சமீபத்திய பதிவுகள்

NGO க்களினால் அழைத்துச் செல்லப்பட்ட நிபுணர்களே விமான ஓடுதளங்களை அமைத்துள்ளனர் - பாதுகாப்பு தரப்பினர்:

>> Friday, January 16, 2009

புலிகளின் ஓடுதளங்கள் மிகவும் நோத்;தியான முறையில் அமைக்கப்பட்டிருந்தமையே இதற்கான காரணம் எனவும் இதுவரை புலிகளின் 5 விமான ஓடுதளங்களைத் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.


கடந்த காலங்களில் இலங்கைக்கு சென்ற நிவாரணப் பணியாளர்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இவர்களுக்கு வீசா அனுமதிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விடுதலைப்புலிகளின் விமான ஓடுதளங்கள் மிகவும் நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சாதாரணமாவர்களினால் இவ்வாறு அமைக்க முடியாது எனவும் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான ஓடுதளங்களை மாத்திரமல்லாது, விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் தங்கியிருந்த பதுங்குகுழியையும் கிளிநொச்சியில் தங்கியிருந்த சர்வதேச தொண்டு நிறுவன செயற்பாட்டாளர் ஒருவரே அமைத்ததாகவும் அவர் தற்போது நாட்டில் இருந்து வெளியேறி சென்று விட்;டார் எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.(globaltamilnews)
http://www.swisstamilweb.com/

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP