சமீபத்திய பதிவுகள்

பொன்மொழிகள்

>> Tuesday, December 9, 2008

பொன்மொழிகள்.

 பைபிள் சொல்லும் கருத்துக்கள்

  • பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில் நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள். ஆனால் மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது மிகச் சிலரே அப்பாதையைக் கண்டடைகிறார்கள். 

  • துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே. தீயோருடைய வழியில் நடவாதெ. அதை வெறுத்து விடு. அதன் வழியாய்ப் போகாதெ. அதை விட்டு விலகிக் கடந்து போ.

  • ஆண்டவர் தம்மை நோக்கி வேண்டுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம். ஆகையால் பிறர் உங்களுக்கு எவைகளைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவைகளையே நீங்கலும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

  • உங்கள் பெற்றோருக்குக் கீழ்படியுங்கள். உனக்கு நன்மை உண்டாகியிருப்பதற்கும், உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தந்தையையும் தாயையும் வணங்க வேண்டும் என்கிற ஆண்டவனின் கட்டளையை நிறைவேற்றுங்கள்.

  • சிறுமைப்பட்டவனும், எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உதவி செய்யும்படி உன் கையைத் தாராளமாகத் திறப்பாயாக. மனப்பூர்வமாய் நீ கொடுக்கும் போது, உன் எல்லாக் காரியங்களிலும் நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.

  • நல்ல மனுஷனுடைய நடைகளைக் கர்த்தர் உறுதிப்படுத்துகிறார். அவனுடைய வழியின் மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை. கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். தீமையை விட்டு விலகி நன்மை செய். என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.

  • எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுத்துவோம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகள் எல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று இறைவன் அறிந்திருக்கிறார். இறைவனுக்கு உங்கள் வாழ்வில் முதல் இடம் கொடுங்கள். அப்பொழுது உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் அவர் சந்திப்பார்.

  • தன் வாழ்நாட்களில் நன்மையைக் காண விரும்புகிரவன், தன் நாவைப் பொல்லாப்புக்கும், தன் உதடுகளைக் கபடான பேச்சுக்கும் விலக்கிக் காக்கக் கடவன். அவன் பொல்லாப்பை விட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தை விரும்பி அதைப் பின் தொடரக் கடவன். 

  • கர்த்தர் பிறர்மேல் தயை காட்டுபவர்களுக்குத் தயையுள்ளவராகவும், உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு உத்தமராயும், புனித வாழ்வு வாழ்கிறவர்களுக்கு புனிதராகவும், மாறுபாடானவனுக்கு மாறுபடுகிறவராயும் தோன்றுகிறார்.

தொகுப்பு: தாமரைச்செல்வி
 
 
நன்றி:முத்துக்கமலம் இணைய இதழ்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP