சமீபத்திய பதிவுகள்

மகனின் மனைவியை சொந்தமாக்கும் வழி என்ன?

>> Wednesday, March 12, 2008

காரணம் 2. முகமது:

ஹதீஸ்களை விட முகமதுவிற்கு நான் இரண்டாவது இடம் கொடுத்தேன், ஏனென்றால், இவரது வாழ்க்கை தான் ஹதீஸ்களில் இருப்பது. இன்று நாம்(மாற்று மார்க்கத்தவர்கள்) முஸ்லீம்களிடம் பேசும் போது, அவர்கள் "எங்கள் குர்‍ஆன் இப்படி, அப்படி, அற்புதம், அறிவியல், சரித்திரம் என்று அடிக்கிக்கொண்டே போவார்கள், பெருமைப்படுவார்கள்". திடீரென்று, முகமதுவின் வாழ்க்கையைப் பற்றி சில கேள்விகள் கேட்டால், போதும் உடனே அவர்களின் முகநாடி மாறும் ஏன்?

இஸ்லாமியர் அல்லாதவர்கள் பெரும்பான்மையாக கேட்கும் கேள்விகள்:

a) ஏன் முகமது வன்முறை மூலமாக தன் ஆட்சியை அமைத்தார்?

b) அவர் ஏன் 10க்கும் அதிகமான திருமணங்களை செய்துக்கொண்டார்?

c) முகமதுவிற்கு 50க்கும் அதிகமான வயது இருக்கும் போது, 6 வயது சிறுமியை(தன் பேத்தி வயதில் இருக்கும்) திருமணம் செய்துக்கொண்டார்?
d) அப்பெண்ணுக்கு 9 வயதாகும் போது ஏன் தன்னுடன் தாம்பத்திய வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டார்? இன்று இது போல யாராவது செய்தால், அது சமுதாயத்திற்கு ஏற்றதாக இருக்குமா?

e) தன் மருமகளை(வளர்ப்பு மகனின் மனைவியை) ஏன் திருமணம் செய்துக்கொண்டார்?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த கேள்விகளைப் பற்றி நான் இப்போது விளக்கப்போவதில்லை. இப்படிப்பட்ட கேள்விகளை மக்கள் கேட்டால், அதனை விளக்க இஸ்லாமியர்கள் பல இலட்சங்கள் செலவு செய்து, இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், ஏன் இஸ்லாமியர்களுக்கும் கூட‌ பதில் கொடுக்க நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

ஆனால், இந்த பிரச்சனை கிறிஸ்தவர்களுக்கு இல்லை. எங்கள் இயேசு ஒரு பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றார், மற்றவர்கள் விரல் நீட்டும் அளவிற்கு ஒரு கீழ் தரமான வாழ்க்கையை அவர் வாழவில்லை. எனவே, இப்படிப்பட்ட கேள்விகள் கிறிஸ்தவத்தை நோக்கி கேட்கப்படுவதில்லை. அதனால், இஸ்லாமைப் போல பல கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

(இந்த இடத்தில், நாத்தீகர்களும், மற்ற மத அன்பர்களும் "பைபிளில் இயேசு பற்றி நல்லவிதமாக எழுதிவிட்டு சென்று விட்டார்கள் அவரது சீடர்கள், இயேசு எப்படி வாழ்ந்தாரோ நமக்கு எப்படி தெரியும்" என்று கேட்கலாம். எங்கள் வேதத்தில் சொல்லப்பட்டதை நாங்கள் நம்புகிறோம், இதனால், மற்றவர்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இருப்பதில்லை. ஆனால், இஸ்லாமியர்களின் வேதத்தில், ஹதீஸ்களில் முகமதுவின் (நல்ல) வாழ்க்கையைப் பற்றி மிகவும் தெள்ளத்தெளிவாக புட்டு புட்டு சொல்லிவிட்டதால், அவர்களுக்கு இப்பொது தங்கள் முகமதுவின் வாழ்க்கையை நமக்கு விளக்கவேண்டிய கடமை அவர்களுக்கு அதிகம் என்றுச் சொல்கிறேன்.)

"சரி முகமது அந்த காலத்து மனிதர், அந்த காலத்து பழக்கங்கள் படி தான் வாழ்ந்தார் இதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால், இன்று நாம் வாழவேண்டிய முறை, பின்பற்றவேண்டிய முறை அது அல்ல, எனவே, முகமதுவின் வாழ்க்கையை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று" இன்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், யாரும் கேள்விகள் கேட்கப்போவதில்லை, ஆனால், இஸ்லாமியர்கள் என்ன செய்கிறார்கள், அவரது வாழ்க்கை இன்று கூட வாழ, பின்பற்றத்தகுந்தது என்றுச் சொல்லும் போது, மற்றவர்களுக்கு மனதிலே எங்கோ அறிக்கும். என்வே, அதனை அடக்கமுடியாமல், கேள்வியாக கேட்டுவிடுகின்றனர்.

எனவே, இஸ்லாமை நோக்கி விரல் நீட்டுவதற்கு முகமதுவின் வாழ்க்கையும் ஒரு காரணமாகிவிட்டதால், அவரது வாழ்க்கையை இன்றும் நாம் பின்பற்றலாம் என்று இஸ்லாமியர்கள் சொல்வதால், பலருக்கு( இஸ்லாமியர்களுக்கும் சேர்த்துதான்) பல கேள்விகள் எழுகின்றன. இதனை சரிசெய்ய பதில் கொடுக்க இஸ்லாமிய அறிஞர்கள் படுகின்ற பாடு, அடேங்கப்பா? வார்த்தைகளில் சொல்லமுடியாது.

கிறிஸ்தவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. அதே போல, பைபிளில் இயேசுவிற்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி மற்றவர்கள் கேள்விகள் எழுப்பினால், விரலை நீட்டினால், அவர்கள் தங்கள் விரல்களை நீட்டுவதற்கு முன்பே, அவர்களின்(பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்தவர்களின்) நேர்மையற்ற வாழ்க்கையை பைபிள் படம் பிடித்து காட்டிவிடுகின்றது. கிறிஸ்தவர்களும் ஆமாம், இந்த மனிதர் இந்த தவறு செய்தார், ஆபிரகாம் பொய் சொன்னார்? தன் மனைவியை தன் உயிருக்கு பயந்து சகோதரி என்று ஒரு இராஜாவிடம் பொய் சொன்னார், என்று நாங்களே சொல்லிவிடுகின்றோம். எனவே, யாரும் கேள்விகள் கேட்பதில்லை.

எனவே, எனதருமை இஸ்லாமிய அறிஞர்களே, மேதாவிகளே, எங்களுக்கு உங்களைவிட இயேசுவின் வாழ்க்கையை மக்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் மிக மிக குறைவு. அதனால், கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் குறைவு. உங்களுக்குத்தான் அதிக தேவை இருக்கிறது.

StumbleUpon.com Read more...

அஸ்திபாரமே ஆட்டங்கானுதுங்கோ

காரணம் 1. குர் ஆன்:

இஸ்லாமியர்கள் அதிக அளவில் "இஸ்லாம் கேள்வி பதில்கள்" நடத்துவதற்கு முக்கிய காரணமாக, முதல் காரணமாக இருப்பது குர்‍ஆன் என்று நான் சொல்வேன். ஏனென்றால், இன்று இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஷரியா சட்டம், முஸ்லீம்களின் செயல்பாடுகள் அனைத்தும் குர்‍ஆன் மீதே ஆதாரப்பட்டுள்ளது. சில இஸ்லாமிய அறிஞர்கள், குர்‍ஆனோடு மோதும் ஹதீஸ்கள் தவறானது என்று சொல்கிறார்கள், சிலர் இதை மறுக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணமாக நாம் குர்‍ஆனைத் தான் சொல்லமுடியும்.

குர்‍ஆன் ஒரு ஒழுங்காக அமைக்கப்படவில்லை, அதாவது குர்‍ஆனில் சொல்லப்படும் விவரங்கள் அனைத்தும் ஒரு வரிசையாக சொல்லப்படவில்லை. எந்த சூழ்நிலையில் என்ன வசனம் இறங்கியது என்று ஹதீஸ்களின் உதவியின்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அதிலும், இஸ்லாமியர் அல்லாதவர் குர்‍ஆனை படித்தால் அவருக்கு பெரும்பான்மையான வசனங்கள் புரியாது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், குர்‍ஆனை அரபியில் படிக்கத்தான் இஸ்லாமிய அறிஞர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். இதனால், பல சந்தேகங்கள் இஸ்லாமியர்களுக்கும் உண்டு, இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் உண்டு.

கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளை கவனித்தீர்களானால், அவைகள் பெரும்பான்மையாக "இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளைப் பற்றியதாகவே" இருக்கும். நமாஜ் பற்றி, உடல் சுத்தம் பற்றி, எத்தனை முறை குளிக்கவேண்டும், எப்போது குளிக்கவேண்டும், குறிப்பிட்ட சூழ்நிலையை சொல்லி இதன் பிறகு குளித்தபிறகு தான் நமாஜ் செய்யவேண்டுமா? போன்ற கேள்விகளாகவே இருக்கும். இதை எல்லாம் குர்‍ஆனில் காணமுடியாது, இவைகளைப் பற்றி ஹதீஸ்களில் பெரும்பான்மையாக காணமுடியும்.

எனவே, ஒரு முஸ்லீமுக்கு தேவையான அடிப்படை கோட்பாடுகள் அனைத்தும் குர்‍ஆனிலிருந்து கிடைப்பதில்லை. சரி, ஹதீஸ்கள் படித்து முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்தால், ஒவ்வொரு இஸ்லாமிய ஊழியரும் வித்தியாசமாக பதில்களை சொல்வார்கள், எனவே, முக்கியமாக இஸ்லாமியர்களுக்கே பல சந்தேகங்கள் குர்‍ஆனில் உண்டு, அதற்காகத்தான் அதிகமான கேள்வி பதில் நிகழ்ச்சிகள் இஸ்லாமுக்கு தேவைப்படுகிறது.துருக்கி நாட்டின் அரசாங்கம் குர்‍ஆன், மற்றும் ஹதீஸ்களுக்கு 21ம் நுற்றாண்டிற்கு ஏற்ற பொருள் கூற பல பேராசிரியர்களையும், இஸ்லாமிய மேதாவிகளையும் அழைத்து கு‍ர்‍ஆனுக்கு சரியான பொருள் கூறும்படி கேட்டுக்கொண்டுள்ளதாம். அதாவது, 7ம் நுற்றாண்டு முதல் உள்ள குர்‍ஆன் மொழிபெயர்ப்புகள், உரைகளை நம்பாமல், அதாவது அவைகள் சரியானவை அல்ல என்று முடிவு கட்டிவிட்டு, குர்‍ஆனுக்கு புதிய உரையை எழுத முயற்சி எடுத்துள்ளது. அதாவது, உலகமெங்கும் அல்லாவின் வார்த்தையாகிய குர்‍ஆனை பரப்ப மதினாவில் அச்சடிக்கப்படும் குர்‍ஆனின் மொழியாக்கத்தையும் துருக்கி நாடு "சரியான மொழியாக்கம்" என்று அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.(இதைப்பற்றி இங்கு படிக்கவும்:
துருக்கி ஷரியா சட்டம் திருத்த முயற்சி (English : http://www.guardian.co.uk/world/2008/feb/27/turkey.islam)

ஆனால், கிறிஸ்தவர்களுக்கு அப்படியில்லை, எங்களுக்கு தேவையான எல்லா கோட்பாடுகளையும், சத்தியங்களையும் நாங்கள் பைபிளை தமிழில் படிப்பதினால் தெரிந்துக்கொள்கிறோம். மட்டுமல்ல, எங்களுக்கு இஸ்லாம் பழக்கவழக்கங்கள் போல, இத்தனை முறை கைகளை இந்த சூராக்களை சொல்லி கழுவவேண்டும், நகாஜ் படிக்கும் போது இத்தனை முறை எழுந்திருக்கவேண்டும், உட்காரவேண்டும், விரல்களை ஆட்டவேண்டும் போன்ற விதிமுறைகள் இல்லை. ஒரு பயனுமில்லாத பழக்கவழங்கள் மூலமாக பைபிள் மக்களை குழப்புவதில்லை, அதனால் அவைகளை விளக்கவேண்டிய அவசியமும் கிறிஸ்தவ ஊழியர்களுக்கு இல்லை. கிறிஸ்தவம் உள்ளத்தின் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க எங்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. உடல் தூய்மை, ஆரோக்கியம் போன்றவைகளை எந்த நாட்டில் நாங்கள் வாழுகின்றோமோ அந்த நாட்டின் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நாங்கள் உடல் தூய்மையை, ஆரோக்கியத்தை அடைந்து வாழ்ந்துவிடுகிறோம்.

குர்‍ஆன் பைபிளோடு ஒப்பிடும் அளவிற்கு அதற்கு தகுதியில்லை என்று கீழ்கண்ட‌ கட்டுரை சுட்டிக்காட்டுகிறது, இது உண்மையா இல்லையா என்பதை இந்த கட்டுரையை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? ஆசிரியர்: சாமுவேல் கிரீன்


COMPARING THE BIBLE AND THE QUR'AN (How to do it Accurately) By Samuel Green

ஆக, குர்‍ஆன் மூலமாக வரும் குழப்பங்களை தீர்க்க உங்களுக்கு அதிகமான நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது. எங்களுக்கு அப்படி இல்லை, எனவே கிறிஸ்தவ ஊழியர்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த விவரங்கள் குறித்து தங்கள் பிரசங்க பீடங்களில் நின்று மக்களுக்கு சொற்பொழிவு ஆற்றினாலே போதும்.


http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_8881.html

StumbleUpon.com Read more...

இத படிச்சு பாத்துட்டு நீங்களே சொல்லுங்க இதுக்கெல்லாம் வெட்கப்பட வேண்டுமா?

இத படிச்சு பாத்துட்டு நீங்களே சொல்லுங்க இதுக்கெல்லாம் வெட்கப்பட வேண்டுமா?பின்ன வேட்கப்படாம என்ன செய்யரது.

ஒரிசாவில் இந்துத்துவா சக்திகள் நடத்திய வெறியாட்டம்.

வெட்கப்பட வேண்டாமா?

குஜராத்தில்

நரேந்திரமோடி முடிசூடியதன் எதிரொலி இப்போது ஒரிசாவில் கேட்கிறது .மத்திய பிரதேசத்தில் கேட்கிறது .ஒரிசாவில் பிஜு ஜனதா தள -பி.ஜே.பி கூட்டணி ஆட்சி.மத்திய பிரஹேசத்தில் சுத்த சுயம் பிரகாசமான பி .ஜே.பி ஆட்சி.

இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் தேவாலயங்கள் இருக்கலாம்.ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது என்று ஒரிசாவில் "விஸ்வ ஹிந்து பரிஷத்" கட்டளையிட்டது.இது என்ன கொடுமை?

கிறிஸ்தவ முழுக்க ஏற்றுக்கொண்ட அமேரிக்காவில்,பிரிட்டனில்,இதர ஐரோப்பிய நாடுகளில் அங்குள்ள இந்துக்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள்.தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.அந்த விழாக்கள் தங்கள் மதத்துக்கு விரோதம் என்று எந்த கிறிஸ்த்தவரும் தீப்பந்தம் தூக்கியதில்லை.

இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் தங்கள் குடும்பங்களை மட்டும் தான் கொண்டு சென்றார்களா?இங்கு இருப்பதாக கூறப்படும் முப்பது முக்கோடி தேவர்களையும் பரமசிவன்,பார்வதி ,முருகன்,வள்ளி,திருப்பதி வெண்கடாஜலபதி ,மதுரை மீனாட்சி என்று பல்லாயிரம் கடவுளர்களையும் அங்கே குடியேற்றியிருக்கிறார்கள்.அந்தக் கடவுளர்கள் குடிகொண்ட ஆலயங்களில் ஆறு கால பூஜை முதல் ஆண்டிற்கு ஒரு முறை வரும் விழா வரை அத்தனை வைபவங்களும் நடைபெறுகினறன .ஏன்? ஆர்.எஸ். எஸ்,இஸ்வ ஹிந்து பரிஷத் என்ற எல்லா இந்துத்துவா அமைப்புகளும் அமேரிக்காவில் செயல்படுகினறன.கனடா ,பிரிட்டனிலும் காலூன்றியிருக்கிறது.

ஆனால், அந்த நாட்டு மக்கள் பைபிளுக்கு போட்டியாக பகவத்கீதையா என்று வெகுண்டெழவில்லை.இப்போது இந்தியாவை விட அமேரிக்காவில்தான் அதிக அளவில் உபந்நியாசங்கள்,காலட்சேபங்கள் நடைபெறுகின்றன.

இந்து மதச் சடங்குகளை நடத்தும் புரோகிதர்களின் எண்ணிக்கை இங்கே குறைந்து வருகிறது.ஆனால் அஸ்திரேலியாவிலும்,அமேரிக்காவிலும் குடியேறி வருகிறார்கள்.அந்த நாடுகளின் குடிமக்களாகவும் ஆகிவிட்ட அவர்கள்,அங்குள்ள இந்துக்கள் இல்லங்களில் சடங்குகளை நடத்துகிறார்கள்.அதற்காக அங்குள்ள பாதிரியார்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ."இந்துமத உரிமைகள் சடங்குகள் இங்கே கூடாது"என்று அவர்கள் எழுந்தால் என்ன நிலை ஏற்படும் ?.

இஸ்லாமியர் ஆளுகையிலுள்ள நாடு மலேசியா.அங்கே பத்தாயிரம் பள்ளிவாசல்கள் இருக்கின்றன .ஆனால் 29 ஆயிரம் இந்துக் கோயில்கள் இருக்கின்றன. அரசமரத்தைக் கண்டால் ஒரு பிள்ளையாரை வைத்து விடுகிறோம்.வேப்பமரத்தைக் கண்டால் அதன் அடியில் சூலாயுதத்தை நடுகிறோம். கட்டேரி,முனியன்,கருப்பண்ணசாமி ,வீரபத்திரசாமி,மதுரை வீரன்,குதிரை வீரன் என்று அங்கேயும் ஒரு தெய்வம் இருப்பதாகத் தெரிவிக்கிறோம் .மலேசியாவில் அந்த 29 ஆயிரம் இந்துக்கோயில்களின் பட்டியலில் இத்தகைய சாமிகள் இடம் பெறவில்லை .ஆனால் அங்கேயும் மணியோசை கேட்கிறது.மந்திர முழக்கங்கள் கேட்கின்றன .

இந்தோனேஷியா இஸ்லாதை ஏற்ருக்கொண்ட நாடு.ஆனால் பாலித்தீவு மக்கள் இந்து சமயத்தை -குறிப்பாக சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.அவர்களுக்குத் தேவையான தெய்வ விக்கிரகங்கள் தமிழகத்திலிருந்துதான் அனுப்பி வைக்கப்படுகின்றன .புதிய புதிய ஆலயங்கள் எழும்புகின்றன.அவர்கள் ஆலயம் எழுப்புவதற்கோ விழாக்கள் கொண்டாடுவதற்கோ இந்தோனேஷியா மக்கள் எந்த தடையும் விதிக்கவில்லை .

இப்படி இந்தியாவிற்கு அப்பால் வேற்று மதங்களை அரசாங்க மதமாக ஏற்றுக்கொண்ட நாடுகளில் இந்துமதம் மதிக்கப்படுகிறது. இந்துக்களின் உரிமைகள் காக்கப்படுகின்றன.ஆனால் இங்கே இந்து மதத்தைக் காப்பாற்றப் போவதாக இந்துத்துவா சக்திகள் போர் வெறி கொள்ளுகின்றன .சர்வதேச அரங்கில் இவர்கள் இந்தியாவைக் கேவலப்படுத்துகிறார்கள்.யானையைக் காக்கப் போகிறோம் என்று புற்றீசல்கள் ஆர்பரிக்கின்றன .

குஜராத் சட்டமனறத் தேர்தலில் மோடி வெற்றி பெற்றவுடன் இந்துத்துவா சக்திகளுக்கு புதிய வெறி உதயமாகியிருக்கின்றது. ஒரிசாவில் தீப்பந்தங்களைத் தூக்கினார்கள்.கிறிஸ்துமஸ் விழா கொண்டாடக்கூடாது என்று கட்டளை பிறபித்தார்கள். மாதா கோயிலகளுக்கும்,ஜெபவீடுகளுக்கும் நெருப்பு வைத்தனர்.ஏசுவின் ஏற்றுக்கொண்ட கன்னியர்களை -அருட் சகோதரிகளை தாக்க்கினார்கள்.பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நிலமை மோசமானது .

ஒரிசாவில் இப்படி தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்படுவது சர்வ சாதாரணம்.இதற்கு பின்னரும் இந்துத்துவா சக்திகள் வெறியாட்டம் ஆடியிருக்கின்றன .ஆனால் அந்த காட்டுமிராண்டிக் கூத்துகளெல்லாம் மலை கிராமங்களில்தான் நடந்தன.ஆனால் இன்றைக்கு நகரங்களிலேயே தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன .

ஓர் இந்துத்துவா சாமியார் தாக்கப்பட்டார்.அதனைத்தொடர்ந்து தான் இந்த அராஜாகங்கள் என்று பி .ஜே.பி சமாதானம் சொல்லுகிறது. அப்படி எந்தச் சாமியாரும் தாக்கப்பட்டதாக எவரும் கைது செய்யப்படவில்லை.எவர் மீதும் வழக்கு போடவில்லை.

குஜராத் வெற்றியைத் தொடர்ந்து இந்துத்துவா சக்திகள்தான் அதிகாரத்தை கரம்பிடித்துக்கொண்டு கற்காலக் கூத்துகளை அரங்கேற்றின . அவர்களுடைய கட்டளைகளை மீறி எங்கெல்லாம் கிறிஸ்துமஸ் விழாவிற்கு கிறிஸ்தவ மக்கள் தயாரானார்களோ, அங்கெல்லாம் அவர்களுடைய தேவாலயங்கள் கொளுத்தப்பட்டன.தமிழர் திருநாளன்று பொங்கள் பானைகளை சில பைத்தியங்கள் உடைத்தால் நாம் என்ன செய்வோம் ?.

இம்முறை இந்துத்துவா சக்திகள் தேவாலயங்களை மட்டும் கொளுத்தவில்லை.கிறிஸ்தவ மக்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர் .அங்கே கிறிஸ்துமஸ் தினத்தில் வெளிச்சம் தேடி காத்திருந்த மக்கள் அந்தகார இருளில் மூழ்கடிக்கப்பட்டனர். இந்தக்கொடுமை மூன்று மாவட்டங்கள் முழுக்கப் பரவியது.இதயமுள்ள மனிதர்கள் தங்களின் உதவிக்கு வருவார்கள் என்று கிறிஸ்தவ மக்கள் எதிர்பார்த்தனர் .ஆனால் மாநில அரசின் இதயம்கூட எப்போதோ எரிந்து போனது.ந்லைமை கட்டுக்குள் இருப்பதாக அந்த மாநில முதல்வர் தினம் தினம் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டார் .

மையத்தில் மன்மோகன்சிங் அரசு மவுனம் காக்கிறது.மாநிலாரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம் என்கிறது .மத்திய ரிசர்வ் போலீஸ் படையை அனுப்பியிருக்கிறோம் எனைரது.ஏன் இந்த அவமானகரமான செயல் என்று கேட்க அஞ்சுகிறது .காரணம் வழக்கம் போல் மதவாத சக்திகளை பகைத்துக்கொள்ள விரும்ப வில்லை.சிறுபான்மை இன மக்களை சித்திரவதை செய்யப்படுவதைக் கடுமையான சொற்களிலாவது கண்டிக்கவேண்டாமா ?

முன்னர்,கிறிஸ்தவ மத ஊழியர் கிராகாம் ஸ்டெய்ன்சும், அவரது பிள்ளைகளும் உயிரோடு எரிக்கப்பட்டனர்.அந்த கோரக் கொலைகளைச் செய்த விஸ்வ ஹிந்து பரிஷத் பயங்கரவாதிகள்தான் இப்போது முன்னின்று தேவாலயங்களை எரித்து கொண்டிருக்கிறார்கள் .ஆனால்,இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று மார்தட்டிக்கொள்கிறோம் .வெட்கப்பட வேண்டாமா?

கிறிஸ்தவ மக்கள் ஏசுவின் பிறந்த நாளை கொண்டாடத் தயாராகிறார்கள்.ஆனால் அவர்களுடைய ஆலயங்களையும் ,வீடுகளையும் கொளுத்தி இந்துத்துவா சக்திகள் தீபாவளி கொண்டாடுகின்றனர்.இவை எவ்வளவு சமூகக் கொடுமைகள் ?இந்தக் கொடுமகளின் சூத்திரதாரிகள் இந்த நிமிடம் வரை கைது செய்யப்படவில்லை.நீதி விசாரணை நடத்தப் போவதாக ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் அறிவித்திருக்கிரார் .இந்த அறிவிப்பு, நடந்த கொடுரங்களை விடக் கொடுமையானது .ஏனெனில்,நீதி விசாரணைகளின் லட்சணங்களை நாடு அறியும்.

கட்டுரை வெளியீடு= குமுதம் ரிப்போர்ட்டர்,6-1-2008 இதழ்

(இஸ்லாமிய நாடுகள் குறித்து இந்தக்கட்டுரயில் சொல்லப்பட்டது புள்ளிவிவர அடிப்படையில் சரியாக இருக்கலாம்,ஆனால் உண்மையான இஸ்லாம் நாடுகள் இந்துத்துவா வெறியர்களின் மூத்த அண்ணன்மார்களே.அதாவது ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என்று அர்த்தம்)

StumbleUpon.com Read more...

"ஹய்யா இதுக ரெண்டும் இம்புட்டு பெரிசா"ரெண்டு கையும் சேர்த்து புடுச்சாக்கூட புடிக்க முடியாதுபோல இருக்கு(போட்டோ)





2,எழுத்தாளர் சுஜாதா இஸ்லாமுக்கு மதம் மாறிவிட்டார்

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_8421.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP