சமீபத்திய பதிவுகள்

மதுரையிலும் சர்ச் மீது கல் வீச்சு - மாதா சிலை கூண்டு சேதம்

>> Thursday, September 25, 2008

மதுரையிலும் சர்ச் மீது கல் வீச்சு - மாதா சிலை கூண்டு சேதம்

    

Church
மதுரை: மதுரையில் சர்ச் மீது கல் வீசி தாக்கப்பட்டதில் அதன் அங்கிருந்த போர்டு, மாதா சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு போன்றவை நொறுங்கி உடைந்தது.

கர்நாடகத்தில் சர்ச்சுகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து கேரளாவிலும் தாக்குதல் பரவியது. தமிழகத்திலும் பரமத்தி வேலூர் பகுதியில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன.

இந்த நிலையில் மதுரையில் உள்ள ஒரு சர்ச்சிலும் விஷமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மதுரை ஞான ஒளிபுரத்தில் உள்ளது புனித வளனார் சர்ச்.

இந்த சர்ச் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் சர்ச்சில் இருந்த போர்டு, மாதா சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு ஆகியவை நொறுங்கி உடைந்தது.

தகவல் அறிந்த கிறிஸ்வது மக்கள் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பங்குத் தந்தை ஜெரோம் எரோலி, கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP