சமீபத்திய பதிவுகள்

ஒரிசாவில் 2 பேர் வெட்டிக் கொலை:மீண்டும் பதற்றம்

>> Saturday, October 4, 2008

 
 
lankasri.comஒரிசாவில் கலவரம் பாதித்த கந்தமால் மாவட்டத்தில் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.சிந்துபங்கா கிராமத்தில் இரவு நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 15 வயது சிறுவன் உள்பட இருவரை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகளை போலீஸர் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி விஎச்பி தலைவர் லட்சுமணானந்தா சரஸ்வதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கந்தமால் மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். தற்போது அங்கு இருவர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

விஎச்பி கோரிக்கை: இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக அப்பாவி இந்துக்களை போலீஸர் கைது செய்கின்றனர். இதனைத் தடுக்க மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லட்சுமணானந்தாவை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று விஎச்பி வலியுறுத்தியுள்ளது.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223101776&archive=&start_from=&ucat=1&

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP