சமீபத்திய பதிவுகள்

20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: ஜெயசூர்யா ஆட்டத்தால் இலங்கை வெற்றி-பாகிஸ்தானை வீழ்த்தியது

>> Thursday, October 16, 2008

 
lankasri.comபாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, கனடா ஆகிய 4 நாடுகள் பங்கேற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கனடாவில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின.

முதலில் ஆடிய பாகிஸ் தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது. தொடக்க வீரர் சல்மான் பட் 41 பந்தில் 44 ரன்னும், மிஸ்பா உல் ஹக் 23 ரன் னும் எடுத்தனர். அஜந்தா மெண்டீஸ் 3 விக்கெட்டும், மெகரூப், பெர்னாண்டோ தலா 1 விக்கெட்டும் கைப் பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்து 5 விக்கெட்டில் வென்று கோப்பையை கைப் பற்றியது.

ஜெயசூர்யா 34 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்னும், உத்வதே 25 ரன்னும் எடுத்தனர். சோயிப் மாலிக் 2 விக்கெட் கைப்பற்றினார்.

ஜெயசூர்யா ஆட்ட நாய கனாகவும், மெண்டீஸ் தொடர் நாயகனாகவும் தேர்வு பெற்றனர். லீக் ஆட்டத்தில் தோற்றதற்கு இறுதிப் போட்டியில் வென்று பாகிஸ்தானை இலங்கை அணி பழி தீர்த்துக் கொண்டது.

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP