சமீபத்திய பதிவுகள்

புலிகளிடம் இருந்து 2 நகரங்களை ராணுவம் பிடித்தது

>> Friday, November 14, 2008

 
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் கடும் போர் நிலவி வருகிறது.


இதில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை முழுவதுமாக பிடிக்க சிங்கள ராணுவம்
மும்முனை தாக்குதல் நடத்தியபடி முன்னேறி செல்கிறது.

ராணுவத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் ஆவேசமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கிளிநொச்சியை மிக அருகில் ராணுவம் நெருங்கி செல்கிறது.

வெள்ளிக்கிழமை பேய்முனை மற்றும் வலைப்பாடு ஆகிய 2 கிராமங்களை பிடித்துவிட்டதாகவும், ராணுவம் தெரிவித்துள்ளது. மன்னார்-பூநகரி சாலைக்கு மேற்கே இந்த பகுதி உள்ளது.

பேய்முனையை கைப்பற்றியதன் மூலம் மேற்கு கரையோரத்தில் இருந்து கடற்புலிகளின் தளம் ராணுவத்தின் வசமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது விடுதலைப்புலிகள் பூநகரி தளத்தை வலுப்படுத்தி வருகிறார்கள். பூநகரி நோக்கி இப்போது ராணுவம் முன்னேறி செல்கிறது. அந்த பகுதியையும் விரைவில் பிடித்து விடுவோம் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவ தாக்குதல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்துக்குள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=289

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP