சமீபத்திய பதிவுகள்

60 வயது முதியவரை திருமணம் செய்ய நிர்பந்தம்- வீட்டை விட்டு ஓடிய 16 வயது பெண் !

>> Wednesday, June 4, 2008

60 வயது முதியவரை திருமணம் செய்ய நிர்பந்தம்- வீட்டை விட்டு ஓடிய 16 வயது பெண் !
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

கரூர்: 60 வயது தாத்தாவை திருமணம் செய்யுமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியதால் 16 வயது இளம் பெண் வீட்டை விட்டு தப்பியோடிவிட்டார்.

கரூரை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பழனியப்பனின் மகள் இந்துமதி (16). இவருக்கும் அவர்களது நெருங்கிய உறவினரானவருமான 60 வயது பெரியவருக்கும் திருமணம் செய்ய வீட்டினர் முடிவு செய்தனர்.

இதை இந்துமதி ஏற்க மறுத்தார். ஆனால், வீட்டினர் தீவிரமாக வற்புறுத்தியதால் நேற்று நள்ளிரவு வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

இதையடுத்து போலீசில் புகார் தரப்பட்டது. இந் நிலையில் இந்துமதி கோவையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போக இடமில்லாமல் தெருக்களில் சுற்றி திரிந்த இந்துமதியை போலீசார் மீட்டுள்னர்.

அவர் பெண் போலீசாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
 

StumbleUpon.com Read more...

எதிர்வு கூறலுக்கு எதிர்மாறாக பத்திரிகை விற்பனை அதிகரிப்ப

எதிர்வு கூறலுக்கு எதிர்மாறாக பத்திரிகை விற்பனை அதிகரிப்பு


அச்சு இதழியல்துறை மறைந்துபோகும் என்று ஆரூடங்கள் தெரிவிக்கப்படும் நிலையில், உலகளாவிய ரீதியில் பத்திரிகைகளின் விற்பனை அதிகரித்திருப்பதாக சுவீடனின் கொத்தேபேர்க் நகரில் இடம்பெற்ற சர்வதேச செய்திப் பத்திரிகை மாநாட்டில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவிலும் தென்அமெரிக்காவிலும் பத்திரிகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2007 இல் பத்திரிகைகளின் விற்பனை உலகளாவிய ரீதியில் 2.7 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

இந்தியா, சீனா ஆகிய நாடுகளிலேயே அதிகளவில் விற்பனை உயர்ந்துள்ளது. இந்த இருநாடுகளிலும் தினமும் 107 மில்லியன் பத்திரிகைப் பிரதிகள் விற்பனையாவதாக வேல்ட் அசோசியேற்றட் ஒவ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஆயினும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பத்திரிகை வாசகர்களின் தொகை வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தக் கண்டங்களில் இலவசமாக விற்பனையாகும் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களால் பாரம்பரிய தினசரிகள் கடும் போட்டியை எதிர்நோக்குகின்றன.

செய்திப் பத்திரிகைகளும் அச்சு ஊடகங்களும் மரணித்து விட்டதாகக் கூறினாலும் நான் அவ்வாறு பார்க்கவில்லை என்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றமாநாட்டில் சங்கத்தின் தலைவர் திமோதி மோல்டிவ் கூறினார்.

இந்த மாநாட்டில் 1800 பிரசுரிப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகைகளின் சிரேஷ்ட நிறைவேற்றதிகாரிகள் கலந்துகொண்டனர். மூன்று நாட்கள் இந்த மாநாடு இடம்பெறுகிறது.

உலகில் அதிகளவு விற்பனையாகும் தினசரிப் பத்திரிகைகளில் 74 பத்திரிகைகள் ஆசியாவிலேயே பிரசுரிக்கப்படுகின்றன. இவற்றின் விற்பனை மிகச் சிறப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அமெரிக்காவில் பத்திரிகை விற்பனை 3 சதவீதம் வீழ்ச்சி கண்டது. ஐரோப்பாவில் 1.5 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

கடந்த 5 வருடங்களில் அமெரிக்காவில் 8 சதவீதம் பத்திரிகை விற்பனை குறைவடைந்தது.

இதேவேளை, பத்திரிகை விளம்பரங்கள் மூலம் வருமானமும் 2007 இல் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேசமயம், இணையத்தளமுடனான விளம்பர வருமானம் 3 சதவீதம் உயர்வடைந்துள்ளது.



http://www.thinakkural.com/news%5C2008%5C6%5C4%5Cimportantnews_page52080.htm

StumbleUpon.com Read more...

சாத்தான் சக்தியால் முகமது பாதுகாக்கப்பட்டாரா?



சரியான் வழியில் செல்லாமல் வழி தவறிச் செல்பவர்களுக்கு மட்டுமே சாத்தானால் தீங்கு விளைவிக்க முடியும் என்று குரான் சொல்கிறது. அல்லாவை சேவிப்பவர்களைக் குறித்த காரியத்தில் சாத்தானுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் கிடையாது.

நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம் பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின் 'ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்) என்று மலக்குகளிடம் கூறினோம் இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள் அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை. 'நான் உனக்குக் கட்டளையிட்ட போது நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது? என்று அல்லாஹ் கேட்டான் 'நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய் அவரை களிமண்ணால் படைத்தாய் என்று (இப்லீஸ் பதில்) கூறினான். 'இதிலிருந்து நீ இறங்கி விடு நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்' என்று அல்லாஹ் கூறினான். '(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக என அவன் (இப்லீஸ்) வேண்டினான். (அதற்கு அல்லாஹ்) 'நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய் என்று கூறினான். (அதற்கு இப்லீஸ்) 'நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன் என்று கூறினான்.'பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும் அவர்கள் பின்னும் அவர்கள் வலப்பக்கத்திலும் அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன் ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய் (என்றும் கூறினான்). அதற்கு இறைவன் 'நீ நிந்திக்கப்பட்டவனாகவும் வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும் உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன் என்று கூறினான்.(ஸூரா7:11- 18 )

வேறொரு இடத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளாது:
'இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன? என்று (இறைவன்) கேட்டான். அதற்கு இப்லீஸ் 'ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை! என்று கூறினான். 'அவ்வாறாயின் நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய். 'மேலும் நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக! என்று (இறைவனும்) கூறினான். 'என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக! என்று இப்லீஸ் கூறினான். 'நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய் 'குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில் என்று அல்லாஹ் கூறினான். (அதற்கு இப்லீஸ்) 'என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால் நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். 'அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர என்று கூறினான். (அதற்கு இறைவன் 'அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும். 'நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர என்று கூறினான். நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
(ஸூரா.15:32- 44 )

வாசிப்பதற்கு மிகவும் சுவராசியமாக இருக்கிறதல்லவா! பாருங்கள்.அல்லா சாத்தானின் ஆலோசனைகளுக்கு செவிகொடுப்பது மட்டுமல்ல அவனின் திட்டங்களையும் பின்பற்றுகிறான். மனிதர்களை அழிவுக்குள்ளாக்கும் நோக்கத்துடன் சாத்தான் அல்லாவிடம் கால அவகாசம்(தாமதம்) கேட்கிறான். அல்லா அவனுடையவேண்டுகோளுக்கு செவிகொடுக்கிறான். ஒன்று அல்லா சாத்தானின் அழிவுக்கேதுவான அந்த திட்டத்தை அறிந்திருந்து மனிதர்களை வழிவிலகட்டும் என்று விட்டிருக்கவேண்டும் அல்லது அல்லா அதைக் குறித்து அறியாமல் அறியாமையால் அதற்கு அனுமதித்திருக்க வேண்டும்.

(மேற்கண்ட இரு குரான் பகுதிகளிலும் பெரும் முரண்பாடுகள் இருப்பதைக் கவனியுங்கள். அல்லவும் இப்லீஸும் பயன்படுத்திய அதே வார்த்தைகளை குரானின் ஆசிரியர் பயன்படுத்தவில்லை என்பது போல தோன்றுகிறது)

ஆனால் அல்லாவை பின்பற்றுபவர்கள் எல்லாரும் முக்கியமாக எல்லா தீர்க்கதரிசிகளும் பாதுகாக்கப் பட்டிருக்கிறார்கள் என்று அல்லா சொவதினால், இவையெல்லாம் முக்கியமான காரியங்களால்ல. பாதுகாப்பைக் குறித்த வாக்கு குரானில் பலமுறை திரும்ப திரும்ப கூறப்பட்டுள்ளது:

ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான். (ஸூரா:5:105 )

மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை. திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அவனுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் (செல்லும்). (ஸூரா.16:98- 100 )

'தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான். 'தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.'(ஸூரா.72:27,28 )

சாத்தானிடமிருந்து தன்னை பின்பற்றுபவர்களை காப்பாற்றுவதோடு சேர்த்து, முகமது மனிதர்களிடமிருந்து பாதுகாக்கப்படுவார் என்றும் உறுதிகூறப்பட்டிருக்கிறது.

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்¢ (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்¢ அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்¢ நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (ஸூரா.5:67 )

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோள்களின் நோக்கம் வாசிப்பவர்களூகுஎளிதில் புரியும் விதத்தில் இருக்கவேண்டும். முகமது அல்லாவுக்கு பிரியமானவராகவும் அவருடைய பாதுகாப்பின் கீழக இருப்பவராகவும் இருந்தால், அவரால் சாத்தானின் ஆளுகையின் கீழ் வரமுடியாது, சாத்தானின் தந்திர முயற்சிகளால் அவர் தீங்கிழைக்கப்படவும் முடியாது. மேலும் இப்படிப் பட்ட ஒரு பாதுகாப்பு இருக்கிற படியால் முகமதுவை ஒரு யூதனோ அல்லது கிறிஸ்தவனோ அல்லது வேற்று மதத்தானோ முகமதுவை ஒன்றும் செய்ய முடியாது.

எனினும் மேலே கூறப்பட்டிருப்பவற்றிற்கு முரணாக இருப்பது என்னவெனில் முகமது பேசிய சாத்தானின் வசனங்கள் என்று அறியப்பட்டிருக்கிறவையே. முஸ்லீம் குறிப்புகளின்படி,அல்லாவிடமிருந்து வராதவிகளான மூன்று பெண் கடவுள்கள் அல்லது அல்லது அல்லாவின் மகள்களை போற்றூம் வசனங்களை எழுதும்படி சாத்தான் முகமதுவை நடத்தினான். இது குறித்து அதிகப்படியான தகவல்களைப் பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லின்க்குகளில் சென்று பாருங்கள்:

http://answering-islam.org/Hahn/satanicverses.htm
http://answering-islam.org/Responses/Saifullah/sverses.htm
http://answering-islam.org/Gilchrist/Vol1/3c.html
http://answering-islam.org/Responses/Saifullah/sverses_eh.htm
http://answering-islam.org/Shamoun/satanic_verses.htm

சாத்தானிடமிருந்து வந்த வார்த்தைகளைக் கூறின முகமதுவை காப்பாற்றுவதற்Kஆகவும், அபாயம் விளைவிக்கும் அந்த நிகழ்விலிருந்து அவரை தப்புவிக்கவும் குரான் கீழ்கண்ட வார்த்தைகளைக் குறிப்பிடுகிறது:
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை¢ எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்(ஸூஆ.22:52) .

இந்தப் பகுதி முகமதுவின் (அதற்கு முந்தைய தீர்க்கதரிசிகளின் ) செய்தியில் சாத்தான் குறுக்கிட்டு பாதித்தான் என்று தெளிவாக ஒப்புக்கொள்கிறது. அந்த முரண்களை அல்லா தீர்த்துவைக்காமலவற்றை ஒழித்துவிடுகிறார் என்பது வாதமாக இருக்கிறது.

மேலும் முகமது அவர்கள் மந்திரவாதத்தின் தாக்கத்தில் இருந்ததாக என்று ஹதீஸ்கள் கூறுகிறது. குரானின் கூற்றுப்படி அது சாத்தானின் கைவேலையாகவே இருக்க வேண்டும்:

Narrated Aisha:
Magic was worked on Allah's Apostle so that he used to think that he had sexual relations with his wives while he actually had not (Sufyan said: That is the hardest kind of magic as it has such an effect). Then one day he said, "O 'Aisha do you know that Allah has instructed me concerning the matter I asked Him about? Two men came to me and one of them sat near my head and the other sat near my feet. The one near my head asked the other, 'What is wrong with this man?' The latter replied he is under the effect of magic. The first one asked, 'Who has worked magic on him?' The other replied, 'Labid bin Al-A'sam, a man from Bani Zuraiq who was an ally of the Jews and was a hypocrite.' The first one asked, 'What material did he use?' The other replied, 'A comb and the hair stuck to it.' The first one asked, 'Where (is that)?' The other replied, 'In a skin of pollen of a male date palm tree kept under a stone in the well of Dharwan.'" So the Prophet went to that well and took out those things and said, "That was the well which was shown to me (in a dream). Its water looked like the infusion of Henna leaves and its date-palm trees looked like the heads of devils." The Prophet added, "Then that thing was taken out." I said (to the Prophet) "Why do you not treat yourself with Nashra?" He said, "Allah has cured me; I dislike to let evil spread among my people." (Sahih al-Bukhari, Volume 7, Book 71, Number 660: http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/071.sbt.html#007.071.660)

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்¢ ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்¢ ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்¢ அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்¢ இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் 'நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்' என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை¢ அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது¢ தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?(ஸூரா.2:102) .

முகமதுவின் மந்திரவாதம் குறித்து அதிக தகவல்களைப் பெற கீழ்கண்ட தளத்தில் சென்று பாருங்கள்:
http://answering-islam.org/Responses/Menj/bewitched1.htm
http://answering-islam.org/Responses/Menj/bewitchment.htm

இதுவரை நாம் கண்டவை இரு முடிவுகளில் நம்மை கொண்டுவந்து விடுகிறது:
1. ஒன்று முகமது அல்லாவுக்கு பிரியமானவராக இல்லாமல் அவரைப் பின்பற்றாதவராக இருந்து, சாத்தான் தன்னை ஆளுகை செய்ய அனுமத்தித்து அவன் இஷ்டப்படி இருந்திருக்கவேண்டும்.

2.அல்லது அல்லா தாம் சொன்னபடி முகமதுவை காப்பாற்ற தவறீயிருக்கவேண்டும். அப்படியானால் அல்லா நம்பத்தக்கவரல்ல, தாம் சொன்னதை செய்ய இயலாதவர் ஆவார்.

English Source : http://answer-islam.org/MoProtection.html

Translated source : http://isaforall.blogspot.com/

StumbleUpon.com Read more...

20 ரூபாய் சாப்பாட்டில் என்னென்ன கிடைக்கும்?

20 ரூபாய் சாப்பாட்டில் என்னென்ன கிடைக்கும்?

சென்னை, ஜுன். 4-

தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் உணவு பண்டங்கள் விலை நேற்று முதல் குறைக்கப்பட்டன. 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் ஒரு சில முக்கிய ஓட்டல்களில் 5 சதவிகிதம் மட்டுமே விலையை குறைத்து உள்ளனர்.

250 கிராம் எடை அளவு சாப்பாடு இருக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்தது. அதன்படி சென்னை உள்பட நகரங்களில் மதிய சாப்பாடு நேற்று முதல் ரூ. 20-க்கு வழங்கப்படுகிறது.

வழக்கமாக ஓட்டல்களில் ஸ்பெஷல் சாப்பாடு என்றும், சாதாரண சாப்பாடு என்றும் இரண்டு வகையாக வழங்குகிறார்கள். ஸ்பெஷல் சாப்பாடு எப்போதும் போல வடை, பாயாசத்துடன் 3 வகை கூட்டு, பொரியல், அப்பளம் போன்றவற்றுடன் விற்பனை செய்யப்படுகிறது.

20 ரூபாய்க்கு வழங்கப்படும் சாப்பட்டின் அளவு 250 கிராம். சாம்பார், ரசம், மோர், வத்த குழம்பு, கூட்டு, பொரியல், ஊறுகாய் இடம் பெற்றுள்ளது.

ஹாட் சிப்ஸ் ஓட்டலில் ஜனதா சாப்பாடு என்ற பெயரில் ஏற்கனவே 350 கிராம் எடைக்கு மதிய சாப்பாடு ரூ. 22-க்கு வழங்கப்பட்டது. தற்போது அதை 300 கிராம் எடையாக குறைத்து கூட்டு, பொறியல், சாம்பார், ரசம், மோருடன் வினியோகிக்கப்படுகிறது.

சரவண பவன் ஓட்டல் நிர்வாகம் கூறும்போது, நாங்கள் 5 சதவிகிதம் உணவு பண்டங்கள் விலையை குறைத்துள்ளோம். மதிய சாப்பாடு ரூ. 20-க்கு வழங்குகிறோம். சாம்பார், ரசம், மோர், பொரியல், ஊறுகாய் இவற்றுடன் வழங்கப்படுகிறது. சாப்பாட்டின் தரம், ருசி எதுவும் மாறாது. இதுவரை எந்த ருசியில் வழங்கப்பட்டதோ அதே தரத்துடன் 20 ரூபாய் சாப்பாடு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

அண்ணா நகர் வசந்த பவன் ஓட்டல் நிர்வாகத்தினர் கூறும்போது, "அரசின் வேண்டுகோளை ஏற்று ரூ. 20-க்கு மதிய சாப்பாடு கொடுக்கப்படுகிறது. நேற்று 120 சாப்பாடு விற்பனை ஆகியுள்ளது. 40 ரூபாய் சாப்பாட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள் என்றார்.

சென்னையில் உள்ள சரவண பவன் ஓட்டல் கிளைகளிலும், வசந்த பவன் கிளைகளிலும், ஹாட்சிப்ஸ் கிளைகளிலும் ஒரே விலையில் உணவு பண்டங்கள் விற்கப்படுகிறது.

மதிய சாப்பாடு அளவு குறைவாக இருந்தாலும் ருசியாகவும், தரமானதாகவும் இருந்தால் போதும் என்று பலரும் கருத்து கூறி உள்ளனர்.
 
 

StumbleUpon.com Read more...

நகரும் குடியிருப்புகள்

நகரும் குடியிருப்புகள்
 


  முன்சீ: சரக்கு ரயிலைப் போல அணிவகுத்துச் செல்லும் இவை குடியிருப்புகள் என்றால் நம்ப முடியவில்லையா? நம்பித்தான் ஆக வேண்டும். அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் முன்சீ நகரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இந்த குடியிருப்புகள்.

ஏற்கனவே, கேத்ரினா மற்றும் ரீட்டா உள்ளிட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்காக இவை அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு இப்போது சூறாவளி வர வாய்ப்புள்ளதால்தான் இந்த ஏற்பாடு.

ஏற்கனவே, காத்ரினா சூறாவளியின் போது இதுபோன்ற குடியிருப்புகளைப் பயன்படுத்தியபோதும் பாதிப்பு ஏற்பட்டதால் வேறு ஏற்பாடுகளை செய்து தருவோம் என்று அரசு உறுதி அளித்திருந்தது. எனினும், அந்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போனதால், இதையாவது அனுப்பி வைப்போம் என்று முடிவு எடுத்துள்ளது.
 
 

StumbleUpon.com Read more...

செயற்கைக்கோள் உதவியுடன் ரெயில் எந்த இடத்தில் வருகிறது என்பதை கண்டறியும் நவீன வசதி தமிழ்நாட்டில் விரைவில் அறிமுகம்


செயற்கைக்கோள் உதவியுடன்
ரெயில் எந்த இடத்தில் வருகிறது என்பதை கண்டறியும் நவீன வசதி
தமிழ்நாட்டில் விரைவில் அறிமுகம்


சென்னை, ஜுன்.4-

செயற்கைகோள் உதவியுடன் ரெயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிநëது கொள்ளும் நவீன வசதி விரைவில் தமிழ்நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சரக்கு ரெயில்களில்

ரெயில்வே துறையை நவீனப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சரக்கு போக்குவரத்தில் ரெயில்வே துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. ரெயிலில் சரக்கு அனுப்புபவர் தனது சரக்குகள் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை செயற்கைக்கோள் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. சரக்கு அனுப்பியவர் தனது இருப்பிடத்தில் இருந்தபடியே தொலைபேசி, செல்போன் அல்லது இ-மெயில் மூலம் ரெயில்வே அதிகாரியை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிந்து கொள்கின்றனர்.

ஆனால், இந்த வசதி பயணிகள் ரெயில்களில் தற்போது இல்லை. ரெயில் வருவது, புறப்பட்டு செல்வது பற்றிய தகவல்கள் முந்திய ரெயில் நிலையத்தில் இருந்து அடுத்த ரெயில் நிலையத்திற்கு தொலைபேசி மூலம்தான் தெரிவிக்கப்படுகின்றன.

டிஜிட்டல் வரைபடம்

செயற்கைக்கோள் உதவியுடன் ரெயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் நவீன வசதிக்காக கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி.) 7 ஆயிரம் ரெயில் நிலையங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் வரைபடத்தை உருவாக்கியுள்ளது. இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டதும் நாடு முழுவதும் ரெயில்களை கையாள்வது எளிதாகிவிடும். ரெயில்களை சரியான திசையில் இயக்கவும், ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதை தவிர்க்கவும் முடியும்.

செயற்கைக்கோள் உதவியுடன் ஜி.பி.எஸ். மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரெயில் போக்குவரத்து கண்காணிக்கப்படும். ரெயிலின் நிலை பற்றி ரெயில்வே கட்டுப்பாட்டு அறை, ரெயில்வே மேலாளர் அலுவலகம், ரெயில்வே உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் உள்ள கம்ப்ïட்டர் திரையில் துல்லியமாக பார்க்க முடியும். அதோடு மட்டுமில்லாமல் ரெயில்களை வேகமாக இயக்கவும், தாமதமின்றி ரெயில் வந்து சேரவும் வாய்ப்பு ஏற்படும்.

சோதனை ஓட்டம்

இந்த வசதி, முதல்கட்டமாக டெல்லியில் இருந்து புறப்படும் ராஜதானி, சதாப்தி ரெயில்களிலும், லக்னோ மற்றும் கான்பூருக்கு இடையே ஓடும் பயணிகள் ரெயில்களிலும் சோதித்துப் பார்க்கப்படுகிறது. 10 ஆயிரம் ரெயில் நிலையங்களில் இந்த வசதியை ஏற்படுத்தவும், நாடு முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தவும் ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
 
 

StumbleUpon.com Read more...

பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து, பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் 725 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. இதனால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும்படி எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.. இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளிதியோரா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் முடிவில், பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ஐந்து ரூபாயும், டீசல் ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயு, சிலிண்டர் ஒன்றுக்கு ஐம்பது ரூபாயும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளிதியோரா தெரிவித்தார். இந்த விலை உயர்வு இன்று இரவு முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விலைஉயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது மத்தியில் ஆளும், காங்கிரஸ் கூட்டணி அரசுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

 

 

StumbleUpon.com Read more...

வங்காளதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் சுவீடனில் தஞ்சம் புகுந்தார்


 


ஸ்டாக்ஹோம், ஜுன்.4-

வங்காளதேசத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் ஐரோப்பா சென்றார். கொல்கத்தாவில் தங்கி இருந்தபோது அவருக்கு எதிராக முஸ்லிம் குழுக்கள் போராட்டம் நடத்தியதாலும், மருத்துவ உதவி பெறுவதற்காகவும் அவர் ஐரோப்பா சென்றார். இப்போது அவர் சுவீடன் நாட்டில் தஞ்சம் புகுந்து இருக்கிறார். தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள உப்பசாலா என்ற இடத்தில் அவர் தங்கிக்கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தங்கி இருக்கிறார். அவருக்கு நிதி உதவியும் அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு தங்கி 2 ஆண்டுகள் வேலை செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=416711&disdate=6/4/2008

StumbleUpon.com Read more...

தமிழில் பெயர் வைத்தால் திரைப்படத்திற்குக் கூட வரிச்சலுகை. ஆனால் தமிழுக்காகவே வாழ்ந்த ஒருவரின் பேத்தி குடும்பம் எப்படியிருக்கிறது தெரியுமா?

 
 05.06.08    மற்றவை
 
மிழில் பெயர் வைத்தால் திரைப்படத்திற்குக் கூட வரிச்சலுகை. ஆனால் தமிழுக்காகவே வாழ்ந்த ஒருவரின் பேத்தி குடும்பம் எப்படியிருக்கிறது தெரியுமா?
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு பெண், தனது இரண்டு சின்னஞ்சிறிய குழந்தைகளுடன் பல்வேறு துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை மனுவோடு அலைந்து கொண்டிருந்தார். பரிதாபத்திற்குரிய அந்தப் பெண், வேறுயாருமல்ல; `தமிழ் ஞாயிறு' என்று சொல்லப்படும் தேவநேயப் பாவாணரின் பேத்திதான்!
1902 முதல் 1981 வரை வாழ்ந்த தேவநேயப் பாவாணர் `தமிழர் வரலாறு', `தமிழ் வரலாறு', 'தமிழர் மதம்...' என்னும் வரிசையில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பன்மொழி வித்தகரான அவர், தனது ஐந்து வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். தமிழையே தாயாய் நினைத்த அவரது எழுத்துக்களும், பேச்சுகளும் ரத்தச்சிலிர்ப்பை ஏற்படுத்துபவை.
நான்கு மகன், ஒரு மகளைப் பெற்று அனைவருக்கும்,
`நச்சினார்க்கினியன் நம்பி,
சிலுவையை வென்ற செல்வராயன்,
அருங்கலை வல்லான் - அடியார்க்கு நல்லான்,
மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி,
மணி மன்ற மணவாணன்' என்று மணக்க மணக்க தமிழ்ப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தவர். ஆனாலும் அவருக்குப் போதிய வருமானமில்லை. என்றாலும் தன் மரணத்திற்கு முன்தினம்கூட மூச்சிரைக்கத் தமிழ் பேசிவிட்டுத்தான் தனது மூச்சினை நிறுத்தினார்.
அவரது வாரிசுகளுக்கு சொத்தென்று சொல்வதற்கு அவரது புத்தகங்களைத் தவிர வேறொன்றும் இல்லாமல் போனது.
1996-ல் பாவாணரின் நூல்களை கலைஞர் நாட்டுடைமையாக்கி அவரது வாரிசுகளுக்குச் சன்மானம் வழங்கினார். வாரிசுகள் ஒவ்வொருவருக்கும் மூன்றரை லட்ச ரூபாய் கிடைத்தது.
ஆனால், அதற்கு முன்பு வரை சிலுவையை வென்ற செல்வராயன், குடும்பம் நடத்தவே சிரமப்பட்டிருக்கிறார். தனது மகள் எஸ்தரை பத்தாவது வரை படிக்க வைத்து, அதன்பின் பணமில்லாமல் படிப்பை நிறுத்தி விட்டாராம். 1995-ல் எஸ்தருக்கு, மோசஸ் என்பவரை மணமுடித்து வைத்திருக்கிறார்.
அவரது மணவாழ்க்கை தொடங்கியபோது, தாத்தாவின் புத்தகப் பணமும் வர, மனநிறைவுடனேயே இருந்திருக்கின்றனர். மோசஸ் ஆரம்பத்தில் காண்ட்ராக்ட் வேலைகள் எடுத்துச் செய்ய, அதில் அடிக்கடி விபத்துகள் ஏற்படவும், குழம்பிப்போய் அந்த வேலையை விட்டுவிட்டார்.
பெந்தெகொஸ்தே பிரிவைச் சேர்ந்த அவர்கள் மனஅமைதிக்காக, சபையில் ஊழியம் செய்யப் போக, வாழ்க்கையே மாறிப்போய்விட்டதாம். மோசஸ் சபை ஊழியம், பிரசங்கம் என்று போனதால், எஸ்தரின் நாட்கள் வறுமையிலேயே கழிந்திருக்கின்றன.
பத்து வருடங்கள் வருமானமும் - பிள்ளைப் பேறும் இல்லாமல் இருந்து அதன் பின் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. ஜெசி பிரிசில்லா என்ற இரண்டு வயதுக் குழந்தையும், ஜெசிந்தா ஜெபமணி என்ற பதினொரு மாதக் குழந்தையும் எஸ்தரின் குடும்பத்தில் புது வரவாக வர, மோசஸின் ஊழிய வருமானமோ, ஒரு வாரத்திற்குக்  கூட தாக்குப்பிடிக்க முடியாமல் இருந்திருக்கிறது.
அதனால், `வெள்ளைச்சுடு சோறு' என்பதுகூட அவர்களுக்கு அரிய வகை உணவுப் பொருளாகிப் போனதால், உதவி வேண்டி தன் தாத்தா பற்றிய சான்றிதழ்களுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்குப் படையெடுத்திருக்கிறார் எஸ்தர்.

இந்த நிலையில்தான் நாம் எஸ்தரைச் சந்தித்தோம். நிறையப் புத்தகங்கள், மனுக்கள், பாவாணரின் நாட்காட்டி,  தபால் தலை, புகைப்படங்கள் என வீடே கண்காட்சி போல் இருந்தது.

வறுமையை வெளிக்காட்டாமல் தெளிவாகவே பேசினார். ``தாத்தா இறந்தப்ப எனக்கு பதிமூணு வயசு. அப்பாவோட பிறந்தவங்க நாலு பேர். எல்லாருமே சொற்ப வருமானத்தில்கௌரவமாத்தான் வாழ்ந்தோம். வீட்டுல என்ன இருக்கு, இல்லைன்னே தெரியாது. எங்க தாத்தா தமிழ் மொழி பத்தி முப்பது நூல்கள் எழுதியிருக்கார்னு நினைச்சா பிரமிப்பா இருக்கும். ஆனா அதையெல்லாம் யார் நினைச்சுப் பார்ப்பாங்க? தாத்தா கிட்ட மொழி உணர்வு இருந்த அளவுக்கு வருமானமில்லை. உதவி கேட்கவும் தன்மானம் விடவில்லை. என் கல்யாணத்துக்குப் பின்னாடி எங்க வீட்டுக்காரர் காண்ட்ராக்ட் வேலை எடுத்து, நல்லா லாபமாத்தான் செஞ்சார். ஆனா அடிக்கடி விபத்து. திடீர்னு ஒரு நாள், `நாம சபைக்கு ஊழியம் பண்ணாம, சம்பாதிக்கிறதாலதான் இப்படி நடக்குதோ'ன்னு சர்ச் பிரசங்கத்துக்குப் போயிட்டார்.
நான் பத்தாவது வரை மட்டுமே படிச்சிருந்ததால, எந்த வேலைக்கும் போக முடியலை. வருமானம் பத்தலை. இப்போ இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திடுச்சு. அதுகளை பார்த்துக்கறதுக்கு தினசரியும் போராட வேண்டியிருந்துச்சு. நல்லா சாப்பிடக் கூடிய வயசுல அதுகளுக்கு சாப்பாடே தர முடியாத நிலை ஏற்பட்டிருச்சு. என் கணவர் `யார்கிட்டயும் எந்த உதவியும் யாசகமாய்க் கேட்க மாட்டேன்'னு ஊழியம் பண்ணப் போயிடுவார்.
என்னால இனியும் சமாளிக்க முடியாதுன்னு ஆனதால்தான் ரெண்டு குழந்தைகளோட திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ்  போனேன். தாத்தா போட்டோ, சர்டிஃபிகேட் எல்லாம் காட்டினேன். `அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்'னுதான் எல்லோரும் கேட்டாங்க. பாவாணர் பேத்திங்கற அடையாளம்கூட எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை. எந்த வகையிலாவது உதவி செய்து  இந்த இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றுங்கள் என்றுதான் தமிழக முதல்வரிடமும், தமிழ் உணர்வுள்ள உங்களிடமும் கேட்கிறேன்.
இதோ இந்த இரண்டு வயது மகளிடமாவது ஏதாவது சொன்னால் புரியும். கேட்பாள். கொடுத்ததைச் சாப்பிடுவாள்.
ஆனால், எனது பதினொரு மாத பச்சைக் குழந்தையின் பசிக் குரலை என்னால் கேட்க முடியவில்லை. அதனால் வெளியூரில் உள்ள எனது உறவினர்களிடம் குழந்தையைக் கொடுத்து விட்டு  வந்திருக்கிறேன்!'' என்றார்.
பாவாணரின் பேத்தி வறுமையிலிருக்கிறார் என்று கேள்விப்பட்ட திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வாசுகி, மே 28-ம் தேதி எஸ்தரை திண்டுக்கல்லிற்கு வரவழைத்து, விவரங்களைக் கேட்டுக் கொண்டு, `மேலிடத்திற்குப் பரிந்துரை செய்து எந்த வகையிலாவது உதவ முடியுமா என்று பார்க்கிறேன்' என ஆறுதல் கூறியிருக்கிறார்.
`வாயும்-கையும் தமிழில் புழக்கம்.. வயிற்றுக்குடலோ பசியில் புழக்கம்' என்பதுதான் பாவாணர் வாரிசுகளின் நிலை என்றால்... இதைவிடக் கேவலம் வேறு என்ன இருக்கிறது?

ஸீ க. மருதநாயகம்
படங்கள் : மகேஸ் 
  

 

 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP