சமீபத்திய பதிவுகள்

பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை எடுக்க ஐந்தாவது முறை முதலமைச்சராக வேண்டி இருந்திருக்கிறது.

>> Tuesday, June 3, 2008




பெரியாரின் நெஞ்சில் தைத்து, நீண்ட நாளாக நெருடிய முள் ஒன்று இனிமேலும் நீங்குகிற விதமாகத் தெரியவில்லை.`அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற தமிழக அரசின் திட்டம் இன்னும் ஆட்டத்திலேயே உள்ளது. அர்ச்சக மாணவர்களை அந்தந்தக் கோயில் அர்ச்சகர்கள், எங்களை கருவறைக்குள் விட மறுக்கிறார்கள். திருமேனியைத் தீண்டக்கூடாது என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அர்ச்சகர் தேர்வு தள்ளிக் கொண்டே போவதைப் பார்த்தால் அனைத்துச் சமூகத்தினரும் அர்ச்சகராகும் திட்டம் இன்னும் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை என்றே தோன்றுகிறது'' என அங்கலாய்க்கிறார்கள் இளம் அர்ச்சகர்கள்.

இந்தப் பிரச்னைக்குள் நுழையும் முன்னால் தமிழக அரசு கொண்டுவந்த அந்தத் திட்டத்தைப் பற்றி நமது நினைவலைகளை பின்னோக்கிச் சுழல விடுவோம்.

அனைத்துச் சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகும் ஒரு புதிய திட்டத்தை 2007-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக அரசு அறிவித்தது. `பெரியார் அவர்களின் நெஞ்சில் நீண்டநாளாக தைத்துக் கிடந்த முள்ளை எடுக்கும் விதத்தில் அனைத்து, சமூகத்தவர்களும் இனி அர்ச்சகராகலாம்' என அறிவித்து தமிழகம் முழுவதும் ஆறு இடங்களில் அதற்கான பயிற்சிப் பள்ளிகளை ஆரம்பித்தார் முதல்வர் கலைஞர்.

சைவ சமயக் கோயில்களான மதுரை, திருவண்ணாமலை, பழநி, திருச்செந்தூர் ஆகியவற்றிலும், வைணவக் கோயில்களான ஸ்ரீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ஆகியவற்றிலும் இந்தப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பதினெட்டு வயதுக்கு மேல் இருபத்து நான்கு வயதுக்குள் இருக்கும் ஆண்கள் இதில் சேரலாம் என்ற விதியுடன், அப்படிப் பயில்பவர்களுக்கு மாதாமாதம் உதவித் தொகையாக ஐநூறு ரூபாய் மற்றும் உணவு, தங்குமிடம் ஆகியவற்றை இலவசமாக அளித்து இந்தப் பள்ளிகளை ஆரம்பித்தது அரசு. ஒரு பள்ளிக்குத் தலா நாற்பது மாணவர்கள் என்ற விதத்தில் மொத்தம் 240 மாணவர்கள் இதில் சேர்ந்தார்கள். பின்னர் ஏதேதோ காரணங்களுக்காக 33 மாணவர்கள் நின்றுவிட, 207 இளம் மாணவர்கள் விடாப்பிடியாகப் பயின்று ஓராண்டை நிறைவு செய்யப் போகிறார்கள்.

அர்ச்சகர் பயிற்சியில் இரண்டு செய்முறைப் பாடங்கள் உள்பட மொத்தம் ஆறு பாடங்கள். தமிழ் இலக்கணம், ஆகமவிதிகள் மற்றும் அதன் உட்பிரிவுகளான கிரந்தம், தேவநாகரி, அடுத்ததாக பஞ்சகவ்யம், நித்தியபூஜை, சுலோகம் ஆகியவையே அந்த ஆறு பாடங்கள். இங்கு பயின்று வந்த இளம் அர்ச்சகர்களுக்கு இரண்டுமுறை தீட்கைஷயும் வழங்கப்பட்டது. கோயில் அர்ச்சகர்களைப் போல இவர்களும் பூணூல் அணிந்திருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதிகாலை 4.30 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரை வகுப்பு நேரம்.

அர்ச்சக மாணவர்கள் ஆறு பாடங்களைத் தவிர தியானம், விநாயகர் அகவல், பூஜை, மந்திரம், சாமி அலங்காரம் ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்தார்கள். இந்த ஓராண்டு பட்டயப் படிப்பை முடித்து, முதல் பேட்ச் மாணவர்கள் தேர்வைச் சந்திக்க இருந்த நிலையில்தான் சர்ச்சை சாமரசம் வீசத் தொடங்கியது.

`கடந்த 26-ம்தேதி தேர்வு ஆரம்பித்து மே 30-ம்தேதி வரை அது நீடிக்கும்' என அறிவிக்கப்பட்டிருந்தது. அர்ச்சக மாணவர்கள் ஆவலோடு தேர்வுக்குத் தயாராக இருந்த நிலையில், ஏதோ காரணத்துக்காகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு இப்போது ஜூன் 2-ல் தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தமுறையாவது திட்டமிட்டபடி தேர்வு நடக்குமோ? நடக்காதோ? என்கிற அங்கலாய்ப்புடன்தான் காத்திருக்கிறார்கள் அர்ச்சக மாணவர்கள்.

இதற்கிடையே, `அர்ச்சகர் தேர்வு இனி அரோகராதான். அனைத்துச் சமூகத்தினரும் அர்ச்சகர் திட்டம் இதோடு பணால்' என்பதுபோல சில வதந்திகள் இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளன. அதோடு `கோயில் கருவறைக்குள் அர்ச்சகர்கள் எங்களை நுழைய விட மறுக்கிறார்கள்' என்ற கொதிப்பும், அர்ச்சக மாணவர்களுக்கு இடையே அலைபாயத் தொடங்கியுள்ளது.

`ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல நாம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் படிக்கும் அர்ச்சக மாணவர்களிடம் நாடி பிடித்துப் பார்த்தோம்.திருவண்ணாமலை திருக்கோயிலில் மொத்தம் 39 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் ஆறுபேர் மலைவாழ் மக்கள் மற்றும் தலித் சமூகத்தினர். இந்த 39 மாணவர்களில் சிலரிடம் நாம் பேசியபோது, கோயில் அர்ச்சகர்கள் எப்படியெல்லாம் இம்சை அரசர்களாக மாறி தங்களைச் சீண்டுகிறார்கள் என புட்டுப்புட்டு வைத்தனர். பெயர், போட்டோ எதுவும் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசினார்கள்.

``இந்தக் கோயில் அர்ச்சகர்கள் எங்களைத் தீண்டத்தகாதவர்களாகத்தான் பார்க்கிறார்கள். அவர்களது தொழிலுக்கு நாங்கள் போட்டியாக வந்து முளைத்து விட்டதாகவே நினைக்கிறார்கள். எங்களுக்கு வெறுப்பேற்றி, அர்ச்சகர் படிப்பை நாங்கள் அம்போ என்று பாதியிலேயே விட்டுப் போகும் எண்ணத்தில் செயல்படுகிறார்கள். இதற்காக அவரவர் ஊரில் உள்ள அர்ச்சகர்களை விட்டு எங்கள் குடும்பத்தினரை இழிவாகப் பேச வைக்கிறார்கள். `இவன்கள் எல்லாம் அர்ச்சகராகி கோயிலுக்குள் நுழைந்தால் என்ன ஆகும்? இப்படிப்பட்ட ஆட்கள் எல்லாம் கருவறைக்குள் வந்து திருமேனியைத் தொட்டால் ஊரே பாழாகிப் போகும்' என்பது போல அவதூறு பேசுகிறார்கள். சமயங்களில் `அடிப்போம், உதைப்போம்' என மிரட்டவும் செய்கிறார்கள்.

`உங்கள் பையன் பூணூல் போட்டுக்கொண்டால் எங்கள் பெண்ணை உங்கள் பையனுக்குக் கட்டி வைப்போமா? இந்த வேலையை எல்லாம் நீங்க கத்துக்கிட்டு வந்து என்னடா செய்யப் போறீங்க?' என்று கிண்டல் வேறு செய்கிறார்கள். இருந்தும் நாங்கள் அசரவில்லை.

இத்தனைக்கும் நாங்கள் அர்ச்சகர் பயிற்சிக்காகப் படிப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. படிப்பு நேரம் போக பௌர்ணமி கிரிவலத்தன்று பக்தர் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, சாப்பாடு ஏற்பாடுகளுக்கு உதவி செய்வது, அபிஷேகத்துக்கான எடுபிடி வேலைகளைச் செய்வது என்று சேவையும் செய்கிறோம்.

ஆனால், இதுவரை ஒருமுறைகூட எங்களை கருவறைக்குள் போகவோ அல்லது திருமேனியைத் தொடவோ அர்ச்சகர்கள் அனுமதித்ததே இல்லை. திருமேனியைத் தொட்டுக் கழுவி அலங்கரிப்பதும் ஒரு பயிற்சிதான். ஆனால், எங்களுக்கு அந்த வாய்ப்புத் தரப்படவேயில்லை. இதனால் எங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் செய்த சிமெண்ட் சிவலிங்கம், அம்மன், நந்தி, சிலைகளுக்குத்தான் அலங்கார வேலைகளைச் செய்து வருகிறோம். எங்களுக்கு இம்சை தருவதற்காகவேஇங்குள்ள அர்ச்சகர்கள், ஓர்உதவி ஆய்வாளரைப் போட்டு வைத்துள்ளனர். நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த அவர் எங்களை நோட்டம் விட்டுக்கொண்டே இருந்து அர்ச்சகர்களிடம் போட்டுக் கொடுத்துவிடுவார்.

அதேபோல் அர்ச்சகர் பயிற்சியை மூன்றாண்டு காலம் வேறு இடத்தில் படித்துவிட்டு வந்த ஓர் அர்ச்சக மாணவர்தான் எங்களுக்குப் போதிய பயிற்சியை அளித்து ஊக்குவிக்கிறார். எங்கள் கிராமங்களில் நடக்கிற சின்னச் சின்ன விழாக்களுக்கு நாங்களே பூஜை செய்கிற அளவுக்கு எங்களைத் தயார்படுத்தியுள்ளார். இந்நிலையில், தற்போது பயிற்சிக் காலம் முடிந்து தேர்வு எழுதுகிற கட்டம் வந்து விட்டது. ஆனால் சிலரது திட்டமிட்ட சதியால் தேர்வு தள்ளிப்போய் விட்டது. தற்போது ஜூன் 2-ம்தேதி தேர்வு என்கிறார்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம். அன்றாவது தேர்வு நடக்குமா பார்க்கலாம்'' என்றார்கள் அந்த இளம் அர்ச்சகர்கள்.

இதுபற்றி திருவண்ணாமலை கோயில் தரப்பில் சில முக்கியஸ்தர்களிடம் பேசிப் பார்த்தோம்.

`` `அனைத்துச் சமூகத்தினர் அர்ச்சகர்' விஷயத்தில் உண்மையில் சதிதான் நடக்கிறது. இளம் அர்ச்சகர்களுக்கு ஓராண்டு பயிற்சி போதாது, அதை நீட்டிக்க வேண்டும். எடுத்த எடுப்பில் இவர்களை திருவண்ணாமலை போன்ற பெரிய கோயில்களில் போட முடியாது. சின்னச் சின்னக் கோயில்களில் முதலில் வேலைக்கு அமர்த்தலாம். அதோடு `அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற திட்டம் சரிவராது என்பது போன்ற பல `அழுத்தங்கள்' பல்வேறு தரப்பினரிடமிருந்தும் முதல்வருக்குத் தரப்பட்டிருக்கிறது. ஆனால் முதல்வரோ, அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். `எனது காலத்திலேயே அனைத்துச் சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகும் அந்தக் காட்சியை நான் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும்' என்றிருக்கிறார்'' என்றனர் அவர்கள். அதோடு ஏற்கெனவே இளம் அர்ச்சகர்களுக்குப் பயிற்சி அளித்த இரண்டு ஆசிரியர்களை அர்ச்சகர்கள் அடித்து மிரட்டி, அந்த விவகாரம் காவல்துறை வரை போன சம்பவங்களையும் நமக்கு நினைவுபடுத்தினார்கள் அவர்கள்.

அண்மையில் துறை சார்பான கூட்டம் நடந்த போது, ஓர் அதிகாரி, ``பயிற்சி முடித்த இளம் அர்ச்சகர்கள் தேர்வில் தேறினாலும் கூட அர்ச்சகர்கள் அவர்களைக் கோயில் கருவறைக்குள் விடமாட்டார்கள். அப்போது போலீஸ் பாதுகாப்புடன்தான் இளம் அர்ச்சகர்கள் உள்ளே நுழைய வேண்டியிருக்கும்'' என்று கண் கலங்கியிருக்கிறார். மற்றொரு அதிகாரி, ``அர்ச்சகர் பயிற்சித் திட்டத்தை இரண்டாண்டு பயிற்சித் திட்டமாகமாறுதல்செய்துவிட்டு,பதினெட்டுவயதுக்குள் இருப்பவர்களையும், பத்தாம் வகுப்புக்கு மேல் படித்தவர்களை மட்டுமே அட்மிஷன் செய்ய வேண்டும்'' என்றிருக்கிறார்.

பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை எடுக்க, கலைஞர் ஐந்தாவது முறை முதலமைச்சராக வேண்டி இருந்திருக்கிறது. அப்படியிருந்தும், இன்னும் இந்தத் திட்டம் முழுமை பெற மறுப்பதுதான் வேடிக்கையான வேதனை.
ஸீ ம.பா.கெஜராஜ்
படங்கள்: சு.வி.ராஜ்


நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

StumbleUpon.com Read more...

: வானத்தில் கலர் கலரா தெரியுது




வானில் வண்ணமயம்

 

  ரோம்: வண்ணமயமான புகையைக் கக்கிக் கொண்டு வானில் அணிவகுத்துச் செல்கின்றன இந்த விமானங்கள். இத்தாலியில் 62வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதைக் குறிக்கும் வகையில், விமானப் படையினர் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். அதன் ஒரு பகுதியாக ரோம் நகரில் உள்ள பழமை வாய்ந்த அருங்காட்சியகத்தின் மேல், அந்நாட்டு தேசியக் கொடியின் வண்ணத்தில் விமானங்கள் புகையை வெளியிட்டு விண்ணில் சீறிப் பாய்ந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

 http://www.dinakaran.com/daily/2008/june/03/jannal.asp

StumbleUpon.com Read more...

அந்தப்பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் பழக்கம் உடையவர்

StumbleUpon.com Read more...

வானத்தில் கலர் கலரா தெரியுது

வானில் வண்ணமயம்

 

  ரோம்: வண்ணமயமான புகையைக் கக்கிக் கொண்டு வானில் அணிவகுத்துச் செல்கின்றன இந்த விமானங்கள். இத்தாலியில் 62வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதைக் குறிக்கும் வகையில், விமானப் படையினர் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். அதன் ஒரு பகுதியாக ரோம் நகரில் உள்ள பழமை வாய்ந்த அருங்காட்சியகத்தின் மேல், அந்நாட்டு தேசியக் கொடியின் வண்ணத்தில் விமானங்கள் புகையை வெளியிட்டு விண்ணில் சீறிப் பாய்ந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

 http://www.dinakaran.com/daily/2008/june/03/jannal.asp

StumbleUpon.com Read more...

ஓட்டல்களில் இன்று முதல் இட்லி, தோசை விலை குறைப்பு

ஓட்டல்களில் இன்று முதல் இட்லி, தோசை விலை குறைப்பு
20 ரூபாய்க்கு அளவு சாப்பாடு

 

  சென்னை, ஜூன் 3: தமிழகத்தில் ஓட்டல்களில் இட்லி, தோசை உட்பட 6 உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன. ரூ.20க்கு அளவு சாப்பாடு விற்கவும் ஓட்டல் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். முதல்வர் பிறந்த நாளையட்டி இன்று முதல் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.

 ஓட்டல்களில் இட்லி, தோசை, சாப்பாடு போன்ற உணவுப் பண்டங்களின் விலையை குறைப்பதற்காக ஓட்டல் அதிபர்களிடம் அரசு சார்பில் கடந்த 31ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தலைமைச் செயலகத்தில் உணவு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்றும் பேச்சுவார்த்தை நடந்தது.

தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வசந்தபவன் எம்.ரவி, செயலாளர் ஆர்.சீனிவாசன், அன்னபூர்ணா டி.சீனிவாசன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உணவுப் பொருள் வழங்கல் துறை செயலாளர் சண்முகம், ஆணையர் க.ராஜாராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

பேச்சுவார்த்தை முடிவில், இட்லி, சாதா தோசை, வடை, பொங்கல், கிச்சடி, டீ ஆகிய 6 உணவுப் பொருட்களின் விலையை குறைக்கவும், 20 ரூபாய்க்கு அளவு சாப்பாடு வழங்கவும் ஓட்டல் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டனர். முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று முதல் விலைகுறைப்பு அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இப்போது 2 இட்லி ரூ.8, சாதா தோசை ரூ.15, வடை ரூ.8, பொங்கல் ரூ.15, கிச்சடி ரூ.15, ஒரு கப் டீ ரூ.8 என்ற விலைக்கு அதிகமாக விற்கும் நடுத்தர உணவகங்களில் இப்போதுள்ள விலையில் 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை குறைக்கப்படும்.

சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல், ஊறுகாயுடன் 250 கிராம் சாதம் கொண்ட அளவு சாப்பாடு 20 ரூபாய்க்கு  வழங்கப்படும். முதல்வர் பிறந்த நாளான ஜூன் 3 முதல் இது அமலுக்கு வருகிறது.

இந்த விலைக்கு குறைவாக ஏற்கனவே விற்பனை செய்துவரும் உணவகங்களில் தொடர்ந்து அதே விலையில் உணவு பண்டங்கள் வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

விலை குறைக்கப்படுவதால் உணவுப் பண்டங்களின் தரம், எடை, சுவை  போன்ற எதுவுமே குறைக்கப்படமாட்டாது என்றும், விலை குறைப்பு பட்டியல் வாடிக்கையாளர்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்கவும் ஓட்டல் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலைகுறைப்பு குறித்து, தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வசந்தபவன் எம்.ரவி கூறியதாவது:

அரசின் ஆலோசனைப்படி, விலைகுறைப்பு, ஜூன் 3ம் தேதி அமலுக்கு வருகிறது. விலை குறைக்கப்பட்ட அயிட்டங்கள் தட்டுபாடு இல்லாமல் கொடுக்கப்படும். வசந்தபவன், சரவணபவன், சங்கீதா, ஆனந்த பவன், ஆர்யபவன், ஹாட் சிப்ஸ் போன்ற நடுத்தர ஓட்டல்களில் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வருகிறது.

மின்கட்டணம் குறைப்பு, வாட் வரி 2 சதவீதத்தை முழுவதுமாக ரத்து செய்வது, மானிய விலையில் காஸ், தண்ணீர் வரி குறைப்பு, பால் விலை குறைப்பு என்று பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்துள்ளோம்.

ஒரு மாதத்தில் இவ்விஷயங்களில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்துள்ளார். அரசின் ஒத்துழைப்புடன் விலைகுறைப்பு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு வசந்தபவன் எம்.ரவி கூறினார்.
 
 

StumbleUpon.com Read more...

சீனாவில் 2 தமிழர்களுக்கு மரண தண்டனை


சீனாவில்
2 தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து ஆகுமா?


பீஜிங், ஜுன்.3-

சீனாவில், 2 தமிழக வாலிபர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்வதற்கு, இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மரண தண்டனை

தமிழ்நாட்டில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர், அஸ்கர் மியான். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர், ஹுசேன் மைதீன். போதை பொருட்களை சீனாவிற்கு கடத்திய வழக்கில், தமிழகத்தை சேர்ந்த இந்த இரு வாலிபர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், சீனாவின் ஜ×வோஹாய் மக்கள் கோர்ட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும்படி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தண்டனை தேதி அறிவிக்கப்படாததால், இரு வாலிபர்களும் சீனாவில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய அரசு நடவடிக்கை

இதற்கிடையில், அஸ்கர் மியான் குடும்பத்தினர், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து, ஜெயில் தண்டனை விதிக்கும்படி கோரி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சகம் மூலம் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதைத்தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் மூலம் இருவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பேரில், சீனாவில் காங்சோ நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர், சிறையில் இருக்கும் இரு தமிழர்களையும் சந்தித்து பேசுவதற்கு சீன கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. இந்திய தூதரக அதிகாரி வருகிற 6-ந்தேதி அவர்களை சந்தித்து வாக்குமூலம் பெற இருக்கிறார். சீனவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி இந்த தகவலை உறுதி செய்து இருக்கிறார்.

தனித்தனி வழக்கு

அஸ்கர் மியான், ஹுசேன் மைதீன் இருவரும் தனித்தனி வழக்குகளில், சீனாவின் வெவ்வேறு மாகாணங்களில் கைது செய்யப்பட்டனர். சீன சுங்க அதிகாரிகளால் அஸ்கர் கடந்த பிப்ரவரி மாதத்திலும், ஹுசேன் மார்ச் மாதத்திலும் கைது செய்யப்பட்டனர்.

அஸ்கர் வைத்திருந்த சூட்கேசில் இருந்து 1301 கிராம் ஹெராயினும், ஹுசேனின் வயிற்றில் இருந்து 300 கிராம் எடையுள்ள ஹெராயினும் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இரண்டு வழக்குகளிலும், அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து, கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறப்பட்டது.

சகோதரர் பேட்டி

அஸ்கர்மியான் இந்த வழக்கில் சிக்கியது குறித்து அவருடைய சகோதரர் காஜாமுகமது கூறியதாவது:-

"தாய்லாந்தில் சமையல்காரராக வேலை செய்வதற்காக கடந்த 2003-ம் ஆண்டில் அஸ்கர் புறப்பட்டுச் சென்றார். அப்போது சுல்தான் என்பவரும் அவருடைய மகன் சலீம்கான் இருவரும் அஸ்கரை சந்தித்து லண்டனில் வேலை வாங்கித் தருவதாக கூறி இருக்கிறார்கள்.

உடனடியாக அஸ்கர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு, அதற்காக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வாங்கிக் கொடுத்து இருக்கிறார். பணத்தை பெற்றுக்கொண்ட சுல்தான், அஸ்கரை கம்போடியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைத்து இருக்கிறார். அங்கிருந்து சீனா வழியாக, லண்டனுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

சீன அரசு கடிதம்

கம்போடியாவில் ஏறத்தாழ 2 ஆண்டுகள் தவித்த அஸ்கர் அங்கு கிடைத்த வேலைகளை செய்து காலம் தள்ளி இருக்கிறார். கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி அன்றுதான் கம்போடியாவில் இருந்து சீனா செல்வதாக அஸ்கர் எங்களுக்கு டெலிபோன் மூலம் தகவல் தெரிவித்தார்.

அதன்பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீன அரசிடம் இருந்து வந்த கடிதத்தை பார்த்தபிறகுதான், அவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய விவரம் தெரியவந்தது.

அப்பீல்

உடனடியாக நான் சீனாவுக்கு சென்று அஸ்கரை பார்க்க முயன்றேன். ஆனால், சிறையில் அவரை பார்க்க முடியவில்லை. எனது சகோதரர் நிரபராதி. சுல்தான்தான் அவரை ஏமாற்றி கடத்தல் வழக்கில் சிக்க வைத்து விட்டார். சூட்கேசில் போதைப்பொருள் இருந்தது நிச்சயம் அவருக்கு தெரிந்திருக்காது.

எங்கள் குடும்பத்தின் ஏழ்மை நிலையையும் வயதான பெற்றோரின் நலன் கருதியும் கருணை அடிப்படையில் அஸ்கருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யும்படி சீன அரசிடம் தற்போது அப்பீல் செய்து இருக்கிறோம்.''

இவ்வாறு காஜா முகமது கூறினார்.

ஹுசேன் சிக்கியது எப்படி?

மரண தண்டனை அடைந்த மற்றொரு தமிழக வாலிபரான ஹுசேன் மைதீன், 2007-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி அன்று பிடிபட்டார். 3 மாதங்களில் 4-வது முறையாக சீனாவுக்குள் நுழைந்தபோது அவர் சுங்க அதிகாரிகளின் பிடியில் சிக்கினார். நிவி என்ற நைஜீரிய நண்பரின் கையாளாக, போலி பெயரில் போதை மருந்து கடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

போதை பொருளை விழுங்கி கடத்திச்சென்றால், டெல்லி திரும்பியதும் 1000 டாலர் (ஏறத்தாழ ரூ.40 ஆயிரம்) தருவதாக நிவி அவரிடம் கூறியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=416598&disdate=6/3/2008

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP