சமீபத்திய பதிவுகள்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாலினச் சிக்கல்களும்

>> Tuesday, October 28, 2008


இந்து ராஷ்டிரத்தை அடையப் புறப்பட்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரங்கள், ஏன் ஆண்களை மட்டுமே கொண்ட அமைப்புகளாக உள்ளன என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் உமாபாரதி, சுஷ்மா சுவராஜ் போன்ற சில பேர்களை நாம் அறிவோம், அண்மையில் விஜய ராஜே சிந்தியா, சாத்வி ரீதம்பரா போன்ற சில பெயர்களை கேள்விப்படுகிறோம். இவர்களில் எவராலும் இந்துத்துவ கொள்கைகளை உருவாக்கும் இதயமான ஆர்.எஸ்.எஸ். பக்கம் எட்டிக் கூட பார்க்க முடியவில்லை. இவை குறித்து ஆர்.எஸ்.எஸ். இன் தலைமை சர்வாதிகாரி சுதர்சன் உரையை அண்மையில் கேட்க முடிந்தது.

மார்ச் 31, 2005 அன்று 'ராஷ்டிர சேவிக்கா சமிதி'யின் நிறுவன உறுப்பினர் லட்சுமிபாய் கேல்கர் குறித்த குறுந்தகடை வெளியிட்டு சுதர்சன் உரையாற்றினார்: ஆர்.எஸ்.எஸ்.இல் பெண்களை இணைத்துக் கொள்ள இயலாது. ஏனெனில் இந்திய சமூகம் அதனை அனுமதிப்பதில்லை. ஆண்களும், பெண்களும் இணைந்து பணியாற்றினால், அது சமூகத்தில் தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார். எந்த இந்திய சமூகம் குறித்து சுதர்சன் பேசுகிறார் என்று நமக்குப் புரியவில்லை. நாடெங்கிலும் இரு பாலரும் இணைந்து படிக்கும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. பெண்கள் பணிபுரியாத வேலைத்தளமே இல்லை எனலாம். என்ன விளைவை இவர் கண்டுவிட்டார் என்று புரியவில்லை. பெண்களை ஆர்.எஸ்.எஸ்.இல் இணைக்காதது ஏதோ சிறு விஷயமல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தந்தை வழி விழுமியங்களைக் கொண்டது.

1936 இல் லட்சுமிபாய் கேல்கர், அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவரிடம் சென்று தன்னை ஆர்.எஸ்.எஸ்.இல் இணைக்கும்படி கேட்டுள்ளார். கம்பை கையில் ஏந்தி பெண்களுக்கான சுய பாதுகாப்பை கற்றுக் கொள்ளவும் அவர் விரும்பினார். பெரும் குழப்பத்தில் சிக்கிக்கொண்ட ஆர்.எஸ்.எஸ்., தனது கொள்கைகளுக்கு இது ஒவ்வாது என முடிவெடுத்தது. உடனே லட்சுமிபாயை அழைத்து ராஷ்டிர சேவிக்கா சமிதியை தொடங்கும்படி கூறியது. ஆர்.எஸ்.எஸ். அய் பொறுத்தவரை அதன் உண்மையான நெருக்கடி எதுவெனில், அதன் தலைவர்களாக இருப்பவர்கள் பிரம்மச்சாரிகளாக சபதம் ஏற்க வேண்டும். அப்படி பிரம்மச்சாரிகள் இருக்கும் இடத்தில் எப்படி பெண்களை அனுமதிப்பது? இந்த விளைவு குறித்து தான் ஹெட்கேவர் முதல் சுதர்சன் வரை பேசுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.இன் தத்துவம் ஆண் சிந்தனை மரபை மய்யமாகக் கொண்டது. அது பாலினப் படிநிலையை -ஆணாதிக்கத்தையே கோருகிறது. ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ இயக்கத்தை கட்டுப்படுத்துகிற அமைப்பு என்கிற பொழுது, அதில் ஆண்கள் மட்டும் தான் இருக்க இயலும். அந்த அமைப்பின் பெயர்களைப் பார்த்தாலே இது தெரியும். ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் மற்றும் ராஷ்டிர சேவிகா சமிதி. இரண்டாவதாக வரும் அமைப்பின் பெயரில் 'ஸ்வயம்' (சுயம்) காணாமல் போகிறது. ஏனெனில் பெண்களுக்கு சுயம் என்பது கிடையாது. அவர்கள் ஆண்களின் அடிமைகளே என்கிற இந்து மதக் கோட்பாடு தான் இங்கு முன்னுரிமை பெறுகிறது.

தேசிய இயக்கங்களில் பெண்கள் பல தளங்களிலும் ஆண்களுக்கு இணையான செயல்பாடுகளில் மிளிர்கிறார்கள். ஆனால் இன்று முஸ்லிம் லீக், இந்து மகாசபையில் பெண்கள் அனுமதிக்கப்படõதது ஒரு கேள்வியாகவே இருக்கிறது. மனுஸ்மிருதியை எரிக்கும்பொழுது அம்பேத்கர் கூட, சூத்திரர்கள், பெண்கள் அடிமையாக இருப்பதை வேரறுக்க வேண்டும் என முழங்கினார். மறுபுறம் மனுவின் சட்டங்களை, மனுஸ்மிருதியை இந்துத்துவ அறிவுஜீவிகள் புகழாரம் பாடினார்கள்.பெண்களின் சமத்துவம் நோக்கிய செயல்பாடுகளுக்கு எதிராக துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன.

அதில், "மேற்கத்திய தாக்கத்தால் பெண்கள் சரிசமமான உரிமை, பொருளாதாரச் சுதந்திரம் என போராடத் தொடங்கியுள்ளனர். இது பெரும் ஆபத்து, அன்பு, தியாகம், தொண்டு ஆகியவைக்கு உட்படாமல் பெண்கள் விலகிச் செல்ல நேரிடும். பெண்களின் சுதந்திரம் குடும்பத்தை சிதைத்துவிடும். குடும்பம் தான் நல்லொழுக்கத்தை போதிப்பதற்கான அடிப்படை அமைப்பு '' (இந்து தேசத்தில் பாலினம், பவுலா பசேத்தா, பக்.8) இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தான் சங்பரிவாரங்கள் விதவிதமான மொழிகளில் பேசி வருகிறார்கள். குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை போதிப்பது என்றால், குழந்தைகளுக்கு பார்ப்பனிய விழுமியங்களை கற்றுத்தருவது என்று பொருள். 'சங்'கின் வேறு சில துணை அமைப்புகளில் பெண்கள் இணைக்கப்பட்டார்கள். பா.ஜ.க., மகிளா மோர்ச்சா, துர்கா வாகினி அதில் முதன்மையானவை. ஆனாலும் இவர்களின் கருத்தாக்கத்தின் முகமூடிகள் பல சந்தர்ப்பங்களில் வெளிச்சத்திற்கு வருகின்றன.

ரூப் கன்வர் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, 'சதி'யை தடை செய்ய சட்டம் இயற்றுவது பற்றி ஆலோசனை நடந்து வந்தது. அந்த நேரம் பா.ஜ.க.வின் துணைத் தலைவர் விஜயராஜே சிந்தியா நாடாளுமன்றம் நோக்கி கண்டனப் பேரணியை நடத்தினார். அவர், உடன்கட்டை ஏறுவது இந்து மதத்தின், இந்து மரபின் பெருமை. கணவருடன் உடன் கட்டை ஏற பெண்களுக்கு உரிமையுள்ளது என்றார். இங்கு நமக்கு எழும் முக்கியக் கேள்வி: தனது கணவர் இறந்தபோது விஜயராஜே சிந்தியா ஏன் உடன்கட்டை ஏறவில்லை?

அதே போல் பா.ஜ.க.வின் மகிளா மோர்ச்சாவின் தலைவி மிருதுளா சின்ஹாவின் பேட்டியும் இதே சிந்தனைத் தளத்தில் வெளிவந்தது. (குச்திதிதூ, ஏப்ரல் 1994). அதில் அவர் வரதட்சணையை ஆதரிக்கிறார், பெண்களை கணவர்கள் அடிப்பது சரி என்கிறார். மிகவும் அவசியமான இக்கட்டான பொருளாதாரத் தேவை ஏற்படாதவரை, பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது என பேசிக்கொண்டே செல்கிறார். பெண்கள் சம உரிமை கோருவது முட்டாள்தனமானது என முடித்தார் பேட்டியை.

பெண்கள் குறித்த ஆர்.எஸ்.எஸ்.இன் நிலைப்பாட்டுக்கும் தாலிபான், இஸ்லாமிய அமைப்புகளின் நிலைப்பாடுகளுக்கும் வேறுபாடுகள் கிடையாது. மறுபுறம் ஹிட்லரும் இதே குரலில் தான் பெண்கள் குறித்துப் பேசுகிறார். முஸ்லிம்கள் பெண்களை வேலைக்கு அனுமதிப்பதில்லை. அவர்களை கட்டுப்படுத்த ஷரியத் சட்டங்களை முன்வைக்கிறார்கள். 'பெண்கள் -தேவாலயம், குழந்தைகள், சமையல் அறையைத் தான் சுற்றி வர வேண்டும்; தாய்மையே மேன்மையானது' என்றார் ஹிட்லர்.

மிகத் தந்திரமான மொழிகளில் பெண்களைப் போற்றிக் கொண்டே ஆணாதிக்கத்தை மீண்டும் நிறுவுவதுதான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் புகழ்ப்பெற்ற பிரச்சாரகர்களின் அடிப்படை நோக்கம். இருப்பினும் பெண்களின் சமத்துவத்திற்கான இயக்கம், இந்துத்துவத்தின் உண்மையான நோக்கங்களை வெளிப்படுத்தி, அதை நிராகரித்தும் வருகின்றது.
 

StumbleUpon.com Read more...

மதப் போராட்டத்தின் பின்னணி என்ன?


Periyar_400 தோழர்களே! இன்று இந்தப் பரந்த இந்திய கண்டத்தில் இமயம் முதல் கன்னியாகுமரி வரையில் -அநேகமாக எல்லா முக்கிய நகரங்களிலும், சிற்சில கிராமங்களிலும் கூட பல தரப்பட்ட குறிப்பாக, இந்து -முஸ்லிம் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நடக்காத இடங்களில் நடக்கும் படியாக அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் பொறுப்பற்ற கலகக்காரர்களும், அரசியல் தேசியப் பத்திரிகைகளும் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன.

தமிழ் நாட்டில் இந்து -முஸ்லிம் கலகம் அதிகமில்லையானாலும் இப்போது நன்றாய் விதை ஊன்றப்படுகிறது. பழைய காலத்தைப் போலவே, ஆரியர் -திராவிடர் போராட்டம் வெகு நாட்களாக நடந்து கொண்டு இருக்கின்றது. இவை யாவும் இதுவரை அரசியல் போர்வையில் இருந்து கொண்டு போரிட்டு வந்தாலும் -இன்று பச்சையாய் ஜாதி மதப் போராட்டம் தான், இதுவரை நடந்துவந்த அரசியல் போராட்டம் என்பதாக ஆகிவிட்டது.

கிறித்துவ மதமும், இஸ்லாமிய மதமும் 'ஒரு கடவுள்தான் உண்டு, மக்களில் ஒரு சாதிதான் உண்டு' என்று சொல்கின்றன. ஆனால், அவர்கள் இருவர் அல்லாத இந்த நாட்டு மக்கள், ஆரியப் பழங்காலக் காட்டுமிராண்டி மதத்தைச் சேர்ந்தவர்கள் -பல கடவுள்களைக் கற்பித்துக் கொண்டு, மக்களில் பல சாதிகள் இருப்பதாக ஏற்பாடு செய்து கொண்டு நடைமுறையிலும், அது போலவே பல கடவுள்களையும் அக்கடவுள்களுக்கு உருவங்களையும் வைத்து பூசை செய்து கொண்டு, பல சாதியாகப் பேதப்படுத்தி நடத்தி -ஒரு சாதியை மற்றொரு சாதி அழுத்தி அடக்கி ஆண்டு வருகிறது.

இந்த நிலை இஸ்லாம், கிறித்துவம் அல்லாத இந்து மதத்திற்கு அடிப்படையிலேயே மாறுபட்ட நிலையாக இருப்பதோடு, இந்த இழிதன்மையில் உள்ள மக்கள், அறிவு வளர்ச்சியும் மனிதத்தன்மையும், மான உணர்ச்சியும் கொண்டால் -எந்த மனிதனும் தன்மதத்தைத் தானே இகழவும், வேறு மதத்தை சாடவும் நினைத்துத்தான் தீருவான். ஆதலால், மதம் மாறும் உணர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், இன்றைய காட்டு மிராண்டி நிலையைப் பாதுகாக்கவும் செய்யப்படும் முயற்சிகள் தான் -பெரிதும் இன்று மதப் போராட்டமாகவும் அரசியல் போராட்டமாகவும் இருந்து வருகின்றன.
ஆகவே மதத்தை வைத்து, மதப்போர்வை போட்டுக் கொண்டு மற்ற மக்களை ஏமாற்றி, மேன்மையாக வாழும் மக்கள்தான் இது விஷயத்தில் கவலைப்படுவார்களே தவிர, சாதாரண யோக்கியமான உணர்ச்சியுள்ள மனிதன் எவனும் -ஒருவன் வேறு மதத்திற்குப் போகிறானே என்று கவலைப்பட இடமேயில்லை என்பதோடு, 'எப்படியாவது அவனுக்குப் பறப்பட்டம், சூத்திரத் தன்மை போனால் நலம்' என்போம்.

இந்து ஆட்சி ஏற்பட்டு விட்டதாலேயே, ராம ராஜ்யம் ஏற்படுவதாலேயே -நமது சூத்திரத் தன்மையும், பஞ்சமர், கடைசாதித் தன்மையும் மாறிவிடப் போவதில்லை. நம்மில் இருந்து இஸ்லாமாக மாற்றப்பட்டவர்களும், கிறித்தவர்களாக மாற்றப்பட்டவர்களும் அல்லது தானே மாற்றம் அடைந்தவர்களும் இன்று எதில் கஷ்டப்படுகிறார்கள்? எதில் கெட்டுப் போய்விட்டார்கள்? ஆகவே, ஓர் இந்து வேறு மதத்திற்குப் போவதென்றால், மாற்றப்படுவதென்றால், கடை சாதியான் மேல் சாதியாக ஆக்கப்பட்டான் என்றுதான் அர்த்தம்.

-1946இல் சென்னையில் திப்பு சுல்தான் நினைவு நாளில் பங்கேற்று பெரியார் ஆற்றிய உரை, 'குடி அரசு' -16.11.1946

StumbleUpon.com Read more...

மதக் கலவரங்கள்


நுட்பமான மதவாத அரசியலின் மேலோட்டமான வெளிப்பாடுகள் தான் மதக் கலவரங்கள். அது மற்ற சமூகங்களை வெறுப்பின் சின்னங்களாக சித்தரித்து வன்முறையை தொடுக்கிறது. மத நடைமுறைகளின் வேற்றுமைகளை ஒப்பிட்டு, அதனை வன்முறையின் தொடக்கப் புள்ளியாக மதவாதிகள் உருமாற்றுகிறார்கள். இந்த அடிப்படையில் தான் தெருக்களில் வன்மம் பாய்ந்து ஓடுகிறது. மக்கள் மனங்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மனசாட்சிகள், இந்த கலவரங்களை தக்கவைக்க உதவுகிறது. மத அடிப்படையிலான பல குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதனை அரசியல் மற்றும் கலவரங்களுக்குப் பயன்படுத்துவதும் இங்கு திட்டமிட்டு நடத்தப்படும் விஷமத்தனமே.

குழு அடையாளம்

மிகப்பரவலாக மக்களிடையே பரவியுள்ள இந்த குழு அடையாளம், பிற சமூகங்கள் பற்றிய ஒற்றை சித்திரத்தையே அளிக்கிறது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லிம், கிறித்துவர்கள், வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள், இந்தியாவில் உள்ள கிறித்துவர்கள் என அனைவர் குறித்தும் சீரான வெறுப்பின் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கடந்த பல பத்தாண்டுகளாக நடந்து வரும் இந்த திட்டம், அண்மையில் அதன் உச்சத்தை அடைந்துள்ளது. வட்டார வாரியாக மிக நுணுக்கமான அளவில் சமூக எந்திரங்கள், சமூக மனம், சமூக வரலாறு, சமூக பாங்குகள் என பலவற்றின் ஊடே அது இயங்குகிறது. இதன் இயக்கத்தை விவரிப்பது மிகவும் சிக்கலானது.

இந்தியாவில் நடைபெறும் மதக்கலவரங்கள்

இந்திய சமூகத்தின் மீது ஆறா ரணமாக மதக்கலவரங்கள் பதிந்துள்ளன. சுதந்திரத்திற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் போட்டிப் போட்டு பல முறை வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஆங்கிலேய காவல் துறை வந்து தான் சமரசம் செய்து அமைதியை நிலைநாட்டும். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்த கலவரங்களின் தன்மை வெகுவாக மாறியுள்ளது. இப்பொழுது கலவரங்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள் மட்டுமே இறந்து போகிறார்கள். முஸ்லிம்ளின் சொத்துக்கள் தான் அதிகளவில் சூறையாடப்படுகின்றன. காவல்துறை எப்பொழுதுமே பெரும்பான்மையினரின் சார்பாகவே இயங்குகிறது. முதலில் ஏழை முஸ்லிம்கள் மட்டுமே தாக்கப்பட்டனர். ஆனால் அண்மைக்காலமாக நடுத்தர, மேட்டுக்குடி முஸ்லிம்களின் மீதும் தாக்குதல் நடைபெறுகின்றது.

பிரிவினைக்குப் பிறகு நடைபெற்ற கலவரங்களுக்குப் பின் பெரும் அமைதி 50 களிலிருந்து இங்கு நிலவியது. ஆனால் அந்த அமைதியை 1962, 1964இல் நடந்த ஜபல்பூர் கலவரங்கள் கலைத்தன. அதைத் தொடர்ந்து ஜாம்ஷெட்பூர், ரூர்கேலாவில் கலவரங்கள் நடந்தது. 60 களில் நடந்த ரத்தக் களரிகளில், ராஞ்சி -பீகார் (1962) அகமதாபாத் -குஜராத் (1969) தான் மிகப்பெரும் சம்பவங்கள். 70களிலும் கலவரங்கள் தொடர்ந்தன. 1976இல் காவல் துறையின் தூண்டுதலின் பெயரில் துர்கமான் கேட் படுகொலைகள் நடந்தன. மொராதாபாத் (1980), நெல்லி, நவாகாவ்ன் -(அசாம்(1983), பிவாண்டி (1984) மற்றும் மீரட் (1987) ஆகிய கலவரங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயின.

ராம ஜென்மபூமி பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்து நடந்த ரத்தக் களரியில், 1989இல் மட்டும் 1000 பேர் கொல்லப்பட்டனர். ஏற்கனவே 1980களில் நடந்த பகல்பூர், அய்தராபாத், அலிகார் கலவரங்கள் தான் உச்சமாகக் கருதப்பட்டன. ஆனால் அத்வானியின் ரதயாத்திரை மற்றும் பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய கலவரங்கள் தான் நாடு சந்தித்திராத அவலங்கள். மசூதி இடிப்புக்குப் பின் மும்பை, சூரத், போபால் நகரங்கள் கலவர பூமிகளாக மாறின. 1960 -1995 வரை கலவரங்கள் ஏறுமுகம் கண்டன. உத்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், மத்தியப்பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தான் அதிகப்படியான கலவரங்கள் நடந்தன. இதுவரை நகரங்களில் மட்டுமே நடைபெற்ற கலவரங்கள் மெல்ல சிறு நகரங்கள், கிராமங்கள் நோக்கியும் இடம் பெயர்ந்தன.

கலவரத்துக்கு முந்தைய கும்பல் மனநிலை

மதவாத சமூக வெளியில் தான் கும்பல் மனநிலை கட்டமைக்கப்படுகிறது. இந்த இழிவில் தீவிரத்துடன் முதலில் ஈடுபடுவது இந்து மதவாதிகளே. அதனை முஸ்லிம் மதவாதிகள் தொடர்வார்கள். எதிரிகள் நம்மை எந்த நேரமும் தாக்கக்கூடும் என்கிற அச்ச உணர்வை விதைப்பது, அதன் பிறகு வன்முறை மனநிலையை கும்பலில் கட்டமைப்பது என்பதுதான் நடைமுறை. நம் கோயில் தாக்கப்படவிருக்கிறது, மசூதியில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளன என மதவாதிகள் அடிக்கடி வதந்திகளை பரப்புகின்றனர்.

எப்பொழுதுமே பெரும்பான்மை சமூகத்துக்குப் பல விதங்களிலும் அரசும், காவல் துறையும் பக்கபலமாக செயல்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் காவல் துறையும் இணைந்து வன்முறையில் ஈடுபடுகிறது. மதப்பகைமையை, மதவாத ஊடகங்கள்தான் -பெரும் படுகொலைகள் அளவுக்கு இட்டுச் செல்கின்றன. அரசு எந்திரங்களில் இந்துத்துவ உறுப்பினர்கள் ஊடுறுவியுள்ளதால், அவர்களின் நிலை பலம் கொண்டதாக உள்ளது.
கும்பல் வன்முறை மனநிலையை தகவமைப்பதில் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள், எழுத்துக்கள் பெரும் பங்காற்றுகின்றன. இங்கிருந்து கிளம்பும் வதந்திகள் கும்பல் மனநிலையின் உந்து விசையாக மாறுகிறது.

பசுக்கள் வெட்டப்படுகின்றன, இந்து பெண்களின் மார்பு அறுக்கப்பட்டது, கோயில் தாக்கப்படவிருக்கிறது, மசூதியில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு தாக்குதல் திட்டமிடப்படுகிறது, பாலில் விஷம் கலக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடற்கரையில் ஆயுதங்களுடன் தரை இறங்கியுள்ளனர் என்பது சில பொது வதந்திகள். முதலில் ஊர்வலங்கள், கீழான முழக்கங்கள், மசூதி முன்பு பாடல்கள், தாக்குதல்கள், பெண் சீண்டல்கள் என நிகழ்வுகள் தொடங்கும். அண்மைக் காலமாக சர்வதேச தீவிரவாதத்துடன் உள்ளூர் முஸ்லிம்களை தொடர்புபடுத்துவதும் நடைபெற்று வருகிறது. ஒரு சமூகத்தைச் சேர்ந்த சில தனி நபர்களின் குற்றச் செயல்பாட்டின் தன்மை, அச்சமூகத்தின் தன்மையாக மாற்றப்படுகிறது.

கலவரங்களை யார் தொடங்குகிறார்கள்?

யார் கலவரங்களை தொடங்குகிறார்கள் என்பதை அய்ந்து விசாரணைக் குழுக்களின் தகவல்களின் அடிப்படையில், தனது கட்டுரையில் விளக்குகிறார் தீஸ்தா செடல்வாட் :

1) அகமதாபாத் 1969 : "ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், ஜன்சங்காரர்கள் இந்த கலவரத்தைத் தொடங்கினார்கள் என்கிற உண்மையை கமிஷன் அறிக்கையில் இடம்பெறாமல் மூடிமறைக்க, பல வெளிப்படையான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டார்கள்'' (நீதிபதி ஜக்மோகன் ரெட்டி அறிக்கையிலிருந்து).

2) பீவாண்டி, ஜல்காவ்ன் 1970 : தனது உயர் அதிகாரிக்கு அளித்த அறிக்கையில் "தானே' மாவட்ட காவல் துறை எஸ்.பி. இவ்வாறு கூறுகிறார் : "ஆர்.எஸ்.எஸ். இந்து விஷமிகளில் ஒரு பகுதியினர் தான் சில சேட்டைகளின் மூலம் பதற்றத்தை தூண்டினார்கள். சிவாஜிக்கு மரியாதை செலுத்தும் ஊர்வலத்தில் பங்கு பெற்ற அவர்களது நோக்கம், அத்தகையதாக இல்லை. தங்களின் வெறியை வெளிப்படுத்த முஸ்லிம்களை ஆத்திரமூட்டுவது போல் அவர்களது செயல்கள் இருந்தன. அவதூறான முழக்கங்களை எழுப்பிக் கொண்டே மோதி மசூதி, பங்காட் கலீ ஹைதர் மசூதி என பல இடங்களில் அவர்கள் கல் எறிந்தார்கள். காவல் துறையும் அமைதியாக சென்றது'' (நீதிபதி டி.பி.மடோன் கமிஷன் அறிக்கை).

3) தெல்லிச்சேரி (கேரளா) 1971 : தெல்லிச்சேரியில் இந்துக்களும் முஸ்லிம்களும் பல நூற்றாண்டுகளாக சகோதரர்களாக இணக்கத்துடன் வாழ்ந்து வந்தார்கள். அங்கு ஆர்.எஸ்.எஸ்., ஜன் சங் ஆகிய அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளை தொடங்கிய பிறகு தான் தெல்லிச் சேரியின் சூழல் மாறியது. தொடர்ந்து முஸ்லிம் விரோத கருத்துக்களை இவர்கள் பிரச்சாரம் செய்ததின் விளைவாக, முஸ்லிம்கள் தாங்கள் சார்ந்த மதவாத அமைப்புகளை நடத்தத் தொடங்கினர். முஸ்லிம் லீக் களம் கண்டது..... இந்த மதவாத பதற்றங்கள் தான் அங்கு நடந்த கலவரத்தின் பின்னணியாக அமைந்தது' (நீதிபதி ஜோசப் விதையலில் கமிஷன் அறிக்கையிலிருந்து).

4) ஜெம்ஷெட்பூர் 1979 : அங்கு நடைபெறவிருந்த தேர்தலுக்கு முன்பு உளவுத் துறை மதவாத பதற்றம் குறித்து தயாரித்த அறிக்கையில், அந்தப் பகுதியில் நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ்.இன் வட்டார மாநாடு குறித்து சிறப்பு கவனத்துடன் எச்சரிக்கப்பட்டிருந்தது. அதில் ஆர்.எஸ்.எஸ் இன் "சர்சங்சலக்' கலந்து கொண்டார் (மார்ச் 31, ஏப்ரல் 1, 1979). ஊர்வலத்தின் பாதை குறித்த சர்ச்சை தொடர்ந்தது. சம்யுக்த பஜ்ரங் பலி அகாரா சமிதியின் உறுப்பினர்களாக தங்களை கூறிக்கொண்ட சில நபர்கள், மதவாத பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் துண்டறிக்கைகளை அங்கு விநியோகித்தனர். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடையவர்கள்; அதிகாரிகள் ஊர்வலப்பாதைக்கு அனுமதி மறுத்த போது அதனை மீறப் போவதாக அவர்கள் மிரட்டினார்கள்.

5) கன்னியாகுமரி கலவரம் (1982) : கிறித்துவர்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமான குடிமக்கள் அல்லர் என பெரும்பான்மை சமூகத்திடம் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்தது. கிறித்துவர்களின் மக்கள் தொகை ஏறுமுகத்தில் இருப்பதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. வாள், கோடரி போன்ற ஆயுதப் பயிற்சியை இந்து இளைஞர்களுக்கு வழங்குவது என இந்து மதவெறி இயக்கங்கள் அங்குள்ள சூழ்நிலையை சீர்குலைத்து, மதக்கலவரங்களை ஏற்படுத்தின (நீதிபதி வேணுகோபால் கமிஷன் அறிக்கையிலிருந்து).

காவல் துறை அதிகாரியின் ஆய்வு

மதவாத கலவரங்கள் குறித்த ஆய்வினை தேசிய காவல்துறை அகாதமியின் ஆய்வாளர் வி.என்.ராய் மேற்கொண்டார். 1968 மற்றும் 1980 கலவரங்கள் குறித்த தகவல்களை ஆராய்ந்து, அந்த கலவரங்களை முஸ்லிம்கள் தொடங்கவில்லை என்கிற உண்மையை அவர் நிறுவினார். அதுவரை முஸ்லிம்கள் தான் தூண்டியதாகக் கருதப்பட்டது. அரசுப்புள்ளி விவரங்களின் படி, 3,949 சம்பவங்களில் 2,289 பேர் பலியானார்கள். அதில் 530 பேர் இந்துக்கள்; 1,598 பேர் முஸ்லிம்கள். இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் வெறும் 12 சதவிகிதம் தான் உள்ளனர். ஆனால் கலவரங்களில் 65 சதவிகிதம் முஸ்லிம்கள் பலியாகிறார்கள்.

காவல் துறை முற்றாக இந்துக்களுக்கு சாதகமான நிலை எடுத்து கலவர காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறது. எப்பொழுதுமே மதக்கலவரத்தின் வேலைகள் நீண்ட காலமாக நடைபெறும். ஆனால் ஒரு சிறிய விஷயம் தான் கலவரத்தை தொடங்கி வைக்கும். பல சந்தர்ப்பங்களில் வியாபார, நிலத் தகராறுகளுக்கு கலவரங்களின் போது தீர்வு காணப்படும். அச்சமடைந்த சமூகம் தான் கலவரத்தின் முதல் அடியை எடுத்து வைக்கும். ராய் மேலும் கூறுகிறார் : "பல கலவரங்களில் எறியப்பட்ட முதல் கல்லின் விதத்தை ஆராய்ந்து பார்த்தால், அதை செய்தவர்கள் வெளியிலிருந்து பணியில் அமர்த்தப்பட்ட குழுக்கள் போலவே உள்ளது. இந்த சம்பவத்தை முஸ்லிம்கள் செய்ததாக வதந்தி கிளப்பப்படுகிறது. வலுவற்றவனை பலசாலி ஒரு மூலையில் தள்ளும்போது, அவன் வேறு வழி இல்லாமல் கையை உயர்த்துகிறான். உடனே அதைப் பெரும் தாக்குதல் போல் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள்.
 

StumbleUpon.com Read more...

கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறைகள்

 

கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் -இந்தப் பெயர் நம் மனங்களில் தவறான காரணங்களுக்காகப் பதிந்துள்ளது. அவருடைய கணவரும், இரு மகன்களும் பத்தாண்டுகளுக்கு முன்பு தீயில் கருகி மடிந்தார்கள். இந்த சம்பவம் ஒரிசா மாநிலம், கியோன்ஜார் மாவட்டம், மனோகர்பூரில் நடந்தது. ஒரிசாவில் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் நிலைநாட்டும்படி ஸ்டெயின்ஸ் அண்மையில் பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதினார். டிசம்பர் 24, 2007இல் நடந்த தொடர் தாக்குதல்களில் மட்டும் ஒரிசாவில் 40 தேவாலயங்கள் தாக்கப்பட்டன. இந்தப் பின்னணியில் தான் கிளேடிஸ் ஸ்டெயின்ஸ் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களில் பலர் காயமடைந்தனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பல கிராமத்தினர், அருகில் உள்ள காடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த முறையும் வன்முறை சம்பவங்கள் அனைத்தும் கிறிஸ்துமஸ் திருநாளை ஒட்டியே நடந்தது.

ஒரிசாவை ஆளும் கூட்டணியில் பா.ஜ.க. முக்கியப் பங்கு வகிப்பதும், ஆர்.எஸ்.எஸ்.இன் துணை அமைப்புகளான வனவாசி கல்யாண் ஆஸ்ரம், பஜ்ரங் தளம் ஆகியவைதான் இதில் நேரடித் தொடர்புடையவை என்பதும் தற்செயலானது அல்ல. இது தொடர்பாக உண்மை அறியச் சென்ற 'குடிமக்கள் விசாரணைக் குழு' -அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

குறுகிய, நீண்ட கால நலன்களை மனதில் கொண்டு தான் இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு தாக்குதலும் தீவிர திட்டமிடுதலுடன் நடைபெறுகிறது. இந்த முறை சுவாமி லட்சுமானந்தாவை கிறித்துவர்கள் தாக்கியதாகக் கூறப்பட்டது. பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த, நிறைய பக்தர்கள் கொண்ட ஒரு சாமியாரை எப்படி சிறுபான்மையினர் தாக்க முடியும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. கிறித்துவ எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு, பொதுவாக கிறிஸ்துமஸ் திருநாளையே தேர்வு செய்கிறார்கள். பல நேரங்களில் இந்த காலத்தில் தான் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த முறை புல்பாணி பகுதியில் சுவாமி, ஒரு வெளிப்படையான அறிவிப்பை செய்தார். பழங்குடியினர் வாழும் பகுதியில் கிறித்துவர்களின் இருப்பை எங்களால் சகிக்க இயலாது என்றார் அவர்.

1996 முதலே கிறித்துவர்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கியது. குஜராத் முதல் ஒரிசா வரையிலான பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் நகரங்களில் நடைபெறுவது போல அல்ல இது. அங்கு ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகிவிடும். இங்கு ஆண்டு தோறும் பதற்றம் சூழ்ந்த வண்ணம் உள்ளது. தொடர் தாக்குதல்கள் சிதறலாக நடத்தப்படுகின்றன.
கிறித்துவர்களுக்கு எதிரான தாக்குதல்களின் பெரும் அவலம், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தாரா சிங், பழங்குடியிரை வைத்தே பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸை கொளுத்தியதுதான். அந்த பாதிரியார் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்ததே, இங்கிருக்கும் பழங்குடியினர் அனைவரையும் கிறித்துவர்களாக மாற்றத் தான் என்று தாராசிங் மற்றும் அவரது அமைப்பினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர்.

அவர் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை மறைக்கவே அவர் தொழுநோயாளிகளுக்கு சிசிச்சை அளித்ததாகக் கூறப்பட்டது. அவரது மரணத்துக்குப் பிறகு அப்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, இது குறித்து விசாரிக்க வாத்வா கமிஷனை நியமித்தார். அந்தக் குழு மிகத் தெளிவாக ஆய்வு செய்து, பாதிரியார் எந்த மதமாற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அங்கு கிறித்துவர்களின் மக்கள் தொகையில் மாறுதல்கள் ஏதும் இல்லை எனக் கூறியது.

நாடு முழுவதிலும் கிறித்துவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் குறித்த ஆய்வறிக்கைகள் - 'கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பின்னால் உள்ள அரசியல்' என்கிற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வன்முறை நிகழ்வுகள் பழங்குடியினர் பகுதியில்தான் நடந்துள்ளன. கல்வி சார்ந்து இயங்கும் மிஷினரிகள் தான் இவர்களின் இலக்கõக உள்ளனர். நகரங்களில் கல்வி சார்ந்து இயங்கும் மிஷினரிகள் பெரிதாக மதிக்கப்படுகிறார்கள், அங்கீகரிக்கப்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தொடர்ந்து பல பகுதிகளுக்குச் சென்று, 'இந்து மதத்திற்கு மீண்டும் மாற்றுவது' என்பது போன்ற திட்டங்களை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றன.

'பழங்குடியினர் அனைவரும் இந்துக்களே. முகலாயர்களின் படையெடுப்பிலிருந்து தப்பவே அவர்கள் காடுகளில் சென்று தஞ்சம் புகுந்தனர்' என ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. காட்டுக்குச் சென்றதும் அவர்கள் இந்து மத சடங்குகள் மற்றும் நடைமுறைகளை மறந்து விட்டனர். அதனால் தான் அவர்கள் சமூகத்தில் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். நாங்கள் அவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றி, இந்து மதத்தின் பெருமையை காக்கப் போகிறோம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ஒரிசா விஷயத்தை தனியாக 'இந்திய மக்கள் வழக்கு மன்றம்' விசாரித்தது. அதற்கு கேரள உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.கே.உஷா தலைமை வகித்தார். அந்த மன்றம் வருங்கால ஆபத்துகளையும் சுட்டிக் காட்டியது. ஒரிசாவில் எவ்வாறு மதவாத அமைப்புகள் பரவியுள்ளன என்பது கணக்கிடப்பட்டது. அந்த அமைப்புகளின் பரவல் எப்படி சிறு, குறு வன்முறை சம்பவங்களால் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் பெரும் கலவரங்களுக்கான முன் அறிவிப்பு போலவே தெரிகிறது. மாநில அரசுகள் இந்த சம்பவங்கள் அனைத்திலும் செயலற்றுக் கிடக்கிறது. இந்த சம்பவங்கள் தொடர்ந்தால், அது இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து சவாலாகவே திகழும்.
இந்த பழங்குடியினர் பகுதிகள் அனைத்திலும் சாமியார்கள் நிரந்தர ஆசிரமங்களை அமைத்துள்ளனர்: ஒரிசாவில் லட்சுமனாந்த், டாங்க்ஸில்

ஆசீமானந்தா, ஜபுவாவில் ஆசாராம் பாபு அவர்களில் சிலர். அங்கு இந்துக்களின் பெரும் அணி திரட்டல்களும் இடையறாது நடைபெற்றன. டாங்க்சில் நடைபெற்ற 'கும்பத்தில்' ஆயிரக்கணக்கான பழங்குடியினர் நாடெங்கிலுமிருந்து சங்பரிவாரால் கொண்டு வரப்பட்டனர். இந்த திருவிழாக்களுக்கு வராத பழங்குடியினர், கடும் நெருக்கடிகளை சந்திப்பார்கள் என வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த பகுதி தான் இந்தியாவின் பின்தங்கிய பகுதியாகத் திகழ்கிறது. முதலில் முஸ்லிம், இரண்டாவது கிறித்துவர்கள் என்கிற ஆர்.எஸ்.எஸ்.இன் முழக்கத்தின்படி தான் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

கிறித்துவர்களுக்கு எதிரான கலவரம், இந்து ராஷ்டிர கனவின் ஒரு பகுதியே. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு மதமாற்ற நடவடிக்கையில் சில கிறித்துவ நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் கிறித்துவம் இந்தியாவுக்குள் நுழைந்து 19 நூற்றாண்டுகள் ஆன பின்பும், அவர்களது மக்கள் தொகை 2.3 சதவிகிதம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல மிஷினரிகள் பழங்குடியினருக்கு கல்வி அளிப்பதில் ஈடுபட்டு வருகிறார்கள். கல்வி பெற்ற பழங்குடியினர், தங்கள் உரிமைகளை அறிந்து விழிப்படைந்தவர்களாக இருப்பார்கள். இதனைத் தான் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. மிகச் சிறுபான்மையினரான ஒரு சமூகம், பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்தை விளைவித்திடும் என்பது வேடிக்கையாக உள்ளது. இந்த மனித உரிமை மீறல்களை நாம் அழுத்தமான நடவடிக்கைகள் மூலம் ஒடுக்க வேண்டும். இந்த அவதூறான வதந்திகள் பரவுவதைத் தடுத்து, கல்வி மற்றும் நலத் திட்டங்கள் அந்த மக்களை சென்றடைய வழிவகை செய்ய வேண்டும். திருவிழாக் காலமாகத் திகழ வேண்டிய கிறிஸ்துமஸ் திருநாட்களை, ஆர்.எஸ்.எஸ். வன்முறை சடங்காக உருமாற்றி வருகிறது.
 

StumbleUpon.com Read more...

பொய் சொல்லும் பாஜக‌

"குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பெண் சாமியார் பாஜகவில் இல்லை"
திகதி : Monday, 27 Oct 2008, [Sindhu]
lankasri.comமகாராஷ்டிர மாநிலம் மலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் தற்போது பாஜகவில் இல்லை என்று அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் கூறினார்.இது தொடர்பாக பாரதிய ஜனசக்தி தலைவர் உமா பாரதி கூறியுள்ள குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

பெண் சாமியார் பிரக்யா சிங்கை பாஜக கைவிட்டுவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை.பாஜகவின் துணை அமைப்பான ஏபிவிபியிலிருந்து அவர் 1995-96-ம் ஆண்டிலேயே வெளியேறிவிட்டார் என்று ரவிசங்கர் கூறினார்.

இருப்பினும்,குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் உரிய ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலை. குண்டு வெடிப்புக்கு அவர் காரணமாக இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவரது தந்தையே கூறியுள்ளார் என்றார் ரவிசங்கர்.

பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை.அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் அவர்.மாலேகாவ் குண்டு வெடிப்பில் பிரக்யா சிங்குக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டது.இதை பாஜக மறுத்தது.

ஆனால் பாஜகவில் இருந்து பிரிந்து பாரதிய ஜனசக்தி கட்சியைத் தொடங்கி உள்ள உமா பாரதியோ இதற்கு கண்டனம் தெரிவித்தார். பிரக்யா சிங் தன்னுடன் இணைந்து பாஜகவுக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.அதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் தற்போது பதிலளித்துள்ளார்.

 

 

StumbleUpon.com Read more...

மாலேகான் குண்டுவெடிப்பு: பெண் சாமியார் உட்பட "சங்' பயங்கரவாதிகள் சிக்கினர்!

 

ஸப்ரன் ஹபீப்

(பிடிபட்ட பெண் சாமியார் பிரக்யா சிங்)
மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் சங்பரிவார் பயங்கரவாதி களின் சதிச் செயல் அம்பலமாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை சங்பரிவார் சதிகாரர்களை கையும் களவுமாகப் பிடித்து வைத்து விசாரணை செய்து வருகிறது.


செப்டம்பர் 29ஆம் தேதி மாலேகான் நகரத்தில் குண்டுவெடித்தது. குஜராத் தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள மொடாசா நகரத்திலும் குண்டு வெடித் தது. மாலேகானில் ஐந்து பேரும், மொடா சாவில் ஒரு சிறுவனும் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


ரமலான் மாதத்தில் ஈகைத் திரு நாளுக்கு முந்தைய நாள் நோன்பு துறக்கும் நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளனர். இந்த சதிச் செயலைக் கண்டித்து முஸ்லிம்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின் போதும் நேர்மையான - நடுநிலையான விசாரணை வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுப்பது வழக்கமானதாகவே உள்ளன. செக்கு மாட்டு புத்தியாய் ஒரே கோணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே வதைப்பது காவல்துறையினரின் வழக்க மாகவே மாறிவரும் சூழலில் மாலே கானில் செப்டம்பர் 29ம் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் பலியான வர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தும் விசாரணையின் வீச்சு முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே இருந்தது. சிமி அமைப்பைச் சேர்ந்த வர்கள் விசாரிக்கப்பட்டனர். இந்தி யன் முஜாஹிதீன் என்ற கற்பனைப் பெயர் கொண்ட அமைப்புதான் இதன் பின்னணியில் இருந்தது என்றும் உளவுத்துறையும் உளவுத்துறையின் அடிப்பொடிகளான சில ஊடகங்களும் குறிப்பிட்டன.


இதில் நேர்மையான வழக்கு விசா ரணை நடத்தப்பட வேண்டும். சங் பரிவார பயங்கரவாத இயக் கங்களின் சதி பின்னணி யில் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசா ரணை நடத்த வேண்டும் என தமுமுக தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வரு வது நாடறிந்த ஒன்று.


இந்நிலையில் நாட்டின் நல்லோர்களின் ஐயங்களை ஊர்ஜிதம் செய்வதைப் போன்று மாலேகான் மற்றும் மொடாசா குண்டுவெடிப்பு களின் மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளன.


இந்த குண்டுவெடிப் பின் பின்னணி யில் பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஹக்ஷஏஞ)-க்கு நெருங்கிய தொடர்புடைய "ஹிந்து ஜாக்ரன் மஞ்ச்'' என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி ஐந்து சங்பரிவார் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மகா ராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்தார்.


விசாரணையில் மேலும் பல திடுக்கி டும் தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுவதாக நாசிக் யூனிட்டின் தீவிரவாத தடுப்புப் படையின் ஆய்வாளர் ராஜன் குலே தெரிவித்துள்ளார்.


உயிரைக் குடிக்கும் குண்டுகளை மோட்டார் சைக்கிளில் வைத்து மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வைத்த பயங்கரவாதி - ஒரு பெண் என்பதும், அவர் விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற சேதத்துரோக அமைப்பின் பெண்கள் பிரிவான துர்க்கவாஹினியைச் சேர்ந்த 30 வயதேயான பிரக்யாசிங் என்பதும் அம்பலமாகியுள்ளது.

(பிரக்யா சிங் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது)


நாட்டில் நடைபெறும் பெரும்பாலான தீய செயல்களுக்கு முக்கியக் காரண மாக விளங்கும் சங்பரிவார் சதிச் செயல்களை முளையிலே கிள்ளி விடாததின் விளைவு நாடெங்கும் பயங்கரவாதச் செயல்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.


நான்டெட், தென்காசி, தானே, நவி மும்பையைப் போன்றே ஹிந்துத்துவ பாசிச இயக்கங்களின் தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பிலும் இந்த சதிகாரர்களின் கைவரிசை பின்னணி யில் இருப்பதால் இதுவரை நாட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து இருள் சிறைக்குள் தள்ளிய அந்த வஞ்சக வலை அறுத்தெறியப்பட்டு உண்மையான குற்றவாளிகளை சட்டத் தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு சங்பரிவார் இயக்கங்களின் மீது விசாரணையின் போக்கு இம்மியளவு கூட சென்றுவிடக் கூடாது என்பதற்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப் படும் போலி விசாரணைகள் மற்றும் தவறான தண்டனைகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.


இதற்குக் காரணமான தீவிரவாதத் தடுப்பு முயற்சிகளில் படுதோல்வி அடைந்த திறமையற்ற உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP