சமீபத்திய பதிவுகள்

என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்

>> Tuesday, December 23, 2008

 

 

ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக ஊடக நிறுவனமான ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்:

ஒரு விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டுமே மையமாகக் கொண்டது அல்ல.

நிலப் பகுதிகளை இழப்பதும் மீளக் கைப்பற்றுவதும் பொதுவானதுதான். எமது விடுதலைப் போராட்ட இலட்சியத்தை வென்றெடுக்கும் வரையில் தொடர்ந்து போர் நகரங்கள் உருவாக்கப்படும்.

அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற மகிந்த ராஜபக்சவின் நிபந்தனையை நிராகரிக்கிறோம்.

தற்போதைய சூழ்நிலையில் அதாவது ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைவிட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று கோரிவரும் நிலையில் பேச்சுவார்த்தைகள் என்பது சாத்தியம் அல்ல.

போரில் எமக்கு இழப்புக்கள் ஏற்பட்ட போதும் சிறிலங்காவின் 32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை சீர்குலைப்பதே எமது இலக்காகும்.

எமது தற்காப்பு தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதி- சிறிலங்காவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கப்படுவதும் ஆகும். சிறிலங்காவின் பொருளாதாரம் சீர்குலைக்கப்படும் போதுதான் தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்காவின் இனப்படுகொலையும் பலவீனப்படுத்தப்படும்.

கிளிநொச்சி போர்க்களத்தில் சிறிலங்கா படையினருக்கு நாங்கள் பாடம் கற்பிப்போம். எமது வலிந்த தாக்குதல் நடவடிக்கையை தொடங்குவதற்கு உரிய காலம் இடத்துக்காக காத்திருக்கிறோம்.

2008 ஆம் ஆண்டில் 2,250 போராளிகளை நாங்கள் இழந்திருக்கின்றோம்.

ஆயுதங்களை பெற்றுக்கொள்வதில் எமக்கு எதுவித சிக்கலும் இல்லை. நாங்கள் இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார் பா. நடேசன்.
 
 

StumbleUpon.com Read more...

இஸ்ரோவின் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள் பயணம் வெற்றி

 
 
lankasri.comஇஸ்ரோவின் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள் டபிள்யூ2-எம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.வர்த்தக ரீதியில் பயன்படுத்தத்தக்க இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனமும் ஐரோப்பாவின் ஈட்ஸ் ஆஸ்ட்ரியம் நிறுவனமும் கூட்டாகத் தயாரித்திருந்தன.

இச் செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் உள்ள கெளரூ ஏவுதளத்தில் இருந்து ஐரோப்பிய ஏரியான்-5 ஏவுகலன் மூலம் காலை 4.05 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம் ஏவப்பட்ட 32-நிமிடங்களில் டபிள்யூ2-எம் செயற்கைக்கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து புவி இணை இயக்க வட்டப் பாதையை அடைந்தது.இதில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ சிக்னல்கள் தெளிவாகவும் துல்லியமாகவும் இருப்பதாக ஹாஸனில் உள்ள இஸ்ரோவின் தலைமைக் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

செயற்கைக்கோளின் சாதனங்களும் சிறப்பாக இயங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த செயற்கைக்கோளை ஏவும் திட்டத்திற்கான உடன்பாடு 2006-பிப்ரவரி 20-ம் தேதி பிரான்ஸ் அதிபர் இந்தியா வந்திருந்தபோது கையெழுத்தானது.இது வர்த்தக ரீதியில் பயன்படக்கூடிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் எடை மொத்தம் 3463-கிலோ.

இஸ்ரோ தயாரித்துள்ள செயற்கைக்கோள்களில் அதிகமான எடை கொண்டது இது.சுமார் 15-ஆண்டுகள் தடையின்றி செயல்படும் திறன் உடையது.இதில் உள்ள சூரிய மின்விசைப் பகுதி அதிகபட்சமாக 7-ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடியது.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1229968871&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

அதிகாரி மரண சர்ச்சை சந்தேகம் தீர்ந்தது : அந்துலே

 

மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் போலீஸ் அதிகாரி கார்கரே கொல்லப்பட்டார்.  இந்த மரணத்தில் சதித்திட்டம் இருப்பதாக மத்திய அமைச்சர் அந்துலே குற்றஞ்சாட்டினார்.

இது சம்பந்தமாக விசாரணை நடந்தது.  விசாரணை முடிந்த பின் ,அதிகாரி கார்கரே மரணத்தில் எந்த சதித்திட்டமும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து தனது முடிவை மாற்றீக்கொண்டிருக்கிறார் அந்துலே.  அது சமபந்தமாக அவர்,

''சதித்திட்டம் இருப்பதாக நான் சொல்லவில்லை.  விசாரனை செய்ய வேண்டும் என்றுதான் சொன்னேன்.  இப்போது விசாரனையும் முடிந்து விட்டது.

விசாரணை அறிக்கையை மத்திய அமைச்சர் சமர்ப்பித்திருக்கிறார்.  இனி அதிகாரி மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை.  இந்த பிரச்சனை இத்தோடு முடிந்து விட்டது'' என்று தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=1295

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP