சமீபத்திய பதிவுகள்

ஓய்வு பெறுவது சச்சின் விருப்பம்! : மெக்ராத், ரிச்சர்ட்ஸ், சேவக் அதிரடி

>> Wednesday, October 8, 2008

 
lankasri.com "கிரிக்கெட் அரங்கில் எத்தனையோ ஜாம்பவான்கள் வந்து சென்று விட்டனர். ஆனால் 16 வயதில் தனது ஆட்டத்தை துவக்கிய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், உலகின் தலைசிறந்தவீரராகஇன்னும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு யாரும் ஓய்வு அளிக்க முடியாது. ஓய்வு எடுக்கும் முடிவை அவரது விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும்,'' என மெக்ராத், ரிச்சர்ட்ஸ், சேவக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியன் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். 19 ஆண்டுகளாக கிரிக்கெட் அரங்கில் தலை சிறந்த வீரராக திகழ்கிறார். இவரது ஓய்வு குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து ஆஸ்திரேலியாவின் மெக்ராத், வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ், இந்திய வீரர் சேவக் ஆகியோர் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டி:

மெக்ராத்(ஆஸி., முன்னாள் பந்து வீச்சாளர்): கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத வீரர் சச்சின். இரண்டாவது இன்னிங்சில் இவர் சரியாக விளையாடுவது இல்லை, தொடரின் இறுதிப் போட்டியில் சோபிக்க மாட்டார் என்று குறை கூறுகிறார்கள். புள்ளி விவரங்கள் அடிப்படையில் பல்வேறு சாதனைகளைப் படைத்த அவரை, விமர்சனப் படுத்துவது மனதளவில் காயப்படுத்துவது போன்றது. வயதளவில் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் கட்டத்தை நெருங்கி விட்டார். பொருளாதாரத்திலும் போதுமான உயர்வு பெற்று விட்டார். மனதளவில் தனக்கு வலிமை உள்ளதாக கருதும் பட்சத்தில், அவர் தொடர்ந்து போட்டிகளில் தடையின்றி பங்கேற்கலாம். கிரிக்கெட் அரங்கில் 16 வயதில் காலடி வைக்கும் போது எப்படி இருந்தாரோ? அதே மகிழ்ச்சியுடன் தான் சச்சின் தற்போதும் உள்ளார்.

விவியன் ரிச்சர்ட்ஸ் (வெ.இண்டீஸ் முன்னாள் பேட்ஸ்மேன்): கிரிக்கெட்டின் மீது அதிக ஈடுபாடு கொண்ட சச்சின், தற்போதைக்கு ஓய்வு பெற அவசியமில்லை. ஒரு திறமையான வீரர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாவது இயல்பு. சச்சின் இன்னும் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட்டில் பங்கேற்கலாம். இதன் மூலம் ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீது உள்ள உற்சாகத்தை அதிகப்படுத்த முடியும்.

சேவக் (இந்திய வீரர்): கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின். கிரிக்கெட் அரங்கில் இன்னும் அதிக ரன்கள் அவர் சேர்க்க வேண்டும். தவிர, அவர் மனம் விரும்பும் வரை அதிக ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும். விமானத்துக்காக காத்திருக்கும் போதும், விமானத்தில் பயணம் செய்யும் போதும், யாரும் கிரிக்கெட் பற்றி பேச மாட்டார்கள். ஆனால் சச்சின் அப்போதும் கிரிக்கெட் பற்றி தான் பேசுவார். அவர் கிரிக்கெட் விளையாடுவதற்காகவே பிறந்தவர் என கருதுகிறேன். விளையாட்டு நுணுக்கங்கள், திறமைகள் ஆகியவற்றை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

"நம்பர்1' வீரர் : உலகின் சிறந்த 100 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் அளித்துள்ளார் ஆஸ்தி ரேலியாவின் சுழல் மன்னன் ஷேன் வார்ன். தனது "ஷேன் வார்ன் செஞ்சுரி' என்ற புத்தகத்தில் சச்சினுக்கு அடுத்து வெஸ்ட் இண்டீசின் லாராவை குறிப்பிட்டுள்ளார். "டாப்100' பட்டியலில் இந்தியா சார்பில் கபில்தேவ், கங்குலி, டிராவிட் லட்சுமண், ஹர்பஜன், சேவக், கும்ளே, அசாருதீன், வெங்சர்க் கார், ரவிசாஸ்திரி உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1223276889&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

மீண்டும் ரொனால்டோ

 
lankasri.comபிரேசில் கால்பந்து நட்சத்திரம் தனது காயத்திலிருந்து முழுமையாக குணம் அடைந்து மீண்டும் சர்வதேச கால்பந்தாட்டத்தில் பங்கேற்கவுள்ளார் என்று அவரது உடற்பயிற்சியாளர் மாஸியோட்டி தெரிவித்துள்ளார்.

பிரேசில் கால்பந்தாட்ட கிளப் ஃபிளெமிங்கோ என்ற அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ரொனால்டோ இன்னும் ஒரு மாதத்திலோ அல்லது அதற்கும் குறைவான காலத்திலோ கால்பந்தாடத்திற்கு திரும்பலாம் என்று அவர் மேலும் கூறுகையில் தெரிவித்துள்ளார்.

2002ஆம் ஆண்டு உலகக் கோப்பையை பிரேசில் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ரொனால்டோ இத்தாலிய கால்பந்து லீக் போட்டியின் போது ஏ.சி.மிலன் அணிக்காக விளையாடிய ரொனால்டோ ஒரு போட்டியில் காயமடைந்தார்.

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1223387399&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

கங்கூலி ஓய்வு பெற முடிவு!

 
lankasri.com இந்திய அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய நடுக்கள வீரருமான சௌரவ் கங்கூலி தற்போதைய ஆஸ்ட்ரேலிய தொடருடன் ச‌ர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

"ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிரான தொடருடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன், இதனை நான் சக வீரர்களிடமும் தெரிவித்து விட்டேன். ஆஸ்ட்ரேலிய தொடர்தான் எனது கடைசி தொடர்" என்று கங்கூலி பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

வெற்றிபெறும் ஒரு இன்னிங்சுடன் நான் செல்வேன் என்று நம்புகிறேன் என்று அவர் மேலும் கூறுகையில் தெரிவித்தார்.

36 வயது நிரம்பிய கங்கூலி 109 டெஸ்ட் போட்டிகளில் 6,888 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 15 சதங்கள் அடங்கும். 49 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் அணித் தலைவராக இருந்தார். இந்தியாவை பொறுத்தவரை அதிக டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்தது கங்கூலிதான்.

இந்த 49 டெஸ்ட் போட்டிகளில் 21 போட்டிகளை வெற்றி பெற்றுள்ளார் கங்கூலி. இதுவும் இந்திய கேப்டன்கள் வரிசையில் ஒரு சாதனையே. தனது முதல் இரண்டு டெஸ்ட்களில் சதங்களுடன் துவங்கிய கங்கூலி தனது சராசரியை இதுவரை 40க்கும் கீழ் இறங்கவிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய அணித் தேர்வுக் குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கங்கூலி முடிவிற்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு, தனது கிரிக்கெட் வாழ்வை அவர் உயர்ந்த நிலையில் முடித்துக் கொள்ள முடிவெடுத்திருப்பது பாராட்டுதலுக்கு‌ரியது என்றார்.

மேலும் சுதந்திர மனோ நிலையுடன் தான் ஆட விரும்புவதாக கங்கூலி தன்னிடம் ஏற்கனவே கூறியிருந்தார் என்று கூறிய ஸ்ரீகாந்த் இப்போது அவர் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றார்.

ஓரு அணித் தலைவராகவும், வீரராகவும் இந்தியாவிற்கு கங்கூலி நிறைய பெருமைகளை சேர்த்துள்ளார் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் 272 போட்டிகளில் 10,000 ரன்கள் எடுத்து குறைந்த போட்டிகளில் இந்த ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை கங்கூலி வைத்துள்ளார். மொத்தம் 311 ஒரு நாள் சர்வதேச போட்டிகளை விளையாடியுள்ள கங்கூலி 11,363 ரன்களை 41.02 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 147 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவை தலைமையேற்று நடத்தியுள்ளார். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 10,000 ரன்கள், 100 விக்கெட்டுகள், 100 கேட்ச்கள் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள 3-வது வீரர் கங்கூலி. சச்சினும், ஜெயசூரியாவும் இதனை ஏற்கனவே சாதித்துள்ளனர்.

ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருடன் க‌ங்கூ‌லி துவக்க வீரராக களமிறங்கியபோது இருவரும் இணைந்து மொத்தமாக 136 இன்னிங்ஸ்களில் 6,609 ரன்களை குவித்துள்ளனர்.

டிசம்பர் 2006-இல் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றது முதல் இலங்கை தொடருக்கு முந்தைய தென் ஆப்பிரிக்க தொடர் வரை டெஸ்ட் போட்டிகளில் 1,571 ரன்களை 50.67 என்ற சராசரி விகிதத்தில் அவர் பெற்றுள்ளார். இதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். இதுதான் அவர் எடுத்த ஒரே இரட்டை சதமும் ஆகும்.

முன்னாள் வீரர்களான கபில்தேவ், பிஷன் சிங் பேடி ஆகியோர் கங்கூலியின் கிரிக்கெட் வாழ்வை புகழ்ந்து கூறியதோடு, அவரது இந்த முடிவை வெகுவாக வரவேற்றுள்ளனர்.

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1223387265&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

ஆக்ஸ்போர்டு அகராதியை "கரைத்து குடித்தார்"அம்மோன்

 
 
lankasri.comஅமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி முழுவதையும் மனப்பாடம் செய்து சாதித்துள்ளார். அமெரிக்கா, நியூயார்க்கை சேர்ந்தவர் அம்மோன் சேயா (37). இவர், மிகவும் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் மனப்பாடம் செய்துள்ளார்.

22 ஆயிரம் பக்கங்களை கொண்ட இந்த அகராதி முழுவதையும் மனப்பாடம் செய்ய, அவருக்கு ஒரு ஆண்டு காலம் ஆனது. பத்து வயதில் இருந்தே ஆக்ஸ்போர்டு அகராதியை படிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார், அம்மோன் சேயா. அகராதியில் உள்ள வார்த்தைகளை மனப்பாடம் செய்வதற்காக, கடும் சிரமத்தை சந்தித்துள்ளார். அவர் கூறுகையில், "படிக்கும்போது, கடினமான வார்த்தைகள் இருந்தால், அதை குறித்து வைத்துக் கொள்வேன். இந்த அனுபவத்தை வைத்து ஒரு புத்தகம் எழுதியுள்ளேன்"என்றார்.

 

 

StumbleUpon.com Read more...

மூவருக்கு மருத்துவ நோபல் பரிசு

 
 
lankasri.com2008ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு ஜெர்மனியைச் சேர்ந்த ஹரால்டு ஹூசேன் மற்றும் பிரான்சைச் சேர்ந்த சினோசி மற்றும் மான்டகேனீர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபலால் நிறுவப்பட்ட நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட 6 துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.மருத்துவ நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை ஜெர்மனியைச் சேர்ந்த ஹரால்டு ஹூசேன் மற்றும் பிரான்சைச் சேர்ந்த பாரி சினோசி மற்றும் லூக் மான்டகேனீர் ஆகியோர் பெறுகின்றனர்.

எச்ஐவி வைரசை கண்டுபிடித்ததற்காக பிரான்ஸ் விஞ்ஞானிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்படும் புற்றுநோய்க்கான காரணத்தை கண்டறிந்ததற்காக ஜெர்மன் விஞ்ஞானி இந்த விருதை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1223307663&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

திபெத்தில், பூகம்பத்துக்கு 30 பேர் பலி



பீஜிங், அக்.8-

திபெத்தில், 2 முறை பூகம்பம் ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 30 பேர் பலியானார்கள்.

கிர்கிஸ்தானில்...

ரஷியாவில் இருந்து பிரிந்த கிர்கிஸ்தான் நாட்டின் சீன எல்லை அருகே பூகம்பம் ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 72 பேர் பலியானார்கள். இதேநேரத்தில் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபெத்திலும் 2 முறை பூகம்பம் ஏற்பட்டது. இதன் வீரியம் ரிக்டார் அளவில் 6.6 ஆக இருந்தது.

பூகம்பத்தின் மையம், திபெத்தின் தலைநகரான லாசாவில் இருந்து 80 கி.மீ தொலைவில் இருந்தது. பூகம்பம் காரணமாக தலைநகர் லாசா, ஜிடார், டாம்சங் ஆகிய நகரங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன.

30 பேர் பலி

பூகம்பம் காரணமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று உடனடி தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அதன்பிறகு வந்த தகவல்கள் குறைந்த பட்சம் 9 பேர் பலியானதாக தெரிவித்தன. ஆனால் சிறிது நேரத்தில் இந்த எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது. மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பலியான 9பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்தன'' என்று தெரிவித்தனர்.

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் கெடார் நகரத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த நகரம் பூகம்பத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ளது.

பூகம்பம் ஏற்பட்டபோதிலும், குயிங்காய்-திபெத் ரெயில்வேயும், லாசா விமானநிலையமும் வழக்கம் போல செயல்பட்டன.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=443321&disdate=10/8/2008

StumbleUpon.com Read more...

இயற்பியல் துறையில் நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுகிறது


இயற்பியல் துறையில் நோபல் பரிசு
3 பேருக்கு வழங்கப்படுகிறது


ஸ்டாக்கோல்ம், அக்.8-

மருத்துவம், அறிவியல், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து அறிவியலுக்கான நோபல் பரிசு பெறுபவர் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.

அதன்படி டோக்கியோவில் பிறந்த அமெரிக்கரான யோய்ச்சிரோ நம்பு என்பவருக்கு, `உப-அணு அறிவியல் தொழில் நுட்பத்தை கண்டு பிடித்ததற்காக' பரிசு வழங்கப்படுகிறது. அவருடன், மகோடோ கோபயாஷி, தோஷிஹிடே மஸ்காவா ஆகிய ஜப்பான் ஆராய்ச்சியாளர்களும் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். மூன்று விதமான நில நடுக்கங்களை கண்டு பிடித்ததற்காக, இவர்கள் இருவரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பரிசுத் தொகையான சுமார் ரூ.6 கோடியில் (1.4 மில்லியன் டாலர்) பாதித் தொகை யோய்ச்சிரோ நம்புவுக்கும், மீதி தொகையானது மகோடோ மற்றும் மஸ்காவா ஆகியோருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

 


 http://www.dailythanthi.com/CatHome.asp?NewsCategoryID=1

StumbleUpon.com Read more...

பெங்களூரில் பரபரப்பு இரவு விருந்தில் நடிகர் சுட்டுக் கொலை


 


பெங்களூர், அக்.8-

பெங்களூரில் நள்ளிரவு நடந்த விருந்தில் நடிகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சினிமா தயாரிப்பாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நள்ளிரவு விருந்து

பெங்களூரில் உள்ள கம்மனஹள்ளியைச் சேர்ந்தவர் வினோத். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும் இவர் சமீபத்தில் வெளியான `மாதேசா' என்ற கன்னட படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் கோவர்த்தனமூர்த்தி.

நேற்று முன்தினம் இரவு கோவர்த்தனமூர்த்தி பெங்களூரை அடுத்த பாகலூரில் உள்ள தனக்கு சொந்தமான ரெசார்ட் ஒன்றில் மதுபான விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இந்த விருந்துக்கு நடிகர் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் பலரை அழைத்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து இந்த விருந்தில் வினோத், கோவர்த்தனமூர்த்தியின் நண்பர்கள் கலந்து கொண்டனர். நள்ளிரவு 1.30 மணி வரை மதுபான விருந்து நீடித்தது. விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் போதை தலைகேறியதும் ரியல் எஸ்டேட் தொழிலை பற்றி வினோத்திடம் விவாதித்து கொண்டு இருந்தனர்.

நடிகர் சுட்டுக்கொலை

இதில் அவர்களுக்கு இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கோவர்த்தன மூர்த்தி தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வினோத்தை நோக்கி 3 முறை சுட்டார். இதில் வினோத் படுகாயம் அடைந்தார்.

உடனே அவரை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள மணிப்பால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி வினோத் ஆஸ்பத்திரியிலேயே நேற்று காலை 10 மணிக்கு பரிதாபமாக செத்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த சினிமா தயாரிப்பாளர் கோவர்த்தனமூர்த்தியும், மற்றும் அவரது நண்பர்களும் தலைமறைவாகி விட்டனர்.

காரணம் என்ன?

சுட்டுக்கொல்லப்பட்ட வினோத்தும், படத்தயாரிப்பாளர் கோவர்த்தன மூர்த்தியும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனவே தொழில் சம்பந்தமாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவர்த்தன மூர்த்தி மற்றும் அவரது நண்பர்களை வலை வீசி தேடி வருகின்றார்கள்.

பலியான வினோத்துக்கு சமீபத்தில்தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=443269&disdate=10/8/2008

StumbleUpon.com Read more...

ஒரிசாவில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி `டிஸ்மிஸ்' செய்யப்படுமா? மத்திய மந்திரிசபை இன்று பரிசீலனை

 


புதுடெல்லி, அக்.8-

ஒரிசாவில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை `டிஸ்மிஸ்' செய்வது பற்றி மத்திய மந்திரிசபை இன்று ஆலோசனை நடத்துகிறது.

பிரதமர் உத்தரவு

ஒரிசாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சாமியார் சுவாமி லட்சுமணானந்தா சரஸ்வதி உள்பட 5 பேர், மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கிறிஸ்தவர்களே காரணம் என்று கூறி, கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஒரிசாவை ஆளும் பிஜ× ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி அரசுக்கு மத்திய அரசு அடுத்தடுத்து எச்சரிக்கை விடுத்து வந்தது.

கடைசியாக கடந்த 3-ந் தேதி நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், ஒரிசா நிலவரம் பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீலிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார். ஒரிசா கலவரத்தால், பிரான்சு நாட்டுக்கு சென்றிருந்தபோது, தனக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

கவர்னரிடம் அறிக்கை

இதைத்தொடர்ந்து, ஒரிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு சிவராஜ் பட்டீல் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை விடுத்து கடிதம் எழுதினார். மேலும், கவர்னர் எம்.சி.பாண்டரேவிடம் ஒரிசா நிலவரம் பற்றி அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வுகளால், ஒரிசா அரசு `டிஸ்மிஸ்' செய்யப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்றாற்போல், ஒரிசா விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று சில மத்திய மந்திரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

இன்று ஆலோசனை

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில், ஒரிசா நிலவரம் பற்றி விவாதிக்கப்படுகிறது. ஒரிசாவின் தற்போதைய சூழ்நிலை குறித்து சிவராஜ் பட்டீல் எடுத்துரைக்கிறார்.

இக்கூட்டத்தில், ஒரிசா அரசை `டிஸ்மிஸ்' செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

அசாமில் மேலும் ஒருவர் பலி

இதற்கிடையே, அசாமில் உதல்குரி, தர்ரங் ஆகிய மாவட்டங்களில் நீடித்து வரும் வன்முறைக்கு நேற்று மேலும் ஒருவர் பலியானார். அவர் உதல்குரி மாவட்டம் கச்சுபில்லில் மர்ம கும்பலால் கொல்லப்பட்டார். இதனுடன் சேர்த்து, இம்மாவட்டங்களில் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவும், கண்டதும் சுட உத்தரவும் தொடர்ந்து அமலில் உள்ளது. ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=443277&disdate=10/8/2008

StumbleUpon.com Read more...

ஒரிசா கலவர பீதி;கிறிஸ்தவர்கள் வீடு திரும்ப மறுப்பு-முகாம்களில் தஞ்சம்

lankasri.comஒரிசா மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் விசுவ இந்து பரிசத்தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி சுவாமி படுகொலை செய்யப்பட்டதால் வன்முறை வெடித்தது.மாவோயிஸ்ட் தீவிர வாதிகளில் உள்ள கிறிஸ்த வர்கள் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்ததால் ஒரிசா மாநில பழங்குடியினத்தவர்கள் குறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

அப்போது 35 கிறிஸ்தவர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.இதனால் பய்ந்து போனசுமார் 40 ஆயிரம் கிறிஸ்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி காடுகளுக்குள் தப்பி ஓடினர். குழந்தைகளுடன் அனாதைகளாக தவித்து வரும் அவர்களுக்கு மாநில அரசு முகாம்கள் அமைத்து தங்க வைத்துள்ளது. அங்கு அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது.

முகாமைச் சுற்றிலும் மத்திய பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள். இதனால் பழங்குடியின மக்களால் அப்பகுதிக்கு சென்று தாக்குதல் நடத்த இயலவில்லை.

இந்நிலையில் முகாம்களில் தங்கியுள்ள கிறிஸ்தவர்களிடம் அரசு அதிகாரிகள் வீடு திரும்பும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் கிறிஸ்தவர்கள் மீண்டும் கலவரம் வெடிக்கலாம் என்ற பீதியில் வீடு திரும்ப மறுத்து விட்டனர்.

ஒரிசாவில் கந்தமால், உதய்கிரி, ரெய்கியா, நுவாகம் போன்ற பகுதிகளில் தான் வன்முறை அதிக அளவில் நடந்தது. அப்பகுதியை சேர்ந்த ஆஷாலதாநாயக் கூறியதாவது:-

நான் குடும்பத்துடன் வீட்டில் இருந்த போது ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்தது. அவர்களை பார்த்ததும் நான் காலில் விழுந்து கெஞ்சினேன். ஆனாலும் அக்கும்பல் கணவரை என் கண் முன்னாலேயே சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

வீட்டை விட்டு வெளியேறி காப்பாத்துங்க, காப்பாத்துங்க என்று கூச்சல் போட்டேன். அப்போது என்னையும் அக்கும்பல் உருட்டுக்கட்டையால் தாக்கியது.

இதனால் பயந்துபோன நான் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக காட்டுக்குள் தப்பி ஓடினேன். ஒரிசாவில் இனி கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பே இல்லை. எங்களை அந்த கும்பல் தாக்கிய போது போலீசார் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இதனால்தான் நாங்கள் மீண்டும் வீட்டுக்கு போக பயப்படுகிறோம்.இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.

கனகா ரெய்கர்நாயக் என்ற பெண் கூறும்போது, நான் எனது 6 வயது மற்றும் 3 வயதுடைய குழந்தைகளுடன் வீட்டில் இருந்தபோது எங்கள் கண் எதிரே கணவரை ஒரு கும்பல் கோடாரியால் வெட்டி கொன்றது.

என் கணவர் தான் உண்டுதான் வேலை உண்டு என்றுதான் இருப்பார். அவர் கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது இழப்பை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார்.

கிறிஸ்துதாஸ் கூறும் போது, எங்கள் கிராமத் திற்குள் 1500 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வந்தது. பின்னர் வீடுகளில் தீ வைத்தது. இதில் என் மனைவி ரமோனி தீயில் கருகி இறந்து போனார். இதே போல் எங்கள் கிராமத்தில் ஏராளமான குழந்தைகள் கலவரக்காரர்களின் நெருப்புக்கு இரையாகி விட்டன. இந்த இழப்பை யாராலும் தாங்க முடியாது"என்றார்.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உணவு- உடை வழங்க தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதை மாநில அரசு அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. முகாம்களுக்கு வேறு மாநில கிறிஸ்தவர் அமைப்பை சேர்ந்தவர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.கலவரப்பகுதிகளில் துணை ராணுவம் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகிறது.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223380090&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

தஸ்லிமா - மத அடிப்படைவாதத்தின் மற்றும் ஒரு மைல்கல்

அதன் பிறகு (Thereafter):

என் சகோதரி ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைப் பாடுவது வழக்கம்
அவள் சிமோன தி புவோவை விரும்பிப் படிப்பதும் வழக்கம்.
மதிய குளியலை மறந்து அவள் தன்னை மறந்து கார்ல் மார்க்ஸ்,
கார்கி, டால்ஸ்டாய், மற்றும் மாணிக் பந்தோபாத்யாய நாவல்கள் போன்றவற்றில் மூழ்குவாள்.
அவளுடைய பழைய ஞாபகத்தில் மூழ்குவதற்கு லாரா இன்கல்ஸ் வைல்டர்தான் பிடித்தமானவர்
போரைப் பற்றிய காட்சிகளைப் பார்த்தால், பாதி ராத்திரிவரை அழுது கொண்டேயிருப்பாள்.
என் சகோதரி அருமையான கவிதைகளை வாசிப்பாள்;
அவளுக்கு விருப்பமான சங்கா கோஷ், நீரேந்திரநாத் சக்கரபாரதி, நெருடா, மற்றும் யெவ்துஜூங்கோ
என் சகோதரி காட்டை நேசித்தாள், தோட்டத்தையல்ல;
அவள் சிலைகளை விரும்புவாள். ஒரு முறை இவற்றிற்காகப் பாரீஸ் போக டிக்கெட் வாங்கினாள்.
இப்போது என் சகோதரியின் கவிதை நோட்டில்
காய்கறி பற்றிய விவரங்களை எழுதி வைத்திருக்கிறாள்,
இப்போது பெருமையோடு சுற்றி வருகிறாள், உடல்நிறைய உலோக ஆபரணங்களை அணிந்து
அவள் பெருமையோடு சொல்கிறாள்
அரசியலைப்பற்றி
எண்ணியதில்லை
கலாச்சாரம் எக்கேடும் கெட்டுப்போகட்டும் அதுபற்றி அவள் கவலைப்படுவதில்லை.
அவளின் வீணை மீது தூசி படிந்திருக்கிறது, அவளின் தம்புரா எலி வலையானது
இப்போது அவள் கடை வீதிகளுக்குப் போய் வீட்டிற்கு தேவையான பொருட்களைச் சேகரிப்பதில்
கெட்டிக்காரியாகி விட்டாள்.

—————-

தஸ்லீமாவின் எழுத்துக்களின் மீதான ஈர்ப்பு எப்போது எனக்கு ஏற்பட்டது என்று உறுதியாய்ச் சொல்ல முடியாது. முழுதாய் அவரது புத்தகங்கள் பல இடங்களில் கிடைக்காத நிலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் படித்துப்பார்த்த அவரது கவிதைகள் சற்றே பிடித்துப் போய் விட தேடித் தேடி மட்டுமே அவரது எழுத்துக்களை படித்து வந்திருக்கிறேன். ஒன்றை என்னால் உறுதியாய்க் கூறிவிடமுடியும். இவர் ஒன்றும் தலை சிறந்த எழுத்தாளர் என்று ஏகமனதாய் எல்லாரும் கூறி விடுமளவுக்கு புலமை பெற்ற எழுத்துக்கு சொந்தக்காரர் இல்லைதான்.  இவரது சில கவிதைகள் வெகு சாதாரணத் தன்மையைக் கொண்டவையே. அவை ஒட்டு மொத்த கணக்கில் ஒன்றை ஏற்றி வைத்ததைத் தவிர வேறு எந்த விதமான பயன்பாட்டுக்கும் தேவைப்பட்டிருக்க வில்லை. இருப்பினும் இவரது சில கவிதைகளும் அதன் உள்ளே ஒளிந்திருக்கும் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் ஒட்டு மொத்த கூக்குரலும், வலிகளின் ஓசைகளும் மெல்லியதாய் பிணைந்திருக்கும் சோகமும், கரணமற்று தங்களுக்கு அணிவித்திருக்கும் விலங்குகள் குறித்தான அறச்சீற்றமும் கலக எழுத்துக்காரர்களில் தவிர்க்க முடியா ஓர் இடத்தை இவருக்கு வழங்கி விட்டுச் சென்றிருக்கிறது.

1971 லிருந்து பங்களாதேஷ் என்று அறிவிக்கப்பட்ட கிழக்கு பாகிஸ்தானில் 1962ல் பிறந்த இவர், தனது முதல் கவிதைத் தொகுப்பான Hunger in Roots ஐ 1986 ல் வெளியிட்டார். தொடர்ந்து கவிதையுலகில் மட்டுமே தன்னை அடையாளப் படுத்திக் கொண்டிருந்த இவர் தனது முதல் நாவலும், பெரிதும் சர்ச்சைக்குரியதுமான லஜ்ஜா (வெட்கம்) எனும் நாவலை முதன் முதலில் வெளியிட்டது 1993ல். இவரது ஒட்டுமொத்த வாழ்க்கையின் ஒரு பெரும் திருப்புமுனை என்று இந்த நாவலைச் சொல்லலாம்.

ஒருவேளை இந்த புத்தகத்தை இவர் ஓரிரு வருடங்கள் முன்பே வெளியிட்டிருந்தால் பங்களாதேஷில் "நத்யாஸவ"  அவார்டை இவர் பெறாமலே போயிருக்கலாம். 1992ல் ஆனந்த புரஷ்கார் அவார்டில் ஆரம்பித்து பல வெளிநாட்டு அவர்ர்டுகளை வாங்கி வைத்திருந்தாலும் பங்களாதேஷில் இவர் வாங்கிய ஒரே அவார்டு "நத்யாஸவ" மட்டுமே. இதில் ஆனந்த புரஷ்கார் ஐ வாங்கிய முதல் பெண்மணி இவரே. இந்த விருதை இவரே 2000 ஆம் ஆண்டு மற்றொரு முறை பெற்றிருக்கிறார். பிரிட்டன், பெல்ஜியம், அமெரிக்கா, நார்வே, ஃப்ரான்ஸ், இந்தியா என பல நாடுகளின் விருதுகளை, அங்கீகாரத்தை இவர் பெற்றிருந்தாலும், பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இவர் ஒரு நாடோடியாகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

1994ல் பங்களதேசின் கைது உத்தரவைத் தொடர்ந்து ஆரம்பித்த அவரது இந்த நாடோடி வாழ்க்கை ஃப்ரான்சு, ஸ்வீடன், இந்தியா என ஓர் தொடர்ச்சியற்ற பயணமாய் நீண்டுக் கொண்டே இருக்கிறது. மத்ச்சார்பற்ற நாடு என்று தன்னை உலகிற்கு அடையாளப் படுத்திக் கொள்ளுவதில் பெருமை கொள்ளத் துடிக்கும் இந்திய நாட்டில்தான் இவர் அதிகமாய் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். கோல்கத்தாவில் சில காலம், ஜெய்ப்பூர் ஹோட்டலில் கொஞ்சம், டெல்லியில் பாதுக்கப்புக் காரணங்களுக்காக என்று சொல்லி ரகசிய காவலில், இடையில் "திவிகாந்திதோ" (Split up into two) என்ற புத்தகத்திலிருந்து வெகு சர்ச்சைக்குரிய மூன்று பக்கங்களை மட்டும் எடுத்துவிடச் சொல்லி பல தரப்பினரிடமிருந்தும் மிரட்டல்கள், கோரிக்கைகள். ஹைதராபாத்தில் தனது புத்தக வெளியீட்டு விழாவின் போது மூன்று சட்ட மன்ற உறுப்பினர்களாலேயே நேரடியான, வெளிப்படையான தாக்குதல்கள், நந்திகிராம் பிரச்சினையின் ஒட்டு மொத்த கவனத்தை திருப்ப மேற்கு வங்க இடதுசாரி என்று சொல்லிக் கொள்ளும் மதச்சார்பற்ற (???) அரசாங்கத்தின் முதுகெலும்பில்லாத செயல்கள், ஃபத்வா, தஸ்லீமாவின் தலைக்கு ஐந்து லட்சம் பரிசு, பங்களாதேஷின் விசா ரத்து, தொடர்ச்சியாய் நீங்கள் "தாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்" பணிபுரிய வேண்டுமானால் எழுதுவதை நிறுத்தி விட வேண்டும் என்ற கட்டளை…

கலகக்காரன்(ரி) என்பது வெறும் வாய் வார்த்தைகளுக்கோ, போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகும் கருத்துக்களுக்காகவோ கொடுக்கப்படுவது அன்று. அது வாழ்தலின் அடிப்படையிலேயே பெறப்படுவது. அந்த வகையில் தஸ்லீமா தான் வாழ்கின்ற காலத்தில் ஒரு பெரும் கலகக்காரியாய் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார் என்பது பெரும் நிதர்சனம். கடைசியாய் மார்ச் 18 2008 அன்று இந்தியாவை விட்டு கிளம்பும் முன்பு கல்கத்தா டெய்லியில் "Need to escape from death chamber" அவர் எழுதிய கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. அந்த கட்டுரை இந்திய அரசாங்கத்தின் கையாலாகாத் தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 110 நாட்கள் ரகசிய காவலில், தனிமையில் நான் வெறுமனே நடைபிணமாய் இருந்தேன் என்று சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்.

Even though they constantly pressured me mentally to leave the country, I refused to budge. I was determined I would not leave this country. When they saw it was pointless trying to destroy my mind, they attempted to destroy my body. In this they succeeded by ruining my health which leaves me with no other alternative but to leave this country.THEY FINALLY DID IT.

————————————————–

தஸ்லீமாவைப் பொறுத்த வரை அவருக்கு குடியுரிமை வழங்க ப்ரான்சு, ஸ்வீடன் ஆகிய நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு முன்வருகின்றன. ஸ்வீடன் அரசாங்கம் குடியுரிமையோடு மாத வருவாய், தங்க இடம் உள்ளிட்ட பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. இருப்பினும் அவரது மனம் இந்தியாவிற்கு வருவதையே விரும்புகின்றது. இந்த உணர்வை புரிந்துக் கொள்வது சற்றே கடினமானது. ஈழத்து சகோதரர்கள் எவ்வளவு வசதிகள் குறைவிருந்தாலும் தமிழகம் வருவதையே ஏன் விரும்புகிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டால் மட்டுமே இதையும் உணர முடியும். ஐந்து மாத கால இடைவெளியில் ஆகஸ்ட் 8 திரும்பவும் இந்தியா திரும்பி இருக்கிறார் என்று சில செய்திகள் சொல்கின்றன. ஆனால் இதுவரை இவருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்திய அரசுக்கு தைரியம் வர வில்லை.

சில விஷயங்கள் நடந்து முடிந்து விட்டிருக்கலாம். அல்லது மீடியாக்கள் தனது கவனத்தை வேறு பக்கம் திருப்பி இருக்கலாம். ஆனாலும் ஒரு சில சம்பவங்கள் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மத அடிப்படைவாதம் எனும் கோரைப்பற்களில் ரத்தக் கறை தோய்ந்த, வெறி பிடித்த ஓநாயின் குரூர முகத்தை பிரதிபலிக்கும் வெற்றிச் சின்னங்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

தீபா மேத்தாவின் ஃபயர், வாட்டர், எர்த் உள்ளிட்ட படங்களின் மீதான இந்துத்துவ கும்பலின் எதிர்ப்பு மற்றும் வாரணசியில் நடந்த படப்பிடிப்புக் குழுவினரின் மீதான அராஜகங்கள், வீதி நாடகம் நடத்திய சப்தார் ஹாஸ்மியின் கொலை, அமீர்கானின் படத்திற்கெதிரான குஜராத் மாநிலத் தடை, கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் படுகொலைகள், தஸ்லீமா, ஹூசைன், ரசூலின் மீதான ஃபத்வா ஆகிய அனைத்துமே மத அடிப்படைவாதத்தின் பல்வேறு குரூர முகங்கள்தான்.

தீபா மேத்தாவிற்கும், தஸ்லிமாவிற்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் பல்வேறு சமயங்களில் மத அடிப்படைவாதிகளால் தொடர்ந்து தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகிக் கொண்டிருப்பவர்கள். இருவருமே சில ஆவணங்களை அதன் உண்மைத்தன்மை குலையாமல் பதிவு செய்ய விரும்புபவர்கள். தான் சார்ந்த மதத்தின் போலி புனிதத்தன்மை குறித்தான கிஞ்சித்தும் அக்கறை இல்லாதவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாய் இருவருக்கும் இந்தியாவினுள் சுதந்திரமாய் நடமாட காவல் துணை தேவைப்படுகிறது.

டிசம்பர் 6 1992 - பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக்கலவரத்தினால் வெகுவாய் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பல இருந்தன. இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்கள் முஸ்லீம்களையும், பங்களாதேஷில் பெரும்பான்மை முஸ்லீம்கள் இந்துக்களையும் துரத்தி துரத்தி வேட்டையாடிய காலம் அது. தான் பார்த்த, தன்னை பாதித்த சம்பவங்களை, தனது முதல் நாவலான லஜ்ஜாவில் பதிவு செய்ய முயன்றதன் தொடர்ச்சியாய் ஆரம்பித்த தஸ்லீமாவின் மீதான கொலை வெறித்தாக்குதல்கள் இன்னமும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றது.

உச்சகட்டமாய் ஹைதராபாத்தில் தஸ்லீமாவை தாக்கிவிட்டு பேட்டி கொடுத்த சட்டமனற உறுப்பினர்களின் "முதலில் நாங்கள் முஸ்லிம்கள்.இஸ்லாத்திற்கு எதிராக பேசுபவர்களை எந்த முறை சாத்தியப்படுகிறதோ அந்த முறையில் எதிர்ப்போம்.அது எங்களின் கடமையும்கூட" எனும் பேட்டிகள் இந்தியாவின் மதச்சார்பின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது.

"எந்தவொரு மதம் மாறுபட்ட நம்பிக்கைகளை உடைய மக்களை அவமதிக்கிறதோ,
எந்தவொரு மதம் பெண்களை அடிமையாக வைத்திருக்கிறதோ,
எந்தவொரு மதம் மக்களை அறியாமையில் வைத்திருக்கிறதோ,
அப்படியானால் அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்."

தஸ்லிமாவின் மீதான தாக்குதல்களின் போது இந்தியாவில் கருத்துச்சுதந்திரம் குலைந்து விட்டது என்று கூக்குரலிட்ட பி.ஜே.பி, மோடி, இந்துத்துவா அமைப்புகளின் ஆதரவுகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களது தாக்குதலை நியாயப்படுத்தி "நீ என்ன ஒழுங்கா" என்று பதில் குரல் கொடுக்க ஏதுவாய் அமைந்து விட்டது. இந்த கேள்வியின் பின்னே அடிப்படைவாதம் தனது செயல்களை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மதத்தினடிப்படையில் யார் எது செய்தாலும் அது சரிதான் என்று இங்கே ஒரு பெருங்கூட்டம் உணர்ச்சிவசப்பட்டுக் கத்திக் கொண்டிருக்கிறது. மார்க்கமும், இந்துத்துவமும் தோன்றிய நாட்களுக்கப்புறம் வழி வழியாய் உயர் வகுப்பு ஆண்கள் தொடர்ச்சியாய் தன் சந்ததியினருக்கு கற்றுத்தந்த, உட்புகுத்திய ஓர் நெறிமுறையாய் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது. இப்போதும் அது உயர் சாதி ஆண்களின் கையில் இருக்கும் சாட்டையாய் இருந்துக் கொண்டிருக்கிறது. ஆகவே தஸ்லீமா உள்ளிட்ட கலகக்காரர்கள் மதத்திற்கெதிராய் குரல் எழுப்பும் போது இங்கு இரண்டு செயல்கள் நடைபெறுகின்றன.

ஒன்று என் மதத்தை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சூளுரைத்து கையில் வாளுடன் ஒரு கூட்டம் தெருவில் இறங்கி விடுகிறது. இன்னொரு கூட்டம் மார்க்கம் / வேதம் உண்மையில் அப்படிச் சொல்ல வில்லை. அதன் கூற்றுக்கள் வேறு என்று அராபி, உருது, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மேற்கோள்களுடன் கூடிய வரிகளை எழுதி அதற்குப் பக்கம் பக்கமாய் விளக்கங்களை அளித்துக் கொண்டிருக்கின்றனர். அடிப்படையில் இந்த இரண்டு குழுக்களும் தனது மதத்தை மறு ஆய்வு செய்வதற்குப் பயந்துக் கொண்டு தன் மதம் குறித்தான போலிப் புனிதத் தன்மை குலைந்து விடக்கூடாதே என்று எடுத்துக் கொள்ளும் இருவேறு முயற்சிகளே.

H.G.ரசூலுக்கு ஃபத்வா விதித்த தக்கலை அமைப்பினரையும், வாரணாசியில் தீபா மேத்தாவின் படப்பிடிப்புக் குழுவின் மீது தாக்குதல் நடத்திய காவிக்கும்பலையும் மேற்சொன்ன உயர்சாதி ஆண்களின் கையில் இருக்கும் மதம் எனும் சவுக்கிற்கு சரியான எடுத்துக்காட்டாய்ச் சொல்லலாம். தஸ்லீமாவின் அடிப்படை அறச்சீற்றமும், கலகக் குரலும் கூட தான் சார்ந்த மதத்தை கேள்வி கேட்பதை விட, அந்த மதத்தை கையில் வைத்திருப்பவர்கள் முன்மொழிபவைகளில், வழங்கும் தீர்ப்புகளில், தொடரும் மனித வேட்டைகளில் இருக்கும் குரூரத்தனத்தைதான் கேள்வி கேட்கின்றன. இதைப் புரிந்துக் கொள்ளாதவர்கள் தோப்பில் முகமது மீரான், இன்குலாப், ரசூல், தஸ்லீமா உள்ளிட்டோருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்களை விடுத்துக் கொண்டிருக்கும் வேட்டையாளர்களாய்தான் இருந்துக் கொண்டிருப்பார்கள். கையாலாகாத அரசாங்கமும் இந்திய இறையாண்மை, மதச்சார்பின்மை என்பது போன்ற வார்த்தைகளின் பின்னே ஒளிந்துக் கொண்டு அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருப்பார்கள்.

எப்போதும் சில விஷயங்களில் காணப்படும் தீவிரத் தன்மை மற்றும் மீடியாக்கள் தரும் வெளிச்சத்தின் கால அளவு என்பது எப்போதும் அடுத்ததாய் கிடைக்கும் வழமையான விஷயத்தைச் சார்ந்ததாகவே அமையும். நந்திகிராம் விஷயம் உச்சத்தில் இருந்த போது திட்டமிட்டே இடதுசாரிகளால் கவனமாய் திசை திருப்பப் பட்ட தஸ்லீமா விவகாரம். தஸ்லீமா விவகாரத்தின் தொடர்ச்சியாய் மற்றொன்று… என்று மீடியாக்களிற்கு எப்போதும் வெகு சூடான விவகாரங்கள் மட்டுமே தேவைப் பட்டுக் கொண்டே இருக்கின்றன.

உத்தப்புரத்தில் தீண்டமையின் சின்னமாய் தடுப்புச் சுவர் இன்னமும் இருந்துக் கொண்டிருக்க, மீடியாக்களோ ஏதோ இந்தப் பிரச்சினைக்கு முழுதாய் தீர்வு கண்டு விட்டது போல பாதியிலேயே தனது கவனத்தை அடுத்ததொரு சுவாரஸ்யமான சம்பவத்தை நாடிச் சென்று விட்டது. ஆனால் பிரச்சினை இன்னமும் தீர்ந்த பாடில்லை. அது பாதி அணைந்த நெருப்பாய் உள்ளுக்குள் எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதன் விளைவுதான் மூன்று நாட்களுக்கு முன்பு அமலாக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளும், கைதுக்களும்.

தஸ்லீமாவின் விவகாரத்திலும் இதே நிலைதான். இந்தியாவை விட்டு சென்று விட்டதால் அடிப்படைவாதிகள் மௌனம் காக்கின்றார்களே தவிர, இவர்கள் தங்களது தவறை உணர்ந்தவர்களாயில்லை. இப்போது உள்ளுக்குள் அமைதியாயிருக்கும் இந்த தீவிரவாதிகள் தஸ்லீமாவின் அடுத்த புத்தக வெளியீட்டு விழாவிலோ அல்லது இந்தியாவில் ஏதேனும் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் போதோ தனது ரத்த வெறியை காண்பிக்கக் கூடும். ரசூலோ, தீபா மேத்தாவோ, தீப்பில் முகமது மீரானோ சில சம்பவங்களை ஆவணங்களாக்க முயற்சிக்கும் போதோ அல்லது அடர்த்தியாய் பனி பொழியும் ஓர் அதிகாலைப் பொழுதிலோ கொலை செய்யப்படலாம். அப்போதும் மத்திய அரசு மௌனமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும். பிய்ந்து தொங்குவது இந்தியாவின் மதச்சார்பின்மை எனும் முகமூடியாய் இருக்கும்.

தஸ்லீமாவின் புகழ் பெற்ற "அம்மாவின் மரணம்" கவிதை

I
இறுதியில் எனது தாயின் கண்கள்
முட்டையின் மஞ்சள கரு போலாகியது
ஏப்போதும் வெடித்துவிடும் போல
நிரம்பி வழியும் தண்ணீர் தேக்கி போல
அவளது வயிறு உப்பியபடியிருந்தது
இனி அவளால் எழுந்து நிற்கமுடியாது
உட்காரமுடியாது
அவளது விரல்களைக்கூட நகர்த்தமுடியாது
அப்படியே கிடக்கிறாள்

ஓவ்வொரு காலையிலும் உறவினர்கள் வருகிறார்கள்
ஓவ்வொரு மாலையிலும்
வெள்ளிக்கிழமை புனிதத் திருநாளில்
அம்மா மரணிக்க ஏற்பாடு செய்யும்படி சொல்லிச் செல்கிறார்கள்
லா ஏலாஹா இல்லாஹா எனச் சொல்லியபடி
அல்லா ஒருவனே எனச்சொல்லியபடி
முங்கரும் நாகிருமான
இரண்டு தேவதைகள் கேள்விகள் கேட்க வரும்போது
அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிடவேண்டாம்
என எச்சரிக்கை செய்கிறார்கள்

கடைசித் தீர்ப்பின் பொருட்டு அல்லாவிடம்
அவனது பதில்களை எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள்
அறையைச் சுத்தமாக வைத்திருக்கும்படி
முற்றத்தைச் சுத்தமாக வைத்திருக்கும்படி
வாசனைத் திரவியங்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளும்படி
மரணம் இறுதியாக வரும் பொருட்டு தயாராக இருக்கும்படி

பசி கொண்ட நோய் இப்போது
அம்மாவின் உடம்பின் மீது நடனமாடத் தொடங்கிவிட்டது
அவளது எஞ்சிய பலத்தையும் உறிஞ்சத் தொடங்கிவிட்டது
கண்குழியிலிருந்து விழிகள் பீதங்கத் துவங்கிவிட்டது
மார்புக் கூட்டினின்று காற்று களவாடப்பட்டு
நா வரண்டு பொயிற்று
ஆவள்முச்சுக்காகப் போராடும்போது
அவளது நெற்றியும் இமைகளையும் வலியால் நெறிபடுகிறது
முழு வீடும் சத்தம் போடுகிறது
தமது நல்லெண்ணத்தை தீர்க்கதரிசிக்கு தெரிவிக்கும்படி
அவள் சொர்க்கத்துக்குச் செல்வாள் என்பதில்
எவருக்கும் சந்தேகமில்லை

வெகு சீக்கிரமே முகமதுவுடன் கைகோர்த்தபடி
ஒரு அழகான மதியநேரத்தில்
ஒரு தொட்டத்தில் அவள் நடப்பாள்
இருவரும் பறவைக் கறியை உண்பார்கள்
சொர்க்கத்தோட்டத்தில் அவள் முகமதுவுடன் சேர்ந்து நடப்பாள்

ஆனால் இப்போது பூமியைவிட்டுப் பிரியும் நேரமான இப்போது
ஆவள் தயங்குகிறாள்
வெளியேறுவதற்கு மாறாக
ருசிக்கும் அரிசிச் சமையலை எனக்கு ஆக்கிப்போட விரும்புகிறாள்
ஹில்ஸா மீனை வறுக்க தக்காளிக்குழம்பு வைக்க
தோட்டத்தின் தெற்கு மூலையில் இருந்து
முற்றாத இளநீர்காயை எனக்குப் பறித்து வர விரும்புகிறாள்
எனது நெற்றியில் வந்துவிழும் கூந்தல் கற்றைகளை விலக்கும் பொருட்டு
தனது கையினால் காற்று விசிறிவிட விரும்புகிறாள

எனது படுக்கையில் புதியதொருவிரிப்பை விரிக்க அவள் விரும்புகிறாள்
எம்பிராய்டரியுடன் புதிதாக எனக்கு ஒரு ரவிக்கை தைக்க விரும்புகிறாள்
இளம் பப்பாளி மரத்துக்கு
ஒரு கம்பை முட்டுக் கொடுக்க அவள் விரும்புகிறாள்
முற்றவெளியில் வெறும் காலுடன் நடக்க
நிலா இரவில் பாட்டுப்பாட அவள் விரும்புகிறாள்
அவள் முன்னெப்போதும் அப்படிச் செய்ததேயில்லை
மருதாணித் தோட்டத்தில்
முன்னெப்போதும் நிலவின் ஒளி அப்படி பூமிக்கு வந்ததேயில்லை
முன்னெப்போதும் இத்தகைய உணர்ச்சி எனக்கு வந்ததேயில்லை

அவளது முடிவில்லா தாயன்பு
தொடர்ந்து வாழ்வதற்கான அவளது ஆச்சர்யமான அவளது ஆசை
அவள் எனது கைகளை இறகப்பற்றிக் கொண்டள்

II

எனக்கு நிச்சயமாகத்தெரியும் மறுபிறப்பு என்பது இல்லை
இறுதித்தீர்ப்பு நாள் என்பதும் இல்லை
சொர்க்கம் பறவை இறைச்சி திராட்சைரசம்
கருநீலத் தேவதைகள்-
இவையனைத்தும் மதவாதிகளின் வலைகளன்றி வேறில்லை
அம்மா சொர்க்கத்துக்குப் போகப் போவதில்லை
எவரோடும் எந்தத் தோட்டத்திலும் அவள் நடக்கப்போவதில்லை

வஞ்சகம் நிறைந்த ஓநாய்கள் அவளது சவக்குழியில் நுழையும்
அவளது சதையைப்புசிக்கும்
அவளது வெண்ணிற எலும்புகள் காற்றினால் சிதறப்படும்
இருப்பினும்
ஏழ்வானங்களுக்கு அப்பாலோ அல்லது வேறெங்கேயோ இருக்கும்
சொர்க்கத்தை நான் நம்ப வேண்டும்
ஒரு அதி உன்னதமான பிரம்மாண்டமான சொர்க்கம் நோக்கியே
கடினமான பாலத்தை மிகச் சுலபமாக வலியின்றி
எனது அன்னை கடந்து செல்ல முடியும்.
திடகாத்திரமாக ஆண் தீர்க்கதரிசி முகமது அவளை வரவேற்பார்.
அவளைத் தழுவிக் கொள்வார்
அவரது மயிரடர்ந்த மார்பில் அவளைக் கரைந்துபோகுமாறு செய்வார்.

நீருற்றில் குளிக்க அவள் விரும்புவாள் நடனமாட விரும்புவாள்
அவள் முன்னெப்போதும் செய்திராத அனைத்தையும் அவள் செய்வாள்
தங்கத்தட்டில் பறவைக் கறி அவளுக்கு வந்துசேரும்
அல்லாவும் தோட்டத்திற்கு வெற்றுக் கால்களுடன் வருவார்
ஒரு சிவப்புமலரை அவளது கூந்தலில் சூடுவார்
ஆதுரமாக முத்தமொன்று தருவார்
இறகுகளின் மஞ்சத்தில் அவள் உறங்குவாள்
எழுநுாறு விசிறிகள் வீசப்படும்
அழகான இளம் பையன்களால் குளிர்ந்த நீர் பறிமாறப்படும்.
அவள் சிரிப்பாள்.
ஆதி சந்தோஷத்தினால் அவளது முழு உடலும் பூக்கும்.
பூமியில் அவளது துன்பமயமான வாழ்வை அவள் மறந்து போவாள்

III

கடவுள் நம்பிக்கையற்ற எனக்கு
எனது பிரியமான அன்னையின் சொர்க்கத்தைப் பற்றி
கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்பது
எத்துணை பரவசமாக இருக்கிறது
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP