சமீபத்திய பதிவுகள்

இந்தோனேஷியாவில் பூகம்பம்

>> Sunday, November 30, 2008

lankasri.comஇந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் நேற்று காலை பூகம்பம் ஏற்பட்டது.இதன் வீரியம் ரிக்டார் அளவில் 6-ஆக இருந்தது.இது பெங்களுக்கு நகருக்கு தெற்கே 140-கி.மீ.தொலைவில் 35-கி.மீ.ஆழத்தில் இதன் மையம் இருந்தது.

பெங்களு,லம்பங் மாநிலங்களில் பூகம்பம் தாக்கியதும் வீடுகள் குலுங்கின.மக்கள் பீதியில் உறைந்தனர்.ஆனால் உயிர்சேதமோ,பொருட்சேதமோ எதுவும் இல்லை.சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.


http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1227950719&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

தீவிரவாதிகளுடன் ஐஎஸ்ஐக்கு தொடர்பு:"உலக நாடுகளின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தும் பாகிஸ்தான்"

 

lankasri.comபாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது என்ற உலக நாடுகளின் எச்சரிக்கையை பாகிஸ்தான் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ்ஐ இருப்பதாக இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் சுட்டிக்காட்டியுள்ளது. தனது குற்றச்சாட்டு குறித்த வலுவான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் அளித்துள்ளது.

எனினும், இந்தியாவின் குற்றச்சாட்டையும்,எச்சரிக்கையையும் பாகிஸ்தான் கண்டுகொள்வதாய்த் தெரியவில்லை.

தற்போது மும்பை நட்சத்திர ஹோட்டல்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐக்கும் தொடர்பிருக்கலாம் என இந்தியா சந்தேகிக்கிறது.இதனை கருத்தில் கொண்டே அந்நாட்டு உளவு அமைப்பினரை இந்தியாவுக்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டது.

முதலில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஐஎஸ்ஐ தலைவரை அனுப்பிவைப்பதாகத் தெரிவித்த பாகிஸ்தான்,பின்னர் பின்வாங்கிவிட்டது.ஐஎஸ்ஐ சார்பாக பிரநிதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் அந்நாட்டின் மீதான சந்தேகம் மேலும் வலுத்துள்ளதாகவும் அரசியல் நோக்கர் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.இந்தியாவைப்போலவே அமெரிக்காவும் ஐஎஸ்ஐ-க்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே இணக்கமான உறவு இருப்பதாகக் குற்றம்சாட்டி வருகிறது.

கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் வந்த அமெரிக்க புலனாய்வு அமைப்பின் துணை இயக்குநர் இதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளிடம் அளித்தார்.ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீதான தாக்குதல் சம்பவத்திலும் ஐஎஸ்ஐ அமைப்பினரின் தொடர்பு குறித்த ஆதாரங்களையும் அவர் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளிடம் அளித்தார்.

எனினும்,பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் தொடர் குற்றச்சாட்டுக்கும் எச்சரிக்கைக்கும் செவி சாய்க்கவில்லை.பாகிஸ்தானின் இந்தப் போக்கை கவனிக்கும் உலக நாடுகள் ஐஎஸ்ஐ மீது துணிச்சலான நடவடிக்கை எடுக்கும் திறமை அந்நாட்டு அரசுக்கு இல்லை என்றே கருதுவதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1228035398&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் நிலநடுக்கம்
lankasri.comஜப்பான் நாட்டின் முக்கியத் தீவான ஹான்ஷுவில் சனிக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானது. இதனால் உயிரிழப்பு,பொருள்சேதம் ஏற்பட்டது குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை. தலைநகர் டோக்கியோவிலிருந்து தென்கிழக்கில் 375 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் 35 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டோங்கா,ஃபிஜி: பஸிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா,ஃபிஜி ஆகிய நாடுகளிலும் சனிக்கிழமை நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்,ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.


http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1228036399&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

மும்பை மோதலின் போது இன்னுயிர் நீத்த தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி (பட இணைப்பு)


 
 
lankasri.comமும்பை நாரிமன் ஹவுசில் தீவிரவாதிகளு‌டன் ஏற்பட்ட மோதலின் போது இன்னுயிர் நீத்த தேசிய பாதுகாப்பு படை வீரர் கஜேந்திரசிங்கின் உடல் டில்லிக்கு கொண்டு வரப்பட்டது.அங்கு அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.கஜேந்திர சிங்கின் உடல் அங்கிருந்து அவரது சொந்த ஊரான டேராடூனுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மும்பையில் நடந்த தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த தாக்குதலில்,வீர மரணமடைந்த தேசிய பாதுகாப்பு படை வீரர் உன்னிகிருஷ்ணனுக்கு பெங்களூருவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள்,போலீஸ் உயர் அதிகாரிகள்,பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஹேமந்த் கர்கரேவின் இறுதி சடங்கு முடிந்தது: மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ‌ஹேமந்த் கர்கரேவின் இறுதி சடங்கு மும்பையில் நடந்தது.போலீஸ் உயர் அதிகாரிகள் ஹசன் கபூர்,முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்,துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மும்பை தாதர் பகுதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து சிவாஜி பார்க்கில் உள்ள மையானத்துக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

lankasri.com



lankasri.com



lankasri.com


http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1227973030&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

இயேசு நேசன் கட்டுரை

இயேசு நேசன் அவர்களின் கட்டுரை இங்கு பதிவு செய்கிறேன்



இஸ்லாமிய இயேசு
 

இஸ்லாமிய மதம் இயேசுவை மதிக்கிறதாகக் கூறுகிறது. இஸ்லாமியர் இயேசு ஒரு தீர்க்கதரிசி என்றும் அவர் அல்லாவை வழிபட்ட மற்றொரு நல்ல இஸ்லாமியர் என்றும் கருதுகின்றனர். அவர்களுடைய வேதமான குரான் கிறிஸ்தவர்கள் கூறுவது போல இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, அல்லா அவரது முகச்சாயலை மற்றொருவர் மேல் விழச்செய்து, உண்மையான இயேசுவை மோட்சத்திற்கு எடுத்துக் கொண்டார் என்று அறிவிக்கிறது. ஆக, சிலுவையில் அறையப் பட்டது இயேசுவின் முகச்சாயல் வீழ்ந்த மற்ற நபர்தானாம்!

ஆகையால் இங்கே இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பலியானார், நித்திய ஜீவனை மீட்டுத்தந்தார் என்ற பேச்சுக்கெல்லாம் இடமே இல்லை! இருப்பினும், இயேசு மீண்டும் திரும்ப வந்து அந்திக்கிறிஸ்துவை (டஜ்ஜல்) முறியடிப்பார் என்றும், பின்னர் அவர் மணமுடித்து, குழந்தைகள் பெற்று தனது முதிர் வயதில் மரணமாவார் என்றும் குரான் அறிவிக்கிறது. பைபிள் கூறுவது போல இயேசு மகிமையோடே திரும்ப வந்து இவ்வுலகைச் சீர் செய்து, ஆயிரம் வருடம் அரசாளுவதும், பின்னர் அதைத் தொடரும் இறைவனின் வெண் சிங்காசன நியாயத்தீர்ப்பும் அங்கே இல்லை. இருப்பினும் அவர்கள், நியாயத்தீர்ப்பு நாளில் அல்லா இம்முழு உலகத்தாரையும் நியாயம் தீர்ப்பார் என நம்புகின்றனர்.


ஆதாமின் மூல பாவத்தினால் மனித இனமே பாவப்பட்டுவிட்டது என அறிவிக்கிறது சத்திய வேதம்.  "ஒரே மனுஷனாலே (ஆதாம்) பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது"  என்று ரோமர் 5:19 ஆம் வசனம் அறிவிக்கிறது. மேலும் எகோவா தெய்வம் மோசேயிடம் தன்னைக்குறித்து, "பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்." (யாத்திராகமம் 34:7)  அதாவது ஒருவரின் பாவம் பல பரம்பரைகளைப் பாதிக்கிறது.

இதன் விளைவாக மனித ஆத்துமாக்கள் சுயமாகப் பாவம் செய்தாலும், செய்யா விட்டாலும் பாதாளத்தில் மரணம் எனும் சக்தியின் பிடியில் அனந்த காலமும் அடைபட்டுக்கிடக்கும். இவ்வாறு பாவப்பட்ட ஆத்துமாக்களைத்தான் இயேசு மரித்து உயிர்த்தெழுந்த போது பாதாளத்தில் இறங்கி விடுவித்தார். இதைத்தான், "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." (ரோமர் 6:23) என்று வேதம் அறிவிக்கிறது. இவையெல்லாம் ஆழமான உண்மைகள். இஸ்லாமியர் இதனை புனைந்து எழுதப்பட்ட கதை என்கின்றனர். பாவபரிகாரம், நித்திய ஜீவன் என்ற வாக்குறுதியெல்லாம் இஸ்லாமியத்தில் இல்லை.

இஸ்லாமைப் பொறுத்த வரையில் மனிதன் இயற்கையிலேயே நல்லவன். அவனிடம் காணப்படும் பாவங்கள் மேலெழுந்தவாரியானவை. அவற்றைத் தவிர்த்து, அல்லாவிற்கு கீழ்ப்படிந்து நல்ல வாழ்க்கை வாழ வேண்டும், அவ்வளவுதான். அல்லாவிற்குக் கீழ்ப்படியாத நபர்களின் ஆத்துமாக்கள் நியாயத்தீர்ப்பு நாளில் நரகத்தில் தள்ளப்படும். நல்ல ஆத்துமாக்களும் கூட தங்கள் பாவங்களுக்கேற்றாற்போல் கொஞ்சமேனும் நரகத்தை ருசி பார்த்தபின் தான் மோட்சம் சென்றடையும் என்று இஸ்லாம் அறிவிக்கிறது.

இயேசு மக்களின் பாவத்திற்காக பலியாகி மனுக்குலம் இழந்து போயிருந்த நித்திய ஜீவனை நமக்கு மீட்டுத் தந்தது யாரோ ஜோடித்த ஒரு கட்டுக்கதை அல்ல. ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாமையும் ஏவாளையும் வெளியேற்றிய அதே தருணத்தில் சாத்தான் புகுந்திருந்த சர்ப்பத்திடம், "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்." (ஆதியாகமம் 3:15) என்று இறைவன் தீர்க்க தரிசனம் உரைத்திருந்தார்.

மேலும், வரலாற்றின் பல கட்டங்களில், பல பல தீர்க்கதரிசிகள் மூலம் இயேசு எங்கே பிறப்பார், அவரை அடையாளம் கண்டு கொள்வது எப்படி, மனித வரலாற்றில் அவரது முக்கியத்துவம் என்ன, அவர் மனுக்குலத்தின் பாவத்திற்காக எப்படி மரிப்பார், நித்திய ஜீவனை நமக்கு மீட்டுத்தருவார் என்று இஸ்ரவேலருக்கு அறியத்தந்தார். இந்த தீர்க்க தரிசனங்கள் இயேசுவின் வாழ்வில் நிறைவேறினதை வேதம் தெள்ளத் தெளிவாக அறிவிக்கிறது.

உண்மை இப்படி இருக்க, அறுநூறு ஆண்டுகள் கழித்து வந்த இஸ்லாமிய மதம் அவருடைய சிலுவைத்தியாகத்தை மறுப்பானேன்? இதற்கு நாம் ஒரு விடை காணுமுன், உலக வரலாற்றின் தொடக்கம் முதல், தேவனாகிய கர்த்தராகிய எகோவா தெய்வத்திற்கும் சாத்தானுக்கும் இடையே ஏட்டிக்குப் போட்டியாக நிகழ்ந்த பல சம்பவங்களை கண்ணோக்க வேண்டும். முதலில் ஏதேன் தோட்டத்திற்குச் செல்லுவோம்....         (தொடரும்...)

இஸ்லாமிற்கு முன்...

எகோவா தேவன் இவ்வுலகைப் புனர் நிர்மாணம் செய்தபோது, முதல் மனிதன் ஆதாமிடமும் அவனது துணைவி ஏவாளிடமும், "நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள்" (ஆதியாகமம் 1:28) என்று கூறி இவ்வுலகின் ஆளும் தன்மையை அவர்களுக்குக் கொடுத்திருந்தார்.

சாத்தான் புகுந்த சர்ப்பத்தின் சொல் கேட்டு, சாத்தானுக்குக் கீழ்ப்படிந்து, இறைவனுக்கு எதிரான காரியத்தைச் செய்த போது அவர்கள் இந்தத் தகுதியை சாத்தானிடம் விற்றுப் போட்டனர். இவ்வாறாக பாவம் செய்த ஆதாமையும், ஏவாளையும், சர்ப்பத்தையும் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றும் முன்னர் இறைவன் சர்ப்பத்திடம் தீர்க்கதரிசனமாக "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் (இயேசு) உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்." (ஆதியாகமம் 3:15)


ஆக, என்றேனும் ஓர் நாளின் ஸ்திரியானவளின் வித்து தனது தலையை நசுக்கும் என்று அறிந்து கொண்ட சாத்தான் ஸ்திரியானவளின் வித்தையே இனக்கலப்பு முறையில் அழிக்க முற்பட்டான். இதன் முதல் கட்டமாகத்தான் வீழ்ந்து போன தேவதூதர்கள் மனித இனத்துடன் கலந்து ராட்சதர்களைப் பெற்றெடுத்தனர். "அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்" (ஆதியாகமம் 6:4).


பின்னர், அந்தப் பலவான்களான இராட்சதர்கள், மீந்துள்ள மக்களுடன் கலந்து ஸ்திரியின் வித்தைக் கலைத்துப் போட எத்தனித்தது அதன் அடுத்த கட்டம் ஆகும். இதனைத் தடுக்கத்தான் அவர்கள் யாவரையும் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்தில் இறைவன் அழித்துப் போட்டார்.


ஜலப்பிரளயத்திற்குப் பின் இருநூறு ஆண்டுகளுக்குள் மற்றுமொரு சம்பவம். இறைவனுக்கு முன் பிரபல வேட்டைக்காரனாக இருந்த மாமன்னன் நிம்ராத் (ஆதியாகமம் 10:8,9) தனது தீய செயல்கள் நிமித்தம் கொலை செய்யப்பட்டு மரித்தான். அவனது மனைவியான ராணி செமிராமிஸ் அவனது மறைவிற்குப்பின் தகாத முறையிலே கற்பவதியானாள். அவள் மக்களிடம் கடவுளின் சாபத்தைச் சுட்டிக்காட்டி நிம்ராத் விண்ணேறி சூரியக்கடவுளாகிவிட்டான் என்றும் அவனுடைய ஒளிக்கதிர்களால் தான் அதிசயிக்கத்தக்க விதத்தில் கற்பவதியானாள் என்றும் அவளுடைய வயிற்றில் வளரும் அந்தக்குழந்தைதான் இறைவன் கூறிய "ஸ்திரியானவளின் வித்து" என்றும் கூறி அவள் மக்களை ஏமாற்றினாள்.


இறைவனுக்கு எதிரான நோக்கம் கொண்ட இவள் ஸ்தாபித்த இந்தப் போலி மதம் பல பல பெயர்களுடன் எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க மற்றும் ரோமச் சாம்ராச்சிய மக்களை உண்மை இறைவனிடம் இருந்து பிரித்துச் சென்றது. இறைவன் தனக்கெனத் தெரிந்தெடுத்துக் கொண்ட பன்னிரெண்டு கோத்திரங்கள் கொண்ட இஸ்ரவேலரிலும் கூட வடதேசத்தை ஸ்தாபித்த பத்து கோத்திரத்தார் இந்தப்போலி மதங்களால் மோசம் போயினர். பின்னர் அசிரியர்களால் கி.மு.722ல் சிறைப் படுத்தப்பட்ட இவர்கள், பிற இனங்களோடு கலந்து இன்றும் கூட தடயம் இல்லாமல் மறைந்து போய் விட்டனர். இதுவும் சாத்தானின் செயல்தான்.

தீய ஆவிகள் மனித இனத்துடன் கலப்பது நோவாவின் காலத்தில் மட்டுமன்றி ஜலப்பிரளயத்திற்குப் பின்னும் நடைபெற்றது. உதாரணமாக நோவாவின் பேரனான கேனான் பெருவெள்ளத்திற்கு முன் உருவாக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் படித்து விட்டு இரகசியமாக மீண்டும் அசுத்த ஆவிகளுடன் தொடர்பு கொண்டான். அவனுடைய சந்ததியினரான கானான் தேசத்தாரிலும் ராட்சதர்கள் காணப்பட்டனர். கி.மு.பதினொன்றாம் நூற்றாண்டில் ஆடு மேய்க்கும் இளைஞனான தாவீது ஒரு கவணையும் கூழாங்கல்லையும் கொண்டு கொன்று போட்ட பெலிஸ்தியன் கோலியாத்தும் ஒரு ராட்சதன் என்பதை வேதம் அறிவிக்கிறது.

இத்தகைய கலப்பு இனங்கள் இன்றும் இவ்வுலகத்தில் உண்டு. இவற்றோடு கலந்து விடக்கூடாது என்பதனால்தான் இறைவன் தனக்கென்று ஒரு இனத்தைத் தனியே பிரித்தெடுத்து (ஆபிரகாமின் சந்ததியான இஸ்ரவேலர்), அவர்களைப் பாதுகாத்து அவர்கள் மூலம் தான் கூறிய ஸ்திரியின் வித்தின் தூய்மையைப் பாதுகாக்க நேரிட்டது. ஆபிரகாம் முதல் இயேசு வரையிலான இருபத்தெட்டு தலைமுறையினரின் பட்டியலை மத்தேயு முதலாம் அதிகாரத்தில் காணலாம்.

எகோவா தேவன் தான் தெரிந்தெடுக்கொண்ட இஸ்ரவேலரிடம் காலா காலமாக தனது தீர்க்க தரிசிகளின் மூலம் மனித இனத்தைப் பாவத்தின் பிடியிலிருந்து மீட்க வரும் மேசியா (இயேசு) எப்படிப்பட்டவர். அவர் வருகையின் அடையாளங்கள் என்ன, அவருக்கு நடக்கப் போவது என்ன என்று பல பல காரியங்களை வெளிப்படுத்தி அவர்களை வழி நடத்தினார்.

இருப்பினும் தங்கள் கீழ்ப்படியாமையின் விளைவாக கி.மு.587ஆம் ஆண்டில் பாபிலோனியரால் சிறைபிடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட யூதர்கள் (மீந்திருந்த இரண்டு கோத்திரத்தார்) மீண்டும் தங்கள் சொந்த தேசம் திரும்பிய போது, அவர்களுடைய வேத அறிவும், விசுவாசமும் முன்னைப்போல் இல்லாமல், மனித சட்ட திட்டங்களுக்கும், பாபிலோனிய மதத்தைச் சார்ந்த பழக்க வழக்கங்களுக்கும் கட்டுப்பட்டிருந்தன. இயேசு இவற்றை வன்மையாகக் கண்டித்தார். "நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டு வருகிறவர்களாய்..... அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள்" என்றார். (மாற்கு7:8)

இதனால்தான், தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக இயேசு இவ்வுலகில் மனிதனாகப் பிறந்த போதும் யூத மக்கள் அவரை இனம் கண்டு கொள்ளத்தவறி, சிலுவையில் அறைந்தனர். இறைவன் தெரிந்தெடுத்துக் கொண்ட இனமே இறைமகன் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றது!

இங்கே சாத்தான் வென்றது போல் தோன்றுகிறதல்லவா? அதுதான் இல்லை. இயேசு சிலுவையில் நம் அனைவரின் பாவங்களுக்காகவும் பலியாகாவிட்டால் மனித இனத்திற்கு பாவ விமோசனம்தான் ஏது? இயேசு மரித்தார், பாதாளத்தில் இறங்கி, அங்கே ஆதாமின் பாவத்தின் நிமித்தம் மரணத்தின் பிடியில் அடைபட்டுக்கிடந்த மனித ஆத்துமாக்களை விடுவித்தார்.

இயேசு, சிலுவை மரத்தில் மகா சப்தமிட்டு தனது ஆவியை விட்ட போது, "கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்த பின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்." (மத்தேயு 27:52,53). அதனால்தான், கி.பி. 90 ஆம் ஆண்டு வாக்கில் புனித யோவானுக்கு காட்சி தந்த இயேசு, "நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுடைய திறவு கோல்களை உடையவனாக இருக்கிறேன்" (வெளிப்படுத்தின விசேஷம் 1:18) என்கிறார். புனித பவுல் அடிகளாரும், "மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே?" (1 கொரிந்தியர் 15:55) என்று எக்காளமிடுகிறார்!


ஆக, மரித்த ஆத்துமாக்களைச் சிறைப்படுத்திய பாதாளமும், மரணமும் அவைகளின் பிடியை நிரந்தரமாக இழந்து விட்டன. இயேசுவை ஆத்தும இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் நித்திய ஜீவன் இலவசம்! சாத்தான் தோற்கடிக்கப்பட்டு விட்டான்... இருப்பினும் ரோமப்பேரரசின் மூலம் அவன் கிறிஸ்தவர்களை வேட்டையாடிக் கொன்று குவித்த வண்ணம் இருந்தான்.

நான்காம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ரோமச் சாம்ராச்சியத்தில் பிளவுகள், பதவிப் போட்டிகள். தான் அரசனாவதென்றால் தளபதி கான்ஸ்டன்டைன் தன்னைக்காட்டிலும் பெரும் படை கொண்ட மாக்ஸென்ஷியஸை வெல்ல வேண்டிய நிர்ப்பந்தம். கி.பி.312 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், இருபத்தெட்டாம் ஆம் நாளில் இயேசு அவரிடம் தரிசனத்தில் தோன்றி. "எனது நாமத்தில் நீ போருக்குச் செல். நான் உன்னை வெல்லச் செய்வேன்" என்றார். மறு நாள், அவர் கூறியது போலவே கான்ஸ்டன்டைன் மாக்ஸென்ஷியஸைத் தோற்கடித்தார். இந்தச் சம்பவத்தால் மனம் மாறிய அவர் கிறித்துவத்தை ரோம அரசின் அதிகார பூர்வமான மதமாகப் பிரகடனம் செய்தார்.

உப்ஸ்.... கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்த செய்த ரோம அரசும் கிறிஸ்தவ மயமாகி விட்டதே! இனி என்ன செய்வது? இந்த நிலையில் உருவாகிய புது மதம்தான் இஸ்லாம்.          (தொடரும்...)


இஸ்லாம் ஏன்?

ரோம அரசே கிறிஸ்தவ மயமான இந்தக்கட்டத்தில் இயேசு என்று ஒருவர் இருக்கவே இல்லை என்று சொல்லி இயேசுவை முற்றிலும் மறுப்பது என்பது இயலாத காரியம். அதனால் தான் வாழைப்பழத்தில் ஊசி இறக்கியது போல அவரை மதிப்பது போலவும் நடித்து, மறு புறத்தில் அவரது சிறகுகளையும் கொஞ்சம் கத்தரிப்பதிலும் ஈடு பட்டிருக்கிறது இந்த இஸ்லாம். இதனை இஸ்லாமியர் அறிவார்களா என்றால் அதுவும் இல்லை. காரணம் அவர்களுக்கு முழுச்சரித்திரமும் கொடுக்கப்படவில்லை. யாராவது அதைக்கொடுத்தாலும் அவர்களை நம்பக்கூடாது என கட்டளையிடுகிறது இஸ்லாம். அதாவது பைபிளில் உண்மைகள் சிதைத்து எழுதப்பட்டிருக்கிறது என்கிறது அவர்களுடைய வேதம்! மோசேயையும், தாவீதையும், இயேசுவையும் மதிப்பதாகச்சொல்லும் இஸ்லாமியர் இவர்கள் எழுதிய வேதப்பகுதிகளை ஒரு முறையேனும் படித்திருக்கிறார்களா என்று கேட்டால் பதில் இல்லை என்று தான் வரும். இதையெல்லாம் மீறி ஒரு இஸ்லாமியர் உண்மையை அறிந்து இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தால் என்ன செய்வது? அது சுலபம்.... அவரைக் கொன்று போட வேண்டும் என்கிறது இஸ்லாம்! மேலும் கிறிஸ்தவர்களிடம் நட்பு கொள்ளக்கூடாது என்றும் குரான் இஸ்லாமியருக்கு குறிப்பாக போதனை செய்கிறது. இது இஸ்லாமின் பிரித்து ஆளும் தன்மையாகும். இதன் மூலம் அது உண்மையையும் கட்டுப்படுத்தப்படுகிறது.

கிறித்துவத்தைக் கட்டுப்படுத்துவது மட்டும் இஸ்லாமின் திட்டமல்ல. முழு உலகையும் மதத்தின் வாயிலாகக் கைப்பற்றுவதுதான் அதன் திட்டம். வாள் முனையில் இஸ்லாம் பரப்பப்பட்ட நாட்களை உலகம் அறியும். அது மட்டுமல்ல, எல்லா மதங்களும் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறும் போது இஸ்லாம் மட்டும் மூன்றல்லது, நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறதே அதுவும் ஜனத்தொகைப் பெருக்கத்தின் மூலம் உலகைக்கைப்பற்றும் ஒரு உத்திதான். இன்று யாரும் அப்படி மூன்று நான்கு மனைவிகள் வைத்துக்கொள்வதில்லை என்று ஒருவேளை நீங்கள் சொல்லலாம். அது சரி, சராசரியாக இஸ்லாமியர் அதிகம் குழந்தைகள் பெறுகிறார்கள் என்பதையாவது நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?

ஒரு கணக்குக்காக இன்று ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் என்றும் மற்றொரு இஸ்லாமிய குடும்பத்தில் மூன்று குழந்தைகள் என்றும் வைத்துக் கொள்ளுவோம். ஆக, இன்று இந்த கிறிஸ்தவக் குடும்பத்தின் மொத்த நபர்கள் நான்கு. இஸ்லாமியக் குடும்பத்தின் மொத்த நபர்கள் ஐந்து. சுமார் 25 வருடங்கள் கழித்து இந்தக் கிறிஸ்தவ வாரிசுகள் தலா இரண்டு குழந்தைகளும், இஸ்லாமிய வாரிசுகள் தலா மூன்று குழந்தைகளும் பெற்றுக்கொண்டால் இப்போது கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2+2+4=8 ஆகவும், இஸ்லாமியரின் எண்ணிக்கை 2+3+9=14 ஆகவும் மாறும். அதாவது, இருபத்தைந்து வருடத்திற்குள் இஸ்லாமிய ஜனத்தொகை ஏரத்தாள இரு மடங்காகிவிட்டது. இந்த எண்ணிக்கை நூறாண்டுகள் செல்லும் போது கணக்கில்லாத மடங்குகள் அதிகரிக்கும். இப்படித்தான் கடந்த பதினான்கு நூற்றாண்டுகளில் இஸ்லாம் பரவி வந்திருக்கிறது. அமைதியை நாடும் மதமான இஸ்லாமைப் பலரும் விரும்பி மதமாற்றம் செய்து இஸ்லாமியராகிறார்கள் என்று கூறுகிறார்களே அதில் அதிகம் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மாறாக, இஸ்லாமிய சட்டதிட்டங்கள் தளர்த்தப்பட்டால் மறைமுகமாக இயேசுவை வணங்கும் பல இஸ்லாமியர் வீசா விதிகள் தளர்த்தப்பட்ட கம்யூனிச நாடுகளிலிருந்து மக்கள் எப்படி வெளியேறுவார்களோ அதுபோல வெளியேறுவர் என்பதுதான் உண்மை!

இஸ்லாம் வெல்லுமா?
 

கணித ரீதியில் பார்க்கும் போது இஸ்லாம் தனது ஜனத்தொகைப் பெருக்கத்தினால் என்றேனும் ஓர் நாளில் உலகை வெல்லத்தான் வேண்டும். இருப்பினும், நாளைய செய்தித்தாளைவிட செய்திகளை தீர்க்க தரிசனங்கள் வாயிலாக இன்றே பறைசாற்றும் சத்திய வேதம் மற்றொரு ஓவியம் தீட்டுகிறது. தீர்க்கதரிசனங்களின் பிரகாரம் இனி நடக்க இருப்பதெல்லாம் இவைதான். முதலில் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டு, உலக நாணயங்கள் தரை மட்டமாகும். இதன் தொடக்கத்தைத் தான் நாம், "யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே" என்றாற் போல இன்று நாம் பார்க்கிறோம். நிலைமை மோசமாகையில் அதனைச் சரிக்கட்டும் பாவனையில் அரங்கேரும் முழு உலக அரசு (One world order), தனது பிரஜைகளின் வலது கையிலும், நெற்றியிலும் பதிக்கும் முத்திரைகள் (electronic chips) மூலம் கொடுக்கல் வாங்கல்களைக் கட்டுப்படுத்தும். ஆனால், இந்த முத்திரைகளை ஏற்றுக்கொள்பவருக்கு நரகம் நிச்சயம் என்று சத்திய வேதம் எச்சரிக்கை விடுக்கிறது. இந்த அரசிற்கு ஒரு தலைவன், அவனை கிறிஸ்தவர்கள் "அந்திக்கிறிஸ்து" எனவும் இஸ்லாமியர் "டஜ்ஜல்" எனவும் அழைக்கின்றனர். இவன் எல்லா மதங்களுடனும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு பதவிக்கு வருகிறான் என தீர்க்கதரிசனங்கள் பைபிளில் உண்டு. அதாவது இஸ்லாம் உலகை வெல்லும் முன் டஜ்ஜல் (அந்திக்கிறிஸ்து) உலகைக் கைப்பற்றி விடுகிறான்.

மக்களின் அபிமானத்துடன் பதவியேறும் இந்த உலகத்தலைவனின் ஆட்சிக்காலம் ஏழு ஆண்டுகள் மட்டுமே என்றும் பைபிள் அறிவிக்கிறது. மேலும், இவனது ஆட்சியின் நடுக்கட்டத்தில் இவனுக்கு எதிர்ப்புகள் பல உருவாகின்றன. அப்போது அவன் தனது ஒப்பந்தத்தை முறித்து விட்டு எல்லா மதங்களையும் தடை செய்வது மட்டுமல்லாமல் எல்லா மத பக்தர்களையும் மிகவும் கொடுமையாக நிந்திக்கிறான். இது ஒரு மூன்றரை ஆண்டுக்காலம் தொடர்கிறது. பக்தர்கள் பலியாகின்றனர். இதன் முடிவில்தான் இயேசு மகிமையோடே இவ்வுலகிற்குத் திரும்ப வந்து அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டுகிறார். இந்த ஒரு விஷயத்தில் இஸ்லாமும் கிறித்துவத்துடன் ஒத்துப்போகிறது.

அதன் பின்.... உண்மை இஸ்லாமியரான இயேசுவைக் கண்டு கொண்ட கிறிஸ்தவர்கள் எல்லோரும் அவரைக் குறித்த தங்கள் "அத்துமீறல்களை" உணர்ந்து இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொள்வார்கள் என்கிறார்கள் இஸ்லாமியர். ஆனால், இயேசுவின் நியாயமான ஆயிரம் கால அரசாட்சி இவ்வுலகில் அரங்கேறும் என்கிறது சத்திய வேதம். ஆனால், ஒன்று மட்டும் உறுதி... இயேசு திரும்பவரும் நாளில் உண்மை வெல்லத்தான் போகிறது!

இயேசு நேசன் இணைய பக்கங்கள் செல்ல

1
http://www.geocities.com/mistertoronto/islamic_jesus.htm


http://ca.geocities.com/mistertoronto

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP