சமீபத்திய பதிவுகள்

தாஜில் மீண்டும் குண்டுவெடிப்பு

>> Friday, November 28, 2008

 

மும்பையில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள தாஜ் ஓட்டலில் இன்று மீண்டும் குண்டு வெடித்தது.ஓட்டலுக்குள் பதுங்கியுள்ள பயங்கரவாதிக்கும்,பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று காலை மீண்டும் துப்பாக்கி சண்டை மூண்டுள்ளது.

இதனிடையே ஓபராய் ஓட்டலில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து 93-பேர் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.மும்பையில் நேற்று முன்தினம் இரவு நட்சத்திர ஓட்டல்கள் தாஜ் மற்றும் ஓபராய்க்குள் பயங்கரவாதிகள் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தாஜ் ஓட்டலுக்குள் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்தவர்கள் நேற்று மீட்கப்பட்டனர்.ஒரே ஒரு பயங்கரவாதி மட்டும் ஓட்டலுக்குள் இன்னும் பதுங்கியுள்ளான்.அவனுடன் இன்று காலை பாதுகாப்பு படையினர் மீண்டும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் தாஜ் ஒட்டலின் பழைய கட்டிடத்தின் தரை தளத்தில் இன்று மீண்டும் குண்டு வெடித்துள்ளது.அந்த பயங்கரவாதியின் பிடியில் 2-பேர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.இந்த நடவடிக்கை சிலமணி நேரங்களுக்குள் முடிவடைந்து விடும் என்று பாதுகாப்பு படையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மும்பையில் ஓபராய் ஓட்டலுக்குள் பயங்கர வாதியின் பிடியில் இருந்த 93-பேர் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு பயணிகள் ஆவர்.ஓட்டலுக்குள் இருந்து மீட்டு வரப்பட்ட அவர்கள்,கார்களில் ஏற்றப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

தாஜ் மற்றும் ஓபராய் ஓட்டல்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக மும்பை போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.




http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1227863974&archive=&start_from=&ucat=1&

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP