சமீபத்திய பதிவுகள்

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல்:20-ஓவர் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் பாண்டிங் சொல்கிறார்

>> Friday, November 28, 2008

 
lankasri.comசாம்பியன் "லீக்" 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது.மும்பை,பெங்களூர்,சென்னை ஆகிய 3-நகரங்களில் போட்டி நடக்கிறது.இந்த நிலையில் மும்பையில் நேற்று இரவு தீவிரவாதிகள்,துப்பாக்கியால் சுட்டும்,வெடிகுண்டு வீசியும் தாக்குதல் நடத்தினார்கள்.இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

மும்பையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சாம்பியன் "லீக்" 20-ஓவர் போட்டி அங்கு நடைபெறுமா?என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அங்கு நடைபெற இருந்த போட்டிகள் பெங்களூருக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.அங்கு 3-ஆட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையே மும்பை குண்டு வெடிப்பை தொடர்ந்து சாம்பியன் லீக் 20-ஓவர் போட்டியை இந்தியாவில் நடத்த பாண்டிங் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.வேறு நாட்டுக்கு போட்டியை மாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.விக்டோரியா,மேற்கு ஆஸ்திரேலியா அணிகள் இந்தியாவில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சாம்பியன் "லீக்" 20-ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியாவில் இருந்து 2-அணிகள் பங்கேற்கின்றன.

மேலும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹைடன் மைக்கேல் ஹஸ்சி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும்,வார்னே,வாட்சன் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் விளையாடுகிறார்கள்.
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1227771071&archive=&start_from=&ucat=4&

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP