சமீபத்திய பதிவுகள்

பிஜேயின் போலித்தனமான புத்தகத்துக்கு பதில்

>> Monday, February 4, 2008

"பின்னாகப் போ சாத்தானே" என்றார்-TNTJ தலைவருக்கு ஈசாகுரான் பதில்

Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார்

(பிஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு ஈஸா குர்‍ஆன் மறுப்பு)


பிஜே அவர்களின் குற்றச்சாட்டு:
"இயேசுவிற்கு சரியாக மனிதர்களை மதிப்பிடத் தெரியவில்லை, தனக்கு பின் கிறிஸ்தவத்தை தலைமை தாங்க பேதுருவை இயேசு தெரிவு செய்தது தவறு"


முன்னுரை: பிஜே அவர்களின் இயேசு இறைமகனா? என்ற புத்தகத்திற்கு "ஈஸா குர்ஆன்" தளம் மறுப்பு எழுதிக்கொண்டு வருகிறது. இக்கட்டுரையில் "தவறாக மதிப்பிடுதல் கடவுள் தன்மை அன்று " என்ற தலைப்பின் கீழ் பிஜே அவர்கள் எழுதிய விவரங்களுக்கு பதில்/மறுப்பு தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் பதில்:

இக்கட்டுரைக்கான பதிலை நான் இரண்டு பாகங்களாக பிரித்து சொல்லவிரும்புகிறேன்.

பாகம் – 1: பிஜே அவர்கள் எழுதிய வரிகளில் உள்ள விவரங்களுக்கு பதில்

பாகம் - 2: இயேசுவிற்கு பிறகு தலைமைத்துவம் பெற தகுதியானவர் பேதுரு தான். பிஜே அவர்களின் கணிப்பு தவறானது.


பாகம் – 1 : பிஜே அவர்கள் எழுதிய வரிகளில் உள்ள விவரங்களுக்கு பதில்


பிஜே அவர்கள் எழுதிய எல்லா விவரங்களுக்கும் நாம் ஒவ்வொன்றாக பதிலைக் காண்போம்.

1. பைபிள் வசனங்களை தவறாக புரிந்துக்கொள்ளும் பிஜே அவர்கள்:

பிஜே அவர்கள் இயேசுவைப் பற்றி பல தவறான கருத்துக்களையும், பைபிள் வசனங்களுக்கு புதுப்புது அர்த்தங்களையும் கண்டுபிடித்து தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.


பிஜே அவர்கள் எழுதியது:

3. தவறாக மதிப்பிடுதல் கடவுளின் தன்மை அன்று

துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும் நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் (நீதிமொழிகள் 17:15)

கெட்டவனை நல்லவன் என்றும் நல்லவனைக் கெட்டவன் என்றும் தீர்ப்பது கடவுளுக்குரிய இலக்கணமன்று. இவ்வாறு தீர்ப்பது கடவுளுக்குப் பிடிக்காததும் கூட. இயேசுவிடம் இந்தத் தகுதி இருந்ததா என்றால் இல்லை என்று பைபிள் சொல்கிறது.



ஈஸா குர்ஆன் பதில்:

இயேசு தன் சீடனாகிய பேதுருவை தனக்கு பின்பு தன் ஆடுகளை மேய்க்க நியமித்தது மிகவும் பொருத்தமானதும், இதில் இயேசு வெற்றியைப் பெற்றார் என்பதையும், இயேசுவின் சபையை நடத்துவதற்கு 12 சீடர்களில் "சீமோன் பேதுரு" தான் மிகச் சரியான ஒரு நபர் என்பதையும் பிஜே அவர்களுக்கு விளக்குவதற்கு முன்பாக பிஜே அவர்கள் குறிப்பிட்ட நீதிமொழிகள் வசனத்திற்கு பதிலைத் தருகிறேன்.
பிஜே அவர்களே, நீதிமொழிகள் 17:15ம் வசனத்தின் பொருள் என்னவென்றால், ஒரு நீதிபதி அல்லது அரசன் மக்களுக்கு தீர்ப்புச் சொல்ல "நீதிபதி இருக்கையில்" உட்கார்ந்து தீர்ப்புச் சொல்லும் போது, குற்றவாளியை குற்றவாளி என்றும், நீதிமானை நீதிமானாகவும் தீர்ப்பு செய்யவேண்டும் என்றுச் சொல்கிறது, அப்படியில்லாமல் மாற்றித்தீர்ப்பு செய்பவன் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்று இவ்வசனம் சொல்கிறது.

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் தான் ஒரு "நீதிபதியாக" வரவில்லை அதற்கு பதிலாக நம்மை இருட்டிலிருந்து மீட்கவே வந்தார் என்று பல முறை அவர் சொல்லியுள்ளார். அதே நேரத்தில் தன்னுடைய இரண்டாம் வருகையில் தான் ஒரு "நீதிபதியாக" இருந்து உலக மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்வார் என்றும் சொல்லியுள்ளார்.

ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற் போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். (யோவான் 12:47 )



அதாவது, இலஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு நீதிபதி நியாயத்தை புரட்டுபவனைப் பற்றி இவ்வசனம் சொல்கிறது. முக்கியமாகச் சொன்னால், நியாயம் தீர்க்க உட்காரும் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து என்றுச் சொல்லக்கூடிய ஒரு அமைப்பிலிருந்து, உச்ச நீதி மன்ற நீதிபதி வரை, பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டு, நல்லவனை கெட்டவன் என்றும் கெட்டவனை நல்லவன் என்றும் நியாயம் தீர்ப்பவன் தேவனுக்கு அருவருப்பானவன் என்று இவ்வசனம் சொல்கிறது. இதையே ஏசாயா 5:23ல் "இப்படிப்பட்டவனுக்கு ஐயோ" என்று சொல்லப்படுகிறது.

பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!(ஏசாயா: 5:23)



ஆக, நீங்கள் இயேசுவின் முதல் வருகையில் அவரை நீதிபதியாக பார்த்தது மிகவும் தவறான பார்வையாகும். ஆனால், அவரது இரண்டாம் வருகையில் நீங்கள், நான், உங்கள் முகமது மற்றும் மற்ற உலக மக்கள் எல்லாரும் அவருக்கு முன்பாக நியாயத்தீர்ப்பிற்காக நிற்போம். அப்போது அவர் நீதி செலுத்துவார். எனவே, இவ்வசனம் இயேசுவின் முதல் வருகைக்கு சம்மந்தப்பட்ட வசனம் அல்ல.

இயேசு தன்னை நீதிபதியாக தன்னை காட்டிக்கொள்ளவும் இல்லை. அன்பே உருவான தெய்வமாக தன்னை முதலாவது காட்டவே அவர் வந்தார். அதனால், ஒரு விபச்சார பெண்ணை நீயாயம் தீர்க்கும்படி யூத ஆசாரியர்கள் சொன்னாலும், அப்பெண்ணை மன்னித்து, இனி அப்படி செய்யாதே என்றுச் சொல்லி, அனுப்பிவிட்டார். அதுபோல பல சந்தர்பங்களில் அவர் முதலில் மன்னித்து பிறகு சுகப்படுத்தியுள்ளார். ஆனால், அவரது இரண்டாம் வருகையில், அவரது வாயிலிருந்து "நியாயத்தீர்ப்பு" மட்டும் தான் வெளிப்படும். விபச்சாரக்காரர்களையும், திருடர்களையும், கொலை செய்பவர்களையும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொல்பவர்களையும், பெண்களை கற்பழிப்பவர்களையும் அவர் நியாயம் தீர்ப்பார், இதிலிருந்து யாரும் தப்பமுடியாது.

எனவே, உம்முடைய கருத்து அல்லது புரிந்துக்கொள்ளுதல் மிகவும் தவறானதாகும்.

இருந்த போதிலும், ஒரு பேச்சுக்காக நீங்கள் சொல்வது போல இயேசு நியாயம் தீர்த்தார் என்று வைத்துக்கொண்டாலும், அப்போது கூட நீங்கள் இயேசுவை குற்றப்படுத்த முடியாது. ஏனென்றால், இயேசுவின் சீடர்களில் தலைமைத் துவத்திற்கு மிகவும் பொருத்தமானவர் "பேதுரு" தான் என்பதை பேதுருவின் வாழ்க்கையிலிருந்து நாம் கண்டுக்கொள்ளமுடியும் . உங்களுடைய "கணிப்பு" தவறு என்பதை பைபிளின் உதவியோடு இப்போது விளக்குகிறேன்.

2. எதற்காக பேதுருவை "பின்னாகப்போ சாத்தானே" என்று இயேசு சொன்னார்?

பேதுருவை இயேசு ஒரு சமயத்தில் "பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொன்னார். பேதுரு இடறலாகவும், தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்காமல் மனுஷருக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறார் என்று இயேசு சொன்னார். இதை பிஜே அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தன் புத்தகத்தில் எழுதிவிட்டார். அதாவது பிஜே அவர்கள் குறிப்பிட்ட இவ்விவரங்கள் இஸ்லாமுக்கு ஒரு மிகப்பெரிய அடியாக மாறப்போகிறது என்பதை பிஜே அவர்கள் அறியவில்லை.

பிஜே அவர்கள் எழுதியது:

அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். (மத்தேயு 16:23)

பேதுரு என்ற சீடனைச் சாத்தான் என்றும்
இயேசுவையே தடம் புரளச் செய்தவன் என்றும்
கடவுளுக்குரியவைகளைச் சிந்திக்காதவன் என்றும்

இயேசு எடை போட்டிருக்கிறார்



அ) ஏன் இயேசு பேதுருவை "பின்னாகப்போ சாத்தானே " என்றுச் சொன்னார்?

ஆ) யார் இயேசுவிற்கு இடறலாக இருக்கிறார்கள்?

இ) எப்படிப்பட்டவர்கள் தேவனுக்குரியதை தேடாமல் மனுஷனுக்குரியதை தேடுகிறார்கள்?

இப்படி இயேசு பேதுருவிற்கு சொல்வதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான், அதாவது " இயேசுவின் சிலுவைப்பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் போன்றவைகள் இயேசுவிற்கு நேரிடக்கூடாது என்று அவரிடம் பேதுரு சொன்னதால் தான்".

இப்பொழுது பிஜே அவர்கள் குறிப்பிட்ட மத்தேயு 16:23ம் வசனத்தின் முந்தைய இரண்டு வசனங்களைப் (மத்தேயு 16:21-22) பாருங்கள், அப்பொழுது உங்களுக்கே புரியும்.


மத்தேயு 16:21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.

மத்தேயு 16:22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.

மத்தேயு 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.



பிஜே அவர்கள் குறிப்பிட்ட மற்றும் இயேசு பேதுருவோடு சொன்ன வார்த்தைகளின் படி:

இயேசுவிற்கு சிலுவைப்பாடுகள் வரக்கூடாது என்று சொல்பவர்களைப் பார்த்து ,

இயேசு சிலுவையில் மரிக்கக்கூடாது அல்லது மரிக்கவில்லை என்றுச் சொல்பவர்களைப் பார்த்து,

இயேசு மரித்து உயிர்த்தெழக்கூடாது அல்லது உயிர்த்தெழவில்லை என்று சொல்பவர்களைப் பார்த்து,



இயேசு "பின்னாகப் போ சாத்தானே" என்றுச் சொல்கிறார்.

இப்படிப் பட்டவர்கள் "தனக்கு இடறலாக இருக்கிறார்கள்" என்று இயேசு சொல்கிறார்,

இப்படிப் பட்டவர்கள் "தேவனுக்குரியதை தேடாமல், மனுஷருக்குரியதை தேடுகிறவர்கள் " என்று இயேசு சொல்கிறார்.

இயேசுவின் மீது வைத்த அன்பின் காரணத்தினாலும், தன் குருவிற்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்ற கரிசனையினாலும், நிறைந்தவராய் பேதுரு, இயேசுவை தனியே அழைத்து, "இப்படி உமக்கு பாடுகள், மரணம்" வரக்கூடாது என்றுச் சொன்னார்.

ஆனால், இயேசு சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பது தேவனின் திட்டம், இதை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பேதுரு பேசியதால், தான் இயேசு பேதுருவைப் பார்த்து "எனக்கு பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொல்கிறார். ஆனால், இயேசு மரித்து உயிரோடு எழுந்துவிட்ட பிறகு, இதே பேதுரு எருசலேம் மக்களுக்கு சாட்சியாக எழுந்து நின்று இயேசுவின் சிலுவை மரணம் உயிர்த்தெழுதல் பற்றி சாட்சி சொல்கிறார், பல இடங்களுக்கும், ஊர்களுக்கும் சென்று இயேசு மரித்தார், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று சாட்சி பகிர்ந்தார், இந்த காரணத்திற்காகவே மரித்தார். இதனை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் (புதிய ஏற்பாடு) பார்க்கலாம்.

பேதுரு ஒரு முறை தவறு செய்தார், அதற்காக இயேசு அவரை கடிந்துக்கொண்டார், உண்மை தெரிந்த பிறகு பேதுரு மாறிவிட்டார், அவ்வளவு தான், ஆனால், பிஜே அவர்கள் சொல்வது எப்படி உள்ளதென்றால், இயேசு தொடர்ந்து பேதுருவை "நீ சாத்தான்" என்று முத்திரை குத்திவிட்டதாகவும், பேதுருவோடு சேராதீர்கள் என்று இயேசு மற்றவர்களுக்குச் சொன்னதாகவும், பேதுருவினால் இயேசு தடம் புரண்டு போய்விட்டதாகவும், பிஜே அவர்கள் கற்பனை செய்துக்கொண்டு எழுதுகிறார். இந்த பேதுருவைக்கொண்டு, இந்த பேதுருவின் ஊழியத்தின் மூலமாக இயேசு இஸ்லாமையும், இருட்டின் அதிகாரத்தையும் இன்று வரை தட‌ம் புரட்டிக்கொண்டு இருக்கிறார் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

பிஜே அவர்களுக்கு நான் எழுதும் இரண்டாவது பதிலில் இயேசு எப்படி பேதுருவை ஆரம்பத்திலிருந்து தயார்படுத்தினார் என்பதையும், எப்படி அவரை உட்சாகப்படுத்தினார் என்பதையும், பேதுரு எப்படி தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் முழுமூச்சாக உழைத்தார் என்பதையும் காணலாம்.

3. முகமதுவையும், இஸ்லாமைப் பின்பற்றுகிறவர்களையும் பார்த்து இயேசு "பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொல்கிறார்:

இதுவரையில் நாம் பார்த்த விவரங்களின் படி, கிறிஸ்தவத்தின் அடிப்படையாகிய "இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை" மறுப்பவர்களை, அல்லது இவைகள் நடக்கக்கூடாது என்றுச் சொல்பவர்களை அல்லது இவைகள் நடக்கவில்லை என்றுச் சொல்பவர்களைப் பார்த்து இயேசு " எனக்கு பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொல்கிறார், என்பது நமக்கு தெளிவாக விளங்கி இருக்கும்.

இஸ்லாம் படி, முகமது "இயேசு சிலுவையில் மரிக்கவில்லை" என்றுச் சொன்னார். இயேசு உயிர்த்தெழவில்லை என்றுச் சொன்னார். எனவே, பேதுருவிற்கு இயேசு சொன்ன அதே வார்த்தைகள் இவருக்கும் பொருந்தும். இப்படிச் சொல்லும் எல்லாருக்கும் பொருந்தும்.

இப்படி நான் என் சொந்தமாகச் சொல்லவில்லை, பைபிளில் இயேசு சொன்ன வசனங்கள் இப்படிச் சொல்கின்றன. இந்த வசனங்களை பிஜே அவர்களும் குறிப்பிட்டார்கள், பேதுருவிற்கு இயேசு இப்படி சொல்லியுள்ளார் என்று பிஜே அவர்களே சாட்சியும் கொடுக்கிறார் .

எனவே, பிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, முஸ்லீம்களைப் பார்த்து இயேசு "பின்னாகப் போ சாத்தானே" என்றுச் சொல்கிறார். முஸ்லீம்கள் இயேசுவிற்கு இடறலாக இருக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார். முஸ்லீம்கள் இறைவனுக்கு ஏற்றதை சிந்திக்காமல், மனிதர்களுக்குரியதை சிந்திக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார்.

இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மீது கோபம் கொள்ளவேண்டாம். அதற்கு பதிலாக பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனத்தின் அடிப்படையில் சிந்தித்துப்பாருங்கள்,

ஏன் பேதுருவைப் பார்த்து இயேசு இந்த மூன்று வார்த்தைகளைச் சொன்னார்?

இப்படி சொல்லும் மற்றவர்களுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்துமா? இல்லையா? என்று சிந்தித்துப்பாருங்கள்.

குர் ஆனைப் பொருத்தவரையில்:
இயேசு சிலுவையில் அறையப்படவில்லை,

இயேசு மரிக்கவில்லை, இயேசுவை அல்லா உயிரோடு எடுத்துக்கொண்டார்,

இயேசு உயிர்த்தெழவில்லை


இயேசுவின் வார்த்தைகளின் படி பைபிளைப் பொருத்தவரையில்:

இயேசுவின் சிலுவை பாடுகள்,

அவரது மரணம்,

உயிர்த்தெழுதல்

இவைகளை மறுத்தவர்கள்:

அது யாராக இருந்தாலும் சரி, தன்னோடு 3 ஆண்டுகளுக்கு அதிகமாக சீடனாக இருந்தவனானாலும் சரி, தனக்கு பின் தன் ஊழியத்தை நேர்த்தியாகச் செய்து சாட்சியாக மரிக்கப்போகிறவனானாலும் சரி, இயேசுவிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின் தோன்றும் எந்த மார்க்கமானாலும் சரி, "இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் " போன்றவைகளை மறுப்பவர்களைப் பார்த்து இயேசு கூறும் வார்த்தைகள் இவைகள்:

"பின்னாகப்போ சாத்தானே"

"நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்"

"நீ இறைவன் சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு செவி சாய்க்காமல், மனுஷனுக்கு சம்மந்தப்பட்டதற்கு செவி கொடுக்கிறாய்"

என்பதாகும்.

இதன் படி, "இஸ்லாமைப் பார்த்து" எனக்கு பின்னாகப்போ சாத்தானே என்று இயேசு சொல்கிறார். 
"இஸ்லாம் இறைவனின் சித்தத்திற்கு இடறலாக இருக்கிறது" என்று இயேசு சொல்கிறார். 
"இஸ்லாமின் கோட்பாடுகள், இறைவனுக்கு ஏற்றதைப் பற்றி சொல்வதில்லை, மனுஷனுக்கு ஏற்றதைப் பற்றி சொல்கிறது" என்று இயேசு சொல்கிறார்.

பிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, இயேசு பேதுருவை சாத்தான் என்று சொல்லி எடை போட்டாராம், இப்போது இதே வார்த்தைகள் இஸ்லாமையும், முஸ்லீம்களையும் எடை போட்டுக்கொண்டு இருக்கின்றன.

நான் இந்த பதிலில் சொன்ன விவரங்கள் சரியானவை அல்ல என்று யாராவது நினைப்பீர்களானால், எனக்கு தெரிவியுங்கள். பேதுருவிற்கு இயேசு சொன்ன வார்த்தைகள் எப்படி இஸ்லாமுக்கு பொருந்துகிறது என்றுச் சொல்லியுள்ளேன். இஸ்லாமுக்கு பொருந்தாது என்று சொல்வீர்களானால்? எப்படி பொருந்தாது? என்று விவரமாக எனக்கு பதில் அளிக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிஜே அவர்கள் எழுதியது:

அது மட்டுமின்றி இயேசுவையே அவன் மூன்று தடவை மறுப்பான் என்றும் இயேசு கூறியதாக நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன.



ஈஸா குர்‍ஆன் பதில்:

பிஜே அவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும். ஒரு மனிதனை தவறாக மதிப்பிடுவது வேறு, ஒரு மனிதம் இப்படி நடந்துக்கொள்வான் என்று முன்கூட்டியே சொல்வது வேறு.

இந்த இடத்தில், இயேசு பேதுருவை தவறாக மதிப்பிடவில்லை, அதற்கு பதிலாக தான் ஞானத்தின் ஊற்று என்பதை நிருபித்தார், எதிர் காலத்தில் நடப்பதை துள்ளியமாக சொன்னார்.

ஒரு வேளை, பேதுருவைப் பார்த்து இயேசு, "நீ என்னை மறுதலிக்கமாட்டய் என்று நான் நினைத்தேன்(மதிப்பிட்டேன்), ஆனால், என் நம்பிக்கையை வீணாக்கிவிட்டாய்" என்று சொல்லியிருந்தால், நீங்கள் சொல்வது போல "மனிதர்களை மதிப்பிட அல்லது எடை போட இயேசுவிற்கு தெரியவில்லை" என்று நான் ஏற்றுக்கொண்டு இருப்பேன்.

ஆனால், நடந்தது என்ன?
பேதுரு சொல்கிறார்: நான் உம்மை எப்பொதும் மறுதலிக்கமாட்டேன் (எனக்கு இயேசு தெரியாது என்று சொல்லமாட்டேன்) என்றுச் சொல்கிறார். என் உயிர் போனாலும் நான் அப்படி சொல்லமாட்டேன் என்றுச் சொல்கிறார்.

இதற்கு இயேசு பதில் சொல்கிறார்: அப்படியா? "எனக்கு இயேசு என்றால் யார் என்று தெரியாது" என்று நீ சொல்லுவாய்(மறுதலிப்பாய்) என்றார்.

உண்மையில் நடந்தது என்ன? இயேசு சொன்னது போல பேதுரு மறுதலித்தார். அதாவது இயேசு சொன்னது தான் நடந்தது, இயேசு எடை போட்டது சரியாக நடந்தது. இயேசு மதிப்பிட்டது சரியாக நடந்தது.

பிஜே அவர்களே இந்த நிகழ்ச்சி இயேசு எல்லாம் அறிந்தவர் என்று தெளிவாகச் சொல்லும் போது, உமக்கு மட்டும், இயேசுவிற்கு மனிதர்களை மதிப்பிடத்தெரியவில்லை என்று எப்படி தெரிந்தது?

ஒரு வேளை, இயேசு சொன்னது போல நடக்காமல், பேதுரு இயேசுவை மறுதலிக்காமல் இருந்து இருந்தால், நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். அதாவது, இயேசு "இப்படி பேதுரு நடந்துக்கொள்வான் "என்று மதிப்பிட்டு இருந்து, ஆனால், அதற்கு எதிர்மாறாக பேதுரு நடந்து இருந்திருந்தால். அதனால், எதிர் காலத்தைப் பற்றிய அறிவு இயேசுவிற்கு இல்லை, மனிதர்களை தவறாக இயேசு மதிப்பிட்டு விட்டார் என்று சொல்லலாம். ஆனால், அப்படி நடக்கவில்லையே? இயேசு சொன்னதே நடந்ததே, இயேசு சொன்னது போலவே பேதுரு மறுதலித்தாரே, பிறகு பேதுரு மனங்கசந்து அழுதார் என்று பைபிள் சொல்கிறதே? பிஜே அவர்களுக்கு மட்டும் எப்படி எல்லாம் எதிர்மறையாக தெரிகிறது.

இயேசு சொன்னது போலவே அப்படியே 100 சதவிகிதம் நடந்தது. இயேசு இறைவன் என்பதை நிருபிக்கும் ஒரு நிகழ்ச்சி எப்படி பிஜே அவர்களுக்கு வேறுமாதிரியாக தென்படுகிறது. இயேசு சொன்னது போல பேதுரு நடந்துக்கொண்டுள்ளார், அப்படியானால், தோல்வி அடைந்தது யார்? பேதுருவா? இயேசுவா? பேதுரு தானே, அதனால், தான் அவர் மனம் கசந்து அழுதார், மறுபடியும் விழுந்த இடத்திலிருந்து எழுந்து நின்றார். வெற்றிப் பெற்றது இயேசு அல்லவா? பிஜே அவர்களுக்கு எப்படி இது தெரியாமல் போனது?

4. இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் என்று பிஜே அவர்களுக்கு தெரியுமா?

பிஜே அவர்களுக்கு இயேசுவின் சீடர்கள் எத்தனைப்பேர் என்று கூட தெரியவில்லை

பிஜே அவர்கள் எழுதியது:

பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். (மத்தேயு 16:19)

பேதுருவை விடச் சிறந்த சீடர்கள் ஒன்பது பேர் இருக்கும் போது பேதுருவைச் சரியாக எடை போடாமல் அவனிடம் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை வழங்கியது கடவுள் செய்யக் கூடியதா? இயேசு கடவுளாக இருக்க முடியாது என்பதை இதிலிருந்து ஐயமற அறியலாம்.

Formats mine


ஈஸா குர்ஆன் பதில்:

அருமையான பிஜே அவர்களே, இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்று உமக்குத் தெரியுமா?

அதாவது, கிறிஸ்தவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யாத சாதாரண மனிதர்களுக்கும், இயேசுவின் சீடர்கள் 12 பேர் என்று தெரிந்து இருக்கும், ஆனால், கிறிஸ்தவத்தில் ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதி, பல மேடைப் பேச்சுக்கள் ஆற்றிய உமக்கு தெரியாமல் போனது தான் மிகவும் வேதனைக்குரிய விசயம்.
1. எப்படி பேதுரு தவிர, இயேசுவிற்கு இருந்த மீதமுள்ள சீடர்கள் 9 பேர் என்றுச் சொல்கிறீர்?

2. இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் என்ற சீடனை நீக்கிவிட்டாலும், பேதுரு அல்லாமல், இயேசுவிற்கு 10 சீடர்கள் இருந்தார்கள் அல்லவா? உமக்கு இந்த 9 எப்படி வந்தது?

3. பேதுரு தவிர சிறந்த சீடர்கள் என்று 9 பேரை எப்படி நீங்கள் தீர்மானித்தீர்கள் (கண்டுபிடித்தீர்கள்), பிஜே அவர்களே?

4. அதாவது, சில சீடர்கள் பற்றிய முழுவிவரங்கள் நான்கு சுவிசேஷங்களில் அதிகமாக சொல்லப்படவில்லை. அப்படி இருக்கும் போது, 10 பேரில், மிகவும் சிறந்தவர்கள் 9 பேர் என்று எப்படி உங்களால் கண்டுபிடிக்கமுடிந்தது?

5. சில சீடர்கள் அதிகமாக இயேசுவோடு பேசியதையோ, மற்ற விவரங்களையோ சுவிசேஷங்களில் காணமுடியாது? அப்படி இருக்கும் போது, சிறந்தவர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள் நீங்கள்?


கேட்க யாரும் இல்லை என்று நீங்கள் எது சொன்னாலும், கேட்டுக்கொண்டு தமிழ் கிறிஸ்தவர்கள் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டீர்களா?

பிஜே அவர்களே நான் உங்களுக்கு முன்பாக ஒரு சவாலை வைக்கிறேன், பேதுருவைத் தவிர மீதமுள்ள 10 சீடர்களில், எப்படி 9 பேர் சிறந்தவர்கள் என்பதை நீங்கள் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள்? சில சீடர்கள் பற்றிய இதர விவரங்கள் அதிகமாக பைபிளில் சொல்லாப்படாத போது, எந்த தகுதிகளை வைத்து பேதுருவை விட சிறந்தவர்கள் என்று நீங்கள் முடிவு செய்தீர்கள் என்பதை விளக்குங்கள்?

ஆனால், மற்ற சீடர்களை விட இயேசுவின் சபையை நிர்வாகிக்கும் தகுதி பேதுருவிற்குத் தான் அதிகமாக உள்ளது என்பதை, இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் விளக்குகிறேன். சீடர்களின் இடையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதங்கள் வரக்கூடாது என்று இயேசு சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தாலும், தலைமையை ஏற்றுக்கொள்ளும்படி ஒருவரை தயார்படுத்தினார். இதற்கான தகுதிகள் பேதுருவிற்கு இருந்தது என்பதையும் நான் விளக்குகிறேன்.

ஏன் பரலோகத்தின் திறவுகோலை பேதுருவிடம் இயேசு கொடுத்தார்? அதற்கு பேதுரு தகுதியானவரா? பேதுரு தன் கடமையை சரியாக செய்தாரா? என்பதை அடுத்த பாகத்தில் விளக்குகிறேன்.

முடிவுரை:

கடைசியாக நான் பிஜே அவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது:
1. பேதுரு "இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்" நடக்கக்கூடாது என்று அறியாமையினால் சொன்னதினால், தான் இயேசு "பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொன்னார்.

2. இப்படிச் சொன்னது "இயேசு" இவ்வுலகில் வந்த நோக்கத்தை பேதுரு எதிர்த்ததால் தானே தவிர‌ , மற்றபடி, பேதுருவை இயேசு "சாத்தான்" என்று முத்திரை குத்திவிட்டதாக அர்த்தமில்லை.

3. அதே இயேசு பல முறை பேதுருவை புகழ்ந்துள்ளார், "நீ ஒரு திடமான‌ கல்" என்று சொல்லியுள்ளார், என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று சொல்லியுள்ளார். இயேசுவை "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்று பேதுரு அறிக்கையிட்டபோது, இயேசு பேதுருவைப் பார்த்து, "நீ பாக்கியவான்" என்றார், உனக்கு இதை பிதா வெளிப்படுத்தினார் என்றுச் சொன்னார் (மத்தேயு 16:13 18). இவைகள் எல்லாம், உங்களுக்கு தெரியவில்லையா பிஜே அவர்களே. ஒரு முறை கடிந்துக்கொண்டதை மிகவும் இமயமலை போல பெரிது படுத்தி காட்டுகிறீர்கள்?

4. இயேசுவின் வார்த்தைகளின் படி, சிலுவை மரணத்தை, உயிர்த்தெழுதலை மறுக்கும் இஸ்லாமைப்பார்த்து "எனக்கு பின்னாகப்போ சாத்தானே" என்று ஈயேசு சொல்கிறார் என்பதை அறியுங்கள்.

5. முதலாவது இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு புத்தகங்கள் எழுதுங்கள். முகமதுவிற்கு எத்தனை மனைவிகள் இருந்தார்கள் என்று தெரிந்துக்கொள்ளாமல் நான் ஒரு எண்ணிக்கை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம் ஏனென்றால், இஸ்லாமியர்கள் அங்கீகரிக்கும் எண்ணிக்கை வேறு, ஹதீஸ்கள், முகமதுவின் வாழ்க்கை வரலாறு சொல்லும் எண்ணிக்கை வேறு. ஆனால், இயேசுவின் சீடர்கள் எத்தனை பேர் என்பது உங்களைப்போன்ற மக்கள் மத்தியிலே மார்கங்களைப் பற்றி பேசி, பதில்கள் சொல்பவர்கள் சரியாக தெரிந்துக்கொண்டு இருக்கவேண்டும் என்பதை அறியுங்கள்.

6. பரலோகத்தின் சாவியை பேதுருவின் கையில் இயேசு கொடுத்தேன் என்றுச் சொன்னது மிகச்சரியான கூற்று என்பதையும், இயேசுவிற்கு பின்பு, கிறிஸ்தவ சபை தலைமைத்துவம் பெற தகுதியானவர் பேதுரு என்பதையும் என் இரண்டாம் பதிலில் சொல்கிறேன்.


மற்றபடி, நீங்கள் முன்வைத்த விவரங்கள் வேதவசனங்களை புரிந்துக்கொள்ளாமல், மேலோட்டமாக படித்து, ஏதோ ஒரு குறை சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டது என்பதை என் பதில்களை படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள். உங்கள் புத்தகமாகிய "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு நான் எழுதும் மறுப்பைப் பற்றி விமர்சிக்க விரும்புகிறவர்களை, பதில் சொல்ல விரும்புகிறவர்களை நான் வரவேற்கிறேன்.

"பேதுரு ஒரு பேரொளி", "பேதுரு ஒரு சிறந்த தலைவர்" என்ற விவரங்களோடு அடுத்த பாகத்தில் சந்திக்கும் வரை , தேவனின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.


பிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள்:

1. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்

2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்

3. பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்

4. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

5. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2

6. Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?
 

StumbleUpon.com Read more...

பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் இஸ்லாம் இணைய பேரவை

உமர்,உண்மை அடியான் என்பவர்களின் எழுத்துவடிவ விவாதத்தின் அழைப்பிதழை பார்த்தவுடன் "இஸ்லாம் இணையப் பேரவை "  தலை தெரிக்க ஓடுதுங்கோ
 
========================================================================
 
 
 
 
உமருக்கு சூடு சொரனை உள்ளதா?

நேரடி மேடை விவாதத்திற்கு வரமுடியாது, எழுத்துவிவாதத்திற்கு தயார் என்று நாம் சொன்னபோது, அதற்கு பதில் அளிக்கமுடியாமல், உண்மை இஸ்லாமியர்கள் எப்படி நடந்துக்கொள்வார்களோ அதை அப்படியே வெளிக்காட்டியுள்ளார்கள், இஸ்லமைய இணைய பேரவை அன்பர்கள்.

அவர்கள் என்ன என்ன அவதூறு வார்த்தைகள் பேசியுள்ளார்கள் என்பதை இதை படிப்பவர்கள் புரிந்துக்கொள்ளட்டும். இருந்தாலும், இயேசுவை பின்பற்றுகிறவர்களாகிய நாம் அவர்களைப்போல வார்த்தைகளை பயன்படுத்தப்போவதில்லை, அதற்கு பதிலாக அவர்களை ஆசீர்வதிக்கிறோம். அவர்களுக்காக ஜெபிக்கிறோம்.

நல்ல மரம் நல்ல கனியை கொடுக்கும் என்றும், ஒரு மரத்தின் கனியினால் அந்த மரம் அடையாளம் காட்டப்படும் என்றும் இயேசு சொன்னது எவ்வளவு உண்மையாக இருக்கிறது பாருங்கள். இஸ்லாம் என்னும் மரத்தின் அடையாளம், இஸ்லாமியர்களின் கனிகளால் அறியப்படும்.

இனி அவர்களின் வரிகளுக்கு என் பதிலை காணலாம்.



 
Quote:
தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்.

அன்புள்ள இணைய வாசகர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வலைபின்னல் (இன்டர்நெட்) என்ற இந்நூற்றாண்டின் அற்புதக் கண்டுபிடிப்பை பயனுள்ள முறையில் பயன்படுத்த முனைந்துள்ள நல் தமிழ் கூறும் நல்லலுள்ளங்களுக்கு மத்தியில், கள்ளிச் செடியாய் முளைத்துள்ள சில விஷவித்துக்கள், கண்ணியம் பண்பாடு போன்றவற்றை தூக்கிஎறிந்துவிட்டு, தமிழ் இணையத்தை நாசப்படுத்திக் கொண்டிருப்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.


நாங்கள்: கள்ளிச்செடி, விஷவித்துக்கள்
நீங்கள்: கண்ணியம் பண்பாடுகளை பேணிக்காப்பவர்கள்

தினமும் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கமில்லையா உங்களுக்கு? படித்துப்பாருங்கள், யார் விஷவித்துக்கள் என்று புரியும்.


Quote:
ஜாதி மத பேதமின்றி மாமன், மச்சான் என்று வாஞ்சையோடு வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழக மண்ணில், ரத்த ஆற்றை ஓட்டியே தீருவது என்று கங்கனம் கட்டிக் கொண்டு இந்த விஷஜந்துக்கள் தங்களது எழுத்துவடிவிலான தீவிரவாதத்தை நம் தமிழக மண்ணில் விதைத்துக் கொண்டிருக்கின்றனர்.


இரத்த ஆறு, தீவிரவாதம் இதற்கு நாங்கள் தான் காரணம் இல்லையா? இரத்த ஆறு ஓடவேண்டும் என்பதால் தானே நேரடி விவாதத்திற்கு அழைக்கிறீர்கள் நீங்கள்? அப்படி நடக்கக்கூடாது என்று தானே நாங்கள் எழுத்துவிவாததிற்கு அழைக்கிறோம். உங்களுக்கு நல்ல நகைச்சுவை சுபாவம் அதிகம் என்று நினைக்கிறேன்.


Quote:

இது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் உலகம் போற்றும் உத்தம இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நாக்கூசும் அளவில் நரகல் நடையில் விமர்சித்தும், இஸ்லாத்தையும் இறைமறை குர்ஆனையும் இகழ்ந்துபேசிக்கொண்டு பொய்களையும் புரட்டுகளையும் இணையத்தில் தொடந்து அள்ளி வீசுகிறது.


மன்னிக்கவும், "உலகம் போற்றும் உத்தமர் இறைத்தூதர் நபிகள் நாயகம்" என்று சொல்லி நல்லவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள். உலகம் அவரை அப்படி சொல்லவில்லை, இஸ்லாம் உலகம் என்று சொல்லிக்கொள்ளுங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

முகமதுவையும், இஸ்லாமையும் ஒருவர் புகழ்ந்தால், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும்:

1. அப்படி புகழுபவர் இஸ்லாமியராக இருக்கவேண்டும்.
2. அல்லது அவர் இஸ்லாம் பற்றியும், முகமது பற்றியும் அடிப்படையும் தெரியாதவராக இருக்கவேண்டும்.

உலகம் போற்றும் உத்தமர் என்றுச் சொல்லி, நல்லவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள்.



Quote:
அவைகளுக்கு முற்றுப் புள்ளிவைக்கும் முகமாக, நல்லுள்ளங்கொண்ட பலர் இஸ்லாத்திற்கு எதிரான அந்த தவறான குற்றச்சாட்டுகளுக்கு தக்கபதிலளித்து வருகின்றனர்.


பதில் அளித்துக்கொண்டு இருக்கிறார்களா? யார் அய்யா அது, இது வரையில் "ஈஸா குர்‍ ஆன்" தளத்திற்கு பதில் என்றுச் சொல்லி நான் ஒரு கட்டுரையையும் படிக்கவில்லையே.

தமிழ் முஸ்லீம் தளமும் ஓரிரு பதில்களை கொடுத்துவிட்டும், ஒதுங்கி விட்ட செய்தி உமக்கு தெரியாதோ?


நேசமுடம் தளம் பொய்யும் புரட்டையும் சொல்லி, மாட்டிக்கொண்டு, ஒன்றுமே தெரியாத மாதிரி மூச்சு விடாமல் இருப்பதை உமக்கு தெரியாதோ?

பாவம் நீங்கள், உங்களுக்கு ஒன்றுமே தெரியமாட்டேங்கிறது.

சரி, போகட்டும், ஈஸா குர்‍ஆன் தளத்திற்கோ, உமருக்கோ யார் யார் பதில் அளித்தார்கள் என்று ஒரு பட்டியலை கொடுங்கள் பார்க்கலாம்? சரி வேண்டாம், நீங்கள் தான் பதில் அளித்து பாருங்களேன்?


Quote:
தன்முகத்தை மறைத்த, தன் பெற்றோர் தனக்கிட்ட உண்மையான பெயரைக்கூட வெளியே தெரிவிக்க வக்கில்லாத, வக்கிரபுத்தி கொண்ட சிலர் என்னமோபோ என்ற பெயரில் திருட்டு வலைப்பூவை நடத்துகின்றனர்.


என்ன செய்வது, இஸ்லாமிய நண்பர்களே, எங்கள் பெற்றோர் வைத்த பெயரையும் பயன்படுத்தாத அளவிற்கு "முஸ்லீம்களுக்கு கண்ணியத்தோடும், பண்பாடோடும்" இருப்பதால், நாங்கள் இணையத்தில் ஒளிந்துக்கொண்டு எழுதுகிறோம்.

இஸ்லாம் அல்லாத மற்ற இன மக்கள் நல்லவர்களாக இருப்பதால், நீங்கள் உங்கள் பெற்றோர் வைத்த பெயரை வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள்? ஆனால், எங்களுக்கு அப்படி இல்லையே?

சாலையில் போகும் போது, பன்றிக்கூட்டம் எதிரே வரும் போது, நாம் தான் ஒதுங்கவேண்டும், இல்லையானால், அதன் செறு சகதி எல்லாம் நம்மீது படுமே.

நான் திருட்டு வலைப்பூவை நடத்துகிறேன் என்றுச் சொல்கிறீர்களே, யூதர்களை கொல்லையிட்டது யார்? உங்கள் முகமது அல்லவோ? பைபிளின் விவரங்களை கொல்லையிட்டது யார்? உங்கள் அல்லா இல்லையோ?

என்னவோ, யாஹூ தளமும், கூகுள் தளமும் உங்கள் அப்பாவிற்கு சொந்தமானதாகவும், அதை நான் திருடிவிட்டு பயன்படுத்திக்கொள்வதாகவும் எழுதுகிறீர்கள்?

என்ன இஸ்லாமிய நண்பர்களே, எங்கள் சொந்த பெயரை சொன்னால், பதில் அளித்துவிடுவீர்களோ?

நீங்கள் தான் எங்களுக்கு பெயரை வைத்துவிட்டீர்களே, கள்ளிச்செடி, விஷ ஜந்துக்கள், திருட்டு தளங்களை நடத்துபவர்கள், சூடு சொரனை இல்லாதவர்கள் என்று வைத்துவிட்டீர்கள் அல்லவா. அதுவே எங்களுக்கு போதும்.


Quote:

மேற்படி திருட்டு இணையத்தின் புரட்டுகளை களைவதற்காக இஸ்லாமிய இணையப் பேரவை வெளியிட்ட விளக்கத்திற்கு சம்மந்தமில்லாமல் உண்மையடியான் என்பவர் உள்ளே புகுந்தார். தனக்கும் மேற்படி திருட்டு இணையத்திற்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்திக் கொண்டார்.


இணையத்தில் திருட்டு தளம் எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
இஸ்லாம் இணைய பேரவை போல இருக்குமா? தெளிவாகச் சொல்லுங்களேன்.

திருடனுக்கு தேள் கொட்டியது போல, ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் பதில் அளிக்கமாட்டார்கள் என்ற தவறான எண்ணத்தில் ஒரு சில கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிவிட்டு, நாங்கள் பதில் அளித்தவுடம், இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற கோணத்தில் காணாமல் போன இஸ்லாமிய ஆசிரியர்கள், அறிஞர்கள் கட்டுரைகள் எழுதும் தளங்களைப் போல இருக்குமா? சிறிது விளக்குங்களேன்.



Quote:

கிருத்துவ லேபிளில் உலாவரும் ஆசாமியான இந்த உண்மையடியானையும் அவரது கூட்டாளிகளையும் கடந்த 20-01-2008 அன்று நாம் பகிரங்க விவாதத்திற்கு அழைத்திருந்தோம். இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதற்கு இவர்களிடம் தகுந்த ஆதாரங்கள் உண்மையிலேயே இருந்திருந்தால் அதை நம்முன்னால் நிரூபிப்பதற்கு வந்திருக்கவேண்டும். நம் விவாத அழைப்பை கண்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிஒளிந்த ஆசாமிகள், மக்களை திசைதிருப்புவதற்காக எங்களுடன் எழுத்துவிவாதத்திற்கு தயாரா என்று நம்மிடம் கேட்டுள்ளனர். இப்படி அழைப்பதற்கு இவர்களுக்கு தகுதியிருக்கிறதா என்பது ஒருபக்கம் இருக்க, இவர்களைப் பார்த்து நாம் விடுத்த பகிரங்க அறைகூவல் இன்றுவரை கிணற்றில்போட்ட கல்லாக கிடக்கிறது. இதுதான் இஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் எதார்த்த நிலை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.


அய்யா! ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், உங்களை நம்பி ஒரு சுய நினைவு உள்ள எந்த‌ மனிதனாவது மேடை ஏறுவானா?

வெறும் கட்டுரை எழுதியதற்கே:
1) பேடிகள்
2) தொடை நடுங்கிகள்
3) கள்ளிச்செடிகள்,
4) விஷ ஜந்துக்கள்
5) சூடு சொரனை இல்லாதவர்கள்

என்று அவதூறு சொல்லும் நீங்கள்.

உங்களுக்கு முன்பாக மேடையில் ஏறி பேசினால் என்னவாகும் என்று எங்களுக்கு தெரியாது என்று நினைத்தீர்களா?
அதாவது ஒரு பைபிள் வசனம் ஞாபத்திற்கு வருகிறது.

தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி(நீதிமொழிகள் 17:12 ).


Quote:
இஸ்லாம் உண்மையான மார்க்கமல்ல என்றும், நபிகளாரைத் திட்டியும், குர்ஆனை அவமதித்தும் எழுதிக்கொண்டே இருக்கும் இவர்களிடம் எழுத்துவிவாதம் என்பது பயனளிக்காது என்பதனாலேயே ஒரேமேடையில் அவர்கள் எழுதிய விஷயங்கள் பொய் என்றும், இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்றும் திட்டவட்டமாக நிரூபிப்பதற்கு பகிரங்க விவாத்திற்கு நாம் அழைப்பு விடுத்தோம்.


ஓகோ, எழுத்து விவாதத்திற்கு எங்களோடு வந்தால், தோல்வி அடைந்துவிடுவீர்கள் என்று முடிவே கட்டிவிட்டீர்களா?

ஏனைய்யா? எழுத்துவிவாதம் பலனளிக்காது? "பலன் அளிக்காது" என்றால், இஸ்லாம் தோல்வி அடைந்துவிடும் என்று நாங்கள் எடுத்துக்கொள்ளட்டுமா?

ஏன் மேடையில் பேசப்போகும் அதே வாய், எழுதும் போது பேசாதா?
மேடையில் பேச துடிக்கும் மூளை எழுதும் போது செயல் இழந்துவிடுமா?
மேடையில் பேசும் போது, அசைக்கப்படும் கை, எழுதும் போது எழுத மறுக்குமா?

என்ன நண்பர்களே பூச்சாண்டி காட்டுகிறீர்கள்?

சராசரி இஸ்லாமியர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன், எழுத்துவிவாதத்திற்கு வராமல் இப்படி ஏதோதோ எழுதிக்கொண்டு இருப்பதிலிருந்து, உங்கள் தோல்வியை நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.



Quote:
ஆனால் ஓடிவிட்டார்களே! எனவே நாம் விவாதிக்காமலேயே இவர்கள் இஸ்லாத்தை வெற்றிபெறச் செய்துவிட்டார்கள். விவாதம் செய்யமுன்வராமல் நழுவியதின் மூலம் தங்கள் தோல்லியை ஒப்புக்கொண்டு விட்டார்கள் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!


என்ன இஸ்லாமிய இணையமே உங்களுக்கெல்லாம் இதயம் என்று ஒன்று இருக்கவே இருக்காதா?

50க்கும் அதிகமாக கட்டுரைகளை நான் எழுதி பதித்து இருந்தால், ஒரு கட்டுரைக்கும் பதில் அளிக்காமல், நாங்கள் வெற்றிப் பெற்றோம், நாங்கள் வெற்றிப் பெற்றோம் என்று சொல்லிக்கொள்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லை? இப்படி நீங்கள் எழுதும் போது, உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவில்லை? உங்களை எப்படி புரிந்துக்கொள்வது?


Quote:
சரி எழுத்து விவாதத்திற்கு அழைப்புவிடுக்கிறார்களே, நாம் அவர்களுடன் விவாதிப்பதாக இருந்தால் அல்லது நம் பிரதிவாதத்தை அவர்களுக்காக பதிவுசெய்கிறோம் என்பதாக இருந்தால் முதலில் அவர்கள் விவாதத்தை வைக்கவேண்டும். விவாதம் இல்லாமல் பிரதிவாதம் செய்யஇயலுமா?.

இதை ஏன் நாங்கள் குறிப்பிடுகிறோம் என்றால் இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக விவாதிப்பதாக நினைத்துக்கொண்டு வெளியிடும் விஷயங்கள் அனைத்தும் பொய்களாகவும், இவர்களின் கற்பனையில் உதித்த அவதூறுகளாகவுமே உள்ளன. இஸ்லாத்தை எதிர்க்கிறோம் என்று தங்கள் மடமைத்தனத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறார்களே தவிர இவர்கள் இஸ்லாத்திற்கெதிராக உருப்படியான எந்த விவாதத்தையும் செய்வதாகத் தெரியவில்லை.



ஈஸா குர்‍ ஆன் தளத்திற்கு உங்கள் கேள்விகளை எழுப்புங்கள்.

நான் தான் ஏற்கனவே, என் தளத்தில் பல விவாத தலைப்புக்களில் பதில் அளித்துள்ளேன்.
குர்‍ ஆன் சொல்லும் விவரங்கள் பொய் என்று எழுதியுள்ளேன்.
முகமது நபி இல்லை என்று சொல்லியுள்ளேன். பதில் அளித்துள்ளேன்.
பைபிளின் தேவன் அல்லா இல்லை என்று சொல்லியுள்ளேன்.

பல கட்டுரைகளை மொழி பெயர்த்துள்ளேன். பல இஸ்லாமிய தளங்களுக்கு பதில் அளித்துள்ளேன்.
எங்கே, உங்கள் இஸ்லாம் தளங்களில் "எங்கள் தள பெயர் எழுதி, இதற்கு மறுப்பு" என்று கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்களா?

இதோ இந்த பதிலிலேயே, என் பெயரை குறிப்பிடாமல், தளத்தின் பெயரை குறிப்பிடாமல் நீங்கள் எழுதும் போதே புரிகிறது, நீங்கள் எவ்வளவு பயந்து போய் இருக்கிறீர்கள் என்று.



Quote:

முதலில் இன்டர்நெட்டில் இப்படி எழுத்துவிவாத அழைப்பிதல் என்று வெளியிடுவது அவசியமா? அறிவுடமையா? சிந்தியுங்கள் நண்பர்களே. இணையத்தில் இவர்கள் விவாதிப்பதாக இருந்தால், இவர்கள் யாரை எதிர்த்து விவாதம் செய்கிறார்களோ அவர்கள் தங்கள் பிரதிவாதத்தை தாங்களாகவே பதிவுசெய்வார்கள். இதற்கு அழைப்பு என்று மதிமயக்கும் மாயாஜாலம் அவசியமில்லையே. இவர்களின் அழைப்பிதழைப் பெறாமலேயே நம் இணையதளம் உட்பட பல இஸ்லாமிய இணையதளங்கள் இஸ்லாத்திற்கு எதிரான கட்டுக் கதைகளுக்கு தகுந்த மறுப்பை வெளியிட்டுக் கொண்டுதானே இருக்கின்றன.


மறுபடியும் பொய் சொல்கிறீர்கள். யார் என் தளத்திற்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் சொல்லுங்கள்? அந்த தளத்தின் பெயர் என்ன சொல்லுங்கள்?


Quote:
இஸ்லாத்தைப் பற்றி உறுப்படியான தகவல்களுடன் அறிவுப்பூர்வமாக விமர்ச்சனம் செய்பவர்களுக்கு முஸ்லீம்கள் சிறந்த முறையில் பதிலளித்துக் கொண்டுதானே இருக்கின்றனர்.


உங்களுக்கு விவாத அழைப்பு அனுப்பவேண்டுமானால், மேள தாளத்தோடு, ஊரையெல்லாம் கூட்டி, முதல் மரியாதை செய்து, வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிடவேண்டுமா?

இப்படி எங்களுக்கு முதல் மரியாதை செய்தா நீங்கள் கட்டுரைகளை எழுதுகிறீர்கள்? எங்கு கிறிஸ்தவத்தைப் பற்றி இஸ்லாம் பொய் சொன்னாலும், ஒவ்வொரு வரிக்கும் நாங்கள் வலிய வந்து பதில் சொல்கிறோம். ஆனால், நீங்கள், எவ்வளவு சொன்னாலும், பதில் சொல்லாமல், உதரி தள்ளிவிட்டு, ஒளிந்துக்கொள்கிறீர்கள்.


Quote:
உதாரணமாக இவர்கள் பொய்யாக புனைந்த நூற்றுக்கணக்கான கழிசடை அவதூறுகளை நாமும் பார்வையிட்டுள்ளோம். அவற்றில் ஒருசிலவற்றிற்கு பதில் அளித்துள்ளோம் மற்றவற்றை பதில்லளிக்காமல் விட்டுவிட்டோம்.


அப்படியா? ஆச்சரியமாக உள்ளதே, எங்கே நீங்கள் கிறிஸ்தவ கேள்விகளுக்கு பதில் அளித்த தொடுப்புக்களை தாருங்கள் பார்க்கலாம்.

Quote:

காரணம் எவரும் பதில் சொல்லாமேலேயே இவர்கள் வெளியிட்ட அபத்தங்களை, பொய்தான், பிராடுதான், புரட்டுதான், இஸ்லாத்திற்கு எதிரான இவர்களின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுதான் என்பதை மக்கள் அதை படித்தவுடனேயே பளிச்சென்று விளங்கிக்கொள்வார்கள். மேற்கொண்டு நாம் விளக்கம்வேறு அதற்காக எழுதுவதற்கு அவசியமில்லை. எனவேதான் இவர்கள் பதிவுசெய்பவைகளை பொரும்பாலானவற்றை கண்டுகொள்ளமல் விட்டுவிடுகிறோம்.


ஆமாம், யார் பிராடு, யார் செய்தது பித்தலாட்டம், யார் சொல்வது பொய் என்பதை ஒவ்வொரு நாளின் செய்தித்தாள் சொல்கிறது, அதை படிப்பதில்லையா நீங்கள்?

1. நிஜாமுத்தீன் அவர்கள் ஜீமெயிலில் ஒரு தில்லுமுல்லு செய்து, இன்றுவரை மூச்சு விடவில்லை.

2. நேசமுடன் தளம் இஸ்லாமுக்கு பல இலட்சம் பேர் மாறினார் என்று ஒரு மிகப்பெரிய பொய்யை சொன்னார், கேள்வி கேட்டால், பதிலைக்காணோம்.

3. தமிழ் முஸ்லீம் தளம் என்னடா என்றால் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு மிகவும் புத்திசாலி தனமாக பதில் சொல்வதாக கட்டுரை எழுதி, கேள்வி கேட்டதால், அல்லோலப்பட்டுள்ளது.

4. இன்னும் பிஜே அவர்களை எடுத்துக்கொண்டால், அவருக்கு சொந்த வீட்டு பிரச்சனை(இஸ்லாம் குழுக்கள்) தீர்த்துக்கொள்ளவே நேரமில்லை, நான் எழுதும் கட்டுரைகளுக்கு பதில் எழுத அவருக்கு ஏது சமயம்?

கிறிஸ்தவத்தைப் பற்றி எழுத ஒரு தகுதி வேண்டும்.



Quote:

நாம் பதில்சொல்லியிருக்கக் கூடிய ஒருசில விஷயங்கள் கூட, இந்த அளவிற்கா இவர்கள் சிந்தனையில்லாமல் இருக்கிறார்கள்? என்று இவர்களின் மீது நமக்கு ஏற்பட்ட அணுதாபம்தாம் காரணமேயல்லாமல் அந்த ஆக்கங்களில் கூட இவர்கள் அறிவுப்பூர்வமாக எதையும் விவாதிக்கவில்லை.


அய்யய்யோ அறிவு பற்றியெல்லாம் நீங்கள் பேசுகிறீர்களே... இறைவா எங்கு சென்று நான் முறையிட

Quote:

இதுதான் உண்மை! எனவே நாம் எதற்கெல்லாம் பதில்சொல்லாமல் விட்டுவிட்டோமோ அவைகளெல்லம் சுத்த ஹம்பக் என்று இவர்களாகவே உணர்ந்து அழித்துவிடுவதுதான் அவர்களுக்கு நல்லது, அழிக்காவிட்டால் எங்களுக்கொண்டும் நஷ்டமில்லை. காரணம் இவர்கள் என்னதான் பாடுபட்டாலும், அல்லாஹ்வுடைய மார்க்கமாம் இஸ்லாத்தை, இந்த சத்திய ஜோதியை இவர்கள் வாயால் ஊதி அனைத்துவிடமுடியாது. இந்த இஸ்லாமிய மார்க்கத்தை நிலைபெற செய்யும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றிருக்கிறான்.


அய்யா! அந்த அல்லாவிற்கு தான் நாங்கள் கேள்விகள் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். குறைந்த பட்சம் உங்கள் மூலமாவது அவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கும் எங்களுக்கு கொடுப்பனை இல்லை.

நீங்கள் பதில் சொல்வீர்களோ இல்லையோ, ஆனால், ஒரு சாதாரண முஸ்லீம் எ(ன்)ங்கள் கட்டுரைகளை படித்தால், நிச்சயமாக அவர் ஒரு முஸ்லீமாக இருக்கமாட்டான் நாளடைவில், இது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.


Quote:

இவர்கள் இதற்குமேலும் என்னதான் எழுதினாலும் மக்கள் அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இவர்களிடம் உண்மையிருக்குமானால் இஸ்லாமிய இணையப் பேரவையுடன் ஏன் விவாதத்திற்கு செல்லவில்லை? என்றே சிந்திப்பார்கள்.


அதே மக்கள், இந்த உமர், இத்தனை கட்டுரைகள் எழுதினாலும் ஏன் ஒரு இஸ்லாம் தளமும், ஒரே ஒரு இஸ்லாம் தளமும் பதில் அளிக்க முன்வரவில்லை என்று சிந்திப்பார்கள்.


Quote:

இவர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை உண்மையிலேயே இருந்திருந்தால் மேலம் இவர்கள் தங்கள் மதத்தின் வசுவாசமுள்ள உண்மை கிருத்துவர்களாக இருப்பின், நம் விவாத அழைப்பை ஏற்று நம்மோடு பகிரங்க விவாதத்திற்கு வந்திருப்பார்கள். நம்விவாத அழைப்பைக் கண்டு தோல்விபயத்தில் உறைந்தது மட்டுமல்லாது எழுத்துவிவாதம் என்று எழுதி அதிலும் கடும் தோல்வியைத்தான் இவர்கள் சந்தித்துள்ளார்கள்.


அய்யா! முதலில் எங்களோடு எழுத்து விவாதத்திற்கு வாருங்கள். நீங்களாகவே வெற்றி பெற்றதாக கற்பனை செய்துக்கொள்ளவேண்டாம்.

எனக்கு சூடு சொரனை இருப்பதால் தான்:

1) கிறிஸ்தவத்திற்கு எதிராக பொய்யை சொல்லும் இஸ்லாமிய தளங்களை தேடி கண்டுபிடித்து பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன்.
2) பிஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன்.
3) ஜாகிர் நாயக் அவர்களுக்கு, இஸ்லாம் கல்வி தளத்திற்கு, இன்னும் உள்ள தளங்களுக்கும் பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன்.

எனக்கு சூடு, சொரனை எல்லாம் இருக்கிறது என்று நிருபித்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு இவைகள் இருப்பதாக உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், என் கட்டுரைகளுக்கு பதில் தாருங்கள்.

"அவன் எழுதுவது தவறு, கழிசடை" என்று சப்பை கட்டு கட்டி ஓடி ஒளிந்துக்கொள்ள முயற்சி செய்யாதீர்கள். இது மிகப்பெரிய உலகம், எல்லாரும் கட்டுரைகளை படிக்கிறார்கள். மறுப்பு இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இஸ்லாமின் மீது உள்ள நம்பிக்கை இருக்கும், நீங்கள் இப்படி ஒதுங்கி விட்டால், நாளடைவில் இஸ்லாமை காணமுடியாது.



Quote:

இன்னும் நாம் இவர்களுக்கு வைத்த நேரடி விவாத அழைப்பு இங்குள்ளது. இவர்கள் எப்போது வேண்டுமானாலும் எம்மோடு நேரடி விவாதத்திற்கு வரலாம்.இவர்களின் வாதங்களை பொய் என நிறுபிப்பதற்கும் இஸ்லாம்தான் ஊண்மையான சத்திய மார்க்கம் என்று நிறுபிப்பதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.எனவே இன்று நாம் பெற்றிருக்கக்கூடிய வெற்றி இறைமார்க்கமாம் இஸ்லாத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. இந்த மாபெரும் வெற்றியை சக இஸ்லாமிய வலைப்பதிவாளர்களிடமும், தமிழ் இஸ்லாமிய இணையங்களை நடத்தும் அத்தனை உள்ளங்களுக்கும்;, உலக முஸ்லீம்களிடமும் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இவர்கள் எழுத்துவிவாத அழைப்பிதல் என்று பதிந்தவற்றிற்கு இஸ்லாமிய இணையப் பேரவையின் பதிலை கீழே பார்வையிடுங்கள். அவற்றை பதிவிறக்கம் செய்யஇங்கே கிளிக் செய்யவும்.

http://www.iiponline.org/


ஏன் உங்கள் சத்திய மார்க்கம் உண்மை என்று "எழுத்து விவாதம்" மூலமாக நிருபித்தால், ஏற்றுக்கொள்ளாதா? அல்லது உங்களால் முடியாதா?

இனி நான் நிருபிக்கிறேன், கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவு சூடு உள்ளது, சொரனை உள்ளது என்று உங்களுக்கே புரியும், இப்போதே புரிந்து இருக்கும்.

கடைசியாக, எழுத்து விவாதத்திற்கு வர உங்களுக்கு தைரியம், உண்மை நேர்மை இருந்தால், எனக்கு தெரிவிக்கவும். இனி, என் தளத்தில் "இஸ்லாம் இணைய பேரவையோடு விவாதம்" என்ற தலைப்பில் பல விவாத தலைப்புக்கள் கட்டுரைகள் வெளிவரும்". என் முதல் விவாத தலைப்பாக "முகமது ஒரு நபியா?" என்ற தலைப்பில் நான் கட்டுரைகளை, கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். உங்களால் முடிந்தால், பதில் தாருங்கள்.

முகமதுவின் தனிப்பட்ட வாழ்க்கை, நடத்தை, திருமண உறவு போன்ற தலைப்புக்களில் கட்டுரைகள் வெளிவரும்.

இது, "இஸ்லாம் இணைய பேரவைக்கு ஈஸா குர்‍ஆனின் எழுத்து வடிவ விவாத அழைப்பு" . மேள தாளம் வைத்து வெற்றிலை பாக்கு வைத்து அழைத்ததாக நினைத்துக்கொண்டு, சூடு உள்ளவர்கள், சொரனை உள்ளவர்கள் பதில் அளிக்கலாம்.
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP