சமீபத்திய பதிவுகள்

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவை சிக்காகோவில் சந்தித்தார் வைகோ

>> Monday, July 14, 2008

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவை சிக்காகோவில் சந்தித்தார் வைகோ
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். சிகாகோவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒபாமாவை வைகோ சந்தித்துப் பேசினார். அப்போது, ஒபாமா குறித்து தான் எழுதிவரும் புத்தகம் பற்றி அவருடன் விவாதித்தார்.

'உங்களது திறமையும் தலைமைப்பண்பும் கண்டங்களைத் தாண்டி, உலகின் பலமுனைகளில் வாழும் மக்களை ஈர்த்துள்ளது' என்று ஒபாமாவிடம் வைகோ குறிப்பிட்டார். ''எஸ், வீ கேன்'' என்னும் தலைப்பில் வைகோ எழுதும் அந்த புத்தகத்தின் வரைவு நகலில் ஒபாமா தனது கையொப்பத்தை இட்டுள்ளார். அதில், ''வைகோ, எஸ், வீ கேன்'' என்று ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு மாணவராக, சமூகத் தலைவராக, செனட்டராக ஒபாமா சந்தித்த போராட்டங்கள் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மதிமுக இன்று சென்னையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.swisstamilweb.com/indexTamilnews.html

StumbleUpon.com Read more...

மாமனார் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்! கண்ணீருடன் அனிதா குப்புசாமி

 
16.07.08     சினிமா 
 

 சிரித்த முகத்துடன் பார்த்துப் பழகிய  அனிதா குப்புசாமியை அழுகையுடன் பார்ப்பதற்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆர்.ஏ.புரத்திலிருக்கும் அனிதா குப்புசாமி-புஷ்பவனம் குப்புசாமியின்  வீடு வெளியிலிருந்து பார்க்கும்போது அமைதியாக இருக்கிறது. உள்ளே புயல்.

``நான் செய்த தப்பு என்ன சார், காதலிச்சு என் மனசுக்குப் பிடிச்சவரை கல்யாணம் பண்ணினதுதானே... கல்யாணமாகி பதினாறு வருஷமாயிடுச்சு. பதினாறு வருஷமும் மாமனார்&மாமியார் கொடுமைதான். இதுநாள் வரைக்கும் நான் அதை வெளியில சொன்னதில்லை.  ஆனா இன்னைக்கு அவங்க என்னைப் பத்தி எவ்வளவு அபாண்டமா சொல்றாங்க'' என்று கண்ணீருடன், நம் குமுதத்தில்   வந்த குப்புசாமி பெற்றோரின் பேட்டியைக் குறிப்பிடுகிறார்.

``முதல் தடவை அவங்க வீட்டுக்குப் போனபோது என்னை செருப்பால அடிச்சாங்க. அப்போ எங்களுக்கு கல்யாணம் ஆகல. ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய மேடைக்கச்சேரி செஞ்சுக்கிட்டு இருந்தோம். குப்புசாமி என்கிட்ட ரொம்ப அன்பா இருப்பார். இப்படி இருக்கும்போது, அவர் ஒரு தடவை ஊருக்குப் போய்ட்டார். பத்து நாள் ஆச்சு. அவர்கிட்டருந்து எந்தத் தகவலும் இல்ல. சரி, அவர் வீட்டுக்குப் போய் பார்க்கலாம்னு வேதாரண்யத்துல அவர் வீட்டுக்குப் போனேன். அங்கே அவங்க அப்பா, அம்மா இருந்தாங்க. என்னைப் பார்த்ததும் அவங்க அப்பா செருப்பைக் கழட்டி அடிக்க ஆரம்பிச்சிட்டார். `என் பையனை பெரிய இடத்துல கட்டிக் கொடுக்கலாம்னு நினைச்சிருக்கோம். நீ வந்து மயக்குறியா'ன்னு கேவலமா திட்டி கழுத்தைப் பிடிச்சு தள்ளிவிட்டார். நான் போனப்ப குப்புசாமி வீட்டுல இல்ல. இவ்வளவு சண்டைக்கு அப்புறம்தான் எங்க கல்யாணம் நடந்துச்சு.

92-ம் வருஷம் எங்க கல்யாணம் நடந்தது. அப்பல்லாம் நாங்க அவ்வளவு பிரபலம் இல்ல. இத்தனை வசதியும் கிடையாது. அந்தச் சமயத்துலலாம் அவங்க பெற்றோர் எங்களைக் கண்டுக்கவே இல்லை. இன்னைக்குப் பணம், காசு, புகழ் எல்லாம் வந்ததும் மருமகளைத் தள்ளி வச்சுட்டு மகனை தங்கள் பக்கம் பிரிச்சுட்டுப் போய்டணும்னு பார்க்கிறாங்க. இதுக்காகவா சார் நான் கல்யாணம் பண்ணினேன்!'' - குரல் உடைந்து தேம்பித் தேம்பி அழுகிறார் அனிதா.

``அவங்களுக்கு ஒண்ணுமே செய்யலைனு சொல்றாங்க. அவரோட தங்கச்சி கல்யாணத்துக்கு லட்சக்கணக்குல கடன் வாங்கிட்டு, அதை நாங்கதான் அடைச்சிட்டிருக்கோம். ஒருத்தருக்குச் செஞ்ச உதவியை வெளியில சொல்லக்கூடாது. ஆனா இவங்க சொல்ல வச்சிட்டாங்க.

இப்பகூட ஒன்றரை மாசம் எங்க வீட்டுலதான் தங்கியிருந்தாங்க. ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ்னு வேளாவேளைக்கு அவங்களை நல்லா கவனிச்சிக்கிட்டோம். எந்தக் குறையும் வந்துடக் கூடாதுனு ஒரு வேலைக்கார அம்மாவையே அவங்க கேட்கிறதைக் கொடுக்கிறதுக்குனு வச்சிருந்தோம். அவங்களை இப்படி நான் வச்சிருந்தேன்.

என் மாமனார் இப்ப உத்தமர் மாதிரி பேசுகிறார். அவர் செய்த காரியத்தையெல்லாம் வெளில சொன்னா வெட்கக்கேடு. கல்யாணம் ஆன புதுசுல நாங்கல்லாம் குடும்பமா வேளாங்கண்ணி போயிருந்தோம். அங்க ஒரு வீட்டுல தங்கியிருந்தபோது எல்லோரும் வெளில போயிருந்தாங்க. நானும் என் மாமனார் மட்டும்தான் வீட்டுல இருந்தோம். அப்போ அவர் என்கிட்ட தவறா நடக்க முயற்சி பண்ணினார். நான் தப்பிச்சு வெளில வந்து நின்னுக்கிட்டேன். இதை என் கணவரிடம் சொன்னபோது, அவர் நம்பத் தயாராய் இல்லை.'' - இதைச் சொல்லும்போது அனிதாவின் அழுகை அதிகமாகிறது.

``என்கிட்ட மட்டுமல்ல, என் கணவரோட தம்பி மனைவிகிட்டேயும் தப்பா நடக்க முயற்சி பண்ணி, அது பிரச்னையாகி அப்பாவை அடிச்சிருக்காரு தம்பி. இந்தச் சம்பவம் கேள்விப்பட்டதும் அப்பாகூட இவர் ஒன்றரை மாசம் பேசாம இருந்தார். நான் சொன்னபோது நம்பலை. அப்பவே அவரைக் கண்டிச்சிருந்தா, இந்த மாதிரி நடந்திருக்காதுலனு சொன்னேன்.

எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ஒருத்திக்கு பதிமூணு வயசாகுது. அடுத்தவளுக்கு மூணு வயசு. இப்ப குடும்பத்துல சந்தோஷமே போயிடுச்சு.வெளில போக முடியல. அவ ஸ்கூல் போக மாட்டேங்கிறா'' என்று அழுகையுடன் பேசிக் கொண்டிருந்த அனிதாவின் குரல் திடீரென்று இறுக்கமாகிறது.

``ஆனால், எந்தக் காரணத்துக்காகவும் என் கணவரைப் பிரிந்து வரமாட்டேன். அவர்தான் என் வாழ்க்கை. அவர் பல வெற்றிகளை பெற வேண்டும்.என் கணவர் மகள்களின் வாழ்க்கை நலமாக அமையவேண்டும். இதுதான் என் பிரார்த்தனை. என் பாசமான குடும்பம் இந்தப் பிரச்னைகளால் உடைந்து விடாது. நானும் என் கணவரும் மீண்டும் வெற்றிகரமாக வருவோம் '' என்கிறார் தீர்க்கமாக.

பாடலில் வெற்றி கண்டிருக்கிறார். காதலில் வெற்றி கண்டிருக்கிறார். வாழ்க்கையிலும் வெற்றி பெறுவார், நிச்சயமாக..

- திருவேங்கிமலை சரவணன்
படங்கள் : சித்ராமணி

http://www.kumudam.com/magazine/Reporter/2008-07-06/pg3.php

StumbleUpon.com Read more...

கல்வியில் கம்யுனிசமா?

 
 06.07.08  ஹாட் டாபிக்

த்தியில் கடந்த பா.ஜ.க ஆட்சியின்போது, `கல்வியை காவிமயமாக்கு கிறார்கள்' என்றொரு கோஷம் எழுந்து அடங்கியது எல்லோருக்கும் தெரியும். கிட்டத்தட்ட அதேபோல இப்போது செங்கொடிக்காரர்களின் ஆளுகையில் உள்ள கேரளாவில், `கல்வியில் கம்யூனிஸத்தைப் புகுத்துகிறார்கள்' என்கிற கூக்குரல் கிளம்பியிருக்கிறது. இதற்காக நடக்கும் போராட்டங்களில் சிந்தப்படும் ரத்தத்தால் கேரளாவே சிவப்பாகிவிடும் போல் நிலைமை போய்க்கொண்டிருப்பதுதான் கொடுமை!

கேரளாவை ஆளும் இடது முன்னணி அரசு, பள்ளிக்கூடங்களில் அமல்படுத்தியிருக்கும் சில பாடத்திட்டங்களுக்கு எதிராக முதலில் போராட்டங்களை ஆரம்பித்தது காங்கிரஸ் கட்சிதான். கடந்த மாதம் தொடக்கத்தில் மாநிலம் முழுக்க அந்தக் கட்சியின் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டங்களில் எல்லாம் வன்முறை தாண்டவமாடியது. போலீஸ் தடியடியில் காயமடைந்த கதர்ச்சட்டைக்காரர்களால் மருத்துவமனைகள் பல நிரம்பி வழிந்தன. இதைத் தொடர்ந்து முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டங்களின்போது சர்ச்சைக்குரிய பாடத்திட்டங்கள் அடங்கிய புத்தகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இவர்களது போராட்டங்களின் போதும் போலீஸ் தடியடி, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்... என வன்முறைக்குப் பஞ்சமில்லை.

இதன் உச்சகட்டமாக கடந்த மாதம் 26-ம் தேதி திருவனந்தபுரத்தில் கேரள அரசின் தலைமைச்செயலகம் முன்பு பா.ஜ.க இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா சார்பில் தொடர் தர்ணா போராட்டத்தை ஆரம்பித்தனர். அதே வேளையில், மார்க்சிஸ்ட் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் அந்த வழியாக ஊர்வலம் வர... இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. இதில் போலீஸ் முன்னிலையிலேயே பா.ஜ.க.வினர் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலில் பா.ஜ.க..வின் திருவனந்தபுரம் மாவட்டத் தலைவர் சிவன்குட்டியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. நிலைமை படு மோசமானதால் போலீஸார் தடியடி நடத்திப்பார்த்து, அதற்கும் பலனில்லாமல் போக... கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினார்கள். இந்தக் கலவரத்தால் தலைமைச்செயலகம் ஏரியாவே போர்க்களம் போல் ஆகிவிட்டது.

இப்படி, எதிர்க்கட்சிகள் பலவும் ரத்தம் சிந்தி போராடக்கூடிய அளவுக்கு கேரளப் பாடத்திட்டத்தில் அப்படி என்னதான் பிரச்னை? என்கிற கேள்வியுடன் திருவனந்தபுரத்தில் போய் இறங்கினோம் நாம். தலைமைச்செயலகம் முன்பு நடைபெற்று வரும் தொடர் தர்ணாவுக்குத் தலைமை வகித்துக்கொண்டிருந்த பா.ஜ.க இளைஞர் பிரிவு மாநிலத் தலைவரான சுரேந்திரன் நம்மிடம், "இந்தக் கல்வி ஆண்டில் அறிமுகமாகியிருக்கும் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் தான் ஏகமாய் கம்யூனிஸத்தைப் புகுத்தியிருக்கிறார்கள். அதாவது கேரளாவில் சுதந்திரப் போராட்டத்தை நடத்தியதே கம்யூனிஸ்டுகள்தான் என்பதாகவும், ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்களாகவும் சித்திரித்திருப்பதை ஏற்க முடியாது. காரணம், அந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் சுதந்திரப் போராட்டத்திற்கு எதிரான நிலையில்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதே பாடப் புத்தகத்தில் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகியோருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. காந்தியின் படத்தையும் அடையாளமே தெரியாத அளவுக்கு அலங்கோலமாகப் பிரசுரித்திருக்கிறார்கள். இன்னொரு புத்தகத்தில் காந்தியின் படத்திற்குப் பதில் தவளையின் படத்தைப் பிரசுரித்த கொடுமையும் நடந்திருக்கிறது.

ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகம் ஒன்றில்,  `எனக்கு கணக்குப் போட ஒத்துவராத சிலேட்டை உடைத்துவிடுவேன்' என ஒரு மாணவன் கூறுவதாக வரும் கவிதை, மொத்த மாணவ சமுதாயத்தின் மனதிலும் கம்யூனிஸ்டுகளின் வன்முறைப் பாதையைக் காட்டுவதாக உள்ளது. இதேபோல `அரிவாள் என்ற புதிய முகம்' என்கிற கவிதையும், அதற்கான படமும், கம்யூனிஸ்டுகளின் தேர்தல் சின்னத்தை தம்பட்டம் அடிப்பதாக உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஏழாம் வகுப்பு சமூக அறிவியலில் `மதமில்லாத ஜீவன்' என்கிற தலைப்பிலுள்ள ஒரு பாடம்தான் எல்லா மத மக்களையும் புண்படுத்துவதாக உள்ளது.

அந்தப் பாடத்தில், கலப்புமணம் செய்துகொண்ட அன்வர் ரஷீது - லட்சுமிதேவி என்ற தம்பதியர் தங்களது மகன் ஜீவனை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்காக பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்கள். பள்ளியின் சேர்க்கைப் படிவத்தில் `மாணவனை எந்த மதத்தைச் சேர்ந்தவனாகக் குறிப்பிடுவது?' என தலைமை ஆசிரியர் கேட்கிறார். அதற்கு மாணவனின் தந்தையான அன்வர் ரஷீது, `எந்த மதத்தையும் குறிப்பிட வேண்டாம்' என்கிறார். தாய் லட்சுமிதேவியும் தனது கணவரின் கருத்தை ஆமோதித்துவிட்டு, `எங்கள் மகன் பெரியவனாக ஆனபிறகு எந்த மதத்தை விரும்புகிறானோ, அந்த மதத்தை வைத்துக்கொள்ளட்டும்' எனச் சொல்வதாக அந்தப் பாடம் முடிகிறது.

கேரளாவைப் பொறுத்தவரை எல்லா மக்களுமே தங்களின் மத நம்பிக்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். அப்படியிருக்க, அவர்களது குழந்தைகளுக்கு, `மதமெல்லாம் அவசியமில்லை' என்கிற ரீதியில் சிறுவயதிலேயே பாடம் சொல்லிக் கொடுக்கப்படுவதை யார்தான் ஏற்பார்கள்? இப்படிச் சொல்லிக் கொடுத்தால் அந்தக் குழந்தை எப்படி கடவுள் பக்தியோடு வளர முடியும்? குழந்தைகளின் மனதில் கடவுள் நம்பிக்கையை அழித்துவிட்டு கம்யூனிஸத்தைப் புகுத்துகிற காரியம்தானே இது?

 இதையெல்லாம் கண்டித்து தர்ணா நடத்துவதற்காக நாங்கள் தலைமைச் செயலகம் நோக்கி மிக அமைதியாக ஊர்வலம் வந்துகொண்டிருந்தோம். அப்போதுதான் மார்க்சிஸ்ட்காரர்கள் கற்களை வீசி எங்களைத் தாக்கினர். இதைப் பார்த்துக்கொண்டிருந்த போலீஸாரும் கலவரக்காரர்களை விரட்டுவதற்குப் பதிலாக எங்கள் மீதே தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினர். மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது இப்படித்தான் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. மொத்தத்தில் கேரள நிர்வாகமே சீர்குலைந்து கிடக்கிறது'' எனச் சீறலாகச் சொன்னார் சுரேந்திரன்.

இதே பிரச்னைக்காக தலைமைச்செயலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த கேரள காங்கிரஸ் (ஜேக்கப் பிரிவு) தலைவர்களான டோனி செபஸ்டின், உம்மன் மாத்யூ ஆகியோர் நம்மிடம் பேசுகையில், "சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு மதம், ஜாதி அடிப்படையில்தானே சலுகைகள் வழங்கப்பட்டுக் கொண்டி ருக்கின்றன?. அப்படியிருக்க, `மதமே வேண்டாம்' என இவர்கள் எப்படி பாடப்புத்தகத்தில் பிரசாரம் செய்யலாம்?. சர்ச்சைக்குரிய பாடங்களை யெல்லாம் நீக்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்கள் அவர்கள்.

இந்தப் புகார்களுக்கெல்லாம் மார்க்சிஸ்ட் தரப்பில் என்ன பதில் சொல்கிறார்கள்? என்பதை அறிய, அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளர் சுனில்குமாரை நாம் சந்தித்தோம். விபத்து ஒன்றால் கையில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த அவர் நம்மிடம் " `ஆடு நனைகிறதே என ஓநாய் அழுததாக' உங்கள் ஊர் பழமொழி ஒன்றை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே காந்திக்காகவும், நேருக்காகவும் பா.ஜ.க.வினர் குரல் கொடுப்பதைப் பார்க்கும்போது எனக்கு அந்தப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. காந்தி, நேருக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல் வகுப்பிலிருந்தே பல பாடங்கள் இருக்கின்றன. அதேபோல கம்யூனிஸ்ட் தலைவரான ஏ.கே.கோபாலன் போன்றவர்கள் இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள். இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும்கூட அவர்களைப் பற்றிய பாடங்கள் இருந்தன. `மதமில்லாத ஜீவன்' பாடத்தில் மதமே வேண்டாம் என பிரசாரம் செய்யவில்லை. கலப்புமணம் செய்துகொண்ட தம்பதியர், தங்களது மகன் பெரியவனாக வந்தபிறகு அவனே மதத்தைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் கொடுக்கிறார்கள். அவ்வளவுதான்!.

 அதாவது, சில மாநிலங்களில் விலைவாசி உயர்வும், வேறு சில மாநிலங்களில் ரேஷன் வினியோகமும் ஆட்சியை தீர்மானிப்பதைப் போல, கேரளாவில் கல்விக்கொள்கைதான் அரசைப் பற்றிய முக்கிய மதிப்பீடாக இருக்கும். இந்த அரசைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எஸ்.சி படித்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளியிலேயே டியூஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதனால் என்றுமில்லாத அதிசயமாக எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி விகிதம் 92 சதவிகிதமாக எகிறியது. அடுத்து, இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்குரிய கவுன்சலிங் சிஸ்டத்தை ப்ளஸ் டூ அட்மிஷனுக்கே கேரள அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனால் பத்து ரூபாயில் விண்ணப் பித்துவிட்டு, அந்த மாவட்டத்திலுள்ள சுமார் நூறு பள்ளிகளில் தங்களுக்கு விருப்பமான பள்ளியை மதிப்பெண்களுக்குத் தக்கவாறு மாணவர்கள் தேர்வு செய்ய முடிகிறது. இது போன்ற திட்டங்களால் மக்கள் மத்தியில் இடதுசாரி அரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது. அந்த வயிற்றெரிச் சலில்தான் எதிர்க்கட்சியினர் இப்படி கல்வியை பிரச்னையாக்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் மத்தியில் அவர்களுக்கு அனு தாபம் கிடைப்பதற்காகவும், ஆட்சிக்குக் கெட்ட பெயரை உருவாக்கு வதற்காகவும் அவர்களே வன்முறையையும் உருவாக்குகின்றனர்'' என்றார் சுனில்குமார்.

 கேரளாவில் உள்ள கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகள், என்.எஸ்.எஸ் என அழைக்கப்படும் நாயர் சர்வீஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகளும் இந்தப் பாடத்திட்டங்களுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியிருப்பது, இடதுசாரி அரசைக் கொஞ்சம் கலங்கவே செய்திருக்கிறது. மற்றொரு வலுவான அமைப்பான ஷ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன சங்கம் மட்டுமே இதில் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. `சர்ச்சைக்குரிய பாடத்திட்டங்கள் பற்றி எதிர்க்கட்சியினருடன் பேச்சு நடத்தத் தயார். தேவையானால் இதுபற்றி ஆலோசிக்க கல்வியாளர்கள் அடங்கிய கமிட்டி போடலாம்' என கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி தெரிவித்த யோசனையையும் எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. இந்த பிரச்னையே இப்படி ஆறாத நிலையில், கடந்த 28_ம் தேதி மருத்துவ கல்விக் கட்டணங்களை இரு மடங்காக (ஏழாயிரம் என இருந்ததை சுமார் பதினைந்தாயிரமாக) உயர்த்தி அறிவித்திருக்கிறது கேரள அரசு. அதற்காகவும் எதிர்க்கட்சிகள் முண்டா தட்டத் தொடங்கியிருப்பதால், இனி `கல்வி சிவப்பு மயமாகிறது' என்கிற கோஷத்தைக் கைவிடுவார்களோ, என்னவோ?    ஸீ

ஸீ
ச. செல்வராஜ்

StumbleUpon.com Read more...

ஐபிஎல் போட்டியில் ஊக்கமருந்து : திடுக்கிடும் தகவல்

ஐபிஎல் போட்டியில் ஊக்கமருந்து : திடுக்கிடும் தகவல்
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின்போது கிரிக்கெட் வீரர் ஒருவர் ஊக்கமருந்து அருந்தியது சோதனையில் தெரியவந்துள்ளதாக புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது, ஒவ்வொரு ஆட்டத்திலும், ஒவ்வொரு அணியில் இருந்து 2 வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது, வீரர் ஒருவர் ஊக்க மருந்து அருந்தியது தெரியவந்துள்ளதாக உலக ஊக்க மருந்து எதிர்ப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றுக்கு அந்த ஏஜென்சி கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐபிஎல் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்த சோதனை அறிக்கை முதல் கட்டம்தான் என்றும், மேலும் பல்வேறு கட்டங்களுக்குப் பிறகுதான் ஊக்க மருந்து சோதனையில் கிரிக்கெட் வீரர் ஒருவர் சிக்கியது உறுதியாகும் என்று தெரிவித்தார். இந்நிலையில், ஊக்க மருந்து பயன்படுத்திய கிரிக்கெட் வீரர் யார் என்ற பரபரப்பு தற்போது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
http://www.kumudam.com

StumbleUpon.com Read more...

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1 - பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1 - பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்





 

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1


[இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆன் வசனங்களில் உள்ள முரண்பாடுகள், பிழைகள், கட்டுக்கதைகள் போன்றவற்றை, தொடர் கட்டுரைகளாக நாம் இனி காணப்போகின்றோம்.]

இஸ்லாம் கல்விக்கு பதில்:

பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்


முன்னுரை: இஸ்லாம் கல்வி தள கட்டுரை சொல்கின்றது, பைபிளைக் கண்டு குர்‍ஆன் "காப்பி" அடிக்கவில்லை, காரணம், பைபிளில் சொல்லாத பல அற்புதங்கள் குர்‍ஆனில் உள்ளது, எனவே, முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை என்பது தெளிவு என்று எழுதியிருந்தார்கள். இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக குர்‍ஆன் சொல்லும் அற்புதம், இயேசு களிமண்ணினால் பறவை செய்து அதற்கு உயிர் கொடுத்த அற்புதம் இவைகள் பைபிளில் இல்லை, அதனால், பைபிளைக்கொண்டு காப்பி அடித்தது தான் குர்‍ஆன் என்று எப்படி கேட்கிறார்கள் கிறிஸ்தவர்கள் என்று கேள்வி எழுப்புகின்றது இஸ்லாம் கல்வி தளம்.

இஸ்லாம் கல்வி தளத்தில் கீழ் கண்டவாறு எழுதப்பட்டுள்ளது.
"ஈஸா அலைஹிஸ்ஸலாம் (இயேசு) அவர்களின் பிறப்பு முதல் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. ........
ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறி மக்களிடம் பேசியதன் மூலம் தன் முதல் அற்புதத்தை வெளிப்படுத்தியமை (19: 29-33) களிமண்ணில் ஒரு பறவையைப் போன்ற உருவத்தைச் செய்து அதில் அவர் ஊதியபோது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது உயிருள்ள பறவையாக மாறியது (3:49) போன்ற தகவல்களும் பைபிளில் எங்கும் இல்லை. பைபிளைப் பார்த்து காப்பியடித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை உருவாக்கியிருப்பின் பைபிளில் எங்குமே காணக்கிடைக்காத தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்?
திருக்குர்ஆன் முற்றிலும் இறைவனால் அருளப்பட்டது! அதன் காரணமாகவே பைபிளின் எந்தப் பகுதியிலும் இடம்பெறாத பல உண்மைச் சம்பவங்களும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன."

Source: http://www.islamkalvi.com/portal/?p=622

பைபிளில் இல்லாத அற்புதங்கள் பற்றிய விவரங்களை முகமது எங்கே இருந்து பெற்றார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர், நம் சகோதரர்கள். இக்கேள்விக்கு பதில் தான் இக்கட்டுரை.

குர்‍ஆனின் இந்த குழந்தை அற்புத விவரங்கள், காப்பி அடித்தது தான்:

பைபிளில் தான் இந்த அற்புதம் பற்றி சொல்லப்படவில்லையே பின் எப்படி, காப்பி என்று சொல்கிறீர்கள் என்று கேட்டால், இது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, அதற்கு பதிலாக, முகமது காலத்திற்கு முன்பு இருந்த பல புராணக்கதைகள், கட்டுக்கதைகள் மற்றும் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பல தள்ளுபடி ஆகமங்களிலிருந்து தான் முகமது இவைகளை சொல்லியுள்ளார். இவைகள் இப்படிப்பட்ட புத்தகங்கள்(Infancy of Gospel Thomas, Arabic Infancy of Gospel etc..)இறைவனின் வெளிப்பாடுகள் அல்ல என்று ஒதுக்கிவிட்ட புத்தகங்களிலிருந்து எடுத்து குர்‍ஆனில் சேர்த்துவிட்டு, இது தான் அல்லா இறக்கியது என்று சொல்லியுள்ளார் முகமது, அதையும் இஸ்லாமியர்கள் நம்பிவிட்டு, இக்கதைகள் பைபிளில் இல்லை, குர்‍ஆனில் மட்டுமே உள்ளது என்று பெருமைப்படுகிறார்கள்.

Details of Infancy Gospels of Jesus


1) The Encyclopedia Britannica(பிரிட்டனிகா என்சைக்லோபீடியா):

பிரிட்டனிகா என்சைக்லோபீடியா சொல்கிறது

The Encyclopedia Britannica comments: "The Gospel was known to him chiefly through apocryphal and heretical sources."

"முகமதுவிற்கு சுவிசேஷம் பற்றிய விவரங்கள், தள்ளுபடி ஆகமங்களிலிருந்து, வேறுபல ஆகமங்களிலிருந்து கிடைத்துயிருக்கும்".


Britannica Encyclopedia Says about Gospel of the Infancy of Christ

...of Mark, and Gospel of Philip) preserve some legends and myths found in the early Christian centres of Edessa, Alexandria, and Asia Minor. The First Gospel of the Infancy of Jesus (known also as the Arabic Infancy Gospel ), for example, recounts that, one day, Jesus and his playmates were playing on a rooftop and one fell down and...

Source:    http://www.britannica.com/eb/topic-208181/First-Gospel-of-the-Infancy-of-Jesus


2) Wikipedia Encyclopedia(விக்கிபீடியா கூற்றுப்படி):.

Wikipedia Encyclopedia says about Gospel of the Infancy of Christ

The Infancy Gospel of Thomas is a non-canonical text that was part of a popular genre, aretalogy, of the 2nd and 3rd centuries

The text describes the life of the child Jesus, with fanciful, and sometimes malevolent, supernatural events, comparable to the trickster nature of the god-child in many a Greek myth. One of the episodes involves Jesus making clay birds, which he then proceeds to bring to life,
an act also attributed to Jesus in the Qur'an, thus indicating the text may have had substantial influence on Arabic tradition by the 7th century.

Source :  http://en.wikipedia.org/wiki/Infancy_Gospel_of_Thomas


Jesus creates birds in Infancy Gospel of Thomas and in Quran
Jesus creates birds

In the Qur'an, Jesus forms birds out of clay,

Quran : " I fashion for you out of clay the likeness of a bird, and I breathe into it and it is a bird [Qur'an [5:110]] "

This parallels an episode in the apocryphal Infancy Gospel of Thomas where he does the same:[24]

Infancy Gospel of Thomas :"
[Jesus] then made soft clay and shaped it into twelve sparrows.[25] "

The Infancy Gospel of Thomas was written, at the earliest,in the second century or, at the latest, in the sixth century.
Source : http://en.wikipedia.org/wiki/Legends_and_the_Qur'an


Jesus speaks in the cradle in Infancy Gospel of Thomas and in Quran
The Injilu 't Tufuliyyah or the Gospel of the Infancy of Jesus Christ, contains an Arabic translation of the Infancy Gospel of Thomas and additional narratives. This contains a narrative of Jesus speaking while an infant, also contained in the Qur'an.

Quran

" But she pointed to the babe. They said: "How can we talk to one who is a child in the cradle?" He [Jesus] said: "I am indeed a servant of Allah: He hath given me revelation and made me a prophet; And He hath made me blessed wheresoever I be, and hath enjoined on me Prayer and Charity as long as I live; (He) hath made me kind to my mother, and not overbearing or miserable; [Qur'an 19:29] "


Infancy Gospel of Thomas

" Jesus spake when he was in the cradle, and called out to his mother Mary:— "Verily I am Jesus, the Son of God, the Word, whom thou hast given birth to according to the good tidings given thee by the Angel Gabriel, and my Father hath sent me for the Salvation of the World."

Source: http://en.wikipedia.org/wiki/Legends_and_the_Qur'an



இந்த புத்தகத்தின் முதல் 3 வசனங்களிலேயே இயேசு குழந்தையாக இருக்கும் போது தன் தாயாகிய மரியாளிடம் பேசியதாக எழுதப்பட்டுள்ளது.


1st Gospel of the Infancy of Christ - Verse 2 and 3 இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக எழுதப்பட்டுள்ளது

வசனம் 2: இயேசு குழந்தையாக தொட்டிலில் இருக்கும்போதே தன் தாயாரிடம் பேசியதாக‌, அவர் கூறுகிறார்.

வசனம் 3: மரியாளே, காபிரியேல் தூதன் உனக்கு சொன்னது போல நான் தேவனுடைய குமாரனாகிய இயேசு, உலகத்தின் இரட்சிப்பிற்காக என் பிதா என்னை அனுப்பியுள்ளார்.

2. He relates that Jesus spoke even when he was in the cradle and said to his mother :

3. Mary, I am Jesus the Son of God, that word which you brought forth according to the declaration of the angel Gabriel to you, and my Father has sent me for the salvation of the world.


இந்த புத்தகத்தை முழுவதுமாக இங்கு படிக்கலாம்:

http://wesley.nnu.edu/biblical_studies/noncanon/gospels/infgos1.htm
http://www.pseudepigrapha.com/LostBooks/infancy1.htm
http://ministries.tliquest.net/theology/apocryphas/nt/infancy1.htm


இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசிய நிகழ்ச்சி முதல் முதலில் சொன்னது குர்-ஆன் இல்லை என்பது தான் உண்மை. மற்றும் இயேசு இப்படி பேசினார், என்பதற்கு ஆதாரமே இல்லை. அப்படி பேசியிருந்திருந்தால், இயேசுவின் சீடர்களே, எழுதியிருப்பார்கள். மரியாளும் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்துள்ளார் என்பதை நாம் மறக்கக்கூடாது. இப்படி இயேசு செய்யாத அற்புதத்தை, மற்ற புத்தகங்களிலிருந்து "காபி" அடித்துவிட்டு, பைபிளில் சொல்லப்படவில்லை என்று பெருமையடித்தால் எப்படி?


இஸ்லாம் கல்வி சகோதரர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான், அதாவது, இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட இந்த குழந்தையாக இருக்கும் போது பேசிய அற்புதம், மற்றும் களிமண் பறவையை உயிர் பெறச்செய்த அற்புதம், இவைகள் முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, மாறாக கிறிஸ்தவர்கள், யூதர்கள் எல்லாரும் தள்ளுபடி ஆகமங்கள் என்றும், இவைகள் இறைவனின் வெளிப்படுகள் அல்ல என்றும் ஒதுக்கி தள்ளிவிட்ட புத்தகங்களிலிருந்து அவர் காப்பி அடித்துள்ளார் என்பதை மட்டும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.

முடிவுரை: இன்னும் இயேசுவின் பிறப்பு பற்றி குர்‍ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள முரண்பாடுகளையும், நடைமுறைக்கு ஏற்காத விவரங்களையும் கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பாகத்தில் காணலாம்.

 

StumbleUpon.com Read more...

கறுப்பர் என்பதால் ஒதுக்கப்படுகிறாரா? அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு

கறுப்பர் என்பதால் ஒதுக்கப்படுகிறாரா?
அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு


  புதுடெல்லி, ஜூலை 14: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஓபாமாவின் செல்வாக்கு திடீரென சரிந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்கிறது. இதில், குடியரசு கட்சி வேட்பாளராக மைக்கேனும் ஜனநாயக கட்சி வேட்பாளராக பராக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள். இருவரும் ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த இருவரில் யார் அதிபராக வர அதிக வாய்ப்புள்ளது என்று "நியூஸ் வீக்" பத்திரிகை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில், மைக்கேனை விட ஒபாமாவுக்கு 15 சதவீதம் அதிக ஆதரவு இருப்பதாக தெரிந்தது.

இப்போது, அதே பத்திரிகை மீண்டும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் ஒபாமாவுக்கு 3 சதவீதம்தான் அதிக ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது. மைக்கேனுக்கு 41 சதவீத ஆதரவும் ஒபாமாவுக்கு 44 சதவீத ஆதரவும் உள்ளது. ஒபாமாவின் ஆதரவில் ஏற்பட்டுள்ள சரிவு வியப்பளிப்பதாக Ôநியூஸ் வீக்Õ கூறுகிறது.

அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஒபாமாதான் என்ற நம்பிக்கையில் உள்ள அவருடைய ஆதரவாளர்களுக்கு இந்த சரிவு அதிர்ச்சி அளித்துள்ளது.

முக்கிய பிரச்னைகளில் அரசியல் ஆதாயத்துக்காக  ஒபாமா தனது நிலையை அடிக்கடி மாற்றுகிறார் என்று ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இதுவே சரிவுக்கு காரணம் என்று கருதப்படுகிறது.

ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வு பெறுவதற்கு ஒபாமாவுடன் முன் னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் கடுமையாக மோதினார். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஒபாமா தேர்வு பெற்றார்.

தனது தோல்வியை ஒப்புக் கொள்ள ஹிலாரி கடைசி வரை மறுத்தார். இதனால், அவருடைய ஆதரவாளர்கள் ஒபாமாவை முழுமையாக ஏற்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. ஒபாமாவின் செல்வாக்கு சரிவுக்கு இதுவும் ஒரு காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும் ஒபாமா ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் என்பதால் வெள்ளையர்கள் மத்தியில் அவருடைய செல்வாக்கு குறைந்திருப்பதாக தெரிகிறது.
 
 

StumbleUpon.com Read more...

துபாயில் மனைவியை அடிக்க உரிமை கோரி வழக்கு

துபாயில் மனைவியை அடிக்க உரிமை கோரி வழக்கு
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

துபாய்: மனைவியை அடிப்பது எனது உரிமை. அதை நிலை நிறுத்தி உத்தரவிடக் கோரி ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

புஜைராவில் உள்ள அப்பீல் கோர்ட்டில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுதாரர், தனது மனைவியை அடிக்கடி அடித்துக் காயப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரது கணவர் மீது புஜைரா போலீஸார், முதல் குற்றங்களுக்கான கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், அந்த நபருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அப்பீல் கோர்ட்டில் அந்த நபர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்தான், மனைவியை அடிப்பது எனது உரிமை. அதை யாரும் பறிக்க முடியாது. எனவே மனைவயை அடிக்க உரிமை உண்டு என்று அறிவிக்க வேண்டும். அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்
 

StumbleUpon.com Read more...

மருத்துவ குறிப்புகள்

தொண்டைக்கட்டு சரியாக என்ன சொய்யலாம்?
மாவிலையின் கொழுந்தைக் கொண்டு வந்து கருகி விடாமல் வறுத்தெடுத்து, பொடியாக்கி அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து கால் ஸ்ப+ன் அளவு காலை மாலை சாப்பிட்டு வந்தால்,ஒரே நாளில் தொண்டைக்கட்டு சரியாகி விடும்.

சளித்தொல்லை நீங்க
துளசிச் சாறு ஓர் அவுன்ஸ் தினசரி குடித்து வந்தால் சளித்தொல்லை தலை காட்டாது ஓடிவிடும்.மூக்கில் நீர் வடிந்தால் ஜாதிக்காயை நீர்விட்டு உறைத்து மூக்கின் மேல் பற்றுபோட்டால் நீர் கசிவது நின்றுவிடும்.குழந்தைகளுக்கு சளிபிடித்திருந்தால் துளசிச் சாறும் தூதுவளைச் சாறும் சமபங்கு கலந்து காலை மாலை ஒரு தே.கரண்டி கொடுத்தால் சளி கரைந்துவிடும்.பெரியவர்கள் தூதுவளை,ஆடாதோடைக் கீரைகளை சாப்பிட்டால் சளித்தொல்லை நின்றுவிடும்.

பல் பராமரிப்பு
பல் பராமரிப்பிற்கான ஒழுங்கு முறைகள் வருமாறு:-
1. சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். 

 
2ஃபுளொரைட்டு கலந்த பற்பசையை பயன்படுத்துங்கள்.
 
3. சிலருக்கு உமிழ்நீர் சுரப்பு குறைந்து காணப்படுவதால் வாய் வரண்டு போய் காணப்படும். இப்படிப்பட்டவர்கள் உமிழ்நீர்சுரப்பை அதிகப்படுத்துவதற்காக சர்க்கரைச் சத்து இல்லாத இனிப்புக்களை வாங்கி சாப்பிடலாம். இதற்கு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
4. பற்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் மருத்துவரை ஆரம்ப நிலையிலேயே சந்திக்க வேண்டும்.
5. நீங்கள் ஏற்கனவே ஏதாவது மருந்து மாத்திரை சாப்பிட்டு தூரிகை வந்தீர்களேயானால் அதுபற்றி மருத்துவரிடம் முதலில் சொல்லுங்கள்.
6. தூரிகை பயன்படுத்துவதிலும் ஈறுகளை தேய்ப்பதிலும் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதுபற்றி மருத்துவரிடம் கூறுங்கள்.

பற்களின் பெருமை ஈறுகளின் வலிமையைப் பொறுத்தே அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கொலஸ்ட்ரோல் கட்டுப்பாடு
சற்று கவனமாக இருந்தால்,நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் கொலஸ்ட்ரோல் அளவைகட்டுக்குள் வைத்திருக்க முடியும். தற்போது பல்வேறு உணவகங்களில் குறைந்த கொலஸ்ட்ரோல்|,குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை பரிமாறுகின்றனர்.அப்படி இல்லாத பட்சத்தில் அற்த உணவு எந்த முறைகளில் தயாரிக்கப்பட்டது என்பதுபற்றி விவரத்தை அறிந்து கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். அந்த வகையில் கீழ்க்கண்ட முறைகளில் தயாரிக்கபட்ட உணவுகளாக இருந்தால் அவற்றில்கொலஸ்ரோல் மற்றும் கொழுப்பு அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
1. வறுத்தது.
2. முறகலானது.
3. கொஞ்சமாக தண்ணீரில் வேக வைத்து மாமிசம் கலந்து தயாரிக்கப்படும் உணவுகள்
4. உபயோகமற்ற பொருட்களை அதிகமாக பயன்படுத்துவது.
5. வெண்ணெய் அல்லது பழுப்பு நிற ரொட்டித்துண்டுகளைச் சுற்றி சமைப்பது.
6. மெல்லிதாக இழைக்கப்பட்ட உருளைக்கிழங்கு துண்டுகளை கொழுப்பில் போட்டு வறுப்பது.
7 . பெரிய அளவிலான வான் கோழிகளை அப்படியே சமைப்பது.இவைகளுக்கு பதிலாக:-
1. வேக வைத்தவை.
2. பிரகாசமாக நெருப்பில் சமைத்தவை.
3. சூடான அடுப்பில் சமைக்கப்பட்பவை.
4. சூடான நீரில் சமைத்தவை.
5. புதிய உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்
காற்றோடு கலந்து பரவும் விஷக் கிருமிகளைத் தன்பால் கிரகித்துக் கொள்கின்ற சக்தி வெங்காயத்துக்கு மட்டும் உண்டு. தினமும் அதிகாலை ஒரு வெங்காயத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் வாழ்நாள் முழவதும் எந்த நோயும் அணுகாது.

உடலுக்கு உடனடியாக குளிர்ச்சியை உண்டு பண்ணுகிற சிறப்புச் சக்தி வெங்காயத்திற்கு உண்டு. வெங்காயத்தை 2 துண்டுகளாக வெட்டி முகர்ந்தாலும் வாயில் போட்டு சப்பினாலும் வாந்தியை தவிர்க்கலாம். தொற்று நோய் பரவியுள்ள இடங்களுக்குச் சென்றால் கொ}ஞ்சம் வெங்காயம் எடுத்து செல்வது நல்லது. நோய் கிருமிகள் நம்மைப் பாதிக்காது.

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாமா?
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் ஒரு பொருள் வெங்காயத்தை வெறுமனேருசிக்காக மாத்திரம் சேர்த்து வருகிறோம்.அது தவிர இதனைப் பற்றி சிறிதும் சிந்திப்பது கிடையாது.இது எப்படிப்பட்டது,இதனை மருத்துவக் குணங்கள் என்ன என்றெல்லாம் எடுத்து நோக்கும் பொழுது வெங்காயத்தின் மகிமையினை உணர்ந்து கொள்ளலாம்.

வெங்காயத்தைச் சாப்பிடும் பொழுது வேகவைத்துச் சாப்பிவதே மிகவும் சிறந்த முறையாகும். அதற்காகப் பச்சையாகச் சாப்பிடக் கூடாதென்பதல்ல.பச்சையாகச் சாப்பிடுகிறவர்கள் சிறிது நேரம் வீட்டில் தங்கிவிட்டு வெளியில் செல்வதாயின் செல்லவும்.காரணம் பச்சையாக சாப்பிட்டவர்கள், மற்றவர்களுடன் கதைக்கும் பொழுது வெங்காய வாடை வீசும்.

ஏனையோர் அவ்வாடையினால் வெறுப்படைய வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. ஏனென்றால், நூற்றுக்குத் தொண்ணூறு சதவீமானவர்கள் வெங்காய வாடையை வெறுப்பாகள்.

இவ்வெங்காயத்தினை காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கும் பொழுது அவ்வுணவு வகைகள் தனிச்சுவை பொற்றுவிடுகின்றன்அது மட்டுமல்ல,இதன் மருத்துவக் குணங்களை எடுத்து நோக்குவோமானால் அது ஒன்றிரண்டு என மட்டுப்படுத்தி விட முடியாது.நிறையவே மருத்துவக் குணங்களை கொண்ட ஒன்று தான் வெங்காயம்.

இது பற்றி மருத்துவத்துiயினர் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றனர்.வெங்காயம் நச்சுக் கிருமிகளைக் கொல்லுவதுடன் உடற்பருமன் ஏற்பட்டு விடாமலும் பாதுகாக்கிறது.இதனைத் தொடர்ச்சியாக உண்டு வருகையில் உங்கள் குரல் வளம் இனிமை பெறும்.அழகிய குரல் வளம் பெற விரும்புகின்றவர்கள் மேற் கூறிய விடயத்தைக் கைக்கொள்ளலாம். கிராணி, விஷக்கடி, குழிப்புண் ஆகியவற்றையும் குணமடையச் செய்வதுடன்,பித்தத்தையும் தணியச் செய்யும் குணமும் இதற்குண்டு மூளை சுறுசுறுப்பாக இயங்கவும்,காக்கை வலிப்பு போன்ற கெட்ட நோய்கள் நீங்கவும்,வெங்காயம் வழி சமைக்கின்றது.

காலையில் ஒன்று அல்லது இரண்டு வெங்காயங்களைத் தனியாகவோ உண்வுகளுடனோ சோர்த்து உண்டு வந்தால் அன்று முழுவதும் உஷ்ணம், வேறு பிணிகள் எம்மை எட்டிக்கூடப்பார்க்க மறுக்கும். கோடை காலத்தில் ஒரு வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிட்டால்,மயக்கம் போன்ற தன்மைகள் எம்மை அணுகாது என மருத்துவர்கள் கருத்துரைக்கின்றனர்.

வெங்காயச் சாறு பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்தாகும். இதனைத் தொடர்ச்சியாக உண்டு வந்தால் பக்கவாதம் ஏற்படாமல் தவிக்க முடியுமென இந்தியாவிலுள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் ஒன்று அறிவித்துள்ளது.

குறிப்பாக புகைபிடிப்பவர்கள் வெங்காயத்தை நாட வேண்டும். காரணம், இப்பழக்கத்தினால் நுரையீரல்,இதய நோய்கள் ஏற்படுகின்றன. நச்சுப் பொருளால் இரத்தம் கெடுகின்றது. இவ்வாறன புகைப் பழக்கத்தையுடையவர்கள் வெங்காயத்தை உண்டு வரலாம்.

இவ்வாறு உண்பதால் புகைப் பழக்கத்தாலேற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க முடியும். மொத்தத்தில் வெங்காயம் ஒரு உணவுப்பொருளாகவும், மருத்துவப் பொருளாகவும் இருந்து வருகின்றது.
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP