்றத்தக்கது தானே ?

இந்திய கலாச்சாரத்தில் பெரும அளவில், ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்ததே இல்லை. தற்போதைய இந்திய திருமண கட்டுக்கோப்பு கிறித்துவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டவையே. பண்டைய காலத்தில் இந்திய ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்திருந்தது இல்லை. ஆனால் பெண்கள் கணவனே கண்டண்ட தெய்வமாக வாழ்ந்துவந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். இந்தியாவில் குடும்பம் என்ற அமைப்பே பெண்களால் கட்டிக்காக்கப்பட்டு வந்தது, ஆண் வெறும் பொருளியல் உதவி செய்பவனாகவும், பாதுகாவலனாகவும் இருந்துவந்தான். இது தெரிந்தாலும், இந்திய பெருமை, இந்து பெருமை பறைசாற்றும் நமது இந்துத்துவாக்கள், பல மனைவிகளை உடைய தெய்வங்களை போற்றிக் கொண்டே முகமது நபிக்கு 11 மனைவிகள் இருந்ததைப் பெரிய குறையாகவாகவும் இழிவாகவும் சொல்லி இஸ்லாமியர்களை பழித்துவருகின்றன.

ஒருவனுக்கு ஒருத்தி இந்தியாவின் போற்றத்தக்க கலாச்சாரமாக மாறி இருக்கிறது என்றால் அது இந்தியர்களுக்கு கிறித்துவர்கள் (வெள்ளைக்காரர்கள்) கொடுத்த கொடையே !

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP