சமீபத்திய பதிவுகள்

முல்லைத்தீவு மருத்துவமனை மற்றும் "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது சிறிலங்கா படையினர் இன்று அகோர பீரங்கித் தாக்குதல்: 22 பேர் பலி; 106 பேர் படுகாயம்

>> Friday, January 23, 2009

 
 
வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கென சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனை ஆகியனவற்றின் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 22 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 106 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்துடன் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வன்னியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 88 ஆகவும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 329 ஆகவும் அதிகரித்துள்ளது.
புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்லம், சைவச்சிறார் இல்லம் மற்றும் மகாதேவ ஆச்சிரமம் ஆகியன மீது இன்று வியாழக்கிழமை காலை வேளை சிறிலங்கா படையினர் செறிவான ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
 
இவற்றுக்கு அருகில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீதும் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
இதில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 34 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
இனிய வாழ்வு இல்லம் மாற்று வலுக்கொண்டவர்களுக்கான இல்லமாக அனைத்துலக அமைப்புக்களின்  தொடர்புகளுடன் இயங்கி வருகின்றது.
 
மகாதேவா ஆச்சிரமம் ஆதரவற்ற சிறார்களை பராமரிக்கின்ற சிறுவர் இல்லம் ஆகும்.
 
சைவச்சிறார் இல்லமும் சிறார்களை பராமரிக்கின்ற இல்லம் ஆகும். இவற்றினை இலக்கு வைத்து இன்று காலை 7:55 நிமிடம் தொடக்கம் 8:10 நிமிடம் வரை இப்பகுதி மீது சிறிலங்கா படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதலையும் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.
 
இதில் இனிய வாழ்வு இல்லம் சைவச்சிறார் இல்லம், மகாதேவா ஆச்சிரமம் ஆகியன மீதும் வீதியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் இடம்பெயர்ந்தோர் வாழ்விடங்கள் ஆகியனவற்றின் மீதும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.
 
காலை வேளையில் பேரவலத்தை ஏற்படுத்தும் வகையில் இத்தாக்குதல் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டது.
 
இதில் இல்லங்களில் இருந்தவர்கள் வீதிகளில் பயணித்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள் உள்ளிட்ட 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 34 பேர் படுகாயமடைந்தனர்.
வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்லத்தின் மீதான சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் தமிழர் புனர்வாழ்வுக் கழக உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் சொ.நரேன் காயமடைந்துள்ளார்.
 
இதேவேளையில், இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் பொதுமக்கள் வீட்டின் மீது நேற்று இரவு எறிகணை வீழ்ந்து வெடித்ததில் குமரசாமி தவமணி என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு இருந்த 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
இதன் பின்னர் இன்று காலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
 
வள்ளிபுனம் பாடசாலையில் இயங்கும் முல்லைத்தீவு பொதுமருத்துவமனையை இலக்கு வைத்து இன்று பிற்பகல் 12:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
 
இதன்போது மருத்துவமனை ஆண்கள் விடுதி மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.
 
இத்தாக்குதல் நடைபெற்ற போது மருத்துவமனையில் பெரும் எண்ணிக்கையில் நோயாளர்கள் இருந்தனர்.
 
இதில் மருத்துவமனைக்குள் இருந்த 5 நோயாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
 
மருத்துவமனைக்குள்ளேயே எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் நேயாளர்கள் பேரவலப்பட்டனர்.
 
மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவின் மீது நேற்று இரவும் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
மருத்துவமனை மீதான எறிகணைத்தாக்குதலில் நோயாளர் காவு வாகனம், உழுவூர்தி, நீர்த்தாங்கி ஊர்தி என்பனவும் சேதமாகியுள்ளன.
 
இத்தாக்குதல்களில் 48 பேர் படுகாயமடைந்தனர்.
ர.சீரணி (வயது 04)
ர.சாரங்கன் (வயது 06)
க.கோசிகன் (வயது 02)
ந.மகேந்திரராசா (வயது 42)
வே.பாலசுந்தரம்
பா.புனிதவதி
ஆனந்தம்
ஜெயகாந்தன் ஜெயரூபி
ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 
சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில்
ச.முருகையா (வயது 66)
செ.பிரபாகரன் (வயது 40)
ஜே.ஜெனிற்றா (வயது 14)
ச.பரிதினி (வயது இரண்டரை)
ஜே.விக்கினேஸ்வரி (வயது 32)
அ.றகுவர்னன் (வயது 29)
தெ.தர்சன் (வயது 14)
ப.குமார் (வயது 38)
த.தருமலிங்கம் (வயது 30)
க.இராசதுரை (வயது 57)
பு.மகிழினி (வயது 13)
நா.மலர்க்காந்தபூபதி (வயது 75)
கிருஸ்ணகுமார் (வயது 36)
க.தர்மலிங்கம் (வயது 34)
மலர் சாந்தபூபதி (வயது 73)
கனகலிங்கம் சஜிதா (வயது 12)
அ.சரண்யா (வயது 13)
செ.நந்தகுமார் (வயது 15)
ஜெ.ஜனனி (வயது 17)
அ.அனுரா (வயது 29)
ந.ஜோதிலக்ஸ்மி (வயது 68)
சிதம்பரப்பிள்ளை தீபன் (வயது 22)
இ.சத்தியதாஸ் (வயது 21)
சு.சந்திரலீலா (வயது 48)
அ.குமார் (வயது 23)
தி.சுபாகரன் (வயது 28)
க.தவமலர் (வயது 43)
க.சசிகரன் (வயது 19)
சூ.கென்கசன் யூட் (வயது 32)
விஜயபாலன் (வயது 41)
ச.செல்லத்துரை (வயது 67)
கே.அபியுகா (வயது 06)
சி.விமலாதேவி (வயது 46)
சி.கணேசமூர்த்தி (வயது 49)
சி.சிவசிதம்பரம் (வயது 74)
ப.பிரசாத் (வயது 18)
அ.ரவி (வயது 42)
வ.லிங்கநாதன் (வயது 37)
ச.ரம்சோன் (வயது 42)
சி.அபிநயா (வயது 02)
க.ரேவதி (வயது 15)
பி.மல்லிகாதேவி (வயது 48)
வ.பூங்கோதை (வயது 40)
வை.சின்னத்தீபனா (வயது 60)
பா.கவிதா (வயது 28)
வானதி (வயது 13)
அ.ரவிகரன் (வயது 29)
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
 
தேவிபுரம் பெரியகுளம் பகுதியில் இரவு நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர், சிவசாமி சகுந்தலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசுவமடு மயில்வாகனபுரம் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர் தா.டேவிட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
செ.டயஸ்குமார் (வயது 19)
செ.காந்தகுமார் (வயது 12)
ஊ.ஜரோஸ் (வயது 13)
எ.விக்டோரியா (வயது 33)
ஜெனிற்றா (வயது 18)
விஜயநிர்மலா (வயது 40)
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
உடையார்கட்டு தெற்குப் பகுதியில் உள்ள வயல்வெளியில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள பொதுமக்கள் வாழ்விடம் மீது இன்று பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சுமதி (வயது 33)
நா.வேந்தன் (வயது 15)
தவராசா (வயது 47)
மற்றும் 4 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
நிரோஜினி (வயது 09)
நிருசா (வயது 08)
29 அகவை சீரா (வயது 29)
பார்த்தீபன் (வயது 14)
ஜெ.ஜெயரூபி (வயது 28)
ஞானசேகரம் (வயது 46)
கோகிலராணி (வயது 49)
பாஸ்கரன் (வயது 34)
கவிராஜ் (வயது 30)
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்களால் பொதுமக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருகின்றனர்.
பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை முதல் இடைவிடாது எறிகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆட்டிலெறித் தாக்குதல்கள் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள் படையினரால் செறிவாக நடத்தப்படுவதால் மக்கள் கையில் அகப்பட்ட பொருட்களுடன் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
வீதியோரங்களில் அதிகளவில் மக்கள் தங்கியிருக்கின்றனர். இருப்பிடம் இல்லாது மக்கள் அவலப்படுகின்றனர்.

 

http://www.puthinam.com/full.php?2b44OO44b3aC6DR24d31VoK2a03I4AKe4d2YSmAce0de0MtHce0df1eo2cc0KcYK3e

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP