சமீபத்திய பதிவுகள்

சமாதானப் பேச்சுவார்த்தைக்காகத் தென்னாபிரிக்கா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்த நிலைப்பாடுகளைத் தமிழீழ விடுதலைப்புலிகள் நிராகரித்துள்ளனர்

>> Monday, July 21, 2008

சமாதானப் பேச்சுவார்த்தைக்காகத் தென்னாபிரிக்கா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்த நிலைப்பாடுகளைத் தமிழீழ விடுதலைப்புலிகள் நிராகரித்துள்ளனர்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைக்கான தென்னாபிரிக்கா அல்லது ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் மத்தியஸ்த ஏற்பாட்டைத் தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இராசையா இளந்திரையன் நோர்வேயைத் தவிர தமீழீழ விடுதலைப் புலிகள், சமாதான ஏற்பாட்டாளர்களாக எந்த நாட்டையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை நோர்வேயின் சமாதான ஏற்பாட்டாளர்களான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சமாதானத் தூதர் ஹன்சன் பௌயர் ஆகியோரை வன்னியில் வைத்துச் சந்திக்க விரும்புகிறது

இந்தநிலையில் இந்தச் சந்திப்பு விரைவில் இடம்பெறும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தாம் நோர்வே நாட்டவர்கள் சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பார்கள் என்பதற்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தென்னாபிரிக்காவின் உதவி அமைச்சர் இராதாகிருஸ்ண படையாட்சியும், ஐஸ்லாந்தின் ஜனாதிபதி ஒலாபு ரெக்னார் கிரிம்சனும் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வில் தாம் மத்தயஸ்தம் வகிக்கத் தயாராக உள்ளதாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையிலேயே இளந்திரையன் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

http://www.swisstamilweb.com/indexTamilnews.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP