சமீபத்திய பதிவுகள்

காய்கறிகள் விலைவாசி ஏற்றமும்,வித்தியாசமான போராட்டமும்(போட்டோவுடன்)

>> Tuesday, April 1, 2008

விலைவாசி ஏற்றத்தைக் கண்டித்து பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. விலைவாசி உயர்வை விளக்கும் வகையில் சண்டிகரில் நூதன போராட்டம் நடந்தது. காய்கறிகள் விலைமதிப்பு மிக்கவை என்றும் அவற்றை வங்கி லாக்கரில் வைக்கப் போவது போலவும் பிரபல நகைச்சுவை எழுத்தாளர் ஜஸ்பால் பட்டியின் மனைவி சவிதா போராட்டம் நடத்தினார். காய்கறிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக கறுப்பு பூனைப் படையைப் போல வேடமணிந்தவர்கள் அருகில் உள்ளனர்.

StumbleUpon.com Read more...

அகமதாபாத் இளைஞர் 21 வயதில் 215 கிலோ எடை



அகமதாபாத், ஏப்.2: ஓர் இளைஞர் தனது 21 வயதிலேயே 215 கிலோ உடல் எடையுடன் இந்தியாவின் குண்டு மனிதர்கள் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் இரும்பு வியாபாரியின் மகன் ரோமில் ஷா. பட்டதாரியான இவர் 21 வயதில் 215 கிலோ எடை இருந்தார். அதன் மூலம் இந்தியாவின் குண்டு மனிதர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். இவருக்கு 10 வயது இருக்கும்போது டைபாய்டு மற்றும் மலேரியா காய்ச்சல் தாக்கியது. அதன் பிறகு தான் ஷாவின் உடல் எடை அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கியது. இதன்பின் ஆண்டுக்கு 15 கிலோ வீதம் எடை அதிகரித்தது. கடந்த ஆண்டு மட்டும் 55 கிலோ எடை கூடியது. அதனால் வேறு வழி இல்லாமல் எடையை குறைக்க கடந்த திங்கள்கிழமை ஆபரேஷன் செய்யப்பட்டது.
அவரது வயிற்று பகுதி பத்தில் ஒரு பங்காக குறைக்கப்பட்டது. சிறு குடலின் பெரும் பகுதி வெட்டி எறியப்பட்டது. இப்போது மாதம் 20 கிலோ வீதம் அவரது எடை குறையத் தொடங்கி இருக்கிறது. அதற்காக பெரும்பாலும் திரவ உணவுதான் சாப்பிடுகிறார். இது பற்றி அவருக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் மகேந்திர நர்வாரியா கூறும்போது, "ரோமில் ஷாவின் வயதை பொறுத்தவரை அவரது எடை 75 கிலோதான் இருக்க வேண்டும். ஆனால், 215 கிலோ இருந்தார். இப்போது ஆபரேஷன் செய்து கொண்டதால் இன்னும் ஓர் ஆண்டில் அவரது கூடுதல் எடை குறைந்து விடும். அதே சமயம் அவருக்கு வைட்டமின் போன்ற சத்துக்கள் சரியாக கிடைக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றார்.


StumbleUpon.com Read more...

ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிராக கன்னடர்கள் வன்முறை சட்டசபையில் அனைத்துக்கட்சிகள் கண்டனம்


ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிராக கன்னடர்கள் வன்முறை சட்டசபையில் அனைத்துக்கட்சிகள் கண்டனம்


சென்னை, ஏப்.2-

"ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிராக கன்னடர்கள் நடத்தும் வன்முறை போராட்டத்துக்கு தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

சிறப்பு கவன ஈர்ப்பு

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடகா மாநிலத்துடன் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து சட்டசபையில் பேசுவதற்காக அனைத்து கட்சிகளும் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுத்திருந்தன.

நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், இதை சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானமாக எடுத்துக் கொண்ட சபாநாயகர் ஆவுடையப்பன், அந்தந்தக் கட்சி சார்பாக எம்.எல்.ஏ. ஒருவரை பேச அனுமதித்தார். அவர்கள் பேசியதாவது:-

வேதனை

ஓ.பன்னீர்செல்வம் (எதிர்கட்சித் துணைத் தலைவர், அ.தி.மு.க.):- ஜப்பான் நிதியுதவியுடன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வர அம்மா முயற்சி செய்தார். ஆனால் நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை அதற்கு அனுமதி தராத மத்திய அரசு, தற்போது அனுமதி அளித்துள்ளது.

தற்போது சில கன்னட அமைப்புகள் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கிளப்பி விட்டுள்ளன. இதனால் மொழிவாரியாக மக்கள் பிரிந்து விட்டனர். கர்நாடகாவில் உள்ள தமிழர்கள், அவர்கள் வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. தமிழக மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை அங்கு உருவாகி இருக்கிறது. குடிக்கக் கூட தண்ணீர் பெற விடமாட்டோம் என்று சகோதர மாநிலமே இறையாண்மையை கெடுப்பது வேதனை. குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி, அங்குள்ள மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கியாக வேண்டும்.

இரும்புக் கரம் கொண்டு

ஞானசேகரன் (காங்கிரஸ்):- தமிழர்களைத் தாக்கி கர்நாடகாவில் நடத்தப்பட்ட சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். அங்கு நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு ஓட்டுக்களை குறிவைத்து குறுகிய நோக்கத்தில் ஒரு கூட்டம் செயல்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தை மத்திய அரசு இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும். எடிïரப்பா இங்கு வந்து இடைïறு செய்துள்ளார். காவிரியில் குடிநீருக்கான தண்ணீர் எடுப்பதற்கு எந்தக் கோர்ட்டும் தடை செய்ய முடியாது. நாராயண கவுடா போன்ற சிலர் இந்தத் திட்டத்துக்கு எதிராக இருப்பதை சுட்டிக் காட்டி பிரதமருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கடிதம் எழுத வேண்டும்.

பெங்களூரு எங்களூரு

ஜி.கே.மணி (சட்டமன்ற பா.ம.க. கட்சித் தலைவர்):- இது காமராஜர் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம். ஆனால் 1996-2001-ம் ஆண்டில் முதல் கட்டப் பணிகள் தொடங்கின. அந்த நேரத்தில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதால், ஜப்பான் நிதியுதவி கிடைக்காமல் போய்விட்டது. தற்போது மக்களை திசை திருப்புவதற்காக எடிïரப்பாவின் வஞ்சக வலையில் கன்னட வெறியர்கள் ஆட்டம் போடுகின்றனர்.

சகோதர நல்லுறவு கெடக் கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி நிதானமாக அடி எடுத்து வைக்கிறார். 40 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்து விட்ட எல்லைப் பிரச்சினையையும் இப்போது கிளப்புகின்றனர். தேவையில்லாமல் எல்லைப் பிரச்சினையை கிளப்பினால் நாங்களும், பெங்களூரை எங்களூரு என்போம்; கோலார், கொள்ளேகாலை எங்கள் பகுதி என்று கூறுவோம்.

நடிகர் வீட்டுக்கு காவல்

இங்கு கன்னட நடிகர்கள் வீட்டுக்கு சேதம் வரக்கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் பெருந்தன்மை கொண்டவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. இந்த விவகாரத்தில் நடுநிலைமையோடு இருக்கும் மத்திய அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். ஒகேனக்கலுக்கு பிரச்சினையை கிளப்ப வந்த எடிïரப்பாவை அனுமதித்தது வேதனை. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி எடுக்கும் நடவடிக்கைக்கு, அ.தி.மு.க. உட்பட அனைத்து கட்சிகளும் பின்னால் நிற்கின்றன.

கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி):- அரசியல் ஆதாயத்துக்காக நடத்தப்படும் இந்த சம்பவத்தை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல், உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். முதல்-அமைச்சர் கருணாநிதி எடுக்கும் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும்.

பந்த் நடத்த வேண்டும்

சிவபுண்ணியம் (இந்திய கம்ïனிஸ்டு):- தமிழகத்தை மிரட்டும் இந்தப் போக்குக்கு நாம் அஞ்சப் போகிறோமா? அவர்கள் இங்கு வந்து உரிமை கொண்டாடுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? நமது மன உணர்வுகளை தெரிவிக்கும் விதத்தில் தமிழகத்தில் பந்த் நடத்த வேண்டும். எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்திருப்பதை அவர்களுக்கு இது உணர்த்தும்.

செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்):- கர்நாடகா அரசுக்கு எதிராக தமிழ் நடிகர்-நடிகைகள் குரல் கொடுக்க வேண்டும்.

ஆடுகிற மாடு

விஜயகாந்த் (தே.மு.தி.க.):- கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படும் நிகழ்ச்சி அதிகமாக நடக்கிறது. நமக்கு ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கவும் தெரியும், பாடுகிற மாட்டை பாடிக் கறக்கவும் தெரியும். நாம் இப்படி இருப்பதை பயம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பதை அவர்கள் அறியவில்லை.

காங்கிரஸ், கம்ïனிஸ்டு கட்சிகள் கூட்டணி வைத்திருந்தாலும், அணுசக்தி விவகாரத்தில் மத்திய அரசுக்கு கம்ïனிஸ்டு கட்சிகள் புள்ளி வைத்து செயல்படுவது போல், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு புள்ளி வைத்து செயல்பட வேண்டும். அப்படி என்றால்தான், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நமக்குக் கிடைக்கும்.

இவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். ம.தி.மு.க. சார்பில் கம்பம் ராமகிருஷ்ணன் பேசினார். இவர்களுக்கு பதிலளித்து பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

இதே பாசப் பிணைப்பு

உரிமைக்கான அனைவருமே ஓங்கி குரல் கொடுத்து இருக்கிறோம். நாம் இருக்கும் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே ஓரணியில் நிற்பதை வரவேற்று, தமிழக அரசின் சார்பில் நன்றி கூறுகிறேன். இதே ஒற்றுமை, பாசப் பிணைப்பு இருந்தால் பல பிரச்சினைகளில் நாம் வெற்றி காணமுடியும்.

இங்கு பேசிய அனைவருமே, நமது உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்றும், மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறீர்கள். இந்தப் பிரச்சினை குறித்து பிரதமருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி 17-ந் தேதி கடிதம் எழுதி இருக்கிறார் (கடிதத்தை படித்துக் காட்டினார்). கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 30 முதல் 40 லட்சம் பேர் குடிப்பதற்கான நீரை எடுப்பதற்காகத்தான் அந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோமே தவிர, பாசனத்துக்கு தண்ணீர் எடுக்கத் திட்டமிடவில்லை.

குடிநீருக்கா சண்டை?

குடிநீருக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதை தேசிய நீர்க் கொள்கை வலியுறுத்துகிறது. அதைத்தான் கேட்கிறோம். அதுமட்டுமல்ல, காவிரியில் நமக்குத் தரப்படும் பங்கில் 1.4 டி.எம்.சி. நீரைத்தான் கேட்கிறோமே தவிர, அவர்கள் பங்கில் இருந்து யாசகம் கேட்கவில்லை. இந்த 1.4 டி.எம்.சி.யை நீர் அளக்கும் இடத்தில் இருந்து குறைத்துக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறோம்.

மொழிவாரியாக மாநிலம் அமைந்த போது காவிரி ஆற்றின் நடுவே கோடு போடப்பட்டு பிரிக்கப்பட்டது. நாம் அவர்கள் கரைக்குச் சென்று நீர் எடுக்கப் போவதில்லை. நமக்கு பாத்தியப்பட்ட நமது கரையில் இருந்து நீர் எடுக்கக் கூடாதா? இதற்கு உரிமை இல்லையா? உரிமையை விடுங்கள்; இது மக்களுக்குத் தேவையான குடிநீர்த் திட்டமல்லவா? மனிதாபிமானமும் இல்லையா? குடிநீருக்கா சண்டை போடுவது?

கலந்து பேசிய முடிவு

நமக்கு உரிமை இருந்தாலும் கூட, அந்த வழியில் நாம் போகவில்லை. முறைப்படி மத்திய அரசின் அனுமதி பெற்று, 2 மாநில அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டது. நாம் எல்லை மீறவில்லை. ஆனால் அவர்கள் வேகம் காட்டியுள்ளனர்.

முதல்-அமைச்சர் கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர். அப்போது காவிரி பிரச்சினைக்காக கர்நாடகா முதல்-மந்திரியாக இருந்த வீரேந்திர பட்டீலுடன் வாதிட்டவர். அவருக்கு இந்தப் பிரச்சினை பற்றி நேரடியாகத் தெரியும். அப்படிப்பட்ட முதல்-அமைச்சர் கருணாநிதி, அண்டை மாநிலத்துடன் நல்லுறவு வேண்டும் என்பதை விரும்புகிறார். முன்பு மனக்கசப்பு ஏற்பட்டு, அங்குள்ள தமிழர்கள் பலர் ஜோலார்பேட்டை, அரக்கோணம் போன்ற இடங்களுக்கு வந்த சம்பவங்களும் நடந்துள்ளன.

வன்முறை நல்ல பாதையல்ல

வன்முறை என்பது சரியான பாதையல்ல. நமது முதல்-அமைச்சரைப் போன்ற அனுபவம் பெறாத சிலரால் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன. அவர்கள் திருந்துவார்கள் என்பதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி காட்டும் பொறுமையை பலவீனம் என்று கருதாதீர்கள். அண்டை மாநிலத்துடன் பிரச்சினை இருந்தாலும், அவர்கள் உதவி கேட்டும் போது நிபந்தனை இல்லாமல் உதவிக் கரம் நீட்டும் பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர் நமது முதல்-அமைச்சர்.

அதனால்தான், `எங்கள் எலும்புகளை உடைத்தாலும், கண்ணீர் விட்டுக் கேட்கிறோம்; இந்திய இறையாண்மையை கெடுத்து விடாதீர்கள்' என்று கூறினார். இதுதான் தேச நலனில் அக்கரையோடு நடக்கும் பணி. ஆனால் கர்நாடகாவில் அண்டை மாநிலத்தையோ, சுப்ரீம் கோட்டையோ மதிக்க மாட்டோம் என்ற போக்கு காணப்படுகிறது.

எள்ளளவும் விட மாட்டோம்

பெருந்தன்மை காட்டுவதோடு இதை விட்டுவிட முடியாது. எனவே, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். பொக்ரான் அணுகுண்டு பரிசோதனையால்தான் அன்று ஜப்பான் நிதி தராமல் முறுக்கிக் கொண்டு இருந்தது. தற்போது அந்த முறுக்கு நீங்கி விட்டதால், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்று ஆயிரம் கோடிக்கும் மேலாக நிதியை பெற்று வந்துள்ளார்.

தற்போது இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஒரே நிலையில் நிற்கின்றனர். அதை கர்நாடகா மக்களும், கவர்னர் ஆட்சியும் உணர வேண்டும். மத்திய அரசும் காலம் தாழ்த்தாமல், இந்தப் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ஆடிக் கறக்கவும், பாடிக் கறக்கவும் தெரியும். தமிழர்களின் உரிமை எள்ளளவும் விடப்படாது.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

 

http://www.dailythanthi.com/article.asp?NewsID=403871&disdate=4/2/2008

StumbleUpon.com Read more...

நன்றி: ஆனந்த விகடன்

இந்த வார விகடனில் 02-04-08 வெளிவந்த ஒரு கட்டுரை


சத்தமில்லாமல் ஒரு கிறிஸ்துவப் புரட்சி!

'சபையில் பெண்கள் பேசக் கூடாது!'

(1.கொரி.14.34)

சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் செயின்ட் மேரிஸ் தேவாலயம். வெள்ளை அங்கியில் கைகளை உயர்த்தியபடி, ஆர்கனின் இசைப் பின்னணியில் பிரசங்கம் செய்கிறார் டெபோரா. கி.பி.1680ல் இருந்து ஆண் பாதிரியாரின் குரல் மட்டுமே கேட்டு வந்த அந்த ஆலயத்தில் இப்போது பெண் குரல் ஒலிக்கிறது.



சி.எஸ்.ஐ. என்று அழைக்கப்படும் தென்னிந்திய திருச்சபையில், இப்போது பெண் பாதிரியார்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 'சபையில் பெண்கள் பேசவே கூடாது!', 'பெண்கள் கற்றுக் கொடுக்கவோ, ஆண்களைக் கட்டுப்படுத்தவோ கூடாது' என்கிற வழக்கம் எல்லாம் மறையத் தொடங்கிவிட்டன.



இந்தியாவில் தோன்றிய சமயங்கள் மட்டுமல்ல, உலக சமயங்கள் எதுவுமே பெண்களை கடவுளுக்கு மிக அருகில் விடவில்லை. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவில் கன்னியாஸ்திரீ கள் உண்டு; ஆனால், முழு உரிமை பெற்ற பெண் பாதிரியார்கள் கிடையாது. இந்தச் சூழலில்தான் தென்னிந்திய திருச்சபை பெண்களைப் பாதிரியார்களாக நியமித்து சத்தமில்லாமல் ஒரு புரட்சியை நடத்தியிருக்கிறது. முன்னாள் பிஷப் சுந்தர் கிளார்க்தான் இந்த மாற்றத்துக்குக் காரணமானவர்.

சூளை தேவாலயத்தில் ரெவரென்ட் இந்திரா, எண்ணூர் தேவாலயத்தில் ரெவ.லீலாபாய் மெர்ஸி, தண்டுறை குருசேகரத்தில் ரெவ.செலீன் சந்திரா என சென்னை பேராயத்தில் மட்டும் 25 பெண்கள் பாதிரியார்களாக இருக்கிறார்கள். பெண் பாதிரியார்கள் ஆசீர்வதிப்பதைப் பார்க்கவே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.

ஒரு பெண் பாதிரியார் ஆசீர்வதிப்பதை ஆண்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? பாதிரியார் ரெவ.டெபோரா பிரேம்ராஜிடம் கேட்டோம்.

''என் தந்தை, தாத்தா இருவருமே பாதிரியார்கள். என்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். அனைவருமே இறையியல் கல்வி படித்தோம். அதனால் இயல்பாகவே பாதிரியார் ஆகி இறைப்பணியில் ஈடுபட ஆசை ஏற்பட்டது. 1997ல் முழுப் பாதிரியாராகும் தகுதியை பேரா. அசரையா எனக்குக் கொடுத்தார். 'வேடல்' என்ற ஊரில் உதவி பாதிரியாராக முதலில் நியமிக்கப்பட்டேன். அங்கு என் கணவர் பாதிரியாராக இருந்தார்.

ஆண்களைவிடப் பெண்கள் தான் என்னை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டினார்கள். ஆனால், போகப்போகப் புரிந்துகொண்டார்கள். ஆண் பாதிரியார்களிடம் சொல்ல முடியாத விஷயங்களை என்னிடம் தயக்கமில்லாமல் சொல்ல முடியும் என்கிற நிலை, பெண் பாதிரியார்களின் தேவையை அனைவரும் உணர்ந்துகொள்ளச் செய்தது.

ஆரம்ப காலத்தில் இறையியல் கல்வி கற்ற பெண்களை உதவி ஆயர்கள் என்ற நிலையில்தான் வைத்திருந்தார்கள். இப்போது நிலைமை முழுக்க மாறிவிட்டது. ஓர் ஆலயத்தின் எல்லா பொறுப்புகளையும் பெண் பாதிரியார்களுக்குத் தந்துவிடுகிறார்கள். நாங்கள் ஆண் பாதிரியார்கள் அணியும் அங்கியைத்தான் அணிகிறோம்.

லண்டனில் உள்ள 'ஸ்டோக் நியூக்டன்' தேவாலயத்தில் என் பிரசங்கத்தைக் கேட்ட ஒருவர், 'பெண்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு இருந் தேன். உங்கள் உரையைக் கேட்ட பின்பு, என் கருத்தை மாற்றிக் கொண்டுவிட்டேன்' என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார். இது பெண் சமூகத்துக்கே பெரு மையான விஷயம் என்றுதான் நான் கருதுகிறேன்.



பெண்களுக்கு இயல்பாக வரும் மாதவிலக்கை 'தீட்டு' என கிறிஸ்துவம் கருதுவது இல்லை. 12 ஆண்டுகள் ரத்தப்போக்குடன் இருந்த பெண்ணை இயேசு குணமாக்கி, 'அவள் தொட்டால் தீட்டு ஏற்படாது' என்று கூறியிருக்கிறார். ஞானமோ அல்லது வேறு எதுவோ ஆண்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. கடவுளின் படைப்பில் எல்லா உயிர்களும் சமமான தகுதி உடையவைதான்!'' அழுத்தம்திருத்தமாகப் பேசி முடித்துவிட்டுத் தன் பிரசங்கத்தைத் தொடர்கிறார் டெபோரா.

இதமாகப் பரவ ஆரம்பிக்கிறது ஆர்கன் இசை!

நன்றி: ஆனந்த விகடன்

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=13046#13046

StumbleUpon.com Read more...

பிறந்து 11 வாரங்களே ஆன குழந்தைக்கு, நான்கு முறை மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் பிரிட்டனில் நடந்துள்ளது

4 •øÓ ©õµøh¨¦: u¨¤¯x SÇ¢øu

 

 

 

லண்டன் :பிறந்து 11 வாரங்களே ஆன குழந்தைக்கு, நான்கு முறை மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் பிரிட்டனில் நடந்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு பின்பும், அந்த குழந்தை, நல்ல உடல் நலத்துடன் இருப்பது, டாக்டர்களுக்கே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

லண்டனை சேர்ந்தவர் பிரயான், இவரது மனைவி அன்னா. இவர்களுக்கு, அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆலிவர் என பெயரிட்டு, செல்லமாக வளர்த்து வந்தனர். வழக்கமான பரிசோதனைக்கு சென்றபோது, குழந்தையை பரிசோதித்த டாக்டர்,"குழந்தையின், இதய துடிப்பு சரியாக இல்லை' என கூறினர். ஆனால், ஆலிவர் மற்ற குழந்தைகளை போல, நல்ல உடல் நலத்துடன் இருந்ததால், டாக்டரின் அறிவுரையை, பெற்றோர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சில நாட்களுக்குப் பின், ஆலிவருக்கு பால் குடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து மயக்கமான நிலையிலேயே இருந்தான். உடனடியாக, குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். இதய துடிப்பை, வழக்கமான நிலைக்கு கொண்டுவர, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதற்கிடையில், ஆலிவருக்கு நான்கு முறை மாரடைப்பு ஏற்பட்டு விட்டது. இருந்தாலும், மற்ற குழந்தைகளைப் போல், நல்ல உடல் நலத்துடன் உள்ளான். சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறுகையில், "பிறந்த 11 வாரங்களுக்குள், அவனுக்கு நான்கு முறை மாரடைப்பு ஏற்பட்டதை நம்பமுடியவில்லை' என்றனர்.
 

 
http://www.dinamalar.com/

StumbleUpon.com Read more...

டிவி ரிமோட் உபயோகிக்க புதிய கண்டிபிடிப்பு

.ரிமோட் வேலையை செய்யும் ரோபோ ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் புதுமை

 


 

டோக்கியோ :"டிவி' ரிமோட்டை அமுக்கி, அமுக்கி அலுத்து விட்டீர்களா? இனி அதனுடன் சண்டை போட அவசியம் இல்லை. ரிமோட் வேலையை செய்யும் ரோபோவை, ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோவிடம் நீங்கள் பார்க்க விரும்பும் சேனல் பற்றி சொன்னால் போதும், அதுவே அந்த சானலுக்கு மாற்றிவிடும்.

குழந்தை போன்ற தோற்றத்தை கொண்ட இந்த ரோபோ, 21 செ.மீ., உயரம் இருக்கும். ஜப்பானின் தோஷிபா நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. நீங்கள் தொலைக்காட்சியை "ஆன்' செய்த உடன், "இப்போது என்ன சேனல் வேண்டும்?' என, பெரிய கண்களையும், மொட்டை தலையையும் கொண்ட அந்த ரோபோ கேட்கும். நீங்கள் சொல்வதைக் கேட்டு, "ரிமோட்' கன்ட்ரோலின் பணியை செய்யும்.

இந்த ரோபோக்கள் மூலம், "டிவி'க்களை மட்டுமின்றி, இதர வீட்டு உபயோகப் பொருட்களையும் இயக்கலாம். வீட்டு உபயோகப் பொருட்களின் சிக்கலான செயல்பாடுகளை விட்டொழிக்க நினைக்கும் முதியவர்களுக்கு, இவை உபயோகமாக இருக்கும். குறிப்பாக, 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளிடம் பேசுவதுபோல, இந்த ரோபோக்களிடம் பேசி அவற்றை செயல்பட வைக்கலாம்.

http://www.dinamalar.com/

StumbleUpon.com Read more...

கண்ணு எழில் மொதல்ல இதுக்கு நீ பதில் சொல்லு.நண்பர்கள் மற்றதுக்கு பதில் சொல்லுவாங்க




உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? அவன் எப்படிப்பட்ட அயோக்கியன் என்பதைப் புராணம் கூறுவதைப் படியுங்கள்.

தேவர்களின் தலைவன் தேவேந்திரன். இந்தப் பதவி பரம்பரைப் பதவியல்ல. தேர்தலில் நின்று வென்று அடைய வேண்டிய பதவி. ஆனால் தேவேந்திரனின் மனைவியான இந்திராணியோ நிரந்தரமானவள். யார் தேவேந்திர பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு மனைவி இந்திராணிதான். இது என்ன அசிங்கம் பிடித்த ஒழுக்கக் கேடு என்கிறீர்களா? இதுதான் அவாளின் ஒழுக்கம். அதைத்தான் புராணங்கள் பிரதிபலிக்கின்றன.தேவேந்திரன் பதவி நிலையானதல்ல. அடிக்கடி அதற்குப் போட்டி வருவதுண்டு.அப்பாவியான அகலியை எனும் பெண்ணைக் கெடுத்ததோடு கல்லாக்கிய கல்மனங்கொண்ட காமாந்தகாரன் தேவர்கள் எப்பேர்ப்பட்ட ஒழுக்கங் கெட்டவர்கள் என்பதற்கு இந்தப் புராணமே போதும்.

கௌதம முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி. கற்புக்கரசி.தேவலோகம் சென்ற நாரதர் இந்திரனிடம் அகலிகை என்னும் அழகியைப் பற்றி வருணித்தார். இதனால் மதி மயங்கிய இந்திரன் அவளை அடைய ஒரு சூழ்ச்சி செய்தான்.முனிவர்கள் விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜபதபங்கள் செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த இந்திரன் அந்த நேரத்தில் அகலிகையை அடைய எண்ணினான்.கவுதமர் ஆசிரமத்தை அடைந்த இந்திரன் நடு ஜாமத்தில் சேவலைப் போலக் கூவி கவுதமரை ஏமாறச் செய்தான். அது அதிகாலை என்று எண்ணிய கவுதமர் ஜபதபங்களை முடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.அவ்வமயம் இந்திரன், கவுதமர் வடிவில் ஆசிரமத்தில் நுழைந்தான். தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த அகலிகை கவுதமர் திரும்பி வந்து விட்டதாக எண்ணினாள். அப்போது கவுதமர் வடிவில் இருந்த இந்திரன், ``இன்னும் விடியவில்லை. ஏதோ பறவையின் ஒலியைச் சேவல் கூவியதாக எண்ணினேன்' என்று கூறி அவளை அருகில் வருமாறு அழைத்தான்.அருகில் கட்டிலில் அமர்ந்த அகலிகையுடன் சேர்ந்து இன்பம் துய்த்தான்.இந்நிலையில் ஆற்றங்கரை சென்ற கவுதமர் ஏதோ தவறு நேர்ந்து விட்டிருப்பதாகக் குழப்பத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து கதவைத் தட்டினார். அக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அகலிகை திகைப்படைந்து நடுக்குற்றாள். ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தாள். இந்திரன் சுயஉருவில் தோன்றி அவள் காலில் விழுந்து கும்பிட்டான். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான்.கதவைத் திறந்த அகலிகை தலைவிரிகோலமாக முனிவர் காலில் விழுந்துவணங்கி தன் புனிதத் தன்மையை இந்திரனால் இழந்ததாகக் கூறித் தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தாள்.ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது

அனைத்தையும் அறிந்த கவுதமர், பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார். அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுயஉருவில் தலை குனிந்து நின்றான்.எனினும் கோபம் அடங்காத முனிவர் அவன் உடம்பெல்லாம் பெண் குறியாகட்டும்' என்றும் `வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்படு' என்றும் சபித்தார்.அகலிகையை நோக்கிக் கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத அவள் உடம்பு கல்லாகுமாறு சபித்தார் முனிவர். அகலிகை தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனம் அளிக்குமாறு வேண்டினாள். அப்போது முனிவர் `சிறீமந் நாராயணன் ராமனாக அவதரித்து விசுவாமித்திரருடைய யாகத்தை நிறைவேற்ற கானகத்துக்கு வருவார். அந்த ராமர் பாதம் பட்டு சாபம் நீங்கி சுய உருவைப் பெறுவாய்'' என்று கூறிவிட்டு வெளியேறினார் முனிவர்.சாபத்தின் காரணமாக இந்திரன் மறைந்து வாழ வேண்டிய அவல நிலை உண்டாயிற்று. இந்திரனுக்காகத் தேவர்கள் கவுதம முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினர். முனிவர் `இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானுடைய ஷடாட்சர மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கட்டும்'' என்று கூறினார்.

இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானின் ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்று ஜபித்து அவர் அருளால் அவன் உடலில் இருந்து பெண்குறிகள் கண்களாக மாறிக் காட்சி அளித்தன.எனவே அவனுக்கு ஆயிரம் கண்ணுடையான் என்ற பெயர் ஏற்பட்டது. (விடுதலை 19.05.2007)

 

http://idhuthanunmai.blogspot.com/2007/05/blog-post_9734.html

StumbleUpon.com Read more...

தமிழ்மணம்,தேன்கூட்டுக்கு போட்டியாக புதிய இணைய திரட்டி வந்துவிட்டது

தமிழ்மணம்,தேன்கூட்டுக்கு போட்டியாக புதிய இணைய திரட்டி வந்துவிட்டது அப்படின்னு சொல்லியாவது உங்க கிட்ட ஒரு ஹிட் வாங்கி விடவேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை வந்தது.அதனால் தான் இந்த ஏப்ரல் 1 பதிவு.
 
 
எனக்கு கைகொடுக்கும் திரட்டிகள்
 

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

 

 

இப்போதைக்கு இல்லை

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

StumbleUpon.com Read more...

ஒகேனக்கல் பிரச்சனை: தமிழ் தொலைகாட்சிகள் ஒளிப்பரப்பவும் தடை

ஒகேனக்கல் பிரச்சனை: தமிழ் தொலைகாட்சிகள் ஒளிப்பரப்பவும் தடை

1 H¨µÀ,2008 ::19:41

பெங்களூரு: ஒகேனக்கல் பிரச்சனை தொடர்பாக கர்நாடாக மாநிலத்தில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இத‌னிடை‌‌‌யே 31.03.08ம் தேதி கன்னட அமைப்பினர் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களை அடித்து நோறுக்கினர். இதனி‌ட‌யே தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பிரச்சனை மேலும் தீவிரமடைந்துள்ளது. கன்னட அமைப்பு சார்பில் நடை‌பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒகேனக்கல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வ‌ரை தமிழ் ‌தொலைக்காட்சிகளை ஒளிப்பரப்பவும் கேபிள் ஆபரேட்டர்கள் ‌தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் இரு மாநிலங்களுக்கு இடை‌யே உள்ள போக்குவரத்தையும் நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் இரு மாநிலங்களுக்கு இடை‌யேயான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

StumbleUpon.com Read more...

பெங்களுரில் (ஒகேனக்கல் விவகாரம்) இன்றும் பதற்றம் ,தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்

பெங்களுரில் இரண்டாவது நாளாக இன்றும் பதற்றம்

1 H¨µÀ,2008 ::14:31

பெங்களுர்: பெங்களுரில் இரண்டாவது நாளாக இன்றும் பதற்றம் நிலவி வருகிறது. . ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களுரில் இன்றும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பெங்களுரில் பதற்றம் நிலவி வருகின்றது.தமிழ் திரைப்படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன இரண்டு எல்லைப்பகுதி‌களிலும் ‌போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
 
 
 
கர்நாடகாவை கண்டித்து 4ம் தேதி தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்

1 H¨µÀ,2008 ::15:10

சென்னை : கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து தமிழ் திரையுலகினர் சென்னையில் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் நடந்து வருகிறது. தமிழ் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதை கண்டித்து வரும் 4ம் தேதி தமிழ் திரையுலகினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த உள்ளனர். சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொள்ளாத நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது
 

StumbleUpon.com Read more...

முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி

முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் - உபாகமத்தின் உண்மை:



உபாகமத்தின் உண்மை:
முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்

ஆசிரியர்: டேவிட் உட்


THE DEUTERONOMY DEDUCTIONS:
Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet

By David Wood

"சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்" ~தேவன் (உபாகமம் 18:20)[1]

"நான் அல்லாவிற்கு விரோதமாக பொய்யைச் சொன்னேன், மற்றும் அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொன்னதாக சொன்னேன்" ~ முஹம்மத் (அல்-டபரி 6:111)[2]

யூத மற்றும் கிறிஸ்தவ வேதங்களில் தன் வருகையைப் பற்றிய முன்னறிவிப்பு வசனங்கள் உள்ளது என்று முகமது சொன்னார் (பார்க்க, குர்‍ஆன் 7:157). இதனால், இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றி பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் என்னென்ன வசனங்கள் உள்ளது என்று தேட ஆரம்பித்தார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றிய பைபிள் வசனங்கள் இவைகள் என்று கிறிஸ்தவர்களுக்கு காட்டும் போது, கிறிஸ்தவர்கள் அந்த வசனங்கள் எந்த சூழ்நிலையில் என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று படிக்கின்றபடியால், இஸ்லாமியர்களுக்கு மறுப்பும் பதிலும் காலகாலமாக‌ சொல்லிக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருந்தும், இன்னும் முஸ்லீம்கள் பைபிளில் முகமது பற்றிய வசனங்கள் உள்ளது என்றுச் சொல்வதை பொதுவாக நாம் கேட்கமுடியும்.

முகமது பற்றி மிகவும் புகழ்பெற்ற பைபிள் "தீர்க்கதரிசன வசனமாக" உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் குறிப்பிடுவார்கள். ஆனால், உபாகமம் 18ன் படி கண்டிப்பாக முகமது ஒரு தீர்க்கதரிசியாக‌ இருக்கமாட்டார் என்ற உண்மையை ஜீரணித்துக்கொள்வது சிறிது கடினமே. இந்த கட்டுரையில் நாம் காணப்போகும் இந்த வசனம் சம்மந்தப்பட்ட விவரங்கள் முஸ்லீம்களை ஒரு தர்மசங்கடமான நிலைக்கு கொண்டுபோகும், மட்டுமல்ல, தங்கள் நபியின் நிலையை காப்பாற்ற அவர்கள் எவ்வளவு தூரம் முயற்சி எடுப்பார்கள் என்பதும் தெளிவாக விளங்கும்.

முஸ்லீம்கள் உபாகமம் 18ம் அதிகாரத்தின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு வாதம் புரிவதால், அதே அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு "முகமது ஒரு பொய் (கள்ள) தீர்க்கதரிசி" என்பதை நிருபிப்பது தான் இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். முகமதுவின் "நபித்துவத்திற்கு" எதிராக இரண்டு ஆதாரங்களை உங்கள் முன்வைத்து என் வாதத்தை துவக்குகிறேன். இந்த இரண்டு ஆதாரங்களை மிகவும் ஜாக்கிரதையாக விவரித்து என் வாதங்களை முன்வைக்கிறேன். என் இரண்டு வாதங்களும் உண்மையானது என்பதை நான் நிருபித்த பிறகு, என் இந்த வாதங்களை ஏற்க மறுக்கும் இஸ்லாமியர்களுக்கு மிஞ்சும் சில தெரிவுகள்(Options) பற்றி சுருக்கமாக‌ விவரிக்கிறேன்.

I. உபாகமத்தின் உண்மை
(I. THE DEUTERONOMY DEDUCTIONS)

வாதம் பிரதிவாதம் பற்றி இரண்டு முக்கிய விவரங்கள் உள்ளன, அவைகள் Valid Logic மற்றும் True Premises ஆகும். இந்த இரண்டு விவரங்களும் நாம் சரியான முடிவு எடுக்க நம்மை அழைத்துச்செல்கிறது. ( The most basic argument form is the syllogism, and the most basic valid form of the syllogism is Modus Ponens.[3] The logical form of the following arguments is Modus Ponens; thus, they are logically valid: )

கீழ்கண்ட இரண்டு வாதங்கள் சரியான வாதங்கள்:

வாதம் A --- பொய் இறைவன் மற்றும் பொய் தீர்க்கதரிசி:

A1. ஒரு தீர்க்கதரிசி பொய்யான கடவுள்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தால், அந்த நபர் ஒரு "கள்ள தீர்க்கதரிசி" ஆவார்.
A2. முகமது பொய்யான கடவுளின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்து இருக்கிறார்.
——————————————————
A3. ஆகையால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி

வாதம் B -- பொய்யான வெளிப்பாடுகள்,மற்றும் பொய்யான தீர்க்கதரிசிகள்

B1. ஒரு நபர் இறைவனிடமிருந்து வராத வெளிப்பட்டை சொன்னால், அந்த நபர் ஒரு கள்ள தீர்க்கதரிசி.
B2. முகமது இறைவனிடமிருந்து வராத வெளிப்பாட்டை சொன்னார்.
——————————————————
B3. ஆகையால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி

மேலே சொல்லப்பட்ட இரண்டு வாதங்களும் சரியானவை, எனவே, உண்மையான வாதங்களின் அடிப்படை(True Premises) நம்மை சரியான முடிவு எடுக்க உதவுகின்றன. ஆக, இந்த இரண்டு வாத அடிப்படைகளும் உண்மையாக இருக்குமானால், முகமது ஒரு பொய் (அ) கள்ள தீர்க்கதரிசி என்று நாம் முடிவு செய்யலாம். வாருங்கள், நாம் இந்த "அடிப்படை வாதங்களைப் பற்றி" இன்னும் அதிகமாக ஆராய்வோம்.

II அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 உறுதியாக்கப்படுகின்றன.

II. PREMISES A1 AND B1 DEFENDED

அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1 ஐ நாம் கவனித்தால் நமக்கு கீழ் கண்ட விவரங்கள் சுலபமாக புரிந்துவிடுகிறது. அதாவது, ஒரு நபர் பொய்யான இறைவனின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தால் அல்லது உண்மையான இறைவனிடமிருந்து வராத வசனங்களை உரைத்தால், அந்த நபர் கண்டிப்பாக உண்மையான தீர்க்கதரிசியாக(நபியாக) இருக்கமுடியாது. "முகமது பற்றி பைபிள் முன்னறிவிக்கிறது அதனால் எங்கள் நம்பிக்கை வலுவடைகிறது" என்று முஸ்லீம்கள் சொல்வதினால், அவர்களுக்கு தெரியாமலேயே இந்த இரண்டு அடிப்படை வாதங்கள் உண்மை என்று அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

முகமது ஒரு உண்மையான நபி(தீர்க்கதரிசி) என்று நிருபிப்பதற்கு பைபிளின் உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் தங்கள் இஸ்லாமிய வாதத்திற்கு அடிப்படையாக பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அதே போல‌, "Brief Illustrated Guide to Understanding Islam " என்ற புத்தகத்தில் "முகமது பற்றி பைபிள் சொல்கிறது" என்றுச் சொல்லி, உபாகமம் 18ஐ மிகவும் முக்கியமான ஆதாரமாக காட்டியுள்ளார்கள். இதன் ஆசிரியர் I.A. இப்ராஹிம் அவர்கள் கீழ் கண்டவாறு கூறுகிறார்:

"The Biblical prophecies on the advent of the Prophet Muhammad are evidence of the truth of Islam for people who believe in the Bible"

"முகமது நபி வருவார் என்று பைபிளின் தீர்க்கதரிசனமே பைபிளை நம்புகிறவர்களுக்கு "இஸ்லாம் உண்மையான மார்க்கம்" என்பதற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகும்."

உபாகமம் 18ல் இறைவன் சொன்னதாக மோசே சொன்னதாவது:

"உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்." (உபாகமம் 18: 18, 19)[4]


இந்த தீர்க்கதரிசன வசனத்தை முகமது பல வகைகளில் நிறைவேற்றினார் என்று இந்த புத்தகம் சொல்லிக்கொண்டே போகிறது. இந்த வாதம் பல முறை மறுக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும்(ad nauseum)[5]. நான் இங்கு தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், "முஸ்லீம்கள் இந்த உபாகமம் 18: 18-19ம் வசனங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டது என்று ஏற்றுக்கொள்கிறார்கள் (இந்த வசனங்களை அவர்கள் அற்புதமான தீர்க்கதரிசன வசனங்கள் என்று கருதுகிறார்கள்). அப்படியானால், கண்டிப்பாக நாம் இந்த வசனங்களுக்கு அடுத்துவரும் வசனத்தில் இறைவன் என்ன சொல்கிறார் என்பதை புறக்கணிக்க‌ முடியாதே! இந்த வசனத்தில் இறைவன் சொல்கிறார்:

"சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்." (உபாகமம் 18:20)


இந்த வசனத்தின் படி நாம் "ஒரு பொய் நபியை(தீர்க்கதரிசியை)" இரண்டு வழிகளில் கண்டுபிடிக்கலாம்:

(1) தேவன் சொல்லும் படி கட்டளையிடாத வார்த்தைகளை அவர் சொன்னார் என்று சொல்பவர்.

(2) வேறே தேவர்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைப்பவர்


முகமது பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது என்று முஸ்லீம்கள் தங்கள் வாதத்தை முன்வைப்பதால், அவர்கள் இந்த இரண்டு அடிப்படை வாதங்களை (A1 and B1) தவிர்க்க முடியாது. மொத்தமாக சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் உபாகமம் 18ல் உள்ள வசனங்கள் தங்களுக்கு ஏற்றது என்று ஒப்புக்கொள்கிறார்கள், மற்றும் அந்த வசனங்களும் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1ஐ உண்மை என்று சொல்கின்றன. ( To sum up, Muslims have appealed to a passage in Deuteronomy 18, and that passage entails premises A1 and B1. Thus, according to Muslim claims, the first premise of each of the Deuteronomy Deductions is true.)

III அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2 உறுதியாக்கப்படுகின்றன.

III. PREMISES A2 AND B2 DEFENDED

"உபாகமத்தில் வரும் வசனங்கள் முகமது பற்றி முன்னறிவிக்கிறது" என்ற‌ இஸ்லாமியார்களின் வாதங்களின் அடிப்படையில், ஒருவர் இறைவன் அனுப்பாத செய்தியை சொன்னாலோ அல்லது பொய்யான இறைவனின் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னாலோ அவர் ஒரு கள்ள(பொய்) தீர்க்கதரிசி(நபி) என்று நாம் கண்டோம். இதன் படி நாம் பார்த்தால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி ஆவார். ஏனென்றால், அவர் இந்த இரண்டு காரியங்களையும் செய்துள்ளார், ஏனென்றால், அவர் அபகீர்த்தியான‌ "சாத்தானின் வசனங்கள்" என்றுச் சொல்லக்கூடிய வசனங்களை அவர் அல்லாவின் பெயரில் தீர்க்கதரிசனமாக சொல்லியுள்ளார்.

சாத்தானின் வசனங்கள் பற்றி நாம் கிறிஸ்தவ அல்லது யூத எழுத்துக்களிலிருந்து, புத்தகங்களிலிருந்து அல்ல, அதற்கு பதிலாக ஆரம்ப கால இஸ்லாமிய எழுத்துக்களிலிருந்தே நாம் அறிந்துக்கொண்டுள்ளோம். சாத்தனின் வசனங்கள் பற்றிய விவரங்களை நமக்கு கீழ் கண்ட ஆரம்ப கால இஸ்லாமிய மூலங்களிலிருந்து (Early Muslim Resources) கிடைக்கின்றன:

(1) Ibn Ishaq, (இபின் இஷாக்)
(2) Wakidi, (வாகிடி)
(3) Ibn Sa'd, (இபின் சத்)
(4) al-Tabari, (அல்‍-டபரி)
(5) Ibn Abi Hatim, (இபின் அபி ஹடிம்)
(6) Ibn al-Mundhir, (இபின் அல்-முந்திர்)
(7) Ibn Mardauyah, (இபின் மர்டவ்யா)
(8) Musa ibn 'Uqba, and (மூசா இபின் அக்பா)
(9) Abu Ma'shar.[6] (அபு மஷர் )


சிறந்த இஸ்லாமிய அறிஞராகிய இபின் ஹஜர் என்பவரின் கூற்றுப்படி, இந்த சாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களில், ஒரு ஹதீஸ் உண்மையான அதிகாரபூர்வமானதாக கருதவேண்டுமானால் இருக்கவேண்டிய நிபந்தனையாகிய‌ "மூன்று சங்கிலித் தொடர்" நிபந்தனையையும் பூர்த்திசெய்கிறதாக இருக்கிறது [7]. ( three chains of transmission [isnad] ). இது மட்டுமல்ல, முகமதுவின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும், இஸ்லாமியர்களின் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த "சஹி அல்-புகாரி" என்ற ஹதீஸ் தொகுப்பும், சாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறதாக உள்ளது (Number 4862, கிழே கொடுக்கப்பட்டுள்ளது). இந்த விவரங்கள் போக, குர்‍ஆனில் உள்ள சில குறிப்பிட்ட வசனங்கள்(17:73-75 மற்றும் 22:52-53) "பல தெய்வங்களை அங்கீகரித்து, தவறு செய்து, தர்மசங்கடமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட முகமதுவிற்கு" பதில் அளிப்பதாக உள்ளது.

ஆகையால், இந்த சாத்தனின் வசனங்கள் என்ற நிகழ்ச்சி அதிகாரபூர்வமானது, உண்மையானது என்று நம்மை நம்பச்சொல்லி சரித்திரத்திலுருந்து பல ஆதாரங்கள் நம்மை கட்டாயப்படுத்துகின்றன. (இந்த சாத்தனின் வசனங்கள் பற்றி மிகவும் விவரமான ஆதாரங்களைக் தெரிந்துக்கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்: முகமதுவும் மற்றும் சாத்தானின் வசனங்களும் - http://www.answering-islam.org/Responses/Saifullah/sverses.htm) இந்த சரித்திர ஆதாரங்கள் அனைத்தும் "சாத்தனின் வசனங்கள்" என்ற நிகழ்ச்சி ஒரு ஆதாரபூர்வமானது என்பதை நிருபிக்கின்றன. சரித்திர ஆய்வாளர்கள், "உலக தலைவர்களின் மற்றும் மத தலைவர்களின் வாழ்க்கையை" ஆய்வு செய்ய " Principle of Embarrassment " என்ற கோட்பாட்டை பயன்படுத்துகின்றனர். இந்த கோட்பாடு சட்டபூர்வமான புலன் விசாரனையிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. சட்டத்துறை பேராசிரியர் " Annette Gordon-Reed " என்பவர், இந்த கோட்பாட்டை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்:

"Declarations against interest are regarded as having a high degree of credibility because of the presumption that people do not make up lies in order to hurt themselves; they lie to help themselves."[8]

"தன் விருப்பத்திற்கு எதிராக சொல்லப்படும் அறிக்கைகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படும், ஏனென்றால், மக்கள் எப்போதும் தங்களை காயப்படுத்திக்கொள்வதற்காக பொய்யை சொல்வதில்லை, மாறாக தங்களுக்கு நன்மை உண்டாவதற்கே பொய்யைச் சொல்கிறார்கள்."[8]


மேலே சொல்லப்பட்ட Principle of Embarrassment என்ற கோட்பாட்டை நாம் "சாத்தானின் வசனங்களோடு" ஒப்பிட்டுப்பார்க்கும் போது, "முகமதுவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் இந்த கதை முஸ்லீம்களால் புனையப்பட்ட ஒரு கற்பனைக் கதையில்லை" என்பதை நாம் கவனிக்கமுடியும். இந்த கதையை இஸ்லாமியர் அல்லாதவர்கள்(Non-Muslims) வேண்டுமென்றே இட்டுக்கட்டி இருக்கமுடியாது என்பதையும் நாம் காணமுடியும்; ஒருவேளை இந்த கதையை இஸ்லாமியர் அல்லாதவர்கள் சொந்தமாக சொல்லியிருப்பார்களானால், முஸ்லீம்கள் தங்கள் சரித்திர எழுத்துக்களில் இக்கதையை நியாயப்படுத்தி காப்பாற்ற முயற்சி எடுப்பதை விட்டுவிட்டு, இந்த கதையின் ஆரம்ப விவரங்களைச் சொல்லி இது பொய் என்று நிருபித்து இருப்பார்கள்.

சாத்தான் வசனம் பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் விவரங்களில் உள்ள ஆதாரங்கள், இந்நிகழ்ச்சியை புறக்கணிக்க முடியாத‌ அளவிற்கு வலுவாக உள்ளது. இந்த விவரங்களை மனதிலே வைத்துக்கொண்டு, நாம் அல்-டபரி(History of al-Tabari) அவர்கள் தொகுத்த‌ சரித்திரத்தில் "சாத்தான் வசனம்" பற்றி என்ன சொல்கிறார் என்பதை சுருக்கமாக காண்போம்.

அல்-டபரியின் சரித்திர தொக்குப்பின் படி(According to al-Tabari):

அல்லாவின் தூதர் தான் அல்லாவிடமிருந்து கொண்டு வந்த செய்தியை தன் இன மக்கள் கேட்காமல், தங்கள் முதுகை அவருக்கு காண்பிப்பதை அவர் கண்டவுடம் மிகவும் வேதனையுற்றார். அல்லாவிடமிருந்து ஏதாவது ஒரு செய்தி இவர்களுக்காக இறங்கி, தான் தன் இன மக்களோடு ஒன்றுபடவேண்டும் என்று அவர் தன் உள்ளத்தில் விரும்பினார். தன் இன மக்களின் மீது அவர் கொண்டுள்ள அன்பின் காரணமாகவும், அவர்களின் முன்னேற்றத்தில் அக்கரை உள்ளவராகவும் இருந்த அவருக்கு, தன் இன மக்கள் இவர் மீது சுமத்திய சில கட்டுப்பாடுகளை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார். அதனால், அவர் தன்க்குள் தானே போராடிக்கொண்டு, மிகவும் விருப்பத்தோடு ஏதாவது வெளிப்பாடு கிடைக்குமா என்று காத்துக்கொண்டு இருந்தார். பிறகு அல்லா வசனத்தை இறக்கினார்:

விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.


மற்றும் அவர் கீழ் கண்ட வார்த்தைகளை சொல்லும் போது:

நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?)


அவர் தன் உள்ளத்தில் இருக்கும் போராட்டத்தின் காரணமாகவும், தன் இன மக்களுக்கு எது வெளிப்பட வேண்டுமென்று விரும்பினாரோ அதன் படி, சாத்தான் அவர் வாயில் தன் வசனங்களை போட்டான்:

"இவைகள் உயரத்தில் பறக்கும் பறவைகள், உண்மையாகவே இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும்" (Al-Tabari, பக்கம். 108)


கடைசியாக‌ முகமது தங்கள் தெய்வங்களுக்கு கொடுத்த அங்கீகாரத்திற்காக, அனேக தெய்வங்களை வணங்கும் அந்த மக்கள், மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இதற்கு பிரதிபலனாக "தங்கள் தெய்வங்களை இவர் அங்கீகரித்து குறிப்பிட்டபடியால், இவர்களும் அந்த மசூதியில் தொழுதுக்கொண்டார்கள்(prostrate), அந்த மசூதியில் தொழுதுக்கொள்ளாதவன் அவன் நம்பிக்கையுள்ளவனோ, நம்பிக்கையில்லாதவனோ ஒருவனும் இல்லை, எல்லாரும் தொழுதுக்கொண்டனர்"(Al-Tabari, பக்கம். 109)

அந்த பலதெய்வங்களை வணங்கும் அந்த மக்களோடு முகமதுவின் நட்புறவு மிகவும் குறுகிய காலம் வரை தான் நிலைத்தது, அந்த புறசமயத்தாரின் விக்கிரகங்களை புகழ்ந்து இவர் சொன்ன வசனம் அல்லாவிடமிருந்து வரவில்லை, அது சாத்தானிடமிருந்து வந்தது என்பதை இவர் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே அறிந்துக்கொண்டார். அல்லாவிற்கு எதிராக இவரின் நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றி இவர் அதிகமாக வேதனையுற்றார், அதனால் முகமது புலம்பினார்: "நான் அல்லாவிற்கு எதிராக பொய்யை புனைந்தேன், மற்றும் அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொன்னதாக அவதூறுச் சொன்னேன்"(பக்கம் 11). இருந்தபோதிலும், "கப்ரியேல்" தூதன் முகமதுவை தேற்றினார், மற்றும் "எல்லா நபிகளும் சாத்தானின் இந்த வஞ்சக வலையில் அவ்வப்பொழுது விழுந்தவர்கள் தான்" என்று அவருக்கு அறிவித்தார். இந்த நம்பமுடியாத மற்றும் தடுமாறச்செய்யும் இந்த வாதம் பற்றிய விவரத்தை நாம் குர்‍ஆனிலும் காணமுடியும்:

"(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்." (குர்‍ஆன் 22:52)[9]

"And We did not send before you any apostle or prophet, but when he desired, the Shaitan made a suggestion respecting his desire; but Allah annuls that which the Shaitan casts, then does Allah establish His communications, and Allah is Knowing, Wise." (Surah 22:52)[9]


குர்‍ஆனின் அடுத்த வசனத்தின்படி, இருதயங்கள் கடினமான மக்களை சோதிப்பதற்காக, தன் நபிகளுக்கு சாத்தானினிடமிருந்து வசனங்கள் வர அல்லா அனுமதிக்கிறாராம்.

சாத்தானின் வசனம் பற்றி (முகமதுவை காப்பாற்றும் நோக்கில்) பகுத்தறிவுக்கு ஒவ்வாத குர்‍ஆனின் விளக்கம் பற்றி நாம் எப்படி நினைத்தாலும், ஒன்று மட்டும் மிகவும் தெளிவாக இருக்கிறது, அதாவது இஸ்லாமின் நபி குறைந்த பட்சம் ஒரு சந்தர்பத்தில் அல்லாவிடமிருந்து வராத வசனத்தை வெளிப்பாடாக கொடுத்துள்ளார். மற்றும் பொய்யான தெய்வங்களின் பெயரில் குறைந்த பட்சம் ஒரு முறை முகமது தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார்[10]. ஆக, முஸ்லீம்களின் ஆதாரங்களிலிருந்து அடிப்படை வாதங்களாகிய A2 மற்றும் B2 என்பவைகள் உண்மைகள் என்பதை நிரூபித்துள்ளோம்.

IV சாத்தியமான மறுமொழிகள்

(IV. POSSIBLE REPLIES)

வாத‌மூல‌க்கூறுக‌ளாகிய‌ A1,A2,B1 மற்றும் B2 போன்ற‌வைக‌ளை நான் ஏற்றுக்கொள்வ‌த‌ற்கு ச‌ரியான‌ கார‌ண‌ங்க‌ள் ந‌ம‌க்கு இருப்ப‌தால், முடிவுக‌ளாகிய‌ A3, B3 இர‌ண்டையும் நாம் ஏற்றுக்கொள்வ‌து ச‌ரியான‌தாகும். இந்த‌ வாத‌ங்க‌ள் ந‌ம‌க்கு முக‌ம‌து ஒரு பொய் தீர்க்க‌த‌ரிசி என்ப‌தை காட்டுகின்றது. இருந்த‌போதிலும், முஸ்லீம்க‌ள் இந்த‌ முடிவை ஏற்றுக்கொள்ள‌மாட்டார்க‌ள். அவ‌ர்க‌ள் எப்ப‌டி இத‌னை ம‌றுக்கிறார்க‌ள் என்பதையும் அதில் அவர்களது வெற்றிவாய்ப்பைப் பற்றியும் சுருக்க‌மாக‌ காண்போம்.

முஸ்லீம்கள் உபாகமம் 18:20ம் வசனம் ஒரு தவறான போதனை, இது தேவனிமிருந்து வராத ஒரு வெளிப்பாடு ஆகும் என்று ஒருவேளை சொல்லக்கூடும். ஆனால், அவர்கள் இந்த வழியில் போனால், "உபாகமம் 18:18,19"ம் வசனங்கள் தேவனால் வெளிப்படுத்தப்பட்டது என்று அவர்கள் சொல்வது நகைப்பிற்கு இடமளிப்பதாக இருக்கிறது. பொதுவாக முஸ்லீம்கள் ஒரு குறிப்பிட்ட வசனங்களை பைபிளிலிருந்து எடுத்துக்கொண்டு அவ்வசனங்கள் உண்மையாவை என்று மூஸ்லீம்கள் சொல்வது மிகவும் ஆச்சரியப்படவேண்டிய விஷயம்.(அதாவது, பைபிளில் உள்ளவைகளில் எதுவெல்லாம் இஸ்லாம் சொல்வதற்கு ஒத்துப்போகிறதோ, அவ்வசனங்கள் சரியானவை என்றும், எவையெல்லாம் இஸ்லாம் சொல்வதற்கு ஒத்துப்போகவில்லையோ, அது தீய யூதர்களால் மற்றும் கிறிஸ்தவர்களால் மாற்றப்பட்டது என்றுச் சொல்வார்கள்) உபாகமம் 18ம் அதிகாரத்தில் வரும் ஒரு வசனம் "முகமது ஒரு நபி" என்பதை நிரூபிக்கிறது என்றும், அதே சமயத்தில் அதே அதிகாரத்தில் உள்ள இன்னொரு வசனம் திருத்தப்பட்டது காரணம் அவ்வசனம் "முகமது ஒரு கள்ள நபி" என்பதை சொல்வதினால் என்றுச் சொன்னால், இந்த உலகத்தில் யாரும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.(While it is alarmingly common for Muslims to pick and choose which passages in the Bible are correct (i.e. everything that agrees with Islam is correct, but everything that disagrees with Islam was corrupted by evil Jews and Christians), no one is going to be convinced by the claim that one verse in Deuteronomy 18 proves the prophethood of Muhammad, while another verse in the same passage is corrupted because it proves that he was a false prophet.)

ஆக, அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1 ஐ மறுக்கும் முஸ்லீம்கள், உபாகமம் 18ம் அதிகாரத்தில் முகமதுவின் நபித்துவத்தைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்றுச் சொல்வதை இனி விட்டுவிடவேண்டும். மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவேன் என்று சொன்ன தீர்க்கதரிசன வசனம் தாம், முஸ்லீம்கள் "தங்கள் முகமது ஒரு நபி என்று நிரூபிக்க" முன்வைக்கும் கடைசி ஆதாரமாகும். எத்தனை முறை இந்த வாதத்தை மறுத்து ஆதாரத்தை காட்டினாலும், இதனை அவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், முகமது வருவார் என்று பைபிள் தெளிவாக எந்த முன்னறிவிப்பும் சொல்லவில்லையானால், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பது நிச்சயம். ஏனென்றால், யூத மற்றும் கிறிஸ்த வேதங்களில் தன்னைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள் உள்ளது என்று முகமதுவே சொல்லியுள்ளார். அப்படியானால், இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் மெல்லவும் முடியாமல், மிழுங்கவும் முடியாமல் சரியாக மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு வேளை முஸ்லீம்கள் உபாகமம் 18ம் அதிகாரத்தை பிடித்து தொங்கினால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பது நிரூபனமாகும். அப்படியில்லாமல், உபாகமம் 18ஐ அவர்கள் விட்டுவிட்டால், முகமது பற்றி தீர்க்கதரிசனங்கள் பைபிளில் இல்லை என்பதால், அவர்களுக்கு இதுவும் ஒரு பெரிய பிரச்சனையாக மாறுகிறது, இது முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதைக் காட்டுகிறது.

ஒரு வேளை முஸ்லீம்கள் தாங்கள் மிகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்க்கதரிசனம் என்றுச் சொல்லக்கூடிய உபாகமம் 18ம் அதிகாரத்தை விட்டுவிட்டாலும், அவர்கள் பிரச்சனையிலிருந்து வெளிப்படமுடியாது. உபாகமம் 18ம் அதிகாரம் தேவனின் வசனமல்ல அது திருத்தப்பட்டது என்றுச் சொன்னாலும், அவர்கள் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 ஐ அவர்கள் மறுக்கவில்லை, ஏனென்றால், இந்த அடிப்படை வாதங்கள் மிகவும் தெளிவானவை. இந்த அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 தவறானவை என்று நிரூபிக்க விரும்புகிற முஸ்லீம்கள் நிரூபிக்கட்டும், இதற்கு அவர்கள், ஒரு உண்மையான தீர்க்கதரிசி(அ) நபி பொய்யான வசனங்களை பொய்யான தெய்வங்களின் மூலமாகக் கூட கொடுக்கமுடியும் என்று நிரூபிக்கவேண்டும். இப்படிப்பட்ட நிலைநிறுத்த முடியாத வாதங்கள் மூலமாக முஸ்லீம்கள் முயற்சிப்பதை காண நான் விரும்புகிறேன்.(Muslims who want to deny A1 and B1 must therefore show that these premises are false by arguing that genuine prophets can indeed deliver false revelations and speak in the names of false gods. I would love to see Muslims attempt to defend such an untenable position!)

முகமது மீது இன்னும் நம்பிக்கை வைத்துக்கொண்டு இருக்கும் முஸ்லீம்கள் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 ஐ புறக்கணிக்கமுடியாது, ஆனால், A2 மற்றும் B2ஐ வேண்டுமானால் மறுக்கமுடியும். அப்படியானால், முகமது புறசமயத்தவர்களின் தெய்வங்களை ஆதரித்து சொன்ன வசனங்கள் பற்றி உள்ள அதிகபடியான சரித்திர ஆதாரங்களை முஸ்லீம்கள் நிராகரிக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது. இப்படி மறுக்கும் முஸ்லீம்கள், ஏழு விதமான காரியங்களை செய்யவேண்டும்.

முதலாவது, அவர்கள் இந்த சாத்தானின் வசனம் பற்றிய நிகழ்ச்சியின் (கதையின்)மூலத்தைப் பற்றிய காரணங்களை நேர்மையான முறையில் விவரிக்கவேண்டும் (அதாவது, இந்த கதையானது புறமதத்தவர்கள், யுதர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் வேண்டுமென்றே உருவாக்கிய கட்டுக்கதை என்பதை நிருபிக்கவேண்டும்)

இரண்டாவதாக, ஏன் இஸ்லாமியர்கள்(அறிஞர்கள்) ஆரம்ப முதலே இந்த கதையை மறுப்பதற்கான காரணங்கள் இருந்தும், ஏன் இந்த கதை சரியானது என்று எழுதி வைத்து இன்று நம்முடைய கையில் கிடைக்கும் படி செய்துள்ளார்கள். (இதற்கு பதிலாக, இந்த கதை ஒரு கட்டுக்கதை என்று அவர்கள் அப்போதே நிருபித்து இருக்கலாம்).

மூன்றாவதாக, Ibn Ishaq, Wakidi, Ibn Sa'd, al-Tabari, Ibn Abi Hatim, Ibn al-Mundhir, Ibn Mardauyah, Musa ibn 'Uqba, and Abu Ma'shar போன்றவர்கள் தவறான விவரங்களைச் சொன்ன பழுதுள்ள சரித்திர ஆசிரியர்கள் என்று நிரூபிக்கவேண்டும் (இவர்களுடைய அறியாமை ஆச்சரியத்தை உண்டாக்குகிறது, எப்படியென்றால், இவர்கள் சொன்ன பொய் கதைகள் முகமதுவின் நபித்துவத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது)

நான்காவதாக, ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள்( சரிதையை எழுதியவர்கள்) தாங்கள் சொன்ன விவரங்கள் அதிகாரபூர்வமானது, நம்பகத்தன்மை உள்ளது என்று தெரிவிக்க பயன்படுத்திய‌ "சங்கிலித் தொடர் (Chains of Authority)" முறையைப் பற்றி இந்த முஸ்லீம்கள் பொறுப்பு வகிக்கவேண்டும்.

ஐந்தாவதாக, இஸ்லாமின் அதிக நம்பகத்தன்மை வாய்ந்த அல்-புகாரி ஹதீஸ் தொகுப்பு, இந்த சாத்தானின் வசனங்களை முகமது சொன்னார் என்பதைப் பற்றிய சில விவரங்கள் உண்மையானது என்று ஏன் சொல்கிறது, இதனை இந்த முஸ்லீம்கள் விளக்கவேண்டும்.

அல்-புகாரி இப்படியாகச் சொல்கிறது:

நபி(ஸல்) அவர்கள் (53 வது அத்தியாயமான) 'அந்நஜ்கி' அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர். (4862) [11]

The Prophet performed a prostration when he finished reciting Surat an-Najm [Surah 53], and all the Muslims and Al-Mushrikun (polytheists, pagans, idolaters, and disbelievers in the Oneness of Allah and in His Messenger Muhammad) and jinn and human beings prostrated along with him. (4862)[11]

புறசமயத்தார்கள்(Pagans) முகமதுவோடு ஏன் சிரவணக்கம்(Prostrate) செய்தார்கள் என்ற காரணத்தை புகாரி வேண்டுமென்றே மறைத்தாலும், அவர் தன்னையறியாமலேயே முகமது இந்த புறசமயத்தாரின் தெய்வங்களை புகழ்ந்துச் சொன்ன காரணத்திற்காகத் தான் இவர்கள் முகமதுவோடு சிரவணக்கம் செய்தார்கள் என்று இபின் இஷாக்கும் மற்ற அறிஞர்களும் ஒலிவு மறைவின்றி சொன்ன சாத்தானின் நிகழ்ச்சிப் பற்றிய விவரங்கள் உண்மை என்பதை புகாரி ஒத்துக்கொண்டுள்ளார்.

ஆறாவதாக, இந்த முஸ்லீம்கள், "அல்லாவின் எல்லா நபிகளும் சாத்தானின் வசனங்களை சொல்லியுள்ளார்கள்" என்றுச் சொல்லும் குர்‍ஆன் சூரா 22:52ஐ விளக்க கடமைப்பட்டுள்ளார்கள். சாத்தானின் வசனத்திற்கு இந்த வசனம் சொல்லும் விளக்கமானது பகுத்தறிவுக்கு ஒவ்வாத மற்றும் நகைப்பிற்கு இடமளிக்கும் விதத்தில் உள்ளது.

ஏழாவதாக, முகமதுபற்றிய விவரங்களை நமக்கு எழுதிவைத்துவிட்டுச் சென்ற எல்லா இஸ்லாமிய அறிஞர்களும், முகமதுவிற்கு ஒரு யூத சூன்யக்காரன் மூலமாக பில்லிசூன்யம்(Black Magic) செய்யப்பட்டது அது இவரை ஆட்கொண்டது மற்றும் ஒரு முறை தனக்கு பிசாசு பிடித்து(Demon Possessed) இருந்தது என்று முகமதுவே நம்பிக்கொண்டு இருந்தார் என்று சொல்லும் பொது, ஏன் நாம் எல்லாரும் முகமது பற்றி கிடைத்துள்ள அனைத்து ஆதாரங்களையும் புறக்கணித்துவிட்டு, அதற்கு பதிலாக "முகமது நம்பகத்தன்மையுள்ளவர் என்று நம்பவேண்டும்" என்ற காரணத்தை இஸ்லாமியர்கள் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு(Non-Muslims) விளக்கவேண்டும். (Seventh, they must show non-Muslims why we should reject all the available evidence and believe that Muhammad was spiritually reliable, when, as all informed Muslims will admit, Muhammad was the victim of black magic (a spell cast by a Jewish magician) and, at one point, was convinced that he was demon-possessed. )

இதையே வேறு விதமாக நாம் பார்ப்போம், இஸ்லாமின் நபி தனக்கு பிசாசு பிடித்து இருந்தது என்று தவறாக நம்பி இருந்த போது, தனக்கு பில்லி சூன்யம் செய்யப்பட்டது என்று அவர் நம்பி இருந்தபோது, அவர் சாத்தானின் வசனத்தை சொல்லியிருப்பார் என்று நாம் ஏன் நம்பக்கூடாது? (முகமதுவின் ஆன்மீக பிரச்சனைகள் என்ன என்பதை மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும் : "சூனியத்தால் ஆட்கொண்ட தீர்க்கதரிசி(நபி)")

இஸ்லாமியர்கள் இந்த சாத்தானின் வசனம் பற்றிய சரித்திர ஆதாரங்களை விளக்கமளிப்பதை கண்டுள்ளேன். இதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் சரித்திர ஆதாரங்களுக்கு சரியான மறுப்புகளாக இருப்பதாக நான் காணவில்லை. உதாரணத்திற்கு, U.C. Davis என்ற இடத்தில் எனக்கும் என்னோடு விவாதம் புரிந்த அலி அட்டை(Ali Ataie) என்ப‌வருக்கும் இடையே "
முகமதுவின் நபித்துவம் - prophethood of Muhammad " என்ற தலைப்பில் நடந்த விவாதம் பற்றிச் சொல்வேன். இந்த விவாதத்தில், சாத்தானின் வசனம் பற்றி அல்புகாரி மறைமுகமாக ஏற்றுக்கொள்வதைப் பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது, " இது குர்‍ஆனின் கவிதை நடைப்பற்றிய அற்புதம்" என்றுச் சொல்கிறார். ஏன் புறசமயத்தார்கள் முகமதுவோடு சேர்ந்து சூரா 53க்காக சிரவணக்கம்(Prostate) செய்தார்கள் என்றால், அது இந்த சூராவின் கவிதை, இலக்கிய நடையில் அவர்கள் மயங்கியதால், முகமதுவோடு சிரவணக்கம் செய்தார்கள் என்றுச் சொல்கிறார் அலி அட்டை (which, in its present form, ridicules polytheism). உண்மையில் அவர் அளித்த விளக்கம் கற்பனையின் அடிப்படையில் உள்ளதே தவிர ஆதாரபூர்வமானது அல்ல.

முஸ்லீம்கள் குர்‍ஆனை கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக படித்துக்கொண்டு வருகிறார்கள், மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் முகமதுவின் கவிதையையினால், ஈர்க்கப்படவில்லை. உண்மையில் குர்‍ஆன் தன் தெய்வீக ஊழியத்திற்கு ஒரு சான்று என்று முகமது சொல்லும் போது, சிலபேரை அவர் முஸ்லீமாக மாற்றமுடிந்தது. ஆனால், அவர் மற்றவர்களோடு சண்டையிட்டு மற்றவர்களின் இரத்தத்தை சிந்தச்செய்த போது மட்டுமே அனேகர் இஸ்லாமுக்கு மாறினர். ஆக‌, முக‌ம‌து 53வ‌து சூரா ஓதிக்கொண்டு இருக்கும்போது, அத‌ன் மென்மையைக் க‌ண்டு புற‌ச‌ம‌ய‌த்தார்க‌ள்(pagans) சிர‌வ‌ண‌க்க‌ம் செய்த‌ன‌ர் என்று அலி அட்டை(Ali Ataie) போன்ற‌ இஸ்லாமிய‌ர்க‌ள் கூறுவ‌து என்ப‌து ஒரு ஏமாற்று வேலையாகும். ச‌ஹி அல்-புகாரியை விட‌ ப‌ல‌ ஆண்டுக‌ள் முந்தைய‌ ச‌ரித்திர‌ நூலாகிய‌ இபின் இஷாக்வுடைய‌ ச‌ரித்திர‌ வெளிச்ச‌த்தில் பார்க்கும்போது, புகாரியின் ஹ‌தீஸ் மிக‌வும் ச‌ரியாக‌ பொருந்துகிற‌து. ஏன் புற‌ச‌ம‌ய‌த்தார்க‌ள் சூரா 53க்கு த‌ங்க‌ள் சிர‌ம் தாழ்த்தி வ‌ண‌க்க‌ம் செலுத்தினார்க‌ள் என்று சிந்தித்துப்பார்க்கும் போது, ந‌ம‌க்கு கிடைக்கும் ந‌ம்ப‌த்த‌குந்த‌ கார‌ண‌ம் என்ன‌வென்றால், முக‌ம‌து, அவ‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ளை புக‌ழ்ந்துச் சொன்ன‌ வ‌ச‌ன‌ங்க‌ளே ஆகும் என்ப‌து மிக‌வும் தெளிவாகும், இதைத்தான் ஆர‌ம்ப‌ கால‌ இஸ்லாகிய‌ ச‌ரித்திர‌ ஏடுக‌ள் சொல்லும் விளக்கமுமாகும்.

இது வரை நாம் சிந்தித்த‌ விவரங்களை கவனித்துப் பார்த்தால், முகமது பற்றிய சரித்திர ஆதாரங்களின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான முடிவுரை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட பலவீனமான‌ நேரத்தில், முகமது சோதிக்கப்பட்டு, சாத்தான் மூலம் வந்த செய்தியை சொன்னார், இதனால், பல தெய்வ வணக்கத்திற்கு இவர் ஆதரவளித்தார் என்பது தெளிவாகப் புரியும். இதன் பொருள் என்னவென்றால், நாம் நியாயமான முறையில் அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2 ஐ புறக்கணிக்கமுடியாது. அதனால், முஸ்லீம்கள் உபாகமத்தின் உண்மைக்கு சரியான மறுப்பை கொடுக்கமுடியாது. நாம் இந்த தவிர்க்க முடியாத முடிவுரையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும், அதாவது, முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதாகும்.

V. மதிப்பீடு

V. ASSESSMENT

முடிவாக, நாம் மறுபடியும் அழுத்திச் சொல்லவிரும்பும் விவரம் என்னவென்றால், என்னுடைய இந்த முழு வாதங்களும் (இரண்டு அடிப்படை வாதங்கள்) இஸ்லாமியர்களின் சரித்திர ஏடுகள் மீதும் அவர்களின் வாதங்கள் மீதும் ஆதாரப்பட்டுள்ளது. ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள்(Early Muslim Historians) , மிகவும் ஆச்சரியப்படக்கூடிய நேர்மையுடன் தங்கள் நபி மக்களுக்கு சாத்தானின் வசனத்தை சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதால், நம்முடைய அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2க்கு தேவையான எல்லா ஆதாரங்களையும் கொடுத்துள்ளனர். தற்கால முஸ்லீம்கள், முகமதுவின் ஊழியம் பைபிளின் ஆதரவுடன் தான் நடந்தேறியது என்பதை நிருபிக்க, உபாகமம் 18ம் அதிகாரம் இறைவனின் உந்துதலால் வெளிப்பட்டது என்று ஏற்றுக்கொள்கின்றனர். இப்படி தற்கால முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வதால், நம்முடைய அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1க்கு தேவையான ஆதாரத்தை கொடுத்துள்ளார்கள். உபாக‌மத்தின் இரண்டு அடிப்படை வாதங்களும் உண்மையாக இருப்பதால், நமக்கு இரண்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளது, இந்த ஆதாரங்கள் அனைத்தும் முஸ்லீம்களின் வாதங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது, அது என்னவென்றால், "முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி" என்பதாகும்.

உபாகமத்தின் அடிப்படை வாதங்கள் உண்மை(i.e. logically valid with true premises) என்பதால், சத்தியம் என்ன என்று அறிந்துக்கொள்ள விரும்பும் ஒரு நேர்மையான மனிதன், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதை ஏற்றுக்கொள்வான். இந்த வாதங்களை இஸ்லாமியர்களுக்கு தெரிவிப்பது என்பது ஒரு உண்மையை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும். ஒரு முஸ்லீம் இந்த வாதங்களை தீவிரமாக ஆராய்ந்து, சோதித்து, அதற்கு ஆதாரங்கள் உண்டா என்று பரிசோதித்து, கடைசியில் வாதங்களை மறுக்காமல், அதற்கு பதிலாக‌, முடிவுரையை மட்டும் மறுத்தால், இவர் எப்படிப்பட்டவர் என்றால், "உண்மையை தெரிந்துக்கொள்ள விருப்பமில்லாதவர் மற்றும் தான் வளர்க்கப்பட்ட நம்பிக்கையை கண்மூடித்தனமாக நம்பும் ஒரு மனிதராகவே நமக்கு தென்படுவார்". எனக்கு என் அனுபவம் கற்றுக்கொடுத்ததின் படி பெரும்பான்மையான முஸ்லீம்கள் இந்த வகையைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதே போல முஸ்லீம்களிலும் பலர் உண்மையான இறைவன் யார் என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதும் உண்மையே. இப்படிப்பட்ட முஸ்லீம்கள் கண்டிப்பாக அறிந்துக்கொள்ளவேண்டிய முதலாவது சத்தியம் என்னவென்றால், தாங்கள் நபி என்றுச் சொல்லும் முகமது ஒரு தீர்க்கதரிசியே அல்ல என்பதாகும். அதே போல இரண்டாவது சத்தியம், தாங்கள் நபி என்றுச் சொல்லும் இயேசுக் கிறிஸ்து ஒரு நபியை விட மேன்மையானவர் என்பதாகும். (இந்த இரண்டாம் சத்தியம் பற்றி வேறு ஒரு கட்டுரையில் விளக்குகிறேன்)

குறிப்புகள்:


1 Bible quotations are from the New American Standard Bible, Updated Edition.
2 The History of al-Tabari, Volume VI: Muhammad at Mecca, W. Montgomery Watt and M. V. McDonald, trs. (Albany: State University of New York Press, 1988).
3 Modus Ponens takes the form:
1. If P, then Q.
2. P.
———————
3. Therefore, Q.
Here we may substitute various elements for P and Q, giving us, for instance:
1. If Fido is a dog, then Fido is a mammal.
2. Fido is a dog.
———————
3. Therefore, Fido is a mammal.
4 Ibrahim, I. A. A Brief Illustrated Guide to Understanding Islam (Houston: Darussalam, 1997), p. 33.
5 See, for example, "Muhammad in the Bible?"
6 For references, see "Muhammad and the Satanic Verses."
7 Ibn Hajar, quoted in Allam Shibli Nu'mani, Sirat-un-Nabi, Volume 1, M. Tayyib Bakhsh Budayuni, tr. (New Delhi: Kitab Bhavan, 2004), p. 164.
8 Annette Gordon-Reed, Thomas Jefferson and Sally Hemings: An American Controversy (Charlottesville: University of Virginia Press, 1997).
9 Qur'an quotations are from the M. H. Shakir translation.
10 One might object that Muhammad did not actually speak in the names of the pagan gods. That is, he did not say, "I come to you in the name of Manat." Instead, he spoke in the name of Allah, and merely approved of the intercession of the pagan gods. However, the point of the passage in Deuteronomy is clearly that anyone who promotes polytheism is a false prophet. And Muhammad certainly promoted polytheism on this occasion.
11 Sahih Al-Bukhari, Volume Six, Muhammad Muhsin Khan, tr. (Riyadh: Darussalam, 1997).

டேவின் உட் அவர்களின் இதர கட்டுரைகளை இங்கு படிக்கலாம் ஆங்கிலக் கட்டுரைகள், தமிழ் கட்டுரைகள்

மூலம்: http://www.answering-islam.org/Authors/Wood/deuteronomy_deductions.htm


Isa Koran Home Page Back - Author David Wood's Page page
setstats1
 
 

StumbleUpon.com Read more...

பகவத் கீதையில் இஸ்லாமா?

பகவத் கீதையில் இஸ்லாமா?

இஸ்லாமிய இணைய தளங்கள் இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையில் ஓரிறை கொள்கையிருப்பதாகவும்,ஜீகாத்தை பற்றி இருப்பதாகவும் சொல்லி வருகின்றன.அதற்கு நேசகுமார் தன் பதிவில் பதில் அளித்து உள்ளார்.
http://nesamudan.blogspot.com/search/label/பகவத்%20கீதை
பகவத் கீதை - இஸ்லாமிஸ்டுகளின் திரிப்பு

சகோ.மரைக்காயர் பதிவில்(http://maricair.blogspot.com/2007/03/1_15.html) இதைப் படித்தேன்:


ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்
பகவத் கீதை 7:20மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".



***

வசனம் 7:20 ,பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு(சமீபத்தில் வாழ்ந்து மறைந்தவரும், அப்துல் கலாம் அவர்களை ஆசீர்வதித்தவருமான சிவானந்தர், வைணவர்கள் போற்றும் இராமானுஜர் இருவரையும் எடுத்துக் கொண்டுள்ளேன்) இவ்வாறு கூறுகிறது:


7.20 Those whose wisdom has been rent away by this or that desire, go to other gods, following this or that rite, led by their own nature. (Sivananda)

7.20 All men of this world are 'controlled', i.e., constantly accompanied by their own nature consisting in the Vasanas (subtle impressions) resulting from relation with the objects formed of the Gunas. Their knowledge about My essential nature is robbed by various Karmas, i.e., by objects of desire corresponding to their Vasanas (subtle impressions) born of their Karmas and constituted of Gunas. In order to fulfil these various kinds of desires they take refuge in, i.e., seek and worship, other divinities who are regarded as different from Me, such as Indra and others, observing various disciplines, i.e., practising rituals which are specially meant to propitiate only these divinities. (Ramanuja)

கீதை, குரானைப் போன்று தொடர்ச்சியற்ற வசனங்களைக் கொண்ட நூல் அல்ல. தனித்தனி - ஆனால் தொடர்புடைய தலைப்புகளில் கோர்வையாக எழுதப்பட்டுள்ள நூல். குரானில் இருப்பதுபோன்று திடீரென்று மக்கா சூரா, திடீரென்று மதீனா சூரா, திடீரென்று முகமதின் வீட்டு விஷயம், திடீரென்று அரபிக்களின் வழக்கங்கள், திடீரென்று பொதுவான உபதேசம் என்று கலீஃபா ஒருவர் அவசர அவசரமாய் தொகுத்து, வேறுபட்ட குரான்களை தீயிட்டு கொளுத்தி இதுதான் குரான் என்று அவசரகதியில் தொகுத்த நூல் இல்லை அது.


இதை சொல்வது, குரானை விட கீதை உயர்வான நூல் என்பதை நிறுவுவதற்காக அல்ல. இப்படி திடீரென்று ஒரு வசனத்தை எடுத்து அதன் அர்த்தத்தை மாற்றி இது அல்லாஹ்வை உயர்த்துகிறது என்று இஸ்லாமிஸ்டுகள் ஜல்லியடிப்பதை சுட்டிக்காட்டவே இதைக் கூறுகிறேன்.


எனவே, இந்த வசனம் அல்லாஹ் என்ற ஏக இறைவனை குறிக்கிறதா என்பதற்கு இதன் தொடர்ச்சியையும், கவனித்தால் அர்த்தம் விளங்கும். அடுத்த வசனமே இதைச் சொல்கிறது:

7.21 Whatsoever form any devotee desires to worship with faith -- that (same) faith of his I make firm and unflinching. (Sivananda)

7.21 These divinities too constitute My body as taught in the Sruti text like: 'He who, dwelling in the sun, whom the sun does not know, whose body is the sun' (Br. U., 3.7.9). Whichever devotee seeks to worship with faith whatever form of Mine, such as the Indra, although not knowing these divinities to be My forms, I consider his faith as being directed to My bodies or manifestations, and make his faith steadfast, i.e., make it free from obstacles. (Ramanuja)

***

7.22 Endowed with that faith, he engages in the worship of that (form) and from it he obtains his desire, these being verily ordained by Me (alone). (Sivananda)

7.22 He, endowed with that faith without obstacles, performs the worship of Indra and other divinities. Thence, i.e., from the worship of Indra and other divinities, who constitute My body, he attains the objects of his desire, which are in reality granted by Me alone. Although he does not know at the time of worship that divinities like Indra, who are his objects of worship, are My body only, and that worship of them is My worship, still, inasmuch as this worship is, in reality, My worship, he attains his objects of desire granted by Me alone. (Ramanuja)


***

Everything is God is what Hindus say, but Islam says that everything is God'sஎன்று இவர்கள் எழுதுகின்றார்கள். ஆனால், கீதை தெளிவாக 7:19ல் அதையே விளக்குகிறது. அதாவது எல்லாமே கண்ணன் தான்.

7:19 At the end of many births the wise man comes to Me, realising that all this is Vaasudeva (the innermost Self); such a great soul (Mahatma) is very hard to find.



இதுவே (எனது புரிதலில்) அத்வைதம். அதாவது காண்பன யாவுமாய் இருப்பது ஏக இறைதான். நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம் எல்லாமே இறைதான். அதனாலேயே என் முன்னோர்கள் காளஹஸ்தியில் காற்றை வணங்கினார்கள், காஞ்சியில் மண்ணை வணங்கினார்கள், சிதம்பரத்தில் ஆகாயத்தை வணங்கினார்கள். எதை வணங்கினாலும், இறையை வணங்குவதாக எண்ணி, இறை ஞானத்தை வேண்டி வணங்கினால் அவர்கள் இறையை யே வணங்குகின்றார்கள். விருப்பங்களை நிறைவேற்றச் சொல்லி தெய்வங்களை வணங்கும்போதும், அதே இறையின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை வணங்குகின்றார்கள்.


***

இங்கே கிருஷ்ணனின் உபதேசத்திற்கும் அல்லாஹ்(வின் பெயரால் முகமது அடித்த ஜல்லியான) ஏகத்துவத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.

இந்திரன் முதலான தேவர்களை குறிப்பிட்ட சக்திகளை, செல்வங்களை வேண்டி வணங்கி செய்யப்படும் யாகங்கள், வழிபாடுகளைப் பற்றி கிருஷ்ணன் பேசுகிறான். பகவத் கீதையில் மற்ற இடங்களிலும் இப்படி இகத்தேவைகளுக்காக செய்யப்படும் வழிபாட்டு முறைகள், உண்மையான இறை ஞானத்தை வேண்டி செய்யப்படும் யோகத்துக்கு கீழானவை என்ற உபதேசம் வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இதுவும் வருகிறது.


ஆனால், இங்கே கூட 'நீ எதை வணங்கினாலும் என்னையே வணங்குகிறாய்' என்றுதான் கிருஷ்ணன் சொல்கிறானே தவிர, நீ என்னைத்தவிர (விஷ்ணுவைத்தவிர) வேறு எதாவது கடவுளை வணங்கினால் உண்ணை நரகத்தீயில் இட்டு வாட்டுவேன் என்று சொல்லவில்லை, உன்மீது என் அடியார்கள் ஜிகாத் தொடுப்பார்கள் என்று சொல்லவில்லை.


***


பகவத் கீதை பற்றியோ, அல்லது இந்து மதம் பற்றியோ விளக்கம் எழுதும் உத்தேசம் எதுவும் எனக்கில்லை. ஆனால், மற்றபடி ஆன்மீக விஷயங்களைப் பற்றி நிறைய எழுதும் இந்து வலைப்பதிவர்கள் இப்படி இஸ்லாமிஸ்டுகள் திரிப்பதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்களே என்று தோன்ற இதை எழுதினேன்.


பகவத் கீதையின் அறப்போரே , குரானின் ஜிகாத் என்று இஸ்லாமிஸ்டுகள் நூலெல்லாம் வெளியிட்டுக் கொண்டுள்ளார்கள். ஜிகாதை நியாயப்படுத்தும் இந்தச்செயலை இந்து ஆன்மீகவாதிகள் முன்வந்து கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இது எப்படிப்பட்ட திரித்தல் என்பதையும் விளக்க வேண்டும்.

 

 

http://unmaiadiyann.blogspot.com/2007/10/blog-post_7557.html

StumbleUpon.com Read more...

திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்...திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய கட்டுரை

திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்...திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய கட்டுரை

திருக்குர்ஆன் இஸ்லாமியர்களின் புனித நூல். ஜிப்ரயீல் என்னும் வானவர் மூலமாக நபிமுகமதுவுக்கு கிபிஏழாம் நூற்றாண்டில் அரபு மொழியில் அல்லாஹ்வால் அருளப்பட்ட இறைச் செய்திகளின் தொகுப்பு என்பது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை 23 ஆண்டுகளில் மக்காவிலும், மதிநாவிலும் அவ்வப்போது இந்த வசனங்கள் சொல்லப்பட்டன. இதுவே உலக முஸ்லிம்களின் உலகியல் மம் மறுமை வாழ்வுக்கான ஆதாரமாக கருதப்படுகிறது. இது 114 அத்யாயங்களையும், 6666 வசனங்களையும் அமைப்பாகக் கொண்டுள்ளன.

திருக்குர்ஆனை இரண்டுவிதமாக பு¡¢ந்து கொள்ள முயற்சிக்கலாம். ஒன்று வரலாறு சார்ந்து அறிவு ¡£தியாக அணுகுவது. மற்றொன்று மூடநம்பிக்கையோடு அணுகுவது. இது திருக்குர்ஆனை அணுகுவோரின் பார்வையும் வாசிப்பும் சம்பந்தப்பட்டது.

"திருக்குர்ஆன் தோன்றிய காலத்திலிருந்து ஒரு புள்ளிக்கூட மாறவில்லை" என்று தொடர்ந்து சொல்லிவருவது ஒரு அணுகுமுறைதான். ஏனெனில் நபிகள் நாயகத்திற்கு இறக்கப்பட்ட வசனங்கள் ஒலிவடிவிலானவை. பின்னரே எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டன. ஒலிவடிவம் / எழுத்து வடிவமாகும்போதே ஒரு மாற்றத்திற்குள்ளாகிறது என்பதே முதல் உண்மை. அரபு எழுத்து மரபில் ஸேரு, ஸபரு, பேஷ், ஷத்து, மத்து, நுக்தா உள்ளிட்ட உயிர்க் குறிகள் சார்ந்து இலக்கணமுறைமைகளும், வாக்கிய அமைப்பு, தொகுப்பு, தலைப்பிடுதல் உள்ளிட்டவை பிற்காலத்தில் இணைக்கப்பட்டவையாகும். ஏழாம் நூற்றாண்டுகால அல்லாவின் அரபு மொழியமைப்புக்கும் சமகால அரபு மொழிப் பயன்பாட்டிற்குமான இடைவெளியும் கவனிக்கத்தக்கது. அல்லாவின் அரபு மொழிப்பயன்பாடே முற்றிலுமாக மாறுபட்டுள்ளது. யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் பண்பாட்டியல் நிகழ்வுகள் சார்ந்தும் அரபு மொழியின் அர்த்தங்கள் வேறுபடுகின்றன.

திருக்குர்ஆன் உருவான காலச்சூழல் இதில் முக்கியமாகும். தமிழ்மொழியின் முன்னோடி இலக்கியங்களில் ஒன்றான திருக்குறளின் காலம் கி.பி. 2ம் நூற்றாண்டு. திருக்குறள் 1330 பாக்களை கொண்டது. சமண சமய தாக்கமுள்ள திருவள்ளுவர் எழுதினார். இதற்கு ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருக்குர்ஆனின் 6,666 வசனங்களும் ஏறத்தாழ 23 வருடங்களாக நபிமுகமது வழியாக சொல்லித் தரப்பட்டன. திருக்குர்ஆன் தோன்றுவதற்கு முன்பான லட்சக்கணக்கான வருடங்களின் உலக வரலாறு, மனித தோற்ற வரலாறு பல்வேறு கலாச்சார சூழலில் முற்றிலும் வேறுபட்டே நிகழ்ந்துள்ளது.

திருக்குர்ஆன் வசனங்கள் அல்லாவால் ஜிப்ரயீல் அலைகிஸ்லாம் வழியாக நபி முகமதுவுக்கு அருளப்பட்டது என்பது முதல்கருத்து. அல்லாவின் அருள் நபிகள் நாயகத்தின் உள் மனத்து¦ண்டல் மூலமாக திருக்குர்ஆனாக வெளிப்பட்டுள்ளது என்பது இரண்டாவது கருத்து திருக்குர்ஆன் ¦ நபிமுகமதுவின் வார்த்தைகளாகும், ஹதீஸ்கள் நபிமுகமது பற்றிய பிற அறிஞர்களின் வாய்மொழி வரலாற்று தொகுப்பாகும் என்பது மூன்றாவது கருத்து. இவை பல்வேறுநிலைகளில் முன்வைக்கப்படும் விவாத உரையாடல்களாகும். திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகள்தான் என்பதற்கு திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பாத்திகாசூரா சுட்டிக்காட்டுகிறது.

அல்லாஹ் தன்னையே தான் ஒருபோதும் புகழ்வதாக சொல்வதில்லை. அல்பாத்திகா வசனங்கள் இவ்வாறாக அமையப்பெற்றுள்ளதால் அல்லாவை நோக்கியே நபிமுகமதுவின் பிரார்த்தனைகளாகவே இவை அர்த்தம் கொள்கின்றன.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! / (அவன்) அகிலங்கள் அனைத்தையும் படைத்து போஷித்து பா¢பக்குவப்படுத்துவோன் / அளவள்ள அருளாளன் நிகரற்ற அன்புடையோன் / தீர்ப்புநாளின் அதிபதி / உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் / நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக / எவர்களுக்கு நீ அருள் பு¡¢ந்தாயோ அவர்களுடைய வழியில் (நடத்துவாயாக)

(அவ்வழி உன்) கோபத்துக்குள்ளானவர்களுடையதும் அல்ல, வழி தவறியவர்களுடையதும் அல்ல.

உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் என்பதான வா¢கள் நபிமுகமதுவின் பிரார்த்தனை மக்கள் சார்ந்த கூற்றாகவும் குரலாகவும் வெளிப்பட்டுள்ளது.

இவ்வேளையில் திருக்குர்ஆனில் இடம்பெறும் "நபியே நீர் கூறும்" என்பதான சிலபகுதி வசனங்களை அல்லாவின் வார்த்தைகளாக சிலர் ஆதாரம் காண்பிக்க கூடும். ஆனால் இவ்வார்த்தைகள் நபிமுகமதுவின் உள்மனக் குரலாகவே வெளிப்பட்டுள்ளது. உள்மனம் வெளிமனத்தைப் பார்த்து கூற்றினை துவக்கி மக்களிடம் சொல்ல வேண்டிய கருத்துக்களை சொல்லிச் செல்கிறது.

மேலும் இவ்வசனங்கள் அனைத்தும் நபிமுகமது தான்வாழ்வில் எதிர்கொண்ட சிக்கலான, நெருக்கடியான பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு¡¢ய தகுதிபடைத்த தீர்வுகளாகவே உருவாகியுள்ளன. எனவே திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகளென உறுதிப்பட கூறலாமென்ற கருத்தும் விவாதிக்கப்படுகிறது.

அராபியச் சூழலில் திருக்குர்ஆனின் வசனங்களைப்போலவே கவித்துவமிக்க கவிதை வா¢கள் வழக்கில் இருந்தன.

நபிமுகமதுவின் பிறப்புக்கு முந்திய காலத்தில் அரபு மக்கள் மத்தியில் மிகப் புகழுடன் வாழ்ந்த இம்ரூல் கயஸ் (Imru Qays) முக்கியமானவர். அதுபோல் நபிமுகமதுவினோடு நேரடி தொடர்புள்ள அரசுக் கவிஞர்போல் அங்கீகா¢க்கப்பட்ட ஹசன் பி.தாபித் மற்றுமொரு முக்கிய கவிஞராவார். நபிமுகமதுவின் ஆட்சியதிகாரத்தின் கீழ் க·பா வருவதற்கு முன்பு க·பாவில் சில முக்கியமான கவிஞர்களின் கவிதைகள் பொறிக்கப்பட்டிருந்தன. சுகைர், இம்ருல்கயஸ், அம்ரு இபின் குல்சாம், அல்ஹ"¢ஸ், டிராபா, அன்தரா மற்றும் லாபிட் ஆகியே"¢ன் கவிதைகளாக இவை இருந்தன. இவற்றை முஅல்லகாத் என்று வரலாற்றறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அல்ஜில்ஜில் (99), அல்அஸ்ர் (103). அல் ஆதியாத் (100), அல்பாத்திகா (1) திருக்குர்ஆன் வசனங்களுக்கும், முஅல்லகாத் வசனங்களுக்கும் ஒப்பீடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற நபிமுகமதுவின் காலத்திற்கு முன்னே சி¡¢ய பகுதிகளில் வாழ்ந்திருந்த ஸாபியீன்களின் கலாச்சாரத்தையும் இஸ்லாம் உள்வாங்கிக் கொண்டுள்ளது. சூ¡¢யன் மறைவு இரவின் துவக்கத்திலிருநூது மறுநாள் சூ¡¢யன் உதிக்கும் வரை முப்பது நாட்கள் நோன்பிருக்கும் பழக்கமும், ஒரு நாளைக்கு ஏழு தடவை தொழுகை வணக்கமும் இதில் முஸ்லிம்கள் பிற்காலத்தில் பேணி ஐந்து நேர தொழுகைகளான அதே காலத்தையும் உள்ளடக்கியதையும் இங்கே குறியிட்டுச் சொல்லலாம்.

நபிமுகமதுவின் வார்த்தைகளாக வெளிப்பட்ட திருக்குர்ஆன் அரபு சமூக பல்வேறு பண்பாட்டு சமூக, சமய வாழ்வியல் நெருக்கடிகளுக்கிடையே வழிகாட்டுதலுக்காக இவ்வசனங்கள் சொல்லப்பட்டன.

நபிமுகமதுவின் காலத்தில் இவ்வகை வடிவத்தில் திருக்குர்ஆன் தொகுக்கப்படவில்லை. இமாம் அபூபக்கா¢ன் காலத்தில் இம்முயற்சி துவங்கி சைதுஇப்துதாபித் என்ற குர்ஆன் தலைமை எழுத்தாளா¢ன் முன்முயற்சியில் மனனம் செய்யப்பட்ட நபித்தோழர்களின் வசனங்கள் அவர்களின் முன்னிலையிலேயே உறுதி செய்யப்பட்டு தொகுக்கப்பட்டு முதல் கலீ·பா அபூபக்கர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்தம் மரணத்திற்கு பிறகு மகளாரும் நபிமுகமதுவின் மனைவியுமான ஹப்சாவிடம் இப்பிரதி பாதுகாக்கப்பட்டு வந்தது. இரண்டாம் கலீபா உமா¢ன் ஆட்சிக்குப்பிறகு மூன்றாம் கலிபா உதுமானின் காலத்தில் இஸ்லாம் பரவிய பல்லாண்டுகளிலும், அராபிய பகுதிகளிலும், பல்வேறு மொழி வழக்குகளை உடைய மக்கள் திருக்குர்ஆனை பயன்படுத்தியபோது அதனை ஒழுங்கமைக்கும் நோக்கத்துடன் சில நடவடிக்கைகளை கலீபா உதுமான் மேற்கொண்டார்.

குர்ஆனை முறைப்படுத்தி பாதுகாக்கவும் திருப்பி எழுதி பிரதிகள் எடுக்கவும் நான்கு பேர் கொண்ட ஒரு குழுவினை அமைத்தார். இதில் சைதுஇப்னுதாபித் தலைமை குர்ஆன் எழுத்தாளராக செயல்பட்டார். இதரர்களாக அப்துல்லாஹ் இப்னு ஜுபைர், ஸயீத் இப்னுல் ஆஸ், அப்துல் ரகுமான், இப்னு ஹிஸ், இப்னு ஹாஸாம், ஆகியோர் செயல்பட்டனர். அன்னை ஹப்சாவிடம் பாதுகாக்கப்பட்டிருந்த திருக்குர்ஆன் பிரதியை அடிப்படையாகக் கொண்டு இப்பணி நடைமுறைப்படுத்தப்பட்டது பல்வேறு பகுதி மக்களிடம் பழக்கத்திலிருந்த குர்ஆன் பிரதிகளும் இப்பணியில் தொகுக்கப்பட்டன.

திருக்குர்ஆனை எப்படி பொருள் கொள்வது என்ற சிக்கலில்தான் சுன்னத்துல் ஜமாஅத்தினர் தா£காவினர், சூபிகள், வகாபிகள், ஜமாஅத்தே இஸ்லாம், குதுபிகள், காதியானிகள், அஹ்லே குர்ஆன்கள் என இயக்கங்களும் குழுக்களும் உருவாக தங்களுக்கேற்ற விதத்திலும் வெவ்வேறு விதமான பொருள் சொல்கின்றனர். இதனால்தான் இத்தனை குழுக்கள், இயக்கங்கள் உருவாகியுள்ளன.

ஒரே குர்ஆன் - அர்த்தப்படுத்துதல்களின் வழியாக ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு குர்ஆனாக உருமாறியுள்ளது.

மூலப்பிரதியிலிருந்து அர்த்தத்தின் வழி உருவான இந்த துணைப்பிரதிகள் (sub-Text) பல குர்ஆன்களாகவே நடைமுறையில் நுண்ணிய அளவில் செயல்படுகின்றன.

இந்த பின்னணிகளை குறைந்த பட்சம் பு¡¢ந்து கொள்ள வேண்டும். இதுவே திருக்குர்ஆனை அணுகுவதற்கு ஒரு புதுக்கண்ணோட்டத்தை வழங்கும். மாறாக திருக்குர்ஆன் வசனங்களை எந்திர கதியில் வெறுமனே நீட்டி மூழ்கி மேற்கோள் காட்டுவதால் எந்த பலனும் இல்லை.

இவ்விவாதங்களை முன்வைப்பது திருக்குர்ஆனின் மா¢யாதையையும் அதன் உள்ளார்ந்த ஆற்றலையும் சுயத்தையும் பங்கப்படுத்துவதற்கல்ல. மாறாக

திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த சில கற்பிதங்களை கட்டுடைக்கும் போதுதான் அதன்மீது கட்டி எழுப்பப்பட்டிருக்கின்ற அடிப்படைவாதம், தீவிரவாதமும், தகர்க்கப்படும்.

திருக்குர்ஆனின் யதார்த்தமான அறவியல் கோட்பாடுகளை வாழ்வியல் வழிகாட்டலுக்காக தேவைக்கேற்றவாறு முன்வைத்துக் கொள்ளலாம். இதுவே இந்த விவாதங்களின் முக்கிய நோக்கமாகும்.

 

http://unmaiadiyann.blogspot.com/2007/11/blog-post_13.html

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP