சமீபத்திய பதிவுகள்

எம். எம். அக்பர் அவர்களுக்கு பதில்: பைபிள் வார்த்தை பைபிளில் இல்லையா?

>> Thursday, September 18, 2008

எம். எம். அக்பர் அவர்களுக்கு பதில்: பைபிள் வார்த்தை பைபிளில் இல்லையா?





எம். எம். அக்பர் அவர்களுக்கு பதில்
 


பைபிள் வார்த்தை பைபிளில் இல்லையா?
 
 

முன்னுரை:இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்கள், கீழ் கண்ட ஒரு விவரத்தை தன் புத்தகத்தில் எழுதியுள்ளார் என்று ஒரு கட்டுரையை நம் தமிழ் முஸ்லீம்கள் வெளியிட்டு இருந்தார்கள். அதாவது பைபிள் என்ற பெயர் பைபிளில் இல்லை என்று இவர் சொல்லியுள்ளார். ஆனால், இது சரியான தகவலா? அல்லது இது ஒரு பொய்யா? இதை அலசுகிறது இந்தக் கட்டுரை. அதுமட்டுமல்ல, பைபிள் என்ற வார்த்தை குர்‍ஆனில் இருக்குமானால் எப்படி இருக்கும்? மேலும் அறிய படியுங்கள்.
 
 
எம். எம். அக்பர் அவர்கள்:

கிறித்தவர்கள் வேதமாகக் கருதும் பைபிளுக்கு பைபிள் என்ற பெயர் பைபிளில் எங்கும் இல்லை. பல்வேறு ஆசிரியர்களால் தொகுக்கப்ப்டட புத்தகங்களின் ஒரு கோர்வைக்கு பைபிள் என்ற பெயர் பிற்காலத்தில் வழங்கப்பட்டது என்பதே ஆய்வுகள் வழங்கும் சான்று .

source: பைபிள் - ஓரு விரிவான அலசல்



 
 
முஸ்லீம்களின் தவறான புரிந்துக்கொள்ளுதல் #2

Muslim misconception #2
 
"பைபிளைப் பற்றி குர்‍ஆன் குறிப்பிடவில்லை, ஆனால், தீர்க்கதரிசிகளாகிய மோசே, தாவீது, இயேசு போன்றவர்களுக்கு வெளிப்பட்ட வெளிப்படுகளைப் பற்றித் தான் குர்‍ஆன் குறிப்பிடுகிறது"

"The Quran never alludes to the Bible, only the revelation originally given to the Prophets, i.e. Moses, David, Jesus, etc."
 
 
பதில்(Response):

 
இது முஸ்லீம்களின் இன்னொரு ஆதாரமற்ற கற்பனையாகும். முஸ்லீம்கள் இப்படியாக நினைத்துக் கொள்கின்றனர், அதாவது குர்‍ஆனில் "பைபிள்" என்ற வார்த்தை இல்லை என்பதால், யூதர்களும் கிறிஸ்தவர்களும் தேவனுடைய வார்த்தைச் என்றுச் சொல்லும் பைபிளை முஸ்லீம்கள் இறைவனின் வார்த்தை என்று நம்புவதில்லை. ஆனால், "பைபிள்" என்ற வார்த்தையைப் பற்றி கிரேக்க மொழியில் தேடினால், கண்டிப்பாக இந்த வார்த்தை "பிப்லியா - Biblia" என்ற வார்த்தையிலிருந்து வந்தது என்பதை அறிந்துக்கொள்ளலாம், மற்றும் பிப்லியா என்றால் "புத்தகங்கள்" என்று பொருள் ஆகும். பைபிளில் 66 புத்தகங்கள் இருந்த போதிலும் அதனை ஒரு புத்தகமாக தொகுத்த போதிலும், அதன் ஆசிரியர் ஒருவரே, பரிசுத்த ஆவியானவர், மற்றும் மொத்த எழுத்துக்களின் கருப்பொருளும் ஒன்று தான், அது: விடுதலைத் தரும் தேவனின் மேசியாவின் வருகையாகும் (The advent of God's Messiah-Deliverer). மட்டுமல்ல, யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் வேதமாகிய புத்தகத்தை(அரபியில் அல்-கிதாப்) குர்‍ஆனும் குறிப்பிடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
 
 
குர்‍ஆனிலிருந்து ஆதாரங்கள்:
 
 
குர்‍ஆன் 2:113

"The Jews say, `The Christians are not (founded) upon anything.' And the Christians say, `The Jews are not (founded) upon anything.' And yet
THEY READ THE BOOK."

 
யூதர்கள் கூறுகிறார்கள்; 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்) ……..

 
குர்‍ஆன் 3:79

 
"It is not for a man to whom is given the Book and wisdom and prophecy that he should then say to people, `Be worshippers of me in place of God.' But rather, `Be true teachers (rabbáníyín), since you TEACH the BOOK and you STUDY IT EARNESTLY."

 
ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் "அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்" என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது. ஆனால் அவர் (பிற மனிதரிடம்) "நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்" (என்று தான் சொல்லுவார்).
 
 
முஹம்மத் அஸத்(Muhammad Asad) என்ற ஒரு இஸ்லாமிய அறிஞர், குர்‍ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது, "அரபியில் கிதாப்" என்பதற்கு பொருள் "பைபிள்" என்பதை புரிந்துக்கொண்டு, அதன்படி மொழிபெயர்த்துள்ளார்.
 
 
"... And so We have cast enmity and hatred among the followers of the Bible..." S. 5:64 (Asad, The Message of the Qur'an [21], [Dar Al-Andaulus, Gibraltar, rpt. 1994], p. 157)

"If the followers of the Bible would but attain to [true] faith and God-consciousness, we should indeed efface their [previous] bad deeds, and indeed bring them into gardens of bliss;" S. 5:65 (Ibid.)
 
 
ஆக, யூதர்களும் கிறிஸ்தவர்களும் மாற்றப்படாத புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று குர்‍ஆன் குறிப்பிடுகிறது. குர்‍ஆனின் காலத்தில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் கைகளில் இருந்த ஒரு புத்தகம் அது பைபிள் தான், அதே பைபிள் தான் இன்றும் நம்மிடம் உள்ளது. பைபிள் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமோ அதே அர்த்தமுள்ள வார்த்தையைத் தான் குர்‍ஆனிலும் அரபியில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அதாவது அல்-கிதாப், அல்-முகத்தஸ், பரிசுத்த புத்தகம்(al-Kitab al-Muqaddas, the Holy Book). குர்‍ஆனில் கிதாப் என்ற வார்த்தை, முகமதுவின் காலத்திலும், அதற்கு பிறகும் அரபிக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய புத்தகத்தையே அது குறித்தது.
 
 
 
இரண்டாவதாக, கிறிஸ்தவர்களின் கண்ணோட்டத்தின் படி பார்த்தாலும், "பைபிள்" என்ற வார்த்தை கிறிஸ்தவ வேதத்தில் உள்ள வார்த்தையிலிருந்து தான் வந்தது என்பதை காணலாம். "பைபிள்" என்ற வார்த்தையின் மூல வார்த்தை கிரேக்க மொழியின் "பிப்லியா – Biblia (books)" என்ற வார்த்தையாகும். பைபிளுக்கு வெளியே இந்த‌ வார்த்தையை கி.பி. 150ல் 2 க்ளமண்ட் 14:2ல் காணலாம்:

 
"... புத்தகங்கள் (the books -ta biblia) மற்றும் அப்போஸ்தலர்கள் சபை என்பது.... ஆதிமுதல் இருந்ததாக கூறுகிறார்கள்."

 
"பிப்ளியா" என்பது "பிப்ளியன்" என்ற கிரேக்க மொழி வார்த்தையின் பன்மையாகும். "பிப்ளோஸ்" என்ற வார்த்தைக்கு இதற்கு மூல வார்த்தையாகும் ("Biblia" is the plural form of the Greek "biblion", which is itself a diminutive of "biblos").
 
 
மூன்றாவதாக, இந்த வார்த்தை தேவனின் வெளிப்பாடாகிய பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
 
"And truly Jesus did many other signs in the presence of His disciples, which are not written in this book (en to biblio touto)." John 20:30

 
இந்தப் புஸ்தகத்தில்(en to biblio touto) எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். யோவான் 20:30

 
"For it is written in the Book (biblo) of Psalms..." Acts 1:20

 
சங்கீத புஸ்தகத்திலே(biblo): ……..என்றும் எழுதியிருக்கிறது. அப் 1:20

 
"Then God turned and gave them up to worship the host of heaven, as it is written in the book of the Prophets (en biblo ton propheton)..." Acts 7:42

 
…. ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப் பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில்(en biblo ton propheton) எழுதியிருக்கிறதே. அப் 7:43.

 
"For as many as are of the works of the law are under curse; for it is written, `Cursed is everyone who does not continue in all things which are written in the book of the law (en to biblio tou nomou), to do them" Galatians 3:10

 
நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில்(en to biblio tou nomou) எழுதப்பட்டவைகளை யெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. கலாத்தியர் 3:10.

 
"For I testify to everyone who hears the words of the prophecy of this book (tes propheteias tou bibliou): If anyone adds to these things, God will add to him the plagues that are written in this book (en tou biblio); and if anyone takes away words of the book of this prophecy (tou bibliou tes propheteias), God shall take away his part from the Tree of Life, from the holy city, and from the things which are written in this book (en to biblio touto)." Rev. 22:18-19

 
இந்தப் புஸ்தகத்திலுள்ள(tes propheteias tou bibliou) தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில்(en tou biblio) எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின்(tou bibliou tes propheteias) வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில்(en to biblio touto) எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். வெளி 22:18-19
 
 
மேலே நாம் குறிப்பிட்ட வசனங்கள் நமக்கு "பைபிள்" என்ற வார்த்தை கிறிஸ்தவர்களின் பரிசுத்த புத்தகங்களில் இருக்கும் வார்த்தையிலிருந்து வந்தது என்று தெரிவிக்கின்றன. முடிவாக, யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் வேதத்திற்கு பயன்படுத்தப்பட்ட "பைபிள்" என்ற வார்த்தை சரியான ஆதாரங்கள் இல்லாமல் கொடுக்கப்பட்ட பெயர் இல்லை, அதற்கு பதிலாக தேவனின் வெளிப்பாடுகள் அடங்கிய ஆதார வசனங்கள் அப்பெயருக்கு உண்டு என்பதை நான் கண்டுக்கொள்ளமுடியும்.

 
 
 
 
முடிவுரை:அருமையான இஸ்லாமிய அறிஞர் திரு எம். எம். அக்பர் அவர்களே, பைபிள் என்ற வார்த்தை பைபிளில் இல்லை என்ற முடிவிற்கு வர நீங்கள் செய்த ஆராய்ச்சி என்ன? பைபிள் என்றால் புத்தகங்கள் என்று பொருள் என்று தெரிந்துக்கொண்ட நீங்கள், அந்த வார்த்தை பைபிளில் உள்ளதா இல்லையா என்று தேடிப்பார்க்க மாட்டீர்களா? கிரேக்க வார்த்தையின் பொருளை தெரிந்துக்கொண்ட நீங்கள், கிரேக்க புதிய ஏற்பாட்டில் ஒரு முறையாவது தேடிப் பார்க்க தவறிவிட்டீர்களே!?!

 
இதன் தொடர்ச்சியாக, அடுத்த கட்டுரையில், எம். எம். அக்பர் அவர்கள் சொல்லியுள்ள "புர்கான்" என்ற அரபி வார்த்தையைப் பற்றி அலசுவோம். இந்த வார்த்தை வரும் இடங்களிலெல்லாம் இது குர்‍ஆனையே குறிக்குமா? அல்லது இந்த புர்கான் என்ற வார்த்தை பைபிளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? இவ்வார்த்தையை பற்றி இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து என்ன? என்பதை கர்த்தருக்கு சித்தமானால் அலசுவோம்.
 
 
எம். எம். அக்பர் அவர்களுக்கு எங்களின் இதர பதில்களை படிக்க சொடுக்கவும்:

இஸ்லாம் கல்வி தள கட்டுரைகளும், ஈஸா குர்ஆன் பதில்களும்

 
 
Isa Koran Home Page Back - Islam Kalvi & Mr. M.M. Akbar's Rebuttals Index  Page
 

StumbleUpon.com Read more...

அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: ஐ.நா. கண்டனம்!

ஏமன் தலைநகர் சனாவில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பயங்கரவாத நடவடிக்கைகள் எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவற்றை குற்ற நடவடிக்கையாகவே கருத முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தூதரகத்தின் மீதும், அதில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மீதும் நடத்தப்படும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் பன்னாட்டு விதிகளின் படி ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது நேற்று நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல் அந்நாட்டு பாதுகாப்புப் படையை சேர்ந்த ஆறு வீரர்கள், கேரளாவைச் சேர்ந்த ராணி கிருஷ்ணன் நாயர் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர்.
 

StumbleUpon.com Read more...

தீவிரவாதிகள் பிடித்த 300 குழந்தைகளை பொதுமக்கள் மீட்டனர்!

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள அரசு பள்ளியில், தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட 300 குழந்தைகளை, அப்பகுதி பொதுமக்கள் போராடி மீட்டுள்ளனர்.

அம்மாகாணத்தின் திர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் அதிரடியாக நுழைந்த 3 தீவிரவாதிகள் அங்கிருந்த 300 பள்ளி சிறுவர்களை சிறைப் பிடித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கடத்தப்பட்ட குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.


மக்களுக்கும், தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், ஒருவன் தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் எந்தவித காயமும் இன்றி மீட்கப்பட்டு விட்டதாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
 

StumbleUpon.com Read more...

ஐ.சி.எல்.-ல் இணைந்த வங்கதேச வீரர்களுக்கு தடை!

 
lankasri.comஐ.சி.எல். கிரிக்கெட்டில் டாக்கா வாரியர்ஸ் என்ற புதிய அணி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த அணியில் சேர்ந்த 13 வங்கதேச வீரர்களுக்கும் 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.

இந்த 13 வீரர்களும் வங்கதேசம் தொடர்பான எந்த உள் நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க முடியாது. மேலும் வங்கதேச மைதானங்களிலும் இவர்கள் நுழைய அனுமதி கிடையாது, அங்கிருக்கும் எந்த ஒரு கிரிக்கெட் சார்ந்த வசதிகளையும் இவர்கள் பயன்படுத்த முடியாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதே தடை உத்தரவு கிரிக்கெட் விளையாடாத பணியாளர்களுக்கும் பொருந்தும், ஐ.சி.சி. அல்லது வங்கதேச கிரிக்கெட் வாரியம் அங்கீகரிக்காத எந்த வித அமைப்பில் இவர்கள் சேர்ந்து பணியாற்றினாலும் தடை செய்யப்படுவார்கள் என்று வங்கதேச வாரியம் எச்சரித்துள்ளது.

முன்னாள் கேப்டன் ஹபிபுல் பஷார் தலைமையில் 13 வீரர்கள் தடை செய்யப்பட்ட ஐ.சி.எல். கிரிக்கெட்டில் சேர்ந்தனர். இதில் பெரும்பான்மையான வீரர்கள் தற்போதைய வங்கதேச கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிரிந்து போன வீரர்களை மீண்டும் சேர்க்க பணம் தருவதாகக் கூட கூறிப்பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பணத்திற்காக ஐ.சி.எல். செல்லவில்லை என்று பஷாருடன் சென்ற அனைத்து வீரர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்

 

 

StumbleUpon.com Read more...

போலி பாபாவின் திறந்தவெளி போலிஅறுவை சிகிச்சை அம்பலம்-Jinn Operation - The truth ExposedDetailsCommentsMore from userJinn Operation - The truth Exposed

StumbleUpon.com Read more...

இலங்கை:கஞ்சிகுடிச்சாறு பகுதியில் புலிகள் தாக்கியதில் 3 அதிரடிப்படை வீரர் காயம்

கஞ்சிகுடிச்சாறு பகுதியில் புலிகள் தாக்கியதில் 3 அதிரடிப்படை வீரர் காயம்

 
அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் சனியன்று புலிகள் நடத்திய பொறிவெடித் தாக்குதலில் அதிரடிப்படைவீரர் மூவர்  காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படைவீரரை  இலக்கு வைத்து ஊடுருவிய  புலிகள் சிறப்பு அணியொன்று  இத்தாக்குதலை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில்  அதிரடிப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் அடிக்கடி தாக்குதல்  இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

StumbleUpon.com Read more...

ஒரிசா: இந்து மதவெறி பயங்கரவாதத்தின் இரண்டாவது பரிசோதனைச் சாலை

 

PJ_2008_02.jpg

குஜராத் தேர்தலில் பார்ப்பன பாசிச மோடியின் வெற்றியை குறித்து பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் எழுதிய ஒரு கட்டுரையில், ""குஜராத் இனிமேலும் ஒரு மாநிலமல்ல, அது ஒரு சித்தாந்தம்'' எனக் குறிப்பிட்டார். "இனிமேல்' என்பது 2002லேயே துவங்கி விட்டது. மேற்கு இந்தியாவில் நிலைபெற்றுள்ள அப்பாசிச சித்தாந்தத்தின் இன்னொரு சோதனைச்சாலை கிழக்கு இந்தியாவில், ஒரிசாவில் "வளர்ந்து' வருகிறது.

 

குஜராத் இனப் படுகொலையை இன்னமும் "சூறாவளி' என்றே குஜராத்திகள் அழைக்கிறார்கள். அத்தகையதொரு சூறாவளியை, புயல், வெள்ளம் என இயற்கைச் சீற்றங்களுக்காக மட்டுமே பெரும்பாலும் செய்தி ஊடகங்களில் இடம் பெறும் ஒரிசா, கடந்த ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில் கண்டது. இதே ஒரிசாவில், 1999இல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரகாம் ஸ்டெய்ன்ஸ் என்ற கிறிஸ்தவ சேவை நிறுவன ஊழியரும், அவரது இரு பச்சிளம் பாலகர்களும் ஒரு வேனில் வைத்து உயிரோடு கொளுத்தப்பட்டதும், 2002இல் ஒரிசா சட்டசபைக்குள்ளேயே சங்கப் பரிவார கும்பல் புகுந்து எதிர்க்கட்சியினரைத் தாக்கியதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அடுத்த படிநிலை வளர்ச்சியாக, கந்தமால் மாவட்டம் முழுவதும் தலைவிரித்தாடியது "சூறாவளி'!

 

கந்தமால் மாவட்டம் தாழ்த்தப்பட்ட பனா கிறிஸ்தவர்களும், கந்தா பழங்குடியினரும் வசித்து வரும் மலைப்பகுதிகள் அடங்கிய பின்தங்கிய மாவட்டமாகும். கடந்த பத்தாண்டுகளாகவே பழங்குடி மக்கள் அதிகம் நிறைந்த ஒரிசாவில், கட்டாய மதமாற்ற எதிர்ப்பு என்ற நச்சுப் பிரச்சாரத்தை முன்வைத்து, விசுவ இந்து பரிசத் (வி.இ.ப.), வனவாசி கல்யாண் ஆசிரமம் (வ.க.ஆ.), பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் இடைவிடாத மதவெறிப் பிரச்சாரத்திலும் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளன.

 

கடந்த டிசம்பர் 20ஆம் தேதியன்று அம்மாவட்டத்திலுள்ள பாமுனிகான் என்ற சிற்×ரில், தாழ்த்தப்பட்ட பனா கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக ஊரை அலங்கரிக்கத் தொடங்கியதற்கு, வி.இ.ப. எதிர்ப்பு தெரிவித்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தடைகளை ஏற்படுத்துவோம், கிறிஸ்தவர்களுக்குப் பாடம் கற்பிப்போம் எனப் பகிரங்கமாக அறிவித்தது. அதன்படி, டிசம்பர் 24ஆம் தேதியன்று, கோடாரிகள், கழிகள், நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகளோடு, பாமுனிகான் வாரச் சந்தையில் கூடிய 3000க்கும் மேற்பட்ட வி.இ.ப. குண்டர்கள் கடைகளை மூடுமாறு வியாபாரிகளை அச்சுறுத்தினர். இதனை அங்கிருந்த தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ இளைஞர்கள் எதிர்க்க, கல்லெறி சம்பவங்கள் நிகழ்ந்தன. வி.இ.ப. குண்டர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் இரு இளைஞர்கள் காயமடைந்தனர். கிறிஸ்தவர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. கிறிஸ்துமஸ் பந்தல் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

 

மறுநாள் சில வி.இ.ப. குண்டர்கள் கைது செய்யப்பட்டனர். உடனடியாக, 1000க்கும் மேற்பட்ட வி.இ.ப., பஜ்ரங்தள் வெறியர்கள் பாமுனிகான் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போலீசை மிரட்டினர். தீ வைப்புகளும், தாக்குதல்களும் தொடங்கின. இந்நிலையில் லக்கானந்தா சரஸ்வதி எனும் வி.இ.ப. சாமியாரின் சில ஆதரவாளர்கள், தாசிங்பதி எனும் ஊரின் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நிறுத்துமாறு தகராறு செய்தனர். எண்ணிக்கையில் அதிகமாயிருந்த கிறிஸ்தவர்கள் திருப்பித் தாக்கவே, பின்வாங்கி ஓடினர்.

 

சிறு கீறல்கூடப் படாமல், தாரிங்பதி வட்டத்தை அடைந்த லக்கானந்தா சரஸ்வதி, தான் தாக்கப்பட்டதாக மருத்துவமனையில் சென்று அமர்ந்து கொண்டான். உடனடியாக சாமியார் தாக்கப்பட்டதாக வதந்தி தொற்றிக் கொண்டது. அங்கே கூடிய பத்திரிகையாளர்கள் போலீசு முன்னிலையிலேயே, ஏற்கெனவே தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கியிருந்த தனது ஆதரவாளர்களைத் தூண்டும் விதத்தில் அவன் செல்போனில் வெறியை கக்கினான். ""நீங்கள் வெறுமனே டயர்களை எரித்துக் கொண்டிருக்கிறீர்கள். எத்தனை கிறிஸ்தவ வீடுகளும் தேவாலயங்களும் கொளுத்தப்பட்டிருக்கின்றன? கலகமில்லாமல் அமைதி இல்லை. மோடி குஜராத்தில் கலகம் செய்தார். அதனால்தான் அங்கே அமைதி இருக்கிறது.''

 

இதனை ஒரு உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். வெறியன் ஒளிப்பதிவு செய்ய, உடனடியாக கொந்தளிப்பான சூழ்நிலையில் லக்கானந்தாவின் வெறிக் கூச்சல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள்கூட இன்றி, லக்கானந்தா தாக்கப்பட்டார் என ஈடிவியின் ஒரியா மொழி சேனல் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது.

 

இதனைத் தொடர்ந்து, ஏறத்தாழ 72 மணி நேரத்திற்கு பாமுனிகான், தாரிங்பதி, புல்பானி, ஜிஞ்சிர்குடா, பல்லிகுடா முதலான ஒட்டுமொத்த கந்தமால் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான வி.இ.ப. குண்டர்களின் காட்டுமிராண்டித் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. 5 பெரிய தேவாலயங்கள், 48 கிராமப்புற தேவாலயங்கள், 5 கான்வெண்டுகள், 7 விடுதிகள், 7 தேவாலய நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு, முற்றிலுமாகத் தரைமட்டமாக்கப்பட்டன. திக்காபாலி எனுமிடத்தில் காவல் நிலையமே சூறையாடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 217இல் பெரும் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு மாவட்டமே தனித் தீவானது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ மக்கள் குடும்பங்களோடு காடுகளுக்குத் தப்பியோடினர். பல நாட்களுக்கு உணவின்றி, கடும் குளிரில் காடுகளில் தலைமறைவாக குழந்தைகளோடு பரிதவிக்க விடப்பட்டனர். 11 பேருக்கும் மேல் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தள்இன் பத்தாண்டு நிறைவையொட்டி புவனேஸ்வருக்கும், வேறு சில நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு பணிக்கு போலீசு சென்று விட்டதால்தான், இவ்வெறியாட்டத்தை தடுக்க இயலவில்லையென முதலமைச்சர் நவீன் பட்நாயக் நாடகமாடினார். ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க.வோ கட்டாய மதமாற்றம்தான் இவ்வன்முறை நிகழக் காரணமென்றும், அங்கே அமலில் இருக்கும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தில் மேலும் கடுமையான விதிகள் கொண்டு வர வேண்டுமென்றும் கூச்சல் போட்டது. வழக்கம் போல நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, ஆளும் கட்சி இப்பிரச்சினையைக் கை கழுவியது.

 

இம்முறையும், லக்கானந்தா தாக்கப்பட்டதற்கு "இயல்பான எதிர்வினையாகவே' வன்முறை நிகழ்ந்ததாக தனது வழக்கமான "வினைஎதிர்வினை' வாதத்தை வி.இ.ப. முன்வைத்து நியாயம் கற்பித்தது. ஆனால், இத்தாக்குதல்கள் குஜராத்தைப் போன்றே திட்டமிட்ட தயாரிப்புகளோடு கனகச்சிதமாக நிறைவேற்றப்பட்டன என்பதுதான் உண்மை. டாக்டர் ஜான் தயாள் தலைமையிலான உண்மை அறியும் குழு சமர்ப்பித்துள்ள அரசுசாரா வெள்ளை அறிக்கையானது, டிசம்பர் 9ஆம் தேதியன்றே பாமுனிகானில் லக்கானந்தா நடத்திய இரகசியக் கூட்டம், டிசம்பர் 2123 வரை பாபா ராம்தேவின் "யோகா பயிற்சி', டிசம்பர் 22ம் தேதியன்று அனைத்துப் பஞ்சாயத்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் இரகசியக் கூட்டம் எனத் திட்டமிட்ட முறையில் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் நடந்ததை சுட்டிக் காட்டுகிறது. இக்கலவரத்தில் காலாட்படையாக நின்று தாக்குதல் தொடுத்தவர்கள் கந்தா பழங்குடியினர்.

 

2002இல் குயி மொழி பேசும் மக்கள், அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் என மத்திய அரசு வரையறுத்தது. தாழ்த்தப்பட்ட பனா கிறிஸ்தவர்கள், கந்தா பழங்குடியினர்கள் இருவருமே குயி மொழிதான் பேசுகின்றனர். ஆனால், பனா கிறிஸ்தவர்களைப் பழங்குடியாக அங்கீகரிக்கக் கூடாது என கந்தா பழங்குடியினரின் குயி சமாஜ் அமைப்பு, திட்டமிட்டு டிசம்பர் 25,26 தேதிகளில் பந்த் அறிவித்தனர். வி.இ.ப.வின் தூண்டுதலின் பேரிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக கந்தா பழங்குடியினரை "இந்துமயமாக்கும்' வேலைகளில் ஈடுபட்ட வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் "சேவை', இத்தாக்குதல்களில் அறுவடை செய்யப்பட்டது.


பழங்குடியினரை ஏமாற்றி, மிஷனரிகள் கட்டாய மதமாற்றம் செய்வதாக வெறிக்கூச்சல் போடும் சங்கப் பரிவாரக் கும்பல்தான், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் 340 ஏகலைவன் கல்விச் சாலைகள், வனவாசி நல அமைப்புகள், விவேகானந்தா கேந்திரங்கள், சேவா சமிதிகள் என பல வண்ணப் பெயர்களில் இயங்குகிறது. இவ்வமைப்புகள் அனைத்தும் பழங்குடியினரின் மரபுகள், வழிபாட்டு முறைகளை அழித்து, அவர்களை இந்துமயமாக்கும், சமஸ்கிருதமயமாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

 

ஒரிசா முழவதும் 6,000 ""ஷாகா''க்களில் 1.5 லட்சம் பேரை அணிதிரட்டியுள்ளது ஆர்.எஸ்.எஸ். ஒரிசாவின் பஜ்ரங் தள் தலைவன் சுபாஷ் சௌகான், ஒரிசா இரண்டாவது இந்து ராஷ்டிரம் என எக்காளமிடுகிறான். பசு வதைத் தடைச் சட்டம், கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் என மேலிருந்தும், வெள்ள நிவாரண நிதி என்ற போர்வையில் வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களின் நிதியோடு இயங்கும் வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற பல அமைப்புகள் கீழிருந்தும் இயங்க, ஒரிசா சோதனைச்சாலை மேலும் பல பரிசோதனைகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறத்தில் சத்தமின்றி கலிங்கா நகர் நிலப் பறிப்பு முதல் காடுகள், கனிமவளங்கள் அனைத்தையும், டாடா, வேதாந்தா, எஸ்ஸார் போன்ற இந்தியத் தரகு முதலைகள் சுற்றி வளைத்து ஏப்பமிட்டு வருகின்றன. மறுகாலனியமும், பார்ப்பன பாசிசமும் தட்டிக் கேட்பாரின்றி தலைவிரித்தாடும் ஒரிசா, "வளர்ந்து' வரும் குஜராத் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?


· கவி

 

http://www.tamilcircle.net/index.php?view=article&catid=68%3A2008&id=951%3A2008-04-27-09-26-08&option=com_content&Itemid=30

StumbleUpon.com Read more...

அயோத்தி : ராம ஜென்ம பூமியா? கிரிமனல் சாமியார்களின் கூடாராமா?

 

சங்கர மட முதலாளி ஜெயேந்திரன், அடியாள் கும்பலுக்குப் பணம் கொடுத்து சங்கரராமனைப் போட்டுத்தள்ளிய வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் யாருக்கும் மறந்திருக்காது. கொலைகாரர்களோடு நெருங்கிப் பழகிய ஜெயேந்திரன் மிச்ச நேரங்களில் சினிமா பக்தைகளுடன் ஆன்மிகத்தை ஆய்வு செய்வதும், அதுவும் போக மேல்மட்டத் தகராறுகளை தீர்க்கும் மேல்கட்டை பஞ்சாயத்தையும் செய்து வந்தார். இந்த ஆன்மீக அவஸ்தைகளைத்தான் ரவுடிகளும் செய்து வருகின்றனர் என்றாலும், அவர்களுக்கு ஜெயேந்திரர் கையில் வைத்திருப்பது போன்ற தண்டமும், லோகக் குரு என்ற புனிதப் பட்டமும் கிடையாது.

இருந்தாலும், அவாள்களைப் பொருத்தவரை, சங்கர மடம் என்பது என்னதான் கிரிமினல் வேலை செய்து வந்தாலும் புனிதத்தை இழக்கக்கூடாது; ஏதாவது செய்து அந்தப் புனிதத்தைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்பதில் குறியாயிருக்கிறார்கள்.
இராமன் பிறந்த அயோத்தியில் இந்த ஜோடனைகள் எதுவுமில்லை. அங்கே மடங்களும் மாஃபியாக்களும் வேறுபடுவதில்லை என்றால் உங்களுக்குச் சற்று ஆச்சரியமாயிருக்கலாம். எனினும் உண்மை அதுதான். அயோத்தி நகரில் மட்டும் 8,000த்திற்கும் மேலும், பீகாரில் 7,000த்திற்கு அதிகமாகவும் மடங்கள் உள்ளன. பெட்டிக்கடைகளை விட மடங்கள் அங்கே அதிகமாக இருப்பதன் காரணம், இந்தியா முழுவதிலிருந்தும் வரும் சுற்றுலா பக்தர்களை வைத்து அங்கே விரவியிருக்கும் பக்தித் தொழில்தான். பாபர் மசூதியை இடித்து இராமனுக்கு கோவில் கட்டப்போவதாக சங்க வானரங்கள் ஊர் ஊராக ஓதியிருப்பதால், அயோத்தி '90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமாகிவிட்டது. அங்கு இருக்கும் மடங்களில் மட்டும் 40,000 மடாதிபதிகள், சாமியார்கள் மற்றும் பூசாரிகள் வேலை வெட்டியில்லாமல், நெய்ச் சோறோ, நெய் சப்பாத்தியோ தின்றுவிட்டுக் காலம் தள்ளுகிறார்கள். இவ்வளவு சாமியார்கள் இருப்பதால் அங்கே எங்கு பார்த்தாலும் ஆன்மீகம் கமழுமென்றுதான் பக்தகோடிகள் எதிர்பார்ப்பார்கள்.


சுற்றுலா பக்தர்கள் கொட்டும் பணம் எனும் லவுகீகம் உப்புச்சப்பற்ற அந்த ஆன்மீகத்தைக் கொள்ளை கொண்டுவிட்டபடியால், அயோத்தி சாமியார்களுக்கிடையே குழாயடிச் சண்டையல்ல, கொலைவெறிச் சண்டையே நடக்கிறது. சாமியார்களில் பீகாரிலிருந்து வந்த பார்ப்பன மற்றும் பூமிகார் மேல்சாதியைச் சேர்ந்த சாமியார்கள் மற்றும் மடாதிபதிகள் 25,000 பேர் இருக்கின்றனர். பீகாரைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காக இந்தியா முழுவதும் நாடோடிகளாக அலையும் போது, பார்ப்பன மேல்சாதி தொந்திகள் மட்டும் அயோத்தியில் நோகாமல் கல்லா கட்டி காலம் தள்ளுகின்றனர்.


திருவாடுதுறையின் முன்னாள் சின்ன ஆதீனம் தன்னைக் கொல்ல முயன்றதாக தற்போதைய பெரிய ஆதீனம் குற்றம் சாட்டியிருந்த கதையெல்லாம் அயோத்தியைப் பொருத்தவரை ஒன்றுமேயில்லை. அங்கே மடங்களின் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கு பீகாரிலிருந்து அடியாள் கும்பல்கள் மடாதிபதிகளால் வரவழைக்கப்படுகின்றன. போலீசின் பதிவுப்படி கடந்த பத்தாண்டுகளில் உ.பி. மற்றும் பீகார் மாநிலத்தில் மட்டும் இந்த சொத்துப் பிரச்சினைகளுக்காக நடந்த மோதலில் 150 மடாதிபதிகள் அல்லது சாமியார்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது ஒன்றும் ஐ.எஸ்.ஐ.யோ, லஷ்கர்இதொய்பாவோ செய்த சதியல்ல. காவி உடுத்திய சாதுக்கள் தங்களுக்கிடையே நடத்திய பச்சைக் கொலைகள். அயோத்தியில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில் 20 சாமியார்கள் சக சாமியார்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இராம ஜென்ம பூமிக்கே இதுதான் கதியெனும்போது, இந்தியா முழுவதும் இராமராஜ்ஜியம் வந்தால் நம் கதி?


அயோத்தி நகரில் மட்டும் எல்லாம் வல்ல இறைவனை நம்ப முற்றும் துறந்திருக்கவேண்டிய இம்முனிவர்களில் 350 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கிறார்களாம். ஒரு கையில் தண்டம், மறுகையில் துப்பாக்கி! முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் உ.பி.மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்த சமயத்தில், பைசலாபாத் மாவட்ட நிர்வாகம் குற்றப் பின்னணி உள்ளோரின் பட்டியலைத் தயாரித்த போது, அதில் இடம்பெற்ற அயோத்தி சாமியார்களின் எண்ணிக்கை 86! குற்றங்களைச் செய்து விட்டு மடங்களில் புகுந்துவிட்டால் போலீசு வரமுடியாது என்ற நிலைமையே இதன் பின்னணி. அப்படி போலீசு புகுந்து சிதம்பரத்தில் தீட்சிதர்களைக் கொத்துக் கொத்தாக தூக்கியது போல செய்தால், விசுவ ஹிந்து பரிஷத் உடனே இந்து மதத்திற்கு வந்த அநீதி என்று களமிறங்கிவிடும். எனவே, சாதா ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் போலீசு, சாமியார் ரவுடிகளைக் கைது செய்யவே அஞ்சுகிறது!


ஆர்.எஸ்.எஸ்இன் இராம ஜென்ம பூமி இயக்கத்தால் இந்து மதவெறியர்களுக்குக் கிடைத்த அரசியல் ஆதாயத்திற்கு நிகரான செல்வாக்கை, இந்தக் கிரிமினல் சாமியார்களும் பெற்றிருப்பதால் மாவட்ட நிர்வாகம் மடங்களுக்குள் நுழைவதற்குத் தயங்குகிறது. சமீபத்தில் அப்படி ஒரு கிரிமினல் சாமியார் கும்பலைத் தேடி உ.பி.மாநில அதிரடைப்படை நுழைந்த போது இந்து மதவெறியர்கள் எதிர்த்தார்கள். அதிரடிப் படையே தேடுமளவுக்கு அந்தக் கும்பல் என்ன குற்றம் செய்தது? கோண்டா ஊரில் உள்ள ஒரு கிராம வங்கியில் பத்து இலட்சம் ரூபாயை மடாதிபதி அருண் சாது கும்பல் கொள்ளையடித்துவிட்டு மடங்களில் தஞ்சம் அடைந்திருக்கிறது. இதே கும்பல் மிரட்டிப் பணம் பறிப்பதும், முக்கிய நபர்களைப் பிணையக் கைதிகளாகக் கடத்திப் பணம் பறித்து வந்ததும் தற்போது அம்பலமாயிருக்கிறது. கோவில் நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்கு பிற மடாதிபதிக் கும்பல்களுடன் இந்த அருண் சாது கும்பல் அயோத்தியில் நடத்திய சண்டைகள் அங்கே பிரபலம்.


இந்தச் சொத்துப் பிரச்சினைகளுக்காக சாமியார் கும்பல்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதும், குண்டு வீசிக் கொள்வதும் நிறைய நடந்திருக்கின்றன. பல கோவில் பூசாரிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அயோத்தியில் இந்தச் சண்டைகள் முடிவின்றி நடைபெறுகின்றன. அந்த வட்டாரத்தில் நடைபெறும் குற்றங்களின் மையமாக அயோத்தி மடங்கள் இருக்கின்றன. பல மடாதிபதிகள் பீகாரிலிருந்து அடியாட்களை வரவழைத்து மடங்களில் நிரந்தரமாக வைத்துக் கொள்வதும், பின்னர் தொழில்முறைக் குற்றங்களைச் செய்து பணம் சம்பாதிப்பதையும் தொழிலாகச் செய்து வருகின்றனர். சியாம் மஹாராஜ் எனும் மடாதிபதியின் கும்பல் கான்பூர் தொழிலதிபர் ரவீந்தர் கேடியாவை கடத்தி 18 இலட்சம் பெற்றுக் கொண்டே விடுவித்திருக்கிறது.


இவையெல்லாம் போக இராம ஜன்மபூமி ட்ரஸ்ட்டின் தலைவரான இராம் விலாஸ் வேதாந்தியைப் பற்றி புதிய ஜனநாயகத்தில் முன்னர் எழுதியிருந்தோம். சேது சமுத்திரப் பிரச் சினைக்காக கருணாநிதியின் தலையை வெட்டச் சொன்ன இவர்தான், முசுலீம்களுக்கு எதிரான துவேசத்தைப் பிளறுவதில் பிரபலமானதோடு ஹவாலா மோசடிகளுக்கும் பெயர் பெற்றவர். இவர் சில்லறைச் சாமியார் இல்லையென்பதால், மேல்மட்ட அளவில் முதலாளிகளின் கருப்புக் கோடிகளை வெள்ளையாக மாற்றுவது முதலான சேவைகளைப் பக்த கோடிகளுக்கு கச்சிதமாக செய்து வருகிறார்.


அயோத்தியின் கிரிமினல் புராணம் இதுதான். இந்தச் சாமியார்களை வைத்துதான் விஸ்வ இந்து பரிஷத் தர்மசன்சாத் எனும் மடாதிபதிகளின் பேரவையைக் கூட்டி பாபர் மசூதி இடிப்பு முதலான அக்கிரமங்களுக்கு நாள் குறிக்கிறது. காசு பணத்துக்காகத் தங்களுக்குள்ளேயே இரத்தக் கவிச்சியோடு கொலை செய்யும் இவர்கள்தான் இந்து மதவெறியைக் கிளப்புவதையும், முசுலீம் மக்களை வன்மம் கொண்டு மிரட்டுவதையும் செய்கிறார்கள் என்பது முக்கியமானது. வன்முறையும், துவேசமும், வெறியும் இவர்களது தொழிலிலும், இரத்தத்திலும் கலந்திருக்கிறது. இந்த காவிக் கயவர்களைத்தான் இந்து தர்மத்தின் இரட்சகர்களாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் முன்னிறுத்துகிறது. சாதியக் கொடுங்கோன்மையை ஆன்மாவாக வரித்திருக்கும் இந்து தர்மத்திற்கு இந்த ஆன்மீக அடியாட்கள் பொருத்தமாகத்தான் இருக்கிறார்கள்.


வட இந்திய சாமியார்கள் என்றால் ஏதோ கஞ்சாவைப் புகைத்துக் கொண்டு, அரைமுக்கால் நிர்வாணத்தில் ஜடா முடியோடு அலைபவர்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சாதா ரவுடிகளையாவது சட்டென்று அடையாளம் கண்டு கொள்ளலாம். ஆனால் காவி ரவுடிகள், மடத்துப் பெருச்சாளிகளாக ஊர் சொத்தைக் கொள்ளையடிப்பதை அவ்வளவு சுலபத்தில் அடையாளம் காண முடியாது. எனினும் அயோத்தி புராணம் காவித் திரையை விலக்கி, மடாதிபதிகள் என்று அழைக்கப்படும் ரவுடிகளைத் தெளிவான விசுவரூப தரிசனமாகக் காட்டுகிறது. பக்த கோடிகள் முட்டாள்தனமாக கன்னத்தில் போட்டுக்கொள்ளாமல் கம்பை எடுத்தால் அயோத்தி முதல் காஞ்சி வரை அலப்பரை செய்யும் ஆன்மீக ரவுடிகளை ஒழித்துக் கட்டலாம்.


· பச்சையப்பன்

 

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3643:2008-09-06-19-13-09&catid=68:2008&Itemid=30

StumbleUpon.com Read more...

ரூ. 41 லட்சம் அபராதம் செலுத்தாததால் அக்தரின் தடை நீடிப்பு

 
lankasri.comபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர்.ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்ததால் தடையும், அபராதமும் விதிக்கப்பட்டது.

பின்னர் அவர் மீதான தடை நீக்கப்பட்டது. ஆனால் அபராத தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. சோயிப் அக்தர் தனக்கு விதிக்கப்பட்ட ரூ. 41 லட்சம் அபராத தொகையை இதுவரை செலுத்தவில்லை.

அபராத தொகையை செலுத்தாததால் அக்தரின் தடை நீடிக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சட்ட ஆலோசகர் ரிஸ்வி தெரிவித்தார். அபராத தொகையை செலுத்தாத வரை அவர் உள்ளூரில் 4-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் போட்டியில் ஆட அனுமதிக்கப்படமாட்டாது.

பாகிஸ்தானில் முதல் முறையாக நடைபெறும் 20 ஓவர் உள்ளூர் போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் எந்த அணியிலும் அக்தர் பெயர் இடம் பெறவில்லை.

 

 

StumbleUpon.com Read more...

இந்திய சுற்றுப்பயணத்தின்போது மனைவி, காதலியை அழைத்து செல்ல ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு தடை

 
lankasri.comரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வருகிற 21-ந்தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 9-ந்தேதி பெங்களூரில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பயணத்தின் போது மனைவி மற்றும் காதலிகளை அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பாதுகாப்பு பிரச்சினை காரணம் கிடையாது. ஆஸ்திரேலியாவின் கொள்கை முடிவாகும்.

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மீடியா மானேஜர் பிலிப் போப் கூறியதாவது:-

வீரர்கள் தங்கள் மனைவியையோ அல்லது காதலியையோ அழைத்து செல்ல நாங்கள் குறிப்பிட்ட காலம் வைத்திருக்கிறோம். அந்த சமயத்தில் தான் வீரர்கள் தங்களின் துணைவியை அழைத்து செல்லமுடியும்.

வழக்கமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே (மெல்போர்ன்) டெஸ்ட் மற்றும் சிட்னி டெஸ்ட் நடைபெறும். எனவே இந்த பண்டிகை காலத்தில் வீரர்கள் தங்களது குடும்பத்திருடன் நேரத்தை செலவிட்டு கொள்வார்கள்.

இது தவிர ஆண்டுக்கு ஒரே ஒரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு மட்டும் தங்கள் துணையை அழைத்து செல்ல ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஆண்டு (2007-ம் ஆண்டு) வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது வீரர்கள் தங்களது மனைவி மற்றும் காதலிகளை கூட்டிச் சென்றிருந்தார்கள்.

அடுத்து இந்த சீசனில் (2008-09) நீண்ட கால சுற்றுப்பயணமான தென்ஆப்பிரிக்க தொடரின் போது மனைவி மற்றும் பெண் தோழிகளை அழைத்து செல்ல வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் இந்திய சுற்றுப்பயணத்தின் போது வீரர்களுடன் அவர்களை அழைத்துச் செல்ல எந்த திட்டமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய அணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 65 நாட்கள் சுற்றுப்பயணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று 3 டெஸ்ட், இரண்டு 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்தியாவில் இது போன்ற பாலிசி கிடையாது. ஷேவாக் உள்பட சில இந்திய வீரர்கள் அனைத்து வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் தங்களது மனைவியை அழைத்து சென்று வருகின்றனர்.

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1221632124&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

சாம்பியன்ஸ் லீகில் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

lankasri.comதற்போது உலகின் முன்னணி கால்பந்து நட்சத்திரமாக திகழும் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடட் அணிக்காக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகளுக்கு திரும்புவார் என்று மான்செஸ்டர் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சீசனில் 42 கோல்களை அடித்து சிறந்த வீரர் விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, வில்லா ரியல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கணுக்காலில் காயமடைந்தார்.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீகின் நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் யுனைடட், சமீபத்தில் நடந்த இங்கிலாந்து லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியிடம் தோல்வி தழுவியது.

இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடைந்த தோல்விகளின் நினைவை அழிக்க கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வருகைக்காக மான்செஸ்டர் யுனைடட் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

 

 

StumbleUpon.com Read more...

உங்களுக்கு இதயம் இருக்கிறதா?

உன்னையே நீ அறிவாய்...

உங்களுக்கு இதயம் இருக்கிறதா? - கவிஞர் செவ்வியன்

 

நீங்கள் தவறு செய்யும் போதும், பிறர்க்குத் தீங்கிழைக்கும் போதும், ஒப்புரவாளர்கள் உங்களைப் பார்த்துத் தொடுக்கும் வினா உங்களுக்கு இதயம் இருக்கிறதா, என்பதாகும்.

என் நிறம் கருஞ்சிவப்பு; கூம்பு வடிவம்; கவிழ்ந்த தாமரை மொட்டு போல் இருப்பேன். என் பெயர் தான் இதயம். கரு உருவாகி 21ஆம் நாள் என் பணியைத் தொடங்கும் நான், உங்கள் உயிர் உங்கள் உடலை விட்டுப் பிரியும் வரை, என் பணியை நிறுத்துவதே இல்லை. நீங்கள் தூங்கும்போதுகூட, அல்லும் பகலும் உழைத்துக் கொண்டே இருக்கும் ஓயாத உழைப்பாளி நான்.

உங்களின் மார்பில் நடுநாயகமாக அமர்ந்திருக்கும் என்னை எலும்புகள் புடை சூழ்ந்தவாறு எனக்குப் பாதுகாப்பளிக்கின்றன. உங்கள் இடது விலாப்பக்கம் கைகளை வைத்துப் பார்த்தால், நான் துடிப்பதை நீங்கள் உணர்வீர்கள். 350 கிராம் எடையுள்ள நான் 15 செ. மீட்டர் நீளமும் 10 செ.மீட்டர் அகலமும், உங்கள் எடையில் 1/200 பங்கும் இருப்பேன்.

காதல் தூதுவன், கற்பனைச் சிறகடிப்பது, பாசம் பொழிவது, அன்பு காட்டுவது, பிறர்மீது இரக்கங்கொள்வது ஆகியவைகள் என் கடமை கள் அல்ல. இவை மூளையின் செயற்பாடுகள். உடல் முழுவதும் இரத்தம் செல்வதற்காக, இரத்தத்தை வேகமாகக் குழாய்களில் இறைப் பதே என் பணி.

ஒரு நாளைக்கு நான் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா? 90,000 கி.மீட்டர் (பூமியின் வட தென் துருவச் சுற்றளவு 40,000 கி.மீட்டர் மட்டுமே). பூமியை இரண்டேகால் முறை சுற்றி வருவதற்கு என் பயணம் சமமாகும். உங்கள் உயரம் வேறுபடலாம். ஆனால் உங்கள் உடலுக்குள் உள்ள இரத்தத் தின் அளவு அய்ந்தரை லிட்டர்தான். என் அறைகளுக்குள் ஒரு நாள் வந்து செல்லும் இரத்தத்தின் அளவு 15,000 லிட்டர்.

ஒவ்வொரு கீழறையும் ஒரு துடிப்பின்போது அய்ந்தரை கன அங்குல இரத்தத்தை வெளி யேற்றுகின்றது. நான் ஒரு நிமிடத்துக்குள் 72 முறை துடிக்கிறேன். உடம்பிலுள்ள அய்ந்தரை லிட்டர் இரத்தம் அனைத்து இரத்தக் குழாய் களிலும் ஓடி மீண்டும் என்னை வந்தடைய ஆகும் நேரம் ஒரு நிமிடம் ஆகும்.

நான் மென்மையானவன் அல்லன். ஒரு நாளில் 120 டன் எடையை 1 அடி உயர்த்த ஆகும் சக்திக்கான வேலையை நான் செய்கிறேன்.

உங்கள் வாழ்நாளில் 3,00,000 டன் எடை யுள்ள இரத்தத்தை இரத்தக் குழாய்களின் மூலம் தள்ளிக் கொண்டிருக்கிறேன்.

என்னால் இறைக்கப்படும் இரத்தத்தின் அழுத்தம் 1120/80 mmHg ஆகும் 120 என்பது இதயம் சுருங்குவதையும் 80 என்பது இதயம் விரிவடைவதையும் குறிக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தின் அளவு 140/90 mmHg ஆகும்.

என் சுயபுராணம் உங்களுக்கு வியப் பளிக்கிறதா? இவைகளை விரித்துரைக்கக் காரணம், நான் கடமையை - பணியை தடையின்றிச் செய்து, உயிர் வாழ, எனக்கு இழைக்கும் தீமைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென்பதற்காகவேதான்.

நீங்கள் அளவுக்கு மீறி கொழுப்புப் பொருள் களை உண்கிறீர்கள். தேவைக்கதிகமான கொழுப்பு, கரோனரி இரத்தக் குழாய்களில் படிந்து, தடையை ஏற்படுத்துகிறது. அதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது. அத்தகைய இரத்த அடைப்புகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை 45 விழுக்காடு ஆவர்.

2 பாக்கெட் சிகரெட்டை புகைப்பதால் 80-120 மில்லி கிராம் நிக்கோடின் உள்ளிழுக் கப்பட்டு, இரத்தக் குழாய்களின் கழுத்தை நெருக்குகிறது.

மாரடைப்பு நோய்க்குக் (Heart Attack) காரணங்கள் பலப்பல. அவற்றுள் சில:

1. புகை பிடித்தல், 2.மது குடித்தல், 3.அதிக உடல் எடை, 4.கொழுப்பின் அளவு கூடுதல், 5.தைராக்சின் சுரப்பு அதிகமாதல், 6.கொழுப்பும் எண்ணெய்களும் கலந்த உணவுகள், 7.சர்க்கரை நோய், 8.மன அழுத்தம், 9.அதிகமாக உணவு உட்கொள்ளுதல், 10.கொழுப்பு அதிகமுள்ள பால், பாலாடை, மாமிசம், முட்டை. மேற்கண்டவைகளைத் தவிர்த்தால் என் இயக்கம் தடைபடாது; நீங்களும் நலம் பெற்று வளமுடன் பல்லாண்டு வாழலாம்.

உயிரைக் காக்க உணவில் கட்டுப்பாடு தேவை. தீமை பயக்கும் புகைத்தல், மது குடித்தல், போதைப் பொருட்களுக்கு அடிமை யாதல் போன்றவற்றை உடன் நிறுத்துங்கள். தீயவை உடல் நலத்தை மட்டும் கெடுக்காது. உங்களின் பண்பை, ஒப்புரவை, ஒழுக்கத்தை, மானுட நேயத்தையும் கெடுக்கும்.

 

 

http://periyarpinju.com/200808/page10.html

StumbleUpon.com Read more...

ஒலிம்பிக் சில உண்மைகள்

 

 

« ஒலிம்பிக் என்றதும் நம் நினைவுக்கு வருவது ஒன்றுக்குள் ஒன்றாய்ப் பின்னிப் பிணைந்த அய்ந்து வண்ண வளையங்கள் தான். நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு ஆகிய அய்ந்து வண்ணங்களும் அய்ந்து கண்டங்களைக் குறிப்பதாகும்.

« இதை வடிவமைத்தவர் நவீன ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கிய பியர்ஸ் டி கோபர்டின் அவர்களாவார்கள். 1913ஆம் ஆண்டு வடிவ மைக்கப்பட்ட இக்கொடி 1914ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு, 1920ஆம் ஆண்டு பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் முதல் பயன்படுத்தப்படுகிறது.

« குறிப்பாக இவ்வைந்து நிறங்கள் தேர்ந்தெடுக்கப்படக் காரணம் என்ன தெரியுமா? அன்றைக்கு உலகில் இருந்த நாடுகளின் கொடியில் இந்த அய்ந்து நிறங்களில் ஏதேனும் ஒன்று நிச்சயம் இடம்பிடித்திருக்கும் என்பது தானாம்.

« ஒலிம்பிக் போட்டியின் நோக்கங்கள் லத்தீன் வார்த்தைகளில் சைட்டியஸ், ஆல்டியஸ், போர்டியஸ் எனப்படும். அதாவது வேகமாக, உயரமாக, உறுதியாக என்று பொருள்படும்.

« வீரர்களுக்கான ஒலிம்பிக் உறுதிமொழி 1920ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நடுவர்களுக்கான உறுதிமொழி 1972ஆம் ஆண்டு சப்போராவில் நடைபெற்ற ஒலிம்பிக் முதல் ஏற்கப்பட்டது.

« ஒலிம்பிக் கீதம் முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்ட 1896 முதல் இசைக்கப்படுகிறது. அதன்பின் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இசைக் கலைஞர்களை வைத்து அதை உருவாக்கியது. 1958இல் கூடி பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி, 1689இல் பாடப்பெற்ற ஸ்பைரோஸ்சமரஸ்ன் இசையிலும் கோஸ்டிஸ் பாலமாஸ்ன் கிரேக்க வரிகளிலும் இடம்பெற்ற பாடலையே ஒலிம்பிக் கீதமாக அறிவித்தது. 1964 டோக்கியோ ஒலிம்பிக் முதல் இப்பாடலே பாடப்பெறுகிறது. ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் ஒவ்வொரு மொழியில் பாடப்படுகிறது.

« பண்டைய கிரேக்க ஒலிம்பிக்கில் ஏற்றப்பட்ட சுடர் போன்று நவீன ஒலிம்பிக் போட்டிகளிலும் ஒலிம்பிக் சுடர் ஏற்றும் முறை 1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் முதல் நடைபெற்று வருகிறது. 1936ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டம் நடைபெற்று வருகிறது.

« தொடக்க விழா என்பது முதன் முறையாக 1908 லண்டன் ஒலிம்பிக்கில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

« முதல் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. 1900இல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தான் பெண்கள் பங்கேற்றனர்.

« முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் காரணமாக 1916, 1940 மற்றும் 1944ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

« 1924ஆம் ஆண்டுவரை ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்த டென்னிஸ் அதன் பிறகு தடை செய்யப்பட்டு, மீண்டும் 1988இல் தான் இடம் பெற்றது.

« 1908, 1912ஆம் ஆண்டுகளில் சில ரஷ்ய வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்றிருந்தாலும், மீண்டும் 1952ஆம் ஆண்டு தான் ரஷ்யா ஒலிம்பிக்கில் பங்கேற்றது.

« 1908ஆம் ஆண்டு ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ விளையாட்டாக விசைப்படகுப் போட்டி இருந்தது.

« 1924ஆம் ஆண்டு முதல் பனி விளையாட்டுக்களுக்கென உருவாக்கப்பட்ட குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக் நடைபெறும் ஆண்டு களிலேயே நடைபெற்ற இப்போட்டிகள் 1992க்குப் பிறகு, 1994 முதல் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு நடுவில் அதாவது ஒலிம்பிக் நடைபெற்ற இரண்டாண்டுகளுக்குப் பிறகு நடத்தப் படும் நடைமுறை வந்தது. அதன் படி 1994, 1998, 2002, 2006 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்டது. 2010இல் 21ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கனடாவில் நடைபெற உள்ளது.

« கிரிக்கெட் விளையாட்டும் ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பிடித்திருக்கிறது. ஆனால் 1900ஆம் ஆண்டு மட்டும்தான். அதன் பிறகு கிரிக்கெட்டுக்கு கெட்அவுட் சொல்லிவிட்டது ஒலிம்பிக். இப்போது மீண்டும் சேர்க்கச் சொல்லி கோரிக்கை எழுந்திருக்கிறது.

 

http://periyarpinju.com/200808/page13.html

StumbleUpon.com Read more...

மிரட்டலும் புராணப் புரட்டும்!-அய்யப்பன் கதை

அய்யப்பன் கதை

மிரட்டலும் புராணப் புரட்டும்!

- ஆய்வாளன்

கேரளத்து மேனன்களுக்கு பண்டித நேருவிடம் செல்வாக்கு உண்டு. அவர்களிடமிருந்த கடமையு-ணர்வும் அறிவார்ந்த சிந்தனைகளுமே அதற்குக் காரணம். வி.கே.மேனன் என்ற கிருஷ்ண மேனன், கே.பி.எஸ்.-மேனன் என சுருக்கி அழைக்கப்-பட்ட சங்குண்ணி மேனன் போன்-றோர் அந்தப் பட்டியலில் முதலிடம் வகிப்பார்கள்.
வெளிநாட்டு உறவு இலாகா-வில் சாதாரண எழுத்தராகச் சேர்ந்த கே.பி.எஸ்மேனன், ருஷ்ய நாட்டுத் தூதுவராக பதவி உயர்ந்தார். எதையும் ஒளிவு மறைவின்றித் துணிவுடன் சிந்தித்துச் செயல்பட்டதாலேயே, முன்னேற்றம் அவரைத் தேடி வந்தது.
இவர் ஆங்கிலத்திலே பல நூற்கள் படைத்தவர். அதில் ஒன்றே டிநே றடிசடன (ஒரே உலகம்) என்ற புத்தகம் அதற்கு நியாய-மாகக் கிடைக்க வேண்டிய புகழும் பாராட்டும் கிடைக்காது போனதற்கு அறிவுலகம் வருந்த வேண்டும்.
அதிலே கேரளாவில் தாய்மை என்பது உண்மை; தந்தையர் நிலை என்பது நிச்சயமற்றது என எழுதி கேரள மக்களின் மனக் க-சப்-புக்கு ஆளானதால், பல சிறப்பான தகவல்கள் அடங்கிய அப்புத்தகம் பலத்த சர்ச்சைக்கு ஆட்பட்டு, மறைக்கப்பட்டது.
அதிலே ஒன்றுதான் சுவாமி அய்யப்பனின் தோற்றுவாய். மலையாள நாடான சேர நாடு, ஒட்டியிருந்த பாண்டிய நாட்டால் பலவகையில் பாதிக்கப்பட்டதைப் பன்மொழிப்-புலவர் கா.அப்பாத்-துரையார் தான் எழுதிய தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற நூலில் தெளிவாக விவரித்துள்ளார். மதுரையை ஆண்ட நாயக்க வம்ச ராணி மங்கம்மா, திருவிதாங்கூர் பாளையத்தாரிடம் கப்பம் வசூலித்து ஆண்டதாக சரித்திரச் சான்று உண்டு. ஒருமுறை வரிகட்ட திருவிதாங்கூர் தவறியதால், ராணி மங்கம்மா படை-யெடுத்துப் போய் கப்பம் வசூலித்தாக சரித்திரத் தடயம் உள்ளது.
பின்னால் நிகழ்ந்த அரசியல் விபத்துகளால், சேர நாடு தளை அறுத்தது. ஆனாலும் பாண்டிய நாட்டில் பஞ்சம், வறுமை தலைவிரிக்க, அப்பகுதி மக்களான கள்ளர், மறவர், அகம்படியர், வெள்ளாளர் தங்கள் பிழைப்புக்காக சேர நாட்டு எல்லையோரப் பகுதியில் புகுந்து ஆடு, மாடு, பெண்கள் மற்றும் செல்வங்களைச் சூறையாடுவதை வழக்கமாகக் கொண்டனர்.

ஏவுகணைத் திட்டத் தலைவராகும் முதல் பெண்

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டங்களுக்குத் தலைமை ஏற்கும் வாய்ப்பு இதுவரை வழங்கப்பட்டதில்லை. இந்த ஆண்டு முதல் முறையாக அக்னி 2ஏ ஏவுகணைத் திட்டத்தின் தலைவராக 45 வயதான டெசி தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளத்து ஆண் மக்கள் வீரத்திலே தொய்வு என்பதாலும், எல்லை தாண்டி பாண்டி மக்கள் உடல் பலமிக்கவர்கள் என்பதால் எதிர்த்துப் போரிட முடியாக் கேரளத்தார் ஒரு சூழ்ச்சி திட்டம் வகுத்ததாக கே.பி.எஸ்.மேனன் எழுதுகிறார். பாண்டிய நாட்டை நோக்கியிருந்த தங்கள் மலையின் உச்சியில் கோரமான முகமும் கையில் கொடுவாளும் தாங்கிய அய்யனாரப்பனைச் சிலையாக வடித்து இந்த எல்லையைத் தாண்டிவரும் எதிரிக்குக் கண் குருடாகி விடும். கைகால் முடங்கிவிடும் எனக் கதைகட்டி, மாந்திரீப் புகழ் கேரளத்தார் புனைந்துரைத்தனர். இன்றைய அய்யப்பன், அன்றைய அய்யனாரப்பனே என்று எழுதுகிறார் கே.பி.எஸ். இந்த மூடப் பயமுறுத்தலால், தமிழகப் பகுதியிலிருந்து, ஊடுறுவல் சற்றே குறைந்ததாம்.
ஒரு காலத்தில் தமிழனை மிரட்டவே படைக்கப்பட்ட அய்யப்பனை, இன்று கோடி கோடியாய் கொட்டிக் குளிப்பாட்டும் தமிழர்கள் நிலைகுறித்து அழுவதா? சிரிப்பதா?

 

http://www.unmaionline.com/20080701/page9.html

StumbleUpon.com Read more...

அவாளுக்குள் அடிதடி

சிதம்பரம் நடராசர் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாடக் கூடாது என்று தீட்சதர்கள் அடம் பிடிக்க, அதனை எதிர்த்து ஓதுவார் ஆறுமுகசாமி போர்க்கொடி தூக்க - அது தமிழர் - பார்ப்பனர் என்கிற இனச் சண்டையாக உருவெடுக்க - கடைசியில் உடும்பு வேண்டாம், கை வந்தால் போதும் என்ற நிலையில் தீட்சதர் பார்ப்-பனர்கள் இறங்கிவர நிலைமை இப்பொழுது ஓரளவு சீரடைந்து இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து இப்பொழுது ஒரு களேபரம். நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ் பெருமாள் கோயிலில் வைத்து ஓகோ என்று நடந்துகொண்டிருக்கிறது. எவ்வளவோ காலமாகத்தானே தில்லை கோயிலுக்குள் பெருமாள் தூங்கிக் கொண்டிருக்-கிறார். (பள்ளி கொண்டுள்ளார்) இப்பொழுது தூங்கி விழித்து துஷ்ட வேலைகளில் இறங்கிவிட்டாரா என்று யாரும் கேட்கவேண்டாம்.
நடராஜர் கோயிலுக்குள் இருக்கும் இந்தத் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் மட்டும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.
சிதம்பரத்திலுள்ள வைணவப் பக்தர்கள் (வடகலை தென்கலை நாமக்காரர்கள்) இந்தக் கோயில் பெருமாளுக்குப் பிரம்மோற்சவம் நடத்த விரும்பி, இந்து அறநிலையத்துறையை அணுகி அனுமதியையும் பெற்றுவிட்டனர்.
அவ்வளவுதான்! நடராஜர் கோயில் சிவ பக்தர்கள் தாண்டி தோண்டியில் விழ ஆரம்பித்துவிட்டனர்.
நடராஜர் கோயிலில் பெருமாள் பரிவார தேவதையாகத்தானியிருக்கிறார்.. பரிவார தேவதைக்கு பிரம்மோற்சவ விழா நடத்தக்-கூடாது. இங்கே கோயில் என்ற அமைப்பில் பெருமாள் இல்லை. தனி சன்னதியில் தான் பெருமாள் இருக்கிறார். கோயில் என்றால் ராஜ கோபுரம், கொடிமரம், பலிபீடம், கர்ப்பக்-கிரகம் எல்லாம் இருக்கவேண்டும். இங்கே ராஜ கோபுரத்துக்கு வெளியில்தான் கொடிமரம், பலிபீடம் இருக்கிறது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள்ளும் பெருமாள் சன்னதி-கள் இருக்கின்றன. அங்கே எல்லாம் பிரமோற்-சவ விழா நடக்கவில்லை. பிரமோற்சவ விழா என்றால் தேரோட்டம் வேண்டும். இவர்-களிடம் தேரேயில்லை.. அதேபோல் வாகன மண்டபம், கல்யாண மண்டபம், தீர்த்தம் என எதுவுமேயில்லை. அப்படியிருக்க பிரம்-மோற்சவம் நடத்த வேண்டுமென்று வைண-வர்கள் பிடிவாதம் பிடிப்பது மூர்க்கத்தனமான செயல் - இப்படியெல்லாம் வரிசைப்படுத்தி ஆக்ரோசமாகச் சொல்பவர் சிதம்பரம் நடராஜர் கோயில் பூஜாஸ்தான டிரஸ்டிகளில் ஒருவரான ராஜசேகர தீட்சதர்.
(ஜூனியர் விகடன் 1-6-2008 - பக்கம் 4)
உடனே இதற்கு மறுப்பு வேண்டாமா? தில்லை ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோயில் மேலாளர் டிரஸ்டி ரங்காச்சாரி இதோ பேசுகிறார்.
திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோரால் பாடப்பெற்ற ஸ்தலம் இது. தனி திவ்விய க்ஷேத்திரம் அத்துடன் தனி நிர்வாகம் தனி ஆகமத்துடன் இங்கே பூஜை நடந்து-கொண்டிருக்கிறது.
ஒரு தனிக் கோயில் என்றால் அது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். அந்த அம்சத்துடன் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், கொடிமரம், பலிபீடம் என ஒரு கோயிலுக்குத் தேவையான அனைத்தும் இந்தப் பெருமாள் கோயிலுக்கு இருக்கிறது. பெருமாளை பரிவார தேவதை என்று தட்டிக்கழித்தால், இங்குள்ள சிவகாமி அம்மன், சுப்பிரமணியசுவாமி போன்றவர்களும் பரிவார தேவதைகள்தானே! அவர்களுக்கெல்லாம் கொடியேற்றி உற்சவம் நடத்துவது மட்டும் சரியா?
-இப்படி பதிலடி கொடுத்துள்ளார் கோயில் மேலாளர் ரங்காச்சாரி!
சபாஷ், சரியான போட்டியாத்தான் தோன்றுகிறது.
குப்பையைக் கிளறினால் முடி, முட்டை, கிழிந்த கந்தல், நத்தையின் கூடுகள் எல்லாம்-தானே அணி வகுக்கும். அவாளுக்குள் போட்டி வந்தால் அவ்வளவுதானே. எல்லா வண்ட-வாளமும் தண்டவாளம் ஏறுகிறது.
திருக்குறுங்குடி பெருமாள் கோயில் வளாகத்தில் இருந்த சிவன் கோவிலை இடித்தது தொடர்பாக காஞ்சி ஜெயேந்திரன்-மீது கூட புகார் இருக்கிறது. வைணவக்காரர்களுக்கும், சிவ பக்தர்-களுக்கும் இடையே நடைபெறும் சண்டைகள் இன்று நேற்று ஏற்பட்டவையல்ல!
வைணவர்களுக்குள்ளும் வடகலை, தென் கலை சண்டை பிரசித்தி பெற்றது. காஞ்சிபுரம் பெருமாள் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்ற சர்ச்சை வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் லண்டன் பிரிவு கவுன்சில் வரை சென்று நாறியது.
வடகலைகாரன் தென்கலைகாரனை நேரில் பார்த்து விட்டால் சுவரில் போய் முட்டிக்-கொள்வான். அதற்குப் பெயர் கண்டு முட்டு. ஒருவரைப்பற்றி இன்னொருவர் கேள்வி-பட்டால் சுவரில் போய் முட்டிக் கெள்வதால் அதற்குப் பெயர் கேட்டு முட்டு என்பதாகும்.
சிவன் கோயில் கோபுரத்தில் காக்கை உட்கார கோபுரப் பொம்மை அந்த வழியாக சென்ற வைணவன் தலையில் விழ, அந்த நேரத்தில் கூட, தன் தலையில் சிவன்கோயில் பொம்மை விழுந்து ரத்தம் கொட்டுகிறதே என்பதுபற்றிக் கவலைப்படாமல் வீர வைணவ காக்கையே! சிவன் கோயில் கோபுரத்தை இடித்துத் தள்ளு! நன்றாக இடித்து தள்ளு என்றானாம்!
இதுபோல சிவ பக்தர்களுக்கும், விஷ்ணு பக்தர்களுக்கும் இடையே உள்ள வெறுப்பும் எதிர்ப்பும் நெடியேறக் கூடியவையாகும்.
1982-இல் திருவரங்கத்தில் ரெங்கநாதர் கோயில் மொட்டைக் கோபுரம் சீர் செய்யப்-பட்டது. அக்கோவில் மடத்து ஜீயரின் மேற்பார்வையில் இது நடந்தது. அந்த வைணவக் கோயில் கோபுரம் கட்ட ஸ்மார்த்தரான காஞ்சி சங்கராச்சாரியாரும். பலரும் உதவி செய்தனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கல்கி வார இதழ் சார்பாக ஜீயரிடம் பேட்டி காணப்பட்டது.
கேள்வி: சைவர்கள் வைணவக் கோயிலுக்கு உதவுவது போல சைவ ஸ்தல பணிகளுக்கு வைணவர்கள் ஏன் உதவுவது இல்லை? நீங்கள் சிவன்கோயில் திருப்பணிகளுக்கு உதவி செய்வீர்களா?
ஜீயரின் பதில்: நான் சிவன் கோயிலுக்கு உதவி செய்யமாட்டேன். ஏன்னு கேட்டா ஸ்ரீமத் நாராயணன்தான் எல்லா தெய்வங்-களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத்தான். அந்தப் பிரம்மா, சங்கரனைப் படைத்தான் என்று கதையிருக்கு. அதுபடி பார்த்தால் சங்கரனுக்கு (சிவபெரு-மானுக்கு) நாராயணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளை ஆகணும். அவங்களும் தெய்வம்தான். தபஸ் பண்ணி அந்தப் பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும், அதேபோல சிவன் எத்தனையோ யாகம் பண்ணி, கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி-பெற்றாருன்னும் சாஸ்திரம் இருக்கு. இவங்-கள்ளாம் புண்ணியம் பண்ணி தபஸ் பண்ணி தெய்வத்தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால், நாராயணன் எப்போதும் உள்ளவர். பாக்கிப் போருக்கு பலன் கொடுக்-கிறவர். அவரை வழி படற நாங்களும் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். நாரா-யணனைத் தெய்வமாக்கிக் கொண்டு வழிபட்டு மோட்சத்துக்குப் போக வழி செய்து கொண்டவர்கள், நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்திக் கெட்டுப் போகும்... அதனாலே சிவன் கோயில் திருப்பணிக்கு பணம் இருந்தாலும் தரமாட்டேன்.
(கல்கி - 11-.4-.82)
இந்து மதம் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு மதத்தில் இத்தகைய கடவுள்கள். அவர்களை வழி படுகிறவர்களுக்குள்ளும் பேதாபேதம்!
சிவனை வணங்குபவர்கள் விஷ்ணுவை மதிப்பதில்லை,
விஷ்ணுவை வணங்குபவர்கள் சிவனைச் சீண்டுவதில்லை
சிவனை வணங்கினால் புத்தி கெட்டுப்-போகும் என்கிற அளவுக்கு ஒரு ஜீயர் பேசு-கிறார் என்றால் இதன் தன்மை என்ன?
இப்படி முரண்பட்ட குப்பைகள் நிறைந்தது எப்படி ஒரு மதமாகும்.
ஒருக்கால் இப்படியெல்லாம் இருந்தால்-தான் அர்த்தமுள்ள இந்து மதமாகுமோ?
இப்படி ஒருமைப்பாடு இல்லாதது எப்படி ஒரு மதமாகும். இஸ்லாத்தையும், கிறித்துவத்தையும் சீண்டும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டம், முதலில் தங்கள் வீட்டுக்-குள்ளும், வீட்டைச் சுற்றிலும் கொட்டிக் கிடக்கிற இந்தக் குப்பைகளை அள்ள வேண்டாமா?
இந்துமதம் என்று கூறக்கூடிய ஒரு மதம் என்பது அமைப்பு ரீதியாகவும் இல்லை - சித்தாந்த ரீதியாகவும் இல்லை. சாணியும் - சந்தனமும் ஒன்று - அதுதான் இந்து மதம் என்று சொல்கிறவர்களை கேலியாகத்தான் பார்க்க முடியும்.
அரியும் சிவனும் ஒன்று இதை அறியாதவனின் வாயில் மண்ணு என்று எதுகைமோனையோடு பேசிப் பயனில்லை.
இவர்கள் சொல்கிறவிதம் பார்த்தால் ஜீயரையும் அறியாதவர் பட்டியலில் அல்லவா அடைக்கவேண்டும்.
இந்து மதத்துக்குள் நடக்கும் இந்தச் சண்டைகள்பற்றி திருவாளர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரே மனம் நொந்து புலம்பியதுண்டு.
நம் நாட்டில் மற்றவர்கள் சண்டையைக் காட்டிலும் பக்தர்கள் சண்டைகளே அதிகம். என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா என்ற சண்டைதான் அதிகம்.
(சென்னை - தமிழிசைச் சங்கக் கட்டடத்-திறப்பு விழாவில் முதல் அமைச்சர் ஆச்சாரியார்)
இதைவிட இந்துமதத்துக்கு வேறு யாரால்தான் பொருத்தமான சான்றினை கூறமுடியும்?
 
 

StumbleUpon.com Read more...

மாடர்ன் டிரஸ் சாமியாரின் ஆன்மீக மோசடி

பதிலடி

நாத்திகம் என்பது நம்பிக்கையா?
மாடர்ன் டிரஸ் சாமியாரின் ஆன்மீக மோசடி

- சார்வாகன்

வாசுதேவன் என்றொருவர். ஜக்கி வாசுதேவ் எனத் தன்னை அழைத்துக் கொள்பவர். சத்குரு (சத்தியமான குரு) என்று இவரை அழைக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டவர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய துணைவி திடீர் என இறந்து போனது பற்றிப் பலப்பல செய்திகளும் உலா வந்தன. நமக்கு அதைப்பற்றி அக்கறையில்லை.
மாடர்ன் ஆக உடை உடுத்திப் பேசி வரும் சமயப் பிரச்சாரகர். சமயம் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை என்றும் சத்தியமான செய்திகளைச் சொல்லி வருவதாகவும் சொல்லிக் கொள்பவர். இது உண்மையா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். உலகிலேயே உயரமான லிங்கம் என்னுடைய ஈஷா லிங்கம் தான் என்று பெருமை பேசிக் கொள்பவர், சைவ சமயப் பிரச்சாரகர் அல்லாது வேறு எவர்? உடையில் இருக்கும் நாகரிகம் நடையில் (செயலில்) இருக்காது.
இவரையெல்லாம் பெரிய ஆள்கள் என்று சிலர் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கேற்ப சில ஏடுகள் இவர்களை வைத்துச் சில பகுதிகளைத் தயாரித்து அச்சிடுகிறார்கள். வணிகம் பெருகவேண்டும் என்பதற்காகச் செய்கிறார்கள் என்பதற்காக இதனைச் சகித்துக் கொள்ளலாம். ஆனால் எழுதும் எழுத்துகளைச் சகித்துக் கொள்ள இயலாது.
கேள்வி பதில் இதுதான்
அப்படிச் சில எழுத்துக்களை ஏடொன்றில் பார்க்க நேரிட்டு விட்டது. இவரிடம் ஒருவர் கேள்வி கேட்கிறார். (கேள்வி - பதில் எப்படிக் கேட்கப்படுகிறது, எப்படி எழுதப்படுகிறது என்பது எங்களுக்கும் தெரியும் என்று அறிஞர் அண்ணா ஒரு முறை எழுதினார்) இவர் பதில் கூறுகிறார். கேள்வி நாத்திகர்கள் பற்றி உங்களது கருத்து என்ன? என்பது.
இவர் பதில் சொல்லும்போது, ஆத்திகர்கள் கடவுள் உண்டு என்று நம்புகிறாகள். நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று நம்புகிறார்கள். இரண்டு மேருமே தங்களுக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி ஏதோ ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்று எழுதுகிறார். ஆத்திகர்கள், நாத்திகர்கள் இருவருமே ஒருவி-தமான மூடத்தனத்தில்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் தங்களுக்குத் தெரியாததை, தெரியாது என்று ஏற்கிற மனப்பான்மை அவர்களுக்கு இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
தெரியாததை மட்டுமல்ல, இல்லாததை இருக்கிறது என ஒருவன் கூறும்போது இல்லை எனக் கூற ஒருவனுக்கு உரிமை உண்டுதானே! தந்தை பெரியார் சொன்னார்: கடவுள் உண்டு என்று எந்த முட்டாளும் கூறிவிட முடியும். ஆனால் இல்லை என்பதைக் கூறிடப் பெரிதும் அறிவும் ஆராய்ச்சியும் தேவை என்றார். அப்படிப்பட்ட அ, ஆ இல்லாத இவரைப் போன்றவர்கள்தான் உண்டு என்று கூறிக் கொண்டு திரிகிறார்கள்.
விஞ்ஞான அறிவு இல்லையே
அணுவைப் பிரித்துப் பார்த்துவிட்டது விஞ்ஞானம் என்கிறார். அதுதான் மிகச் சிறியது அதற்கும் சின்னதாக அதை உடைக்க முடியாது என நம்பப்பட்டது. ஆனால் தொடர்ந்த முயற்சியும் ஆராய்ச்சியும் அணுவையும் பிளந்து பார்த்துக் கூறிவிட்டது. கடவுளின் இருப்பு பற்றி ஏதாவது இம்மாதிரிச் செய்யப்பட்டதா?
அணுவை இரண்டாகப் பிரித்த விஞ்ஞானம் உயிரின் மூலம் எதுவென்று அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கிண்டல் செய்கிறார்? அணுவை இரண்டாக அல்ல, மூன்றாகவே பிளந்துவிட்டது விஞ்ஞானம் எலெக்ட்ரான், புரோட்டின், நியூட்ரான் என்று தெரிந்து கொள்ளட்டும். உயிர் என்று எதைக் கூறுகிறார்? அது தெரிவித்தால் அல்லவா அதன் மூலம் பற்றிப் பேசலாம்! ஜக்கி பிறப்பதற்கு முன்பு தந்தை பெரியார் லாகூர் போயிருந்தார். அவர் பேசுவதற்கு முன்பு ஒரு முந்திரிக்-கொட்டை எழுந்து நின்று கடவுள் இல்லை என்று பேசுவதற்குத்தானே வந்திருக்கிறீர்கள்? எனக் கேட்டதாம். தந்தை பெரியார் அவரிடம் ஒரு வெள்ளைத் தாளைக் கொடுத்து, கடவுள் என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள், அதை எழுதிக் கொடுங்கள், அதன்பிறகு நான் என் கருத்தைச் சொல்கிறேன் என்றார். தாளை வாங்கிக் கொண்ட முந்திரிக் கொட்டை முழித்ததாம். அவர் நண்பர் கேட்டாராம். நீதானே வாயைக் கொடுத்துப் புண் ஆக்கிக் கொண்டாய் என்றாராம். அதைப்போல, உயிர் என்று எதை இவர் கூறுகிறார்?
உயிர் என்றால் என்ன?
மனிதனும் மற்றைய உயிர்களும் இறந்து போகின்ற, இயங்காமல் இருந்து விடுகின்ற தன்மையைப் பாமர மொழியில் உயிர் பிரிந்து விட்டது என்கிறார்கள். அப்படிப் பிரிந்த உயிரைப் பற்றிக் கேட்கிறாரா? தந்தை பெரியார் சொன்னார், உடம்பிலுள்ள சத்துப் போய்விட்-டதைத் தான் செத்துப் போய்விட்டது என்கிறார்கள் என்று கூறிவிட்டுப் பின் விளக்கம் தந்தார். ஏன் இறந்த நிலை, இயங்காத நிலை, உயிர் பிரிந்த நிலை ஏற்படுகிறது? இயங்கிக் கொண்டே இருக்கும் செல்கள் இயக்கத்-தால் தேய்ந்து, அழிந்து, புதிதாகத் தேன்றிக் கொண்டிருக்கும் செயல்கள் முதுமையின் காரணமாகப் புதுப்பிக்கும் ஆற்றலை மெல்ல இழந்து, பின் இயக்கத்தைப் படிப்படியாக இழந்து கடைசியில் முற்றுமாக நிறுத்திக் கெள்வதைத்தான் இறப்பு என்று சொல்கிறது விஞ்ஞானம்.
இது பற்றி ஆய்வு நடந்து கொண்டிருக்-கிறது. செல்களைப் புதுப்பிக்கலாம், மாற்றலாம், நோய்களைத் தடுக்கலாம், இறப்பை 120 ஆண்டுகள் வரை தள்ளிப் போடலாம் என்பது பற்றிய ஆராய்ச்சியைச் செய்து கொண்டு வருகிறார்கள். முடிவும் பலனும் 10 ஆண்டுகளில் கிடைக்கலாம், அல்லது 50 ஆண்டுகளில் கிடைக்கலாம். அல்லது இரண்டு ஆண்டுகளில் கூடத் தெரிய வரலாம். அவசரக் குடுக்கை போல எதையாவது உளறுவது ஆன்மீகத்தில் நடக்கும், விஞ்ஞானத்தில் நடக்காது. எனவே ஆன்மிகத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் வித்தியாசம் இல்லை என அவர் கூறுவது ஏமாற்று வேலை, பித்தலாட்டம், இரண்டுக்கும் வேறுபாடு கிடையாது என்பதல்ல. முரண்-பாடுகளே நிறைய உண்டு.
ஆன்மீக மோசடி
ஆன்மீகம் எனும் மோசடி வேலையின் முட்டாள் தனங்களை மக்கள் தெரிந்து கொண்டார்கள். தெளிவடைந்துவிட்டார்கள் என்கிற நிலைமை. பகுத்தறிவுப் பிரச்-சாரத்தால் ஏற்பட்டு விட்டதைக் கண்டு, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஆன்மீகத்தோடு ஒத்துப் போகின்றன என்கிற பொய்ப்-பித்தலாட்டப் பிரச்சாரத்தைச் செய்ய ஆரம்பித்து-விட்டார்கள். வேட்டி கட்டிய ஆன்மீக வாதிகளைவிட பாண்ட், டிசட்டை போட்டவர்களின் மோசடித் தனம் அதிகம்.
பிரபஞ்சம் என்கிறார், எங்கே தொடங்கு-கிறது எங்கே முடிகிறது என்று தெரியவில்லை என்பதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறது என்கிறார். இதனை வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகள் பயணித்தாலும் சென்று அடைய முடியாத பால்வெளிகள் ஏராளமாக உள்ளன என்பதை விஞ்ஞானம் விளக்கியுள்ளது. இவர் கூறும் அல்லது இவர் நம்பும் மேலேழு, கீழேழு ஆகப் பதினான்கு உலகங்கள் எந்தப் பால் வெளியில் (ஆடைமல றுயல) உள்ளன என்பதை இவரது பரமசிவன் தெரிவித்திருக்கிறானா? இவராவது கூற முடியுமா? இந்த நிலையில் இவருக்கு ஏன் வாய் நீளம்?
உபதேசம் செய்யத் தகுதி உண்டா?
ஆத்திகர்களும் நாத்திகர்களும் உண்மை-யைத் தேட வேண்டும் என்று உபதேசம் செய்கிறார், உரிமை தனக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டு! இவர் ஏன் தனியே நின்று கொண்டு இரண்டு பிரிவுகளைப் பற்றிப் பேசுகிறார்? ஆன்மீகப் பிரிவைச் சேர்ந்த ஆள்தானே இவர்? இல்லையென்று சொல்வாரா?
இன்னொரு கேள்விக்குப் பதில் கூறும்-போது இந்துக் கலாச்சாரம் என்று இல்லாத ஒரு கலாச்சாரத்தைப் பற்றி எழுதுகிறார். தீமிதித்தலின் பெருமை பேசுகிறார். பொருந்-தாத பழக்கங்களாக இருந்தாலும் மாற்ற நினைக்காதீர்கள் என்றும் உபதேசம் செய்கிறார்.
ஆனால், ஆன்மீகவாதி அல்லாதவர் போல வேடம் போடுகிறார். என்னே பித்தலாட்டம்?
சாம்பலின் மகத்துவம்
நெற்றியில் சாம்பல் பூசிக் கொள்வதற்கு விசித்திர வியாக்யானம் கூறுகிறவர் ஆன்மீக-வாதி இல்லை என்றால் பின்பக்கப் பொறியால் சிரிக்க நேரிடுமா இல்லையா? அதற்கு விஞ்ஞானபூர்வமான காரணங்கள் உண்டு என்கிறார். கடுமையான கோபம் வருகிறது. கடவுளைப் பற்றி, லிங்கத்தைப் பற்றி எதை-யாவது உளறட்டும் நமக்குக் கவலையில்லை, விஞ்ஞானத்தைப் பற்றி என்ன தெரியும்? ஏன் பேசுகிறார்? வாழ்க்கையைச் சிரிக்கச் சாம்பல் பூசுவது என்கிறார். புதிய வியாக்யானம், எப்படி என்று விளக்குவாரா? டீக்கடை பாய்லரில் பூசும் திருநீறு, தண்ணீர் அண்டாவில் பூசும் திருநீறு, மிலேச்ச மேல் நாட்டுக்காரன் கண்டுபிடித்த எந்திரங்கள் கணினிகள் ஆகியவற்றில் பூசும் திருநீறு எதைக் கிரகிக்கப்ப பூசப்படுகின்றன? அறிவு நாணயத்தோடு பதில் தருவாரா?
எனவே ஆன்மீகவாதியல்லாதவர் போல நடிக்கும் பசப்புத்தனத்தைக் கைவிட்டு, எத்தனையோ ஏமாற்றுக்காரர்களில் தானும் ஒருவனே என ஒத்துக் கொள்ளும் நேர்மை அவருக்கு வரவேண்டும். அது வராத வரை சத்குரு பட்டம் ணுரயஉமகள் போலப் போலி டாக்டர் பட்டம் தான்!
அண்ணா அன்றே கூறினார்
நம் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் பலன், மூடநம்பிக்கைகளுக்கு விஞ்ஞானப் பூச்சு பூசி விளக்கம் தரச் செய்துவிட்டது என்கிறார் அறிஞர் அண்ணா. அதற்குப் பிரத்யட்ச உதாரணம் ஜக்கி வாசுதேவ்?
இறுதியாக, நாஸ்திகம் என்பது தமிழ்ச் சொல் அல்ல. நாத்திகம் என எழுதுவதால், தமிழாகி விடாது, நாஸ்திகம் என்ற சொல்லுக்குக் கடவுளை நம்பாதவன் என்று பொருள் கொண்டு பாமரத் தனமாகப் பதில் எழுதியிருக்-கிறார். வேதங்களையும் உபநிஷத்து-களையும் எதிர்த்துக் கடவுளை நம்பாமல் இருப்பவன் நாஸ்திகன் என்று அந்தச் சொல்லை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள். வேதமும், உபநிஷத்களும் கடவுளும் தமிழர்க்கு அந்நியமானவை. இல்லாவிட்டால், கடவுள் இல்லை என்பதைக் குறிப்பதற்கோ, இருக்கிறது என்பவர்களைக் குறிப்பதற்கோ சொற்கள் தமிழில் இருந்திருக்கும்.
அதுபோலவே ஆத்மா என்பது தமிழ்ச் சொல் அல்ல. ஆன்மா என்று எழுதுவதால், தமிழாகி விடாது. எனவே ஆன்மீகம், ஆன்மீக-வாதி என்பவை தமிழுக்கு அந்நியம். இதற்கு எதிர்மறையான கொள்கையைக் கொண்டவர்-களுக்குச் சுட்டப்படும், சொல்லும் தமிழில் கிடையாது. எனவே தமிழ்க் கலாச்சாரத்துக்குத் தொடர்பில்லாத செய்திகளைத் தமிழர்க்குச் சுமத்திப் பித்தலாட்டம் செய்யும் பார்ப்பனச் செயலைச் சூத்திரப் பண்டாரங்களும் செய்வது சகித்துக் கொள்ள முடியாதது. அந்த வகையில் ஜக்கி வாசுதேவின் எழுத்துகளையும் சகித்துக் கொள்ள முடியாது. அவர் கூறியதைப் போலவே அவருக்குத் தெரியாத பல விசயங்களில் விஞ்ஞானமும் பகுத்தறிவும் அடக்கம். அதில் மூக்கை நுழைக்காமல் இருப்பது அவர் முகத்திற்கு அழகு தரும்.

 

 

http://www.unmaionline.com/20080502/page5.html

StumbleUpon.com Read more...

"சகோதரரின் திடீர் மரணத்தால் தீவிரவாதியாக மாறினார் பின்லேடன்"

lankasri.comவிமான விபத்தில் தனது சகோதரரை பறி கொடுத்த ஒசாமா பின்லேடன், அந்த மனஅழுத்தத்தால் தீவிரவாதப் பாதையை தேர்ந்தெடுத்து விட்டதாக அவருடைய முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஆர்தர் ரைடிங் (59) தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரான ஒசாமா பின்லேடன் 1970-களில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்தார். அவருடைய குடும்பத்தின் பாதுகாப்பு, லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அந்த நிறுவனத்தின் சார்பில் பின்லேடனின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய ஆர்தர் ரைடிங், பல்வேறு பரபரப்பு தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவர் பின்லேடன். அவரது வீடு யாரும் கற்பனை செய்து பார்த்திராத வகையில் மிகப் பிரமாண்டமாக அமைந்திருக்கும். அந்த வீட்டுக்குள்ளேயே குண்டு துளைக்காத பல அறைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அந்த அறைக்குள் என்ன இருக்கும் என்று ஒருபோதும் பார்த்ததில்லை என ரைடிங் கூறியுள்ளார்.

ஆடம்பர பிரியராக வாழ்ந்த பின்லேடனின் சகோதரர் சலீம் என்பவர், 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். சகோதரரின் மரணம் பின்லேடனை நிலைகுலையச் செய்தது. பின்நாளில் அவர் தீவிரவாதப் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு சகோதரரின் மரணம் முக்கிய காரணமாக அமைந்து விட்டதாக ரைடிங் மேலும் கூறியுள்ளார்.

பின்லேடனுடன் மிகவும் நெருங்கி பழகிய அவர் மீண்டும் அவரை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1221549936&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

ரஷியாவில் 4 சிறுவர்களை கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூரம்

ரஷியாவில் 4 சிறுவர்களை கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூரம்
4 சிறுவர்கள், சிறுமிகளை கத்தியால் குத்தி கொன்று அவர்கள் உடலை சமைத்து சாப்பிட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த கொடுமை ரஷியாவில் நடந்துள்ளது. அங்குள்ள குக்கிராமத்தில் ஒரு கும்பல் அங்குள்ள சிறுவர், சிறுமிகளை ஆசை காட்டி தனி இடத்துக்கு அழைத்துச் சென்றது.

ஒரு குடிசையில் அந்த சிறுவர், சிறுமிகளை தங்க வைத்து அவர்களுக்கு மது பானங்களை கொடுத்து மயங்க வைத்தனர்.

பிறகு 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனை அந்த கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தி கொன்றனர். ஒவ்வொருவருக்கும் 666 தடவை கத்திக் குத்து விழுந்தது.

பிறகு அவர்களது கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி தீயில் வறுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சாப்பிட்டனர்.

சாத்தானுக்கு பூஜை. காணிக்கை செலுத்தவதாக கூறி இந்த கொடூர செயலில் அவர்கள் ஈடுபட்டனர். கொல்லப்பட்ட 4 சிறுவர்கள் 10 வயது நிரம்பியவர்கள். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP