சமீபத்திய பதிவுகள்

அட தினமலர், பைத்தியமே!

>> Wednesday, September 3, 2008

 

வழக்கம்போல டவுட் தனபாலு என்ற தினமலர் அக்கப்போர் பகுதியில் இன்றைக்கும் உச்சிக்குடுமித் தனத்தோடு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி தமிழக செயலாளர் வரதராஜன்: ஒரிசா வன்முறைகளைக் கண்டித்து கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட ஜனநாயக நடவடிக்கைகளுக்கு எதிராக பா.ஜ.க. வினர் போட்டியாக ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது, தமிழகத் திலும் கலவரங்களை அரங்கேற்றும் ஒத்திகையோ என்ற அய்யப்பாடு எழுகிறது.
டவுட் தனபாலு: உங்க லாஜிக்கையே புரிஞ்சுக்க முடிய லையே... ஒரிசாவுல நடந்த ஒரு பிரச்சினையை, தேவையில்லாம தமிழகத்துக்குக் கொண்டு வந்து, அதுவும் மாணவர்கள்ட்ட அதைப்பத்தி பிரச்சாரம் பண்ணலாமான்னு கேட்டா, அதையும் கலவரத்துக்கு ஒத்திகைன்னா என்னங்க அர்த்தம்...? அவங்க பண்ணா, ஜனநாயக நடவடிக்கை; இவங்க பண்ணா கலவர ஒத்திகையா...? ("தினமலர்", 1.9.2008).
அடிபட்டவன் அழுவது என்பது இயற்கை; ஒரிசாவில் சிறுபான்மை மக்களான கிறித்தவர்கள் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், தமிழகத்தில் கிறித்தவக் கல்வி நிறுவனங் கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில், ஒரு நாள் விடுமுறை விட்டது என்பது அந்த வகையைச் சேர்ந்ததாகும்.
அதனை எதிர்த்து பா.ஜ.க.வினர் போட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது - நாங்கள் அடிப்போம் - நீங்கள் அழக்கூடாது! என்கிற அராஜகம் - இந்துத்துவாவைச் சேர்ந்தது. வெண் ணெய்யும் - சுண்ணாம்பும் ஒன்றல்ல!

 

http://files.periyar.org.in/viduthalai/20080901/news05.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Robin September 5, 2008 at 4:52 AM  

தினமலரின் பலம் தென்தமிழகத்தில் உள்ளது. அனைத்து கிறிஸ்தவர்களும் இப்பத்திரிகையை புறக்கணித்தாலே விற்பனை பெருமளவு சரிந்து விடும். தினமலருக்கு பாடம் புகட்ட இதுவே சரியான வழி.

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP