சமீபத்திய பதிவுகள்

முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன்:கங்கூலி வருத்தம்

>> Wednesday, November 12, 2008

 
lankasri.comஇந்திய கிரிக்கெட் அணித் தலைவர்கள் வரிசையில் மிகவும் சிறப்பான வெற்றிகளை ஈட்டி முதலிடத்தைப் பிடித்துள்ள கங்கூலி,தாம் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக வருத்ததுடன் கூறியுள்ளார்.

டெஸ்ட்,ஒருநாள் என சர்வதேச கிரிக்கெட்டின் இரண்டு வெவ்வேறு பரிணாமங்களிலும் 40ரன்களுக்கு மேல் சராசரி வைத்துள்ள சிறந்த பேட்ஸ்மென்கள் வரிசையிலும் கங்கூலி இடம்பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு கங்கூலி அளித்துள்ள பேட்டியில்,களத்திற்கு வெளியே நான் எப்படி இருப்பேனோ அதேபோல்தான் களத்திலும் செயல்பட்டதாக சிலர் கருதுகின்றனர்.ஆனால் களத்திற்கு வெளியே நான் வித்தியாசமான மனிதன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

என்னைப் பொறுத்தவரை இந்திய அணியை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதே முதன்மைப் பொறுப்பாக இருந்தது.அது எனது கடமை என்று கூட எண்ணினேன்.அதனை நிறைவேற்ற எனக்கென்று ஒரு அணி உள்ளதாகவும் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட் அரங்கில் இந்தியா புகழ்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அனைத்தையும் செய்தேன்.அதுதான் (தனக்குப் பிறகு) எதிர்காலத்திலும் நடந்தது என்று கங்கூலி அப்போது மகிழ்ச்சி தெரிவித்தார்

 

 

StumbleUpon.com Read more...

சந்தோஷமாக சாக கோர்ட் அனுமதி பெற்ற பிரிட்டிஷ் சிறுமி

lankasri.comசிகிச்சை அளித்தாலும் பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் வகவிரித்து விட்டபின் எதற்காக சிகிச்சை.நான் என் குடும்பத்தினருடன் கடைசி வாழ்நாளை சந்தோஷமாக கழித்து விட்டு,சந்தோஷமாகவே சாக விரும்புகிறேன்.இவ்வாறு அதிரடியாக கோர்ட்டில் வாதாடியிருப்பவர் பிரிட்டனை சேர்ந்த 13வயது பள்ளி மாணவி,ஹன்னா ஜோன்ஸ்.

சிகிச்சை பலனளிக்காது என்பதால்,சிகிச்சை பெற மறுத்த பிரிட்டிஷ் பள்ளி மாணவிக்கு அந்நாட்டு கோர்ட் அனுமதி அவள் விருப்ப்படி கடைசி நாட்களை சந்தோஷமாக அனுபவிக்க அனுமதி அளித்திருக்கிறது.

பிரிட்டனில் உள்ள ஹியர்ஃபோர்ட்ஷயர் நகரை சேர்ந்தவர் 13வயது பள்ளி மாணவி ஹன்னா ஜோன்ஸ்.லூகேமியா நோயால்( ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகம் இருப்பதால் வரும் நோய் ) பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அதற்காக மருந்துக்களை சாப்பிட,அது பக்க விளைவுகள ஏற்படுத்தி,அதன் காரணமாக அவரது இதயத்தில் ஓட்டை விழுந்து விட்டது.

இப்போது இதயத்தில் ஏற்பட்ட ஓட்டைக்காக மருத்துவமனை செல்ல,அங்குள்ள டாக்டர்களோ இவளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என்றும்,ஆனால் அந்த சிகிச்சையை அளித்தாலும் அவள் பிழைப்பது கடினம் என்றும் சொல்லி விட்டார்கள்.ஒரு வேளை பிழைத்துக்கொண்டாலும் கூட அவளது உடல் நிலை மிக மோசமான நிலைக்கு வந்து விடும் என்றும் சொல்லி விட்டார்கள்.

சிகிச்சை அளித்தாலும் பிழைக்க மாட்டேன் என்றால் எதற்காக சிகிச்சையை எனக்கு அளிக்க வேண்டும் என்று அந்த சிறுமி சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்து விட்டாள்.எவ்வளவோ சொல்லி பார்த்தும் அந்த சிறுமி சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்து விட்டதால் மருத்துவ அதிகாரிகள் அவள் மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விட்டனர்.

அவளை சிகிச்சையை ஏற்றுக்கொள்ள கோர்ட் வற்புறுத்த வேண்டும் என்று அவர்கள் கோர்ட்டில் வாதாடினர்.ஆனால் அந்த பெண்ணோ,சிக்கலான இந்த சிகிச்சையை ஏற்றுக்கொள்வதா,வேண்டாமா என்று நான்தான் தீர்மானிக்க வேண்டும் என்று வாதாடினாள்.இந்த வேதனை மிகுந்த சிகிச்சை எனக்கு வேண்டாம் என்றும் அவள் கோரிக்கை வைத்தாள்.

இந்த வழக்கில் அந்த பெண் தான் வெற்றி பெற்றாள்.அவள் விருப்பப்படியே,அவளுடைய எஞ்சிய வாழ்நாட்களை அவளது அப்பா,அம்மா,மற்றும் குடும்பத்தாருடன் சந்தோஷமாக கழித்து விட்டு சந்தோஷமாக இறந்து போக கோர்ட் அனுமதி அளித்து விட்டது.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1226482483&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

பிரதமருடன் ஒபாமா பேச்சு

 
 
lankasri.comஅமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாரக் ஒபாமா இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்த 4ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாரக் ஒபாமா வெற்றி பெற்றார்.

வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி அவர் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.இந்த நிலையில் இன்று காலை ஒபாமா பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது இந்தியாவுடனான உறவு மிக முக்கியமானது என்று ஒபாமா,மன்மோகன் சிங்கிடம் கூறியதாகவும்,அனைத்து சர்வதேச பிரச்சனைகளிலும் தமது நிர்வாகம் இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாக ஒபாமா தெரிவித்ததாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஒபாமா ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

ஆனால்,இந்திய பிரதமருடன் அவர் பேசாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும்,ஒபாமா தம்மை புறக்கணிக்கவில்லை என்றும்,தாம் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்ததால் ஒபாமா தம்மை தொடர்பு கொள்ள இயலாமல் போனது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில்,ஒபாமா இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொலைபேசி உரையாடலின் போது அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஒபாமா வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றிருப்பதற்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்ததாகவும்,அவரது இந்த வெற்றி உலகம் முழுவதும் நசுக்கப்பட்ட இனத்திற்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது என்று பிரதமர் கூறியதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP