சமீபத்திய பதிவுகள்

சுழலும் கட்டடம் - துபாயில் இன்னொரு அதிசயம் !

>> Monday, June 30, 2008

சுழலும் கட்டடம் - துபாயில் இன்னொரு அதிசயம்!
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 29, 2008  
இலவச நியூஸ் லெட்டர் பெற RSS thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

Rotating Tower of Dubai
துபாய்: மேற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக, துபாயில் சுழலும் கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த கட்டடம், ஒரு வாரத்தில் 360 டிகிரி அளவுக்கு சுழலக் கூடியது. இதனால் தினசரி ஒரு கோணத்தில் துபாயை தரிசிக்க முடியும்.

உலக மக்களின் மனம் கவர்ந்த நகரமான துபாயில், கட்டடக் கலையில் பல்வேறு அற்புதங்கள், சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய சாதனையாக சுழலக் கூடிய கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது.

இந்த கட்டடத்தில் ஒரு சதுர அடி இடம், குறைந்தபட்சம் 6000 திர்ஹாம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தத் திட்டத்திற்கான இயக்குநர் தவ் சிங் கூறுகையில், இக்கடட்டத்திற்கு டைம் பீஸ் பில்டிங் என பெயரிட்டுள்ளோம். சூரியனை அடிப்படையாக வைத்தும், அறிவியல் பூர்வமான கற்பனையின் அடிப்படையிலும் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

7 நாட்களில் 360 டிகிரி அளவுக்கு இந்த கட்டடம் சுழலும் வகையில் அமையும். இதன் மூலம் இந்த கட்டடத்தில் இடம் பெறும் அனைத்து அலுவலங்களும் ஒவ்வொரு நாளும் ஒரு கோணத்தில் இருக்கும்.

கட்டடம் சுழல்வதை அதில் குடியிருப்போர் உணர முடியாத அளவுக்கு மிக மிக மெதுவான சூழற்சியாக இருக்கும்.

ஆகஸ்ட் மாதத்தில் இதன் கட்டுமானப் பணி தொடங்கி 2010ம் ஆண்டில் முடிவடையும்.

இந்தக் கட்டடத்திற்கான விற்பனை பிரசாரம் டெல்லி, நியூயார்க், பிராக், மாஸ்கோ, ஹாங்காங்கில் நடைபெறும்.

மொத்தம் 80 மாடிகளைக் கொண்ட இந்த சுழலும் கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் ரூ. 3000 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற இத்தாலி நாட்டு கட்டடக் கலை நிபுணர் டேவிட் பிஷர் இதை வடிவமைத்துள்ளார் என்றார்.

 
 

StumbleUpon.com Read more...

ஏன் ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள்? சும்ம ஒரு ஜோக் படிங்க


Why the British left India?


Gurlz - Group
Gurlz - Group  

 
Gurlz - Group  

 
Gurlz - Group  

 
Gurlz - Group  

 
Gurlz - Group  

 

StumbleUpon.com Read more...

இயேசுவின் பெயரிலும் மூட நம்பிக்கை பரப்பல்

ரத்தம் கசியும் இயேசு ஓவியம்-சர்ச்சில் குவிந்த மக்கள் கூட்டம்!
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

மும்பை:  மும்பை, மாஹிம் பகுதியில் உள்ள பிரபல செயின்ட் மைக்கேல்ஸ், சர்ச்சில் உள்ள இயேசு கிறிஸ்துவின் ஓவியத்திலிருந்து ரத்தம் கசிவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர்.

மாஹிம் சர்ச் என்று செயின்ட் மைக்கேல்ஸ் சர்ச் அழைக்கப்படுகிறது. இந்த சர்ச்சில் உள்ள இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தில் ரத்தம் கசிவதை வெள்ளிக்கிழமை சிலர் பார்த்தனர். இதையடுத்து தகவல் அதி வேகமாக பரவியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர்.

ஓவியத்தில் உள்ள இயேசு கிறிஸ்துவின் நெஞ்சுப் பகுதியிலிருந்து துளி துளியாக ரத்தம் காணப்படுகிறது. இது ஒரு அற்புத செயல் என பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டாக்சி டிரைவர் கன்ஹயா லால் சர்மா கூறுகையில், எனது டாக்சியில் சில பக்தர்கள் இங்கு வந்தனர். இயேசு படம் முன்பு பொருத்தி வைக்க அவர்களுக்கு மெழுகுவர்த்தி கிடைக்கவில்லை. இதையடுத்து தாதர் வரை சென்று வாங்கி வந்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து விட்டதால் இங்குள்ள கடைகளில் வழிபாடு நடத்தத் தேவையான மெழுகுவர்த்திகள் கிடைக்கவில்லை என்றார்.

ஜோசப் டிசவுசா என்பவர் கூறுகையில், இது நிச்சயம் ஒரு அற்புதமான செயல்தான். கடவுள் நம்மிடம் எதையோ சொல்ல விரும்புவதையே இது உணர்த்துகிறது. இதை மக்கள் உணர வேண்டும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது அற்புதமான செயலாக தோன்றுகிறது. மற்றவர்களுக்கு எப்படி தோன்றுகிறது என்று தெரியவில்லை. அதுகுறித்து நம்பிக்கையாளர்களான எங்களுக்கு கவலை இல்லை என்றார்.

இந்த சம்பவம் குறித்து மும்பை ஆர்ச்பிஷப் கார்டினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் கூறுகையில், இதுகுறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இது அற்புதச் செயலா என்பது குறித்து  விரிவான ஆய்வுக்குப் பின்னரே கூற முடியும் என்றார்.

கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி விநாயகர் சிலைகள் பால் குடிப்பதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் விநாயகர் சிலைகளுக்கு பால் கொடுத்து பரவசம் அடைந்தனர். ஆனால்,இதற்கு பரப்பு இழுவிசையே காரணம் என பின்னர் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தினர்.

அதேபோல மாஹிம் கடல் நீர் சுவையானதாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்து பாட்டில் பாட்டிலாக தண்ணீரை எடுத்துச் சென்றனர். ஆனால் தொடர் மழை காரணமாக கடல் நீரின் உவர்ப்புத் தன்மை மாறியதே இதற்குக் காரணம் என மறுபடியும் விஞ்ஞானிகள் விளக்கினர்.

இந்த நிலையில், இயேசுவின் படத்திலிருந்து ரத்தம் வெளியாகியுள்ள செய்தி மும்பையில் மறுபடியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

StumbleUpon.com Read more...

Ans Tamil Islam: ஏன் இவர்கள் கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை?

உண்மையடியான் தளத்தில் பதிக்கப்பட்ட இந்த கட்டுரைக்கு ஒரு இஸ்லாமிய சகோதரர் Abu Awwad பின்னூட்டம் அளித்து இருந்தார், அதற்கு பதில் அளிக்கும் வண்ணமாக நான் மறுபின்னூட்டம் அளித்தேன், அதனை இங்கு படிக்கலாம்.


Ans Tamil Islam: ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை?

Quote:
//
abu awwad சொன்னது,
ஜூன் 22, 2008 இல் 6:57 பிற்பகல்

நண்பரே!
நீங்கள் எழுதிய இந்நெடு ஆக்கம் படிக்க சுவையாகத்தான் இருக்கிறது. ஆனால் பெரும் முரண்பாடுகளே.
இஸ்லாத்தைப் போல் கிறிஸ்தவத்தில் பிரச்சனை இல்லை.
என திரும்பத்திரும்ப கூறியுள்ளீர்கள். //


Umar said:

"இஸ்லாத்தைப்போல கிறிஸ்தவத்தில் பிரச்சனை இல்லை" என்று நான் இக்கட்டுரையில் அடிக்கடி சொல்லியுள்ளேன். அது ஏன் என்பதை இந்த கட்டுரையில் நான் கொடுத்துள்ள உபதலைப்புக்களை அல்லது காரணங்களை நீங்கள் கவனித்தால் நன்றாக புரியும்.

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

இந்த தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் தீவிரவாதிகளாக மாறி அதற்கு பைபிள் தான் காரணம் என்று சொல்வதில்லை, ஆனால், முஸ்லீம்கள் இதை செய்கிறார்கள். அதனால், தான் இந்த காரணத்தில்(6) சொல்லப்பட்ட விவரம் படி, இஸ்லாமுக்கு இந்த பிரச்சனை உணடு, கிறிஸ்தவத்திற்கு இல்லை என்றேன். நான் ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு, இந்த பிரச்சனை இஸ்லாமில் உண்டா இல்லையா என்பதை விவரித்து, பிறகு கிறிஸ்தவத்திற்கு இப்பிரச்சனை உண்டா இல்லையா என்று விவரித்து என் முடிவுரையை கடைசியில் சொல்கின்றேன். நான் இஸ்லாமுக்கு உண்டு என்றுச் சொல்லும் பிரச்சனைகள் "உண்டா இல்லையா" என்பதை நீங்கள் விளக்கவேண்டும், அதை விடுத்து, அடிக்கடி இப்படி சொல்கிறீர்கள் என்று என் மேல் குற்றம் சுமத்தினால் அதனால் ஒரு பயனுமில்லை, நண்பரே.

இன்னும் உள்ள காரணங்களை கவனித்தால், இந்த எல்லா பிரச்சனையும் இஸ்லாமுக்கு உண்டு, ஆனால், கிறிஸ்தவத்திற்கு இல்லை. உதாரணமாக, பல இஸ்லாமிய அறிஞர்களின் வேடிக்கையான பத்வாக்கள், இஸ்லாமிய நாடுகளின் சட்டங்கள் என்று நான் தனித்தனியாக சொல்லியுள்ளேன்.

இன்னும் முகமதுவின் தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கையைப் பற்றி பேசாத கேள்வி எழுப்பாத மாற்று மதத்தவர்கள், நாத்தீகர்கள் இருக்கமாட்டார்கள், ஏனென்றால், சமுதாயத்தில் நல்ல மனிதன் என்று நாம் எண்ணிக்கொண்டு இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைக்கு முகமதுவின் வாழ்க்கை எதிர்மறையாக உள்ளது, இப்படி இருந்தும், நீங்கள் அவர் பின்பற்றத்தகுந்த ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றுச் சொல்கிறபடியால் மக்கள் அனேக கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இதே போல இயேசுவின் வாழ்க்கையை கவனித்தால், அவர் 6 வயது பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள வில்லை, யாரையும் கற்பழிக்க வில்லை, கொள்ளையிடவில்லை. ஒருவேளை இயேசுவின் வாழ்க்கைப் பற்றி மற்றவர்கள் முக்கியமாக நாத்தீகர்கள் கேள்வி எழுப்பினால், " அவர் செய்த அற்புதங்கள் உண்மையா? இயேசு என்ற ஒரு நபர் வாழ்ந்தாரா? அவர் மனிதனாக பிறந்து எப்படி தெய்வமானார் என்று கேள்வி கேட்கமுடியுமே தவிர, முகமதுவிற்கு எதிராக கேட்கப்படும் கேள்விகள் போல, மிகவும் கேவலமாக மக்கள் கேட்கமாட்டார்கள். எனவே தான் சொன்னேன், இந்த பிரச்ச்னை கிறிஸ்தவத்திற்கு இல்லை, அதாவது, மார்க்கத்தை தோற்றுவித்தவர் அல்லது பரப்பியவரின் நடத்தையில் மக்கள் சந்தேகம் கொண்டு கேள்வி கேட்கும் அளவிற்கு ஒரு கீழ்தரமான வாழ்க்கையை இயேசு வாழவில்லை.


Quote:
//Abuawwad said: அப்படியாயின் பல ஆயிரக்கணக்கான வேள்விகள் பதில்கள் என அடங்கிய வெப் தளங்கள் எதற்கு?//


Umar said:

நான் மேலே சொன்னது போல, இந்த கிறிஸ்தவ ஆங்கில கேள்விபதில் தளங்களில், இயேசுவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கேள்விகள் மக்கள் கேட்கமாட்டார்கள், அதற்கு பதிலாக, சரித்திரம், பூகோலவிவரங்கள், இடங்கள், பெயர்கள், விஞ்ஞானம், தத்துவம், குறிபிட்ட பைபிள் வசனங்களுக்கு பொருள் என்ன? என்று கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். அதற்கு பதில்கள் சொல்லப்பட்டு இருக்கும், அவ்வளவே. ஆனால், இஸ்லாமுக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகள் போல, கேள்விகள் மக்கள் கேட்கமாட்டார்கள்.



Quote:
// Abuawwad Said: உங்களவர்களது கேள்விகளுக்கு பதில், மாற்று மதத்தினருக்கு பதில் என வேறு பிரித்து எதற்கு பல வெப்தளங்கள்?//


Umar said:

ஆமாம், இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பல கிறிஸ்தவ கேள்விபதில் தளங்கள் உண்டு, நாத்தீகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் சொல்ல பல தளங்கள் உண்டு, விஞ்ஞானம் சரித்திரம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல பல தளங்கள் உண்டு. இதில் என்ன தவறு? மட்டுமல்ல, இதையே நானும் செய்கின்றேன், அதாவது, என் தளங்களில் முஸ்லீம்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்துள்ளேன், அப்போது தான் தளத்திற்கு தனித்தன்மை இருக்கும். மட்டுமல்ல, நான் இந்து சகோதரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் அளித்துள்ளேன், அவைகளை என் தளமாகிய ஈஸா குர்‍ஆன் தளத்தில் பதிப்பதில்லை, அதற்கு பதிலாக, தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் பதிக்கிறேன். மட்டுமல்ல, ஒரு வேளை நாத்தீகர்களுக்கு நான் பதில் அளிக்க முடிவு செய்தால், அதற்காக ஒரு தனி தளம் மூலமாக அளிப்பேன். ஏனென்றால், ஒவ்வொரு பிரிவிற்கும் பதில் அளிக்கும் விதம் வெவ்வேறு விதமாக இருக்கவேண்டும், என்பதால் இப்படி ஒவ்வொரு குழுவிற்கும் தனி தளங்களை நாங்கள் (கிறிஸ்தவர்கள்) அமைக்கின்றனர்.


Quote:
// Abuawwad said: எல்லா மொழிகளிலும் பைபில் உள்ளது, நாங்கள் அதனைப் படித்து விளங்கிக் கொள்வோம் என்றால், எதற்காக உங்கள் மார்க்கப் போதகர். எதற்காக உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒரு வெப்தளம்?//


Umar said:
நல்ல கேள்வியைத் தான் கேட்டு உள்ளீர்கள். "எங்களுக்கு புரியும் மொழியில் பைபிள் இருக்கும்போது, போதகர் எதற்கு, கேள்வி பதில் வெப் தளங்கள் எதற்கு?"

எங்களுக்கு பாஸ்டர் அல்லது பாதிரியார் அல்லது போதகர் என்பவர், ஞாயிறு அன்று கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஜெபிக்கவும், ஒருவரை ஒருவர் உட்சாகப்படுத்தவும், இயேசு செய்த அற்புதங்களை சாட்சியாக சொல்லவும், எங்களை ஒற்றுமைப்படுத்தி, எங்களை வழிநடத்தும் ஒரு தலைவர் அல்லது வழிகாட்டி. மற்றும் ஒரு பள்ளிக்கூடத்தில் பல மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எப்படியோ அப்படியே இவரும், மனிதர்களில் பல வகையினர் உண்டு, படித்தவர்கள், படிக்காதவர்கள், படித்தவுடன் புரிந்துக்கொள்ளும் ஞானம் உடையவர்கள், ஞானம் குறைந்தவர்கள் என்று பல வகையினர். இவர்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி ஒரு ஐக்கியம் உண்டாக்கி சகோதரத்துவத்தை உண்டுப்பண்ணி, வழி நடத்தும் ஆசான் தான் போதகர் என்பவர்.

மட்டுமல்ல, எங்கள் போதகர்கள் ஒன்றும் எபிரேய மொழியில், கிரேக்க மொழியில் படித்து எங்களுக்கு விளக்கம் அளிப்பதில்லை. அவர் ஒன்றும் வேதத்தில் இல்லாத சட்டமொன்றை இயற்றி இதை நீங்கள் பின்பற்றவேண்டும் என்றும் சொல்வதில்லை, அப்படி யாராவது சொன்னாலும் நாங்கள் அதற்கு கீழ் படியமாட்டோம், ஏனென்றால், வேதத்திற்கு எதிராக சொல்லப்படும் விவரங்களை வகையறுக்க எங்களுக்கு தெரியும். எனவே, போதகர் என்பவர், பல விதமான மக்களை ஒன்று சேர்த்து ஒரு ஐக்கியத்தை உண்டுபண்ணி, சோர்ந்துப்போகும் போது, வேதத்திலிருந்து எடுத்துக்காட்டுக்களை விளக்கு எங்களை உட்சாகப்படுத்தும் ஒரு வழிகாட்டி அவ்வளவே, மட்டுமல்ல, இயேசுவின் நற்செய்தியை கேள்விப்படாத மக்களுக்கு எடுத்துக்கூறி மக்களை நல்வழிப்படுத்த உட்சாகப்படுத்துகிறவர். வழி இயேசுக்கிறிஸ்து, போதகர்கள் எங்கள் வழிகாட்டிகள்.



Quote:
// Abuawwad said: ஆனால், கிறிஸ்தவர்களுக்கு அப்படியில்லை, எங்களுக்கு தேவையான எல்லா கோட்பாடுகளையும், சத்தியங்களையும் நாங்கள் பைபிளை தமிழில் படிப்பதினால் தெரிந்துக்கொள்கிறோம்.
ஓ! மக்கள் கேட்கிறார்கள் என்பதற்காகவா?
மக்கள் கேட்கிறார்கள் என்றால், முன்னர் இருந்தே கிறிஸ்தவத்தில் பிரச்சனை இருக்கிறது. மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என சமாளித்து வைத்துக் கொண்டிருந்தீர்கள். //


Umar Said:
மக்கள் கேட்கக்கூடாது என்று நான் சமாளித்தால் மட்டும் மக்கள் சும்மா இருந்துவிடுவார்களா என்ன?

நான் சொல்லவந்தது, வருஷத்திற்கு 1000 பத்துவாக்கள் எங்கள் போதகர்கள் புதிதாக சொல்வதில்லை, எங்களுக்கு தேவையானது எங்கள் பைபிளில் மட்டுமே உள்ளது. கடந்த 1400 ஆண்டுகளாக உங்கள் இஸ்லாமிய இமாம்கள் பத்துவாக்கள் எழுதிக்கொண்டு தான் இருக்கின்றனர், மட்டுமல்ல, ஒரு சில ஆண்டுகள் சரி என்று சொல்லும் பத்துவாக்கள் திடீரென்று மாற்றிவிடுகின்றனர். அது தவறு என்று சொல்லிவிடுகின்றனர். எங்களுக்கு அப்படியில்லை.

ஒரு இஸ்லாமிய அறிஞர் சொல்வாராம், "இனி பெண்கள் ஆண்களோடு தனியாக வேலை செய்யவேண்டுமென்றால், தன் தாய்ப்பாலை அம்மனிதர்களுக்கு ஊட்டிவிட்டால், அவர்கள் இனி ஒன்றாகவேலை செய்யலாம்" என்று, உடனே வேறு இஸ்லாமிய அறிஞர்கள் இந்த பத்வா செல்லாது என்றுச் சொல்வார்களாம், மறுபடியும் இதைச் சொன்னவர் "நான் தவறு செய்தேன் என்று" தன் பத்வாவை திரும்ப வாங்கிக்கொள்வாராம். இப்படி தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் மோசமான சட்டங்களை எங்கள் போதகர்கள் சொல்லமாட்டார்கள், அப்படி சொன்னார்களானால், அதை எந்த கிறிஸ்தவனும் கீழ்படியமாட்டான்.



Quote:
// Abuawwad said:

இக்காலம் பொல்லாதது. இனியும் விட்டுவிட்டால் எம்மை உருட்டி எடுத்துவிடுவார்கள் என்ற எண்ணமா?
எது எப்படி இருந்தாலும், எத்தனை கேள்விகள் வந்தாலும் ஒரே பதிலைக் கூறலாமே!!!!!
அதுதான்: "உங்கள் மொழியில் பைபில் உள்ளது படியுங்கள் விளங்கிக் கொள்வீர்கள்"
எதற்காக ஆயிரக்கணக்கான கேள்விகள் அதற்கென பதில்கள்? //


Umar Said: ஒரு வேதம் என்று இருந்தால், அதற்கு கீழ் கண்ட கேள்விகள் எழும்ப முடியும் என்பது என் கருத்து:

1. அவ்வேதம் எழுதிய சரித்திரம் பற்றிய சந்தேகம்?


2. விஞ்ஞானத்திற்கு இது எதிராக உள்ளதா?


3. நடைமுறைக்கு ஏற்ற விவரங்களை இவ்வேதம் சொல்கின்றதா?


4. தோற்றுவித்த‌வ‌ர் அவ‌ர் தானா அல்ல‌து கால‌ப்போக்கில் அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ரை ம‌க்க‌ள் க‌ற்ப‌னையாக‌ உருவாக்கினார்க‌ளா?


5. அதை தோற்றுவித்தவரின் நடத்தை பின்பற்ற தகுந்ததா? அல்ல‌து மிக‌வும் கீழ் த‌ர‌மாக‌ உள்ள‌தா? அவ‌ர் உண்மையிலேயே ஒரு ந‌ல்ல‌ ம‌னித‌ரா அல்ல‌து அப்படி ந‌டித்தாரா? கிடைத்துள்ள‌ விவ‌ர‌ங்க‌ளின் ப‌டி அவ‌ர் எப்ப‌டி வாழ்ந்தார்...


6. அவ‌ரை நாம் பின்ப‌ற்ற‌லாமா, பின்ப‌ற்ற‌த் த‌குந்த‌ ந‌ல்ல‌ குண‌ங்க‌ள் அவ‌ரிட‌ம் உள்ள‌தா?


என்று ப‌ல‌ கேள்விக‌ள் எழும்பும். என் க‌ருத்துப்ப‌டி, மேலே உள்ள முதல் நான்கு வ‌கையான‌ கேள்விக‌ளை ம‌க்க‌ள் பைபிளுக்கு எதிராக‌ கேட்கின்ற‌ன‌ர். ஆனால், அதோடு கூட‌ தோற்றுவித்தவரின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, இன்று பின்பற்றுபவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்டு எழும்பும் கேள்விகள் , இஸ்லாமுக்கு உண்டு, இது எங்களுக்கு இல்லை என்றேன்.


Quote:
// Abuawwad said:
சகோதரா? பேனை எழுதுகிறது. துட்டும் பலகையில் கரம் விளையாடுகிறது. என்பதற்காக முரண்பாடுகளை அடுக்கலாமா?
ஆக எனக்கு விளங்கியது ஒன்றுதான்: கிறிஸ்தவத்தில் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை இருக்கிறது. தற்போது நீங்கள் எழுதியுள்ளது போல் எதையாவது கூறி உங்கவர்கள் சமாளித்தார்கள். இன்றைய காலத்தில் இனியும் சமாளிக்க முடியாது என்பதற்காக பெயருக்கு சில வெப்தளங்கள்!!!!!!
//


Umar Said:

கேட்கிறவன் பாமர மக்களாக இருக்கிறான், அப்படி எதிர் கேள்வி கேட்டால், அவனை கொன்று எதிரியே இல்லாமல் வாழலாம் என்ற நோக்கில் உங்கள் முகமது அடிக்கி வைத்த முரண்பாடுகளை விடவா நான் அதிகமாக எழுதிவிட்டேன், சொல்லுங்கள்.

"எதையாவது எழுதி பிரச்சனையில் மாட்டிக்கொண்டு, பொய்களைச் சொல்கிறவன் நான் அல்ல".

நீங்கள் மட்டும் நேர்மையாக உள்ளவர்களாக இருந்திருந்தால்:

ஆம், முஸ்லீம்களில் சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, இஸ்லாமுக்கு கெட்ட பெயரை உண்டாக்கிவிட்டார்கள் என்று வேதனைப்படுவீர்கள்.. ஆனால், இதை நீங்கள் செய்யவில்லை... காரணம்....?

ஆம், எங்கள் அறிஞர்களில் சிலர் முந்திரிக்கொட்டைப்போல, முந்திக்கொண்டு இஸ்லாமுக்கு ஏற்காத பத்வாக்களை சில நேரங்களில் சொல்லி, இஸ்லாமுக்குகெட்ட பெயரை உண்டாக்குகிறார்கள் என்றுச் சொல்லி,... இப்படிப்பட்ட நபர்களிடமிருந்து இஸ்லாமை காப்பாற்றும் என்று உங்கள் இறைவனிடம் கேட்டு இருப்பீர்கள்...

ஆம், சில இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஷரியா சட்டம், இஸ்லாம் படி அல்லாத சட்டம். மற்றும் அதனால், உலகமக்களின் பார்வையில் இஸ்லாம் வேடிக்கையாக்கபப்ட்டது என்றுச் சொல்லி, ஒத்துக்கொண்டு, இதை தவிற்க நாங்கள் முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறோம் என்றுச் சொல்லி, இஸ்லாமின் எதிர்கால முன்னேற்றத்திற்கு(!?) வழி வகை செய்து இருப்பீர்கள்.

ஆனால், இதை நீங்கள் செய்யவில்லை அதற்கு பதிலாக... உங்கள் மக்கள் செய்வதெல்லாம் சரியானது என்று சொல்வது போல அங்கீகரித்து,.. என்னிடம் கேள்வி எழுப்புகிறீர்கள்...


Quote:
// Abuawwad
சகோதரா? வெப்தளங்கள் யாருக்கு?
உங்களைப் போல் படித்தவனுக்கு.
உங்களைப் போல் இன்டர் நெட்டில் மிதப்பவனுக்கு.
உங்களைப் போல் பணவசதி படைத்தவனுக்கு.
உங்களைப் போல் எல்லோரும் இருப்பார்களோ?!!!!!!
அன்றன்றைக்கு ஏதோ ஒரு வகையில் காலத்தைக் கடுத்துபவனுக்கு மார்க்கமும் தேவையாக உள்ளது. அவனுக்கு எழும் சந்தேகங்களுக்கு நேரடியாக என்ன வைத்துள்ளீர்கள்.
//


Umar said:

கண்டிப்பாக, பாமர மக்களுக்கும் படித்தவனுக்கும் சந்தேகங்கள் தீர்க்க வழி தேவைப்படுகின்றது.

கிறிஸ்தவத்தை பொருத்தவரையில், அனேக புத்தகங்கள் கேள்வி பதில் என்று எழுதப்பட்டுள்ளது, பைபிளுக்கு உரைகள் என்று பல உரைகள் உண்டு, சரித்திர புத்தகங்கள் உண்டு. மட்டுமல்ல, எங்கள் சபைகளில் ஞாயிறுகளில் பாமர மக்களுக்கு வரும் சந்தேகம் கூட தீர்க்கப்படுகின்றது.

வாலிபர் கூட்டம் என்றுச் சொல்லி, வாலிபர்களுக்கு அறிவுரை சொல்லப்படுகின்றது,

பெண்கள் கூடுகை என்றுச் சொல்லி, பெண்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லப்படுகின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நாட்டில் இயேசுவைப்பற்றிச் சொல்ல முடிவு செய்தால்,
முதலாவது:
அம்மக்களுக்கு படிப்பு சொல்லித்தரப்படுகின்றது
அவர்கள் மொழியிலே முடிந்த அளவிற்கு பைபிளை மொழிபெயர்த்து தரப்படுகின்றது

(ஏன்னென்றால், போதகர் சொல்வது பைபிளில் உள்ளது தானே என்பதை அம்மக்களே தெரிந்துக்கொள்ளவேண்டும், மட்டுமல்ல, வாரம் ஒரு முறை சபை கூடும் போது மட்டுமே பைபிளை படித்துக்கொள்ளவேண்டும், மற்ற நாட்களில் படிக்கக்கூடாது என்ற உணர்வு வரக்கூடாது என்பதற்காக, அவர்கள் படிக்கும் மொழியிலேயே மொழிபெயர்த்து தருகின்றோம்)


நண்பரே, இணையம் எப்போது வந்தது, 1990 லிருந்து தான் கொஞ்சம் அதிகமாக பரவி எல்லா மக்களும் பயன்படுத்தும் விதத்தில் வந்தது, அதற்கு முன்பாக, இணையம் எங்கே இருந்தது, சாதாரண மக்கள் பயன்படுத்தும்படி? எல்லாம் புத்தகங்கள், போதகர்களின் விளக்கங்கள் தான் நிவர்த்தி செய்தன. எத்தனை கேள்வி பதில் புத்தகங்கள் இருக்கின்றன என்று தெரிந்துக்கொள்ள இணையத்தில் தேடிப்பாருங்கள், தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள், நான் தேடித்தருகின்றேன்.

கடைசியாக, ஒன்றை நான் தெளிவாகச் சொல்லமுடியும், எங்கள் உள்ளத்தில் வாழும் பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு சரியான வழியில் நடத்துகிறவராக இருக்கிறார், அவர் எங்களை நடத்துகின்றார், அறிவுரை சொல்கிறார், கண்டிக்கிறார். எனவே, இத்தனை வசதிகள் ஒரு கிறிஸ்தவனுக்கு உண்டு.


(மறுபடியும் நீங்கள் கேட்கலாம், இப்படித்தானே நாங்களும் செய்கின்றோம் என்று! ஆனால், பிரச்சனை என்னவென்றால், பாமர கிறிஸ்தவனுக்கு வரும் கேள்விகள் சந்தேகங்கள் இயேசுவின் நடத்தைக்குறியதல்ல, கிறிஸ்த போதகர்களின் பத்வா குறித்ததல்ல, கிறிஸ்தவ தீவிரவாதிகள் குறித்ததல்ல, என்பதை கவனிக்கவும்.).



Quote:
// Abuawwad Said:
இன்னென்ன வெப்தளங்களைப் பாருங்கள் எனக் கூறப் போகிறீர்களோ?!!!!!!!
இப்போதுதான் தயாராகுறீர்கள் என்றால், இவ்வளவு காலமும் எங்கிருந்தீர்கள்? //



Umar Said:

நண்பரே, நான் மேலே சொன்னது போல, படித்து இணையத்தை பயன்படுத்தும் கிறிஸ்தவனுக்குத் தான் இந்த இணையங்கள் தளங்கள் அனைத்தும். சாதாரண கிறிஸ்தவனுக்கு, மக்களுக்கு நான் மேலே சொன்ன வசதிகள், புத்தங்கள், பரிசுத்த ஆவியாவரே போதும்.



சரி... காலத்திற்கு ஏற்றார்போல, புத்தகங்களை இணையவடிவமாக்க ஒரு சில தளங்கள் தயார் செய்துக்கொண்டு இருக்கின்றோம், அவ்வளவே. இன்னும் சொல்லப்போனால், நான் சொன்னது போல, வெளிநாடுகளில் இணையம் பரவலாக பயன்படுத்துவதினால், அவர்கள் தங்கள் புத்தகங்களை இணையவடிவம் செய்துள்ளனர். ஆனால், நம் தமிழ் நாட்டில் இப்போது தான் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு குழுவாக அல்லாமல், தனி மனித முயற்சியே. தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளம் ஒரு ஸ்தாபனம் மூலமாக அல்லாமல், தனியாக சில சகோதரர்கள் ஆரம்பித்தார்கள். என் பங்கிற்கு ஓசியில் தளம் ஜியோசிட்டி கொடுக்கின்றது என்பதால், ஒரு சில கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கின்றேன். இன்னும் சில கிறிஸ்தவர்களும் இப்படியே செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் கிறிஸ்தவர்கள் இணையத்தை தங்கள் மார்கத்திற்காக் கொஞ்சமாக பயன்படுத்துகிறார்கள் என்று எங்கள் மேல் நீங்கள் குற்றம் சுமத்தினால், அதை நான் தாழ்மையாக ஏற்றுக்கொள்கிறேன். உங்களைப்போல மறுக்க மாட்டேன், மற்றும் உங்கள் இந்த உட்சாகம் மற்ற கிறிஸ்தவர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். நன்றி சகோதரரே.




Quote:
// Abuawwad Said: ஆக சகோதரா!!!!!!!!!
நானும் இஸ்லாத்தைப் படித்து ஓர் இஸ்லாமியனாக வாழ்கிறேன். முடியுமெனில் இஸ்லாத்தைப் படியுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். //


Umar Said:
உங்கள் உட்சாகத்திற்கு நன்றி, நானும் குர்‍ஆனை படித்துக்கொண்டு தான் இருக்கின்றேன், ஹதீஸ்களை படித்துக்கொண்டு தான் இருக்கின்றேன். மட்டுமல்ல, நீங்களும் பைபிளைப் படித்து உண்மை இறைவனை கண்டுக்கொள்ளுங்கள் என்று உங்களை உட்சாகப்படுத்துகின்றேன்.



Quote:
//Abuawwad Said: கிறிஸ்தவத்தைத் தழுவியவர்கள் விரல் விட்டு எண்ணப்படக்கூடியவர்கள்தான். ஆனால் இஸ்லாத்திற்கு திரும்பியவர்களை எண்ணிப்பாருங்கள்? முடியுமெனில் யளளரnயெ.றழசனிசநளள.உழஅ தளத்திற்கு செல்லுங்கள் அவர்களின் பட்டியல் வீடியோக்களில் இருக்கிறது பாருங்கள்.
//



Umar Said:
மன்னிக்கவேண்டும் நண்பரே மன்னிகவும். நீங்கள் ஒரு தவறான விவரத்தைச் சொல்லியுள்ளீர்கள். இஸ்லாமை தழுவுகிறவர்கள் தான் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள். ஆனால், குடும்ப கட்டுப்படு இல்லாமல், குடும்பத்தின் நிலையை புரிந்துக்கொள்ளாமல், அதிகமாக பிள்ளைகளை பெற்றுக்கொண்டு இஸ்லாமை வளர்க்கிறீர்கள் நீங்கள். ஆனால், கிறிஸ்தவத்தை தழுவுகிறவர்கள் தான் அதிகம், அதுவும் இஸ்லாமிலிருந்து அனேகமாயிரமானவர்கள் பொய்யை விட்டு உண்மைக்கு செவி சாய்க்கிறார்கள். முக்கியமாக கிறிஸ்தவத்திற்கு மாறினால் கொலை என்று இஸ்லாமிய சட்டமிருக்கின்ற இஸ்லாமிய நாடுகளிலேயே அனேகமாயிரமாயிரமாக மக்கள் இயேசுவிடம் வருகின்றனர்.


(உனக்கென்ன பொறாமை என்று கேட்காதீர்கள், எனக்கொன்றும் பொறாமை இல்லை, ஆயிரமாயிரமான பாமர மக்கள், உணவிற்கு வழியில்லாம, ஏழ்மையில் முஸ்லீமாக வாழ்வதினால் என்ன பயன் என்றுச் சொல்லுங்கள்.)



அமெரிக்காவில் இஸ்லாமை தழுவிய சில ஆண்டுகளிலேயே இஸ்லாமை விட்டுமக்கள் வெளியேறி விடுகிறார்கள் என்று ஒரு இஸ்லாமிய பேராசிரியர் ஆராய்ச்சி செய்துள்ளார்.

அதன் தொடுப்பை இங்கு பாருங்கள்.
75% of New Muslims become Apostates - Muslim scholars admit.

Why Most of the New Muslims Leave Islam(Become Apostates) in few Years( in US) ?

-A Reasearch by Prof. Ilyas Ba Yunus


http://www.youtube.com/watch?v=v8EC8-aVlrE



Quote:
// Abuawwad said:
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு அல்லாஹ்வின் அடியான்.
//


Umar said:
கண்டிப்பாக இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

In Christ.
Umar
 

StumbleUpon.com Read more...

ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியனானது ஸ்பெயின்

ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியனானது ஸ்பெயின்
    

வியன்னா: ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மணியை வீழ்த்தி ஈரோ புட்பால் சாம்பியன் ஆனது ஸ்பெயின்.

இந்த வெற்றியையடுத்து ஸ்பெயின் முழுவதும் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது. தலைநகர் மேட்ரிட்டில் ஆயிரக்கணக்கான புட்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மிக விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் பெர்னாண்டோ டோரெஸ் போட்ட ஒரே கோல் ஸ்பெயினை வெற்றிக்கு இட்டுச் சென்றது. ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் டோரஸ் இந்த கோலைப் போட்டார்.

இதன் மூலம் முதல் பாதியில் ஸ்பெயின் 1-0 என்ற முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷத்துடன் விளையாடினாலும் ஸ்பெயின் தடுப்பாட்டத்தில் பின்னியெடுத்தது. இதனால் கடைசி வரை ஜெர்மனியால் கோல் ஏதும் போட முடியவில்லை.

இதன்மூலம் 44 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த வெற்றியைப் பெற்றுள்ளது ஸ்பெயின். கடந்த 1964ம் ஆண்டில் கடைசியா சாம்பியன்ஷிப்பை வென்றது. அந்த ஆண்டு சோவியத் யூனியனை வென்று சாம்பியனான ஸ்பெயின், இப்போது ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது.

மூன்று முறை சாம்பியனான ஜெர்மனி இம்முறை தோல்வியை தழுவியுள்ளது.
 
 

StumbleUpon.com Read more...

ஆசிய கோப்பை:ரெய்னா சதத்தால் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

>> Sunday, June 29, 2008

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுரேஷ் ரெய்னா,கௌதம் கம்பிர் ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்திய பங்களாதேஷை எளிதாக தோற்கடித்தது
 
 
 
Asia Cup 2008
Bangladesh vs India, 1st Match, Super Four
National Stadium, Karachi (D/N)

Umpires: B Jerling (SA) and S Taufel (AUS) Third Umpire: M Silva (SL)
Match Referee: A Hurst (AUS)
Toss: Bangladesh (Elected to Bat)  
Result: India won by 7 wickets Man of the Match: Suresh Raina
Match Summary: Match Over
Bangladesh innings
Runs Balls Fours Sixes SR FoW
Tamim Iqbal c Dhoni  b Ishant  55  67  82.09  3-102 ( 19.5 ov. ) 
M Nazimuddin c Ojha  b RP Singh  66.67  1-19 ( 4.6 ov. ) 
M Ashraful (c) c Ojha  b Gony  20  21  95.24  2-66 ( 12.2 ov. ) 
Raqibul Hasan   b Ojha  25  34  73.53  4-120 ( 23.2 ov. ) 
Mushfiqur Rahim (wk) c Dhoni  b Ojha  22  35  62.86  5-169 ( 35.2 ov. ) 
Alok Kapali c Ojha  b Gony  115  96  10  119.79  6-281 ( 49.5 ov. ) 
M Mahmudullah not out     26  38  68.42   
Farhad Reza not out     0.00   
Mashrafe Mortaza                
Abdur Razzak                
Shahadat Hossain                
Extras: ( 9 wd, 5 lb, 0 b, 0 nb, 0 p)   Total: 283 / 6 in 50.0 overs (Run Rate: 5.66) 
Bowler Overs Maidens Runs Wickets NoBall Wide Eco
RP Singh 10.0  65  6.50 
Manpreet Gony 8.0  65  8.12 
Ishant Sharma 10.0  48  4.80 
Pragyan Ojha 10.0  43  4.30 
Yusuf Pathan 10.0  44  4.40 
Yuvraj Singh 2.0  13  6.50 
India innings
Runs Balls Fours Sixes SR FoW
Gautam Gambhir c Mortaza  b Reza  90  84  10  107.14  3-195 ( 31.4 ov. ) 
Robin Uthappa   b Shahadat  11  18.18  1-14 ( 3.2 ov. ) 
Rohit Sharma c Reza  b Shahadat  22  23  95.65  2-56 ( 9.3 ov. ) 
Suresh Raina not out     116  107  11  108.41   
Yuvraj Singh not out     36  35  102.86   
MS Dhoni (c)(wk)                
Yusuf Pathan                
Manpreet Gony                
Pragyan Ojha                
Ishant Sharma                
RP Singh                
Extras: ( 7 wd, 11 lb, 0 b, 0 nb, 0 p)   Total: 284 / 3 in 43.2 overs (Run Rate: 6.53) 
Bowler
Overs
Maidens
Runs
Wickets
NoBall
Wide
Eco
Mashrafe Mortaza
9.0 
55 
6.11 
Shahadat Hossain
9.0 
60 
6.66 
M Mahmudullah
6.0 
35 
5.83 
Farhad Reza
6.0 
38 
6.33 
Abdur Razzak
9.2 
59 
6.32 
Alok Kapali
4.0 
26 
6.50 

 

 

StumbleUpon.com Read more...

டாப் 50 இந்தியர் பட்டிய-ல் கலாம், ரஜினி, அமைச்சர் சிதம்பரம்

>> Saturday, June 28, 2008

 

இந்திய மக்களின் மனங்களைக் கவர்ந்த டாப் 50 பிரபலங்களின் பட்டியலை ஆந்திய திட்டம் மற்றும் மேலாண்மை நிறுவனம் ஏசிஊம்அர் அகிய அமைப்புகள் வெளியிட்டன. இந்தியாவின் 5 முக்கியப் பெருநகரங்களைச் சேர்ந்த மக்களிடம் எடுக்கப்பட்ட அய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பிரபலங்கள் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணு விஞ்ஞானத்தின் தந்தையும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல்கலாம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் இசையமைப்பாளர் எ.அர்.ரஹமான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பிரபலங்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு, இவர்களின் அளுமைத் தன்மை மற்றும் தலைமைப் பண்பு அகிய மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் ஆந்த அய்வு மேற்கொள்ளப்பட்டது.
http://www.nakkheeeran.com/DailyNews/DailyNews.html

StumbleUpon.com Read more...

இன்னும் ஒரு இனிமையான பொய்?

சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா?




 
சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா?

தயவு செய்து சந்தேகம் தீர்த்து வையுங்கள், முஸ்லீம்களே!!!


முன்னுரை: சமீப காலமாக தமிழ் முஸ்லீம் அறிஞர்கள், இஸ்லாமுக்காக பல கட்டுரைகளை, கேள்வி பதில் கட்டுரைகளை, இஸ்லாமை தழுவிய மாற்று மத நண்பர்களின் சாட்சிகளை பதித்துக்கொண்டு வருகிறார்கள். இதே போல கிறிஸ்தவர்களும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக, உலக அளவில் மக்கள் ஒரு மார்க்கத்திலிருந்து வேறு மார்க்கத்திற்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமுக்கும், அதே போல இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கும் மாறிக்கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக கவனித்தால், மத நம்பிக்கையிலிருந்து நாத்தீகத்திற்கும் அதிக அளவில் மக்கள் மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

முக்கியமாக நான் இக்கட்டுரை எழுதுவதின் நோக்கம், "கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறுகிறார்கள்" என்று இஸ்லாமியர்கள் சொல்லும் செய்திகளில் உள்ள உண்மையை அலசுவதாகும். இந்த விஷயத்தில் பார்க்கும் போது, முஸ்லீம் அறிஞர்கள் (கவனிக்கவும், சாதாரண முஸ்லீம்கள் அல்ல, முஸ்லீம் அறிஞர்கள், கட்டுரை எழுதுபவர்கள் போன்றவர்கள்) பொய்யான தகவல்களை சில நேரங்களில் தெரிந்தே கொடுத்துவிடுவது உண்டு. இப்படிப்பட்ட ஒரு விவரத்தைப் பற்றி தெளிவை அல்லது உண்மையை தெரிவிக்கும் படி நான் தமிழ் முஸ்லீம் அறிஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.

1. பொய்யை உண்மை என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள்:

மக்கள் சின்ன பொய்யை விட பெரிய பொய்யை சீக்கிரத்தில் நம்புவார்கள் என்று சொல்லுவார்கள். அது போல, நம் இஸ்லாமிய தளங்கள் ஆதாரங்கள் எதையுமே காட்டாமல், பெரிய பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட ஒருசில பொய்களை கீழேயுள்ள கட்டுரைகளில் படிக்கலாம்:

A) 2500 கிறிஸ்தவ பாதிரிகள் இஸ்லாமை தழுவினார்கள்:

சூடான் நாட்டின் "கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின்" பொதுச் செயலாளர் இஸ்லாமுக்கு மாறினாராம். இவர் மூலமாக இதுவரை (5 ஆண்டுகளுக்குள்) 1,50,000 பேர் இஸ்லாமுக்கு மாறியிருக்கிறார்களாம். இவர்களில் 2500 பேர் கிறிஸ்தவ போதகர்களாம். படிக்கவும்: 2500 கிறிஸ்தவ பாதிரிகள் இஸ்லாமை தழுவினார்ககளா?

இந்த செய்தி உண்மையா என்று கேட்டேன், இன்று வரை பதில் இல்லை.

B) கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?

கிறிஸ்தவ பாதிரிகள் ஹஜ்செய்தார்கள் என்று கட்டுரை எழுதினார்கள், அப்படியானால், ஆதாரம் எங்கே என்று கேட்டேன், இதுவரை பதில் இல்லை. ஏதோ ஒரு பத்திரிக்கை பெயரை குறிப்பிடுவார்கள்( தமிழ் நாட்டில் உள்ளவர்கள், அந்த பத்திரிக்கைகளில் இச்செய்தி உள்ளதா என்று தேடிபார்க்கமாட்டர்கள் என்று நம்பிக்கையில்), ஆனால், அந்த செய்தி வெளியான தொடுப்பை கொடுக்கமாட்டார்கள். படிக்க:
கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா? நேசமுடன் தளம் வெளியிட்ட செய்தி பொய்யா மெய்யா?

C) ஜீமெயில் படத்தை திருத்தி, இது தான் ஆதாரம் என்றார்கள்:

தங்களுக்கு வாசகர்களிடமிருந்து கேள்விகள் வந்தன என்றுச் சொல்லி, கிறிஸ்தவம் பற்றி கட்டுரைகளை எழுதினார்கள். இவைகள் பொய் என்றுச் சொன்னோம், உடனே, தங்களுக்கு வாசகர்களிடமிருந்து மெயில் வந்ததாகச் சொல்லி, ஜீமெயில் படத்தை திருத்தி அதை ஆதாரமாக பதித்தார்கள். படிக்க: கிறித்துவம் கேள்வி பதில்-2 : எங்கள் மறுப்பு - 2 Fake Gmail e-mail ஆதாரமாக கொடுத்த இது தான் இஸ்லாம் தளம்

2. இப்பொழுது இன்னொரு செய்தி, முஸ்லீம்களிடமிருந்து:

மன்னர் பஹதின் எளிமையான நல்லடக்கத்தினால் இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!


இந்த செய்தியை நான் பொய் என்று திட்டவட்டமாக சொல்லப்போவதில்லை, அதற்கு பதிலாக இந்த செய்திக்கான ஆதாரத்தை தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த செய்தி பல இஸ்லாமிய தமிழ் தளங்களில் பதிக்கப்பட்டுள்ளது.

இப்னுபஷீர், சித்தார் கோட்டை, மஸ்டோகா, ஆதிரை ஐஐசி, தமிழ் முஸ்லீம்.

இத்தாலிய பாதிரியார் இஸ்லாமை தழுவிய விதம்:

சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

emphasis mine

3. இந்த செய்திக்காக இஸ்லாமியர்கள் காட்டிய ஆதாரங்கள்:

இந்த செய்திக்காக இஸ்லாமியர்கள் முன்வைக்கும் ஆதாரம், அரப் நியூஸ் என்ற ஆங்கில தளம் ஆகும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், எந்த ஆங்கில செய்தித் தளத்தை இவர்கள் குறிப்பிட்டார்களோ, அந்த தளத்தில் இச்செய்தி வெளிவந்த தொடுப்பையும் இவர்கள் தரவில்லை. எந்த கட்டுரையை மொழிபெயர்த்தார்களோ அதன் தொடுப்பை கொடுத்து இருக்கலாம், அதையும் இவர்கள் தரவில்லை. மூல தொடுப்பை கொடுக்காமல் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடும் கலாச்சாரத்தை என்னவென்றுச் சொல்ல.

இனி இச்செய்தி உண்மையா அல்லது பொய்யா என்பதை அலசுவோம்

4. எளிமையான சவஅடக்கத்தை கண்டு ஒரு கிறிஸ்தவ பாதிரியார் இஸ்லாமை தழுவ வாய்ப்பு இல்லையா?

ஒரு மனிதன் ஒரு மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு எந்த ஒரு நற்செயலும் காரணமாக இருக்கலாம், ஒரு அரசரின் சவ அடக்கம், மிகவும் எளிமையாக நடைப்பெறுவதைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட வாய்ப்பு உள்ளது. இங்கு என் சந்தேகம், என்னவென்றால், இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி உண்மையா என்பதாகும்? மன்னர் மரித்தது உண்மை தான், மன்னரின் சவ அடக்கம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது உண்மை தான் ( மன்னர் உயிரோடு இருக்கும் போது எப்படி ஆடம்பரமாக வாழ்ந்தார் என்பது வேறு விஷயம்). ஆனால், இந்த எளிமையான சவ அடக்கத்தைக் கண்டு, கிறிஸ்தவ பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா?

இச்செய்தி:

உண்மையாகவும் இருக்கலாம்

அல்லது

பொய்யாகவும், முஸ்லீம்களின் கட்டுக்கதையாகவும் இருக்கலாம்.


என் கருத்துப்படி, இச்செய்தியில் கொடுக்கப்பட்ட விவரங்களின் படி, இது உண்மையாக இருக்க குறைவான வாய்ப்பு உள்ளது. ஆனால், பொய்யாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக நான் காண்கின்றேன்.

நான் ஏன் இப்படி முடிவு செய்யவேண்டி வந்தது என்பதற்கான காரணங்களை இங்கே தருகிறேன். ஒருவேளை என் கணிப்பு தவறாக இருக்குமானால், அதை தெரிவித்தால், இச்செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் இக்கட்டுரையை என் தளத்திலிருந்து எடுத்துவிடுகிறேன்.

1. முதலாவதாக, ஆங்கில மூல தொடுப்பையும் முஸ்லீம்கள் தராமல் ஏன் கட்டுரை எழுதுகின்றார்கள்.

நீங்கள் சொல்ல வந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், இக்கட்டுரையை பதித்தவர்களில் ஒருவராவது ஆங்கில தொடுப்பை கொடுத்து இருக்கலாம்.

இக்கட்டுரையின் ஆங்கில தொடுப்பை நான் தருகிறேன்.

Moved by Simplicity of Royal Funeral, Priest Embraces Islam

P.K. Abdul Ghafour, Arab News

... அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ...

Source: http://www.arabnews.com/?page=1§ion=0&article=68768&d=21&m=8&y=2005

2. மொழிபெயர்க்கும் போது, விட்டு விட்ட முக்கியமான விவரம்:

இஸ்லாமியர்கள் இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் போது, தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ கீழ் கண்ட விவரங்களை மொழிபெயர்க்கவில்லை.

"Al-Riyadh Arabic daily reported without mentioning his name."
"ரியாத் நகரில் வெளியாகும் அரபி தின‌ பத்திரிக்கை அவரின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்தது"


அதாவது, அரப்நியூஸ் என்ற தளத்தில் வெளியான இந்த செய்தி, "Al-Riyadh Arabic daily " பத்திரிக்கையின் மூல தொடுப்பு இல்லாமல், பெயர் இல்லாமல், நாள் இல்லாமல் வெளிவந்துள்ளது. இந்த விவரத்தை ரியாத் நகரில் வெளிவரும் அரபி செய்தித்தாள் வெளியிட்டதாம். இந்த அரப்நியூஸ் தளம் வேறு எந்த ஆதாரத்தையும் தராமல், ஒரே வரியில் தன் ஆதாரத்தை முன்வைத்து விட்டது. சரி, நம் இஸ்லாமியர்கள் அதையாவது மொழிபெயர்த்தார்களா என்று கேட்டால், அதையும் இவர்கள் செய்யவில்லை.

இப்போது நம் சந்தேகங்கள்:

1. ஏன் அரப்நியூஸ் தளம் தான் வெளியிட்ட செய்தி, ரியாதில் தினமும் வெளிவரும் அரபி தினபத்திரிக்கையில் எந்த நாள், எந்த தேதியில் வெளிவந்தது என்று குறிப்பிடவில்லை? இந்த அரப்நியூஸ் தள நிர்வாகிகளுக்கு இச்செய்தி ஒரு பொய்யான செய்தி என்று தெரியுமா?

2. "Al-Riyadh Arabic daily" என்பது ஒரு பத்திரிக்கையின் பெயரா? அல்லது "இந்தியாவில் தமிழில் வெளிவரும் ஒரு பத்திரிக்கையில் வெளியானது" என்று சரியான ஆதாரமே இல்லாமல் சொல்வது போல ஒரு பொதுவான விவரமா?

3. பிரபல கிறிஸ்துவ பாதிரியார் (a well-known Christian priest) என்பதன் பொருள் என்ன?

தமிழில் "பிரபல கிறிஸ்தவ பாதிரியார்" என்றும் ஆங்கிலத்தில் "A Well-Known Christian Priest" என்றும் எழுதிவிட்டு, அவர் இஸ்லாமை தழுவியது, ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு குடிசையில் நடந்த நிகழ்ச்சி போல ஆதாரமே சொல்லாமல் எழுதினால் எப்படி சகோதரரே? என் சந்தேகம் வலுவானதாக மாறியதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

ஒரு பிரபலமான கிறிஸ்தவ பாதிரியார் இஸ்லாமை தழுவினார் என்பது ஒன்றும் ஒரு சாதாரண விஷயமல்லவே! மட்டுமல்ல, அவர் இஸ்லாமுக்கு மாறியிப்பாரானால், வேறு ஏதாவது பத்திரிக்கையில் அச்செய்தி வந்திருக்குமே, இப்படி இஸ்லாமியர் அல்லாத பத்திரிக்கையில் வந்ததாக என் கண்ணில் படவில்லை, தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.

அப்படியில்லையானால், இந்த பிரபலமானவர் இன்னும் தன் கிறிஸ்தவ சபையையே நடத்திக்கொண்டு, இயேசுவைப் பற்றி சுவிசேஷம் சொல்லிக்கொண்டு இருக்கிறாரா? ஒரு பிரபல பாதிரியார் இஸ்லாமுக்கு மாறியிருந்தால், அந்த சபைக்கு முதலாவது தெரியும், அவர் சபையை நடத்தமாட்டார், இந்த விஷயம் குறைந்தபட்சம் இத்தாலியில் அவர் வாழ்ந்த நகரில், ஒரு செய்தியாக செய்தித்தாள்களில் வெளிவந்து இருக்கும். இந்த இணைய காலத்தில், இணையத்திலும் உலாவரும்.

சில முஸ்லீம்கள் "அவரது உயிருக்கு ஆபத்து வரும் என்பதால் தான், அவர் பெயர் மற்றும் இதர விவரங்கள் வெளியிடவில்லை" என்று சொல்லக்கூடும். இது பலவீனமான வாதம் ஏனென்றால், அவர் தழுவியது இஸ்லாமை, அப்படியானால், அவருக்கு பாதுகாப்பு நிச்சயமாக இஸ்லாமியர்களே தருவார்கள், இன்னும் ஒரு விவரம் என்னவென்றால், எந்த கிறிஸ்தவனும் அவரை கொல்லமாட்டான், அப்படி கொல்லும்படி எங்களுக்கு எங்கள் தேவன் கட்டளை கொடுக்கவும் இல்லை, அதாவது ஒரு கிறிஸ்தவர் முஸ்லீமாக மாறினால் அவரை கொல்லுங்கள் என்று இத்தாலியில் இப்படி ஒரு சட்டமும் இல்லை. விஷயம் இப்படி இருக்கும் போது, எப்படி ஆபத்து வரும்? இது நம்பும்படி இல்லை.

4. ஆதாரத்திற்காக இணையத்தில் என் தேடல்:

இக்கட்டுரையை எழுதுவதற்கு முன்பாக, இணையத்தில் இதற்கு யாரவது பதில் அளித்து இருப்பார்கள் என்று தேடிப்பார்த்ததில், ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஆனால், ஒரு கத்தோலிக்க போரமில் (http://forums.catholic.com/showthread.php?t=70876 ) ஒரு இஸ்லாமிய உறுப்பினர் இதே கட்டுரையை பதித்து இருந்தார்கள். அதற்கு ஆதாரம் என்ன‌? என்று அத்தளத்தில் கேட்கப்பட்டு இருந்தது, இதற்கு அக்கட்டுரையை பதித்த இஸ்லாமியர், தான் அந்த செய்தியை வெளியிட்ட அரப்நியூஸ் தளத்திற்கு மெயில் அனுப்பி, இன்னும் விவரங்களை சேகரித்து, பதிப்பதாக சொல்லியிருந்தார்கள்.

Re: Priest Embraces Islam B/c Of Fahd's Funeral

The story was taken from www.arabnews.com, which is run by Saudi Research & Publishing Co., a Saudi based English-language daily newspaper. It is a well established news outlet and is distributed around the world. It seems they took the story from ar-Riyadh, which is an arabic newspaper.

As for why theres no name, perhaps he didnt wanna be named for fear or to avoid public attention.

Anyhow, i dont mind looking into the story myself, i will write to the writer of the article and ask if he could provide more sources for the story. If he replies, ill post the sources. …..

I think it is fair for those reading this thread to doubt the story. Although what i know from that source is that they are credible, i cannot find anymore sources other than them. And since this is regarding a conversion, it is important there be no shadow of a doubt the story is true.

thanks for all your replies.

Source : http://forums.catholic.com/showthread.php?t=70876

அதே போல, ஒரு கிறிஸ்தவ சகோதரர், வாடிகன் ஏசியாநியூஸ்(AsiaNews, Vatican) செய்தித்தாள் நிறுவத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி யாரும் மாறவில்லை என்று சொன்னதாக தெரிவித்துள்ளார். (உண்மையிலேயே இத்தாலி பாதிரியார் இஸ்லாமுக்கு மாறினார் என்பதை ஆதாரத்துடன் நிருபித்தால், இந்த சகோதரருக்கு மெயில் அனுப்பி இவரது செய்தியின் நம்பகத்தன்மையை நான் அறிந்துக்கொள்வேன்). இதையும் படிக்கவும்.

I have received a mail from the Director of Asianews, Vatican.

According his reports no priest embraced to Islam recently from Italy.

If any one has any link with the priest`s name please provide. If you don`t have his name and clear address please don`t.

Source Page 2: http://forums.catholic.com/showthread.php?t=70876&page=2

இந்த கத்தோலிக்க இணையத்தில் இப்பதிவுகள் பதிக்கப்பட்டது கடைசியாக செப்டம்பர் மாதம் 2005ம் ஆண்டு ஆகும்(மன்னர் காலமானவது 2005 ஆகஸ்ட் மாதமாகும்.) ஆனால், இதுவரை எந்த தகவலும் அந்த இஸ்லாமிய உறுப்பினர் பதித்ததாக தகவல் இல்லை.

5. தமிழ் முஸ்லீம்களிடம் நான் கேட்க விரும்புவது?

இந்த ஒரு செய்தியை பல தளங்களில் பதித்து உள்ளீர்கள், உங்களில் யாராவது அந்த அரப்நியூஸ் செய்தித்தாள் தளத்திற்கு மெயில் அனுப்பி, விவரங்களை தெரிந்துக்கொண்டு பதித்தால், நீங்கள் சொன்னது உண்மை என்று நிருபிக்கப்படும். இந்த வேலையை நாங்கள் ஏன் செய்யப்போகிறோம், நீ தான் செய்யனும் என்று என்னிடம் கேட்கவேண்டாம், ஏனென்றால், செய்தியை ஆதாரம் இல்லாமல் வெளியிட்டது நீங்கள், எனவே, ஆதாரத்தை சேகரிக்கும் வேலையும் உங்களுடையது தான். ரியாதில் உள்ள உங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு அந்த "ரியாத் தினசெய்தித்தாள்" பற்றி தெரிந்துக்கொண்டு விவரங்களை சேகரித்து தெரிவியுங்கள். இப்படி நீங்கள் செய்தால், உங்கள் நம்பகத்தன்மை, நேர்மை வெளிப்படும், இஸ்லாமுக்காக நீங்கள் படும் பாடுகள் அனைத்திற்கும் உபயோகம் என்பது இருக்கும்.

நீங்கள் இந்த விவரங்களை தரவில்லையானால், பல பொய்களில் இதுவும் ஒரு பொய் என்று எல்லா மக்களுக்கும் தெரிந்துவிடும். உங்கள் தளங்களில் உள்ள கட்டுரைகளின் நம்பகத்தன்மை என்னவென்று எல்லாருக்கும் தெரிந்துவிடும்.

முடிவுரை: இதுவரை நான் சொன்ன விவரங்களில் ஏதாவது குறைகள் இருக்குமானால், அல்லது இதற்கு யாராவது பதில் சொல்ல விரும்பினால், எனக்கு தெரிவியுங்கள் ( isa.koran (at) gmail (dot) com ). அல்லது பின்னூட்டம் இடுங்கள். கடைசியாக நான் சொல்லவிரும்புவது இது தான், நீங்கள் சொன்ன விவரம் உண்மையாக இருக்குமானால், உங்களால் நிச்சயமாக ஆதாரங்களை சேகரிக்கமுடியும். எனக்கு வந்த இந்த சந்தேகம் தீர்க்கப்படலாம்.

என் சந்தேகத்தை மட்டுமே முன்வைத்தேன், ஒருவேளை உண்மையாகவே இத்தாலிய பாதிரியார் இஸ்லாமுக்கு மாறியிருக்கலாம், ஆனால், ஆதாரம் எங்கே என்று தான் கேட்கிறேன். இச்செய்தி பொய்யாக இருக்கலாம் என்று நம்புவதற்கு அதிகமாக வாய்ப்புக்கள் இருப்பதால் தான் நான் கேட்கிறேன், உங்களை அவமானப்படுத்த அல்ல.

(பின்குறிப்பு: யாராவது ஒரு பொய்யான மெயிலை தயார் செய்து, இது எங்களுக்கு அரப்நியூஸ் தள நிர்வாகத்திலிருந்து வந்தது என்றுச் சொல்லி, மறுபடியும் பொய்யான தகவலை பதித்தால், அதுவும் வெளிவர அதிக நாட்கள் பிடிக்காது என்பதையும் என் அருமை தமிழ் இஸ்லாமிய அறிஞர்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்).

ரோமர் 1:18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.



 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP