சமீபத்திய பதிவுகள்

இலங்கை சிங்கள படையில் சிறுவர்கள் : வீடியோ ஆதாரம்

>> Wednesday, December 17, 2008

 


இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இலங்கையில் வன்னி பகுதியில் நடைபெற்ற மோதலில், ராணுவத்தினரின் பலி எண்ணிக்கை 170ஆக உயர்ந்துள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை கைப்பற்ற, அந்நாட்டு ராணுவம் பல்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. கிளிநொச்சிக்குள் நுழையும் கடைசி கட்டமாக ராணுவத்தினர் முன்னேற புறப்பட்டனர்.

அப்போது ராணுவத்தினரை முன்னேற விடாமல் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 130 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதேபோல் கிலாலியில் நடைபெற்ற மோதலில் 40 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலில் பலியான 36 ராணுவத்தினரின் உடல்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றியுள்ளனர். இதற்கான வீடியோ காட்சிகளையும், புகைப்படங்களையும் விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ளனர். இதில் பலியான ராணுவத்தினர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுவர்களை இலங்கை ராணுவம் போருக்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
 

StumbleUpon.com Read more...

சென்னை யானைகவுனியில் பெண் தாதா வெட்டி கொலை

 
 
lankasri.comவட சென்னை யானை கவுனி ஆதியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 40).இவர் மீது கொலை முயற்சி,மிரட்டுதல்,அடித்து காயம் ஏற்படுத்தியது என போலீசில் 18-வழக்குகள் உள்ளது.அந்த பகுதியில் பெண் தாதாவாக வலம் வந்தார்.

கடைகளில் மாமூல் வசூலிப்பது,அரசியல் கட்சி கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து செல்வது,குடும்ப பிரச்சினைகளை பஞ்சாயத்து செய்வது,குடி போதையில் ரகளையில் ஈடுபடுவது இதுதான் இவரது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு நின்றிருந்த மாட்டு வண்டியில் அமர்ந்தபடி போதையில் ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.அப்படியே வண்டியில் படுத்து தூங்கிவிட்டார்.இன்று காலை 6-மணிக்கு பார்த்த போது பரமேஸ்வரி கழுத்து மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

அவரது ஆடைகள் களைந்த நிலையில் காணப்பட்டது.சம்பவம் அதிகாலை 3.30-மணியில் இருந்து 4.30-க்குள் நடந்து இருக்கலாம் என தெரிகிறது.இதுகுறித்து தகவல் அறிந்ததும் யானைகவுனி இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது.சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.கைரேகை சேகரிக்கப்பட்டது.ஒரே நபர் தான் இந்த கொலையை செய்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையே விசாரணையில் பரமேஸ்வரிக்கு,5-க்கும் மேற்பட்ட ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.அவரின் கள்ள காதலர்களுக்கு இடையே அடிக்கடி பரமேஸ்வரியுடன் இருப்பது தொடர்பாக தகராறு ஏற்படும்.அப்போது அவர்களை பரமேஸ்வரி அடித்து விரட்டி விடுவார்.எனவே அவர்களில் யாராவது பரமேஸ்வரியை பழி வாங்கும் நோக்கத்தில் கொலை செய்திருக்கலாம் என்றும் அவருக்கு அந்த பகுதியில் 10-ஒர்க்ஷாப்புகள் உள்ளது.அதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக யாராவது பரமேஸ்வரியை கொலை செய்திருக்கலாமா? என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பரமேஸ்வரியின் முதல் கணவர் அன்பு (வயது 40) இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.இருவருக்கும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர்.

 

 

StumbleUpon.com Read more...

ஏழு நாட்டு இராணுவ ஆலோசகர்கள் வன்னிக் களமுனையில்

 


சிறிலங்கா வன்னி மீது பாரிய போரைத் தொடுத்திருக்கும் நிலையில் வன்னிக் களமுனைக்கு சென்று ஏழு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆலோசனைக்கான சந்திப்பில் பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் ஆலோசகர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த திங்களன்று இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

வன்னியின் களமுனைக்கு சென்று நேரடியாகப் பார்வையிட்ட இவர்கள், இந்தப் போரில் ஈடுபட்டுள்ள 57வது படைப்பிரிவு மற்றும் 59வது படைப்பிரிவு ஆகியவற்றின் தலையகங்களுக்கு சென்றும் ஆலோசனைகளை நேரடியாக வழங்கியுள்ளதாக சிறிலங்கா தரப்பு தெரிவித்துள்ளதுடன், களமுனைக்குச் சென்ற படங்களையும் வெளியிட்டுள்ளது.

சமாதானப் பேச்சுக்களின் மூலம் தீர்வொன்றைக் காணவேண்டும் என வலியுறுத்தி வரும் நாடுகள் வன்னிக் களமுனைக்கு சென்று இராணுவத்தினருக்கு ஆலோசனைகளை வழங்கிவருவது சமாதானத்தை நேசிப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா ஒரு தலைப்பட்சமாக போரில் இருந்து விலகியபோது மௌனமாக இருந்த சர்வதேசம், தற்போது அந்நாடு மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பினை நேரடியாக வழங்க முன் வந்தள்ளமையானது இலங்கைத் தீவில் பாரிய மனித அழிவுகளுக்கு வழிவகுக்கும் என மனித உரிமை வாதிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது களமுனையில் படையினர் பாரிய அழிவுகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் கை ஓங்கிவரும் நிலையில், சர்வதேசம் மீண்டும் சிறிலங்காவைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளமையும், அதற்கான முன்னடவடிகையான இந்த ஆலோசகர்களின் பயணம் அமைந்துள்ள குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamilthesiyam.blogspot.com/2008/12/blog-post_17.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP