சமீபத்திய பதிவுகள்

கிறித்துவர்களைத் தாக்குவதற்குப் பெயர் மக்களைக் காப்பாற்றுவதாம்! பஜ்ரங் தள் தலைவரின் உளறல்!

>> Friday, October 17, 2008


 

புதுடில்லி, அக். 5- மக்களைக் காப்பாற்றத்தான் பஜ்ரங் தள் அமைப்புக்குப் பயிற்சி அளிக் கப்படுவதாக அந்த அமைப் பின் தலைவர் கூறியுள்ளார்.
கான்பூரில் தனியார் விடுதி யில் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது ஏற் பட்ட விபத்தில் இறந்துபோன பூபிந்தர் சிங் என்பவர் பஜ்ரங் தளத்தின் தீவிர தொண்டர் எனவும் அவர் தற்போது ஒதுங் கியிருப்பதால், அவருடைய செயல்களுக்கு பஜ்ரங் தளம் காரணமாக்கப் படக் கூடாது என்றும் அதன் தலைவர் பிரகாஷ் சர்மா கூறுகிறார்.
விசுவ இந்துபரிசத்தின் இளைஞர் பிரிவாக பஜ்ரங் தளம் உருவாக்கப்பட்ட போது கான்பூரின் அமைப்பாளராக பிரகாஷ் சர்மா நியமிக்கப்பட் டார். அப்போது உத்தரப்பிர தேசத்தின் சில பகுதிகளில் மட் டுமே பஜ்ரங் தளம் செயல் பட்டது. தற்போது அதில் 13 லட்சம் தீவிர தொண்டர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமே உள்ளனர். பஜ்ரங் தளத்தின் நோக்கமெல்லாம் இந்திய நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் பஜ்ரங் தளத்தின் கிளைகள் இருக்க வேண்டும் என்பதுதான் என் கிறார் இவர்.
கான்பூரில் வெடி விபத்து நடந்த இடத்தில் 11 நாட்டுத் துப்பாக்கிகள், வெடிப்பொருள் கள், பாட்டரிகள், ஜெலட்டின் குச்சிகள், நேரம் குறிப்பான்கள் போன்றவை காணக் கிடைத் தன. இங்கு வெடி விபத்தில் இறந்த ராஜீவ் மிஸ்ர என்பவர் யார் எனத் தெரியாது எனக் கூறி விட்டார் பிரகாஷ் சர்மா.
ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்திலோ, கருநாடக மாநிலம் மங்களூரிலோ வேறு எங்குமோ தமது பஜ்ரங் தளம், கிறித்துவர்களுக்கு எதிரான வன்செயல்களில் ஈடுபட வில்லை என முழுப் பூணிக் காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார். கருநாடகா மாநில பஜ்ரங் தளத்தின் தலை வர் மகேந்திர குமார் வன் செயல்களைத் தம் அமைப்பு செய்ததாக ஏற்கெனவே ஒத்துக் கொண்டு கைதாகியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
அவர் கூறியது தவறு என் கிறார் பிரகாஷ் சர்மா. இந் துக்கள் இதில் சம்பந்தப்பட் டிருக்கிறார்கள் என்று எப்படி நீங்கள் கூற முடியும்? ஒரு வரையொருவர் கிறித்துவர்கள் தாக்கிக் கொள்ளவில்லை என்று கூற முடியுமா? இரண்டு கிறித்துவர்கள் ஒரு தேவால யத்திற்குத் தீ வைத்தது எனக்குத் தெரியும் என்றெல்லாம் இவர் சவடாலாகப் பேசுகிறார்.
அங்கே இருந்த விசுவ இந்து பரிசத்தின் வயதான தலைவர் கிரிராஜ் கிஷோர் என்பவர் கூறுகையில், அந்தப் பகுதியில் பணியாற்றிய லட்சுமணா னந்தா கொல்லப்பட்டதால் எதிர்விளைவுகள் இருக்கத் தான் செய்யும் எனக் குறிப்பிட் டார். ஒரிசாவில் பா.ஜ. கட்சிக் கூட்டணி ஆட்சி நடந்தாலும், கொலை செய்தவர்களை இன் னும் கைது செய்யவில்லை என்று கூறினார். மக்களைக் காப்பாற்றும் கடமை பஜ்ரங் தளக்காரர்களுக்கு இருப்பதாக வும் இதற்காக அவர்களுக்குக் கடும் பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் பிரகாஷ் சர்மா தெரிவித்தார். பஜ்ரங் தளத்தின் நோக்கம், இலட்சியம் எல் லாமே இந்து ராஷட்ரத்தை ஏற்படுத்துவதுதான் என்று அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
இந்து ராஷ்டிரத்தில் சிறு பான்மையர் வசிக்கலாம்; மசூதிக்கோ, சர்ச்சுக்கோ போக வேண்டாம் எனக் கூறவில்லை. மத மாற்றம் நிறுத்தப்பட வேண்டும். நாங்கள் மீண்டும் இந்து மதத்திற்கு அவர்களை மாற்றிக் கொண்டு வந்துள் ளோம். (இது மத மாற்றம் அல்லவா?) எனக் கூறிய பிரகாஷ் சர்மா, தாம் பஜ்ரங் தளத்தின் அமைப்பாளராக வந்த பிறகு 10 அல்லது 15 ஆயிரம் பேரை மத மாற்றம் செய்திருப்பதாகப் பெருமை பேசிக்கொண்டார்.
இவ்வளவு வெளிப்படை யாக இந்து மதவெறிப் பேச்சும், பிற மத வெறுப்பும் கொண் டுள்ள இந்த அமைப்பு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மதச் சார்பின்மைக்கு எதிராக, இந்து மத ஆட்சியை நிறுவத் துடிக்கும் பஜ்ரங் தளத் துக்குத் தடை விதிக்க வேண் டும் எனப் பல அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன என்பது நினைவு கூரத்தக்கது.

 

http://files.periyar.org.in/viduthalai/20081005/news08.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP