சமீபத்திய பதிவுகள்

பிரான்ஸ் மீது தாக்குதல்: அல்-கய்டா எச்சரிக்கை!

>> Friday, November 28, 2008

 

 

ஆப்கானிஸ்தானில் உள்ள பிரான்ஸ் படைகளை உடனடியாக அந்நாடு திரும்பப் பெறாவிட்டால் பாரீஸ் நகரில் தாக்குதல் நடத்துவோம் என அல்-கய்டா எச்சரித்துள்ளது.

துபாயில் இயங்கி வரும் அல்-அரேபியா தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பான வீடியோவில், ஆப்கனில் உள்ள படைகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கான பலனை பிரான்ஸ் அனுபவிக்க வேண்டியிருக்கும். அது தலைநகர் பாரீஸின் மீது நடத்தப்படும் தாக்குதலாகக் கூட இருக்கலாம் என அல்-கய்டா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஃபரூக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி காபூலில் இருந்து தெற்கே 60 கி.மீ தொலைவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 10 பிரான்ஸ் வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் அல்-கய்டா பொறுப்பேற்றுக் கொள்வதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நேட்டோ தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு படையில் 2,600 பிரான்ஸ் வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmann.com/2008/11/19/286

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP