சமீபத்திய பதிவுகள்

அப்துல் மஜீத் மற்றும் உமர் - பாகம் 3

>> Friday, February 6, 2009

அப்துல் மஜீத் மற்றும் உமர் - பாகம் 3

 
அப்துல் மஜீத் அவர்கள்:

க‌ர்த்த‌ரின் சாந்தியும் ச‌மாதான‌மும் ந‌ம் அனைவ‌ரின் உண்டாகுவ‌தாக‌,த‌ங்க‌ளுடைய‌ ப‌திலை க‌ண்டு மிக்க ம‌கிழ்ச்சி அடைந்தேன் ந‌ண்ப‌ர் உம‌ர் அவ‌ர்க‌ளே. இஸ்லாம் வாளால் ப‌ர‌விய‌து என்ற குற்றச்சாட்டுக்கு நீங்க‌ளே ப‌திலும் ம‌றைமுக‌மாக‌ கொடுத்துவிட்டீர்க‌ள். முஹம்மதுவின் மறைவிற்கு பிறகு, இஸ்லாமை விட்டு வெளியேறிய நாடுகள்:

(The Wars Of Al-Riddah, i.e. 'the wars against the apostates') From Wikipedia, the free encyclopedia

The Ridda wars (Arabic: حروب الردة), also known as the Wars of Apostasy) were a set of military campaigns against the rebellion of several Arabic tribes against the Caliph Abu Bakr during 632 and 633 AD, following the death of Muhammad. The revolts, in Islamic Historiography later interpreted as religious, were in reality mainly political.[1][2]

umar please note the underlined,mainly political.

அடக்குமுறையால் எந்த‌ ஒரு மார்க்க‌த்தையும் நிர‌ந்த‌ர‌மாக‌ திணிக்க‌ முடியாது என்ப‌த‌ற்கு த‌ங்க‌ளுடைய‌ இந்த‌ ப‌திவே ஒப்புத‌ல். formats are mine.

Umar said:

அருமையான சகோதரருக்கு,

விகிபீடியாவில் "Mainly Political" என்ற வார்த்தைக்கு என்ன பொருள் கூற நீங்கள் விரும்புகிறீர்கள்?

  • முஹம்மது அவர்கள் உயிரோடு இருக்கும் போது, மற்ற நாடுகள் இஸ்லாமிய கட்டுப்பட்டுக்குள் வந்தது, இஸ்லாமின் கோட்பாட்டைக் கண்டு பிரபித்து வந்தவர்களா அல்லது அவரது "வாளுக்கு" பயந்து வந்தவர்களா?
  • முஹம்மது அவர்கள் உயிரோடு இருந்த போது, இஸ்லாமிய நாடுகளாக அல்லது ஜிஸ்யா வரி கட்டுகிறவர்களாக மாறிய நாடுகள், ஆன்மீக மேன்மைக்காக வந்தவர்களா அல்லது அரசியலுக்காக(ஏன் வீணாக உயிரை விட்டு, நாட்டை இழப்பானேன் என்பதற்காக) வந்தவர்களா?
நீங்கள் நபியாக கருதும் முஹம்மது அவர்கள் மரித்த பிறகு, இஸ்லாமிய நாடுகளாக(அல்லது அவருக்கு வரிகட்டுகிற நாடுகளாக) மாறியிருந்த நாடுகள், இஸ்லாமை விட்டு வெளியேறின அல்லது ஜிஸ்யா வரி கட்ட மறுத்தன. இதைப் பற்றி நாம் இப்போது சிந்திப்போம். இதில் நீங்கள் சொன்னது போல கூட ஒரு தெரிவை(Option) நாம் சிந்திப்போம்.

ரித்தா போர்கள்(Ridda Wars) என்பது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டது(This is your view)

அல்லது

ரித்தா போர்கள்(Ridda Wars) என்பது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படவில்லை


நீங்கள் சொன்னதுபோலவே, இந்த ரித்தா போர்கள் அரசியல் காரணங்களுகாக நடத்தப்பட்டது என்றே நாம் இப்போது நினைத்துக்கொள்வோம். இதனால் கீழ் கண்ட பிரச்சனைகள் இருவாகின்றன, இவைகளுக்கு நீங்கள் பதில் சொல்லமுடியுமா என்றுப் பாருங்கள்.

• முஹம்மது மரித்தது, அந்த நாடுகள்(இஸ்லாமிய நாடுகள்) ஏன் ஜிஸ்யா வரியை கொடுக்க மறுத்தனர்? இவர்கள் இஸ்லாமின் போட்பாடுகளை விரும்பி, நீங்கள் நபியாக கருதும் முஹம்மதுவை நேசித்து, இஸ்லாமிய நாடுகளாக மாறியிருந்தால், அவர் மரித்ததும் ஏன் திடீரென்று மாறவேண்டும்?

• முஹம்மது அவர்கள் உயிரோடு இருந்த போது தேனைப்போல இனிமையாக இருந்த இஸ்லாம் அவர் மரித்ததும் "பாவக்காய்" போல கசப்பாக மாறிவிட்டதா? அல்லது,

• இஸ்லாமின் முதல் காலிஃபாவாக இருந்த அபூ பக்கர் அவர்கள் ஒரு நல்ல இஸ்லாமிய ஆட்சியைச் செய்யவில்லையா?(இதை இஸ்லாமியர்கள் ஏற்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்) அல்லது

• அந்த நாடுகளின் தலைவர்கள் வேண்டுமென்றே, முஹம்மது மரித்ததும் எதிர்த்தார்கள், ஜிஸ்யா வரியை கட்ட மறுத்தார்கள் என்றுச் சொல்ல வருகிறீர்களா? இப்படி நீங்கள் சொன்னால், இவர்கள் முஹம்மது உயிரோடு இருக்கும் போது இஸ்லாமை ஏற்றது உயிருக்கு பயந்து தான் என்பது விளங்குகிறது, அல்லது முஹம்மதுவிடமிருந்து தப்பிக்க வெளி வேஷம் போட்டு இஸ்லாமிய கோட்பாட்டுக்குள் வந்தார்கள் என்பது விளங்குகிறது.

இதில் எது சரியானது?

ஒன்று, அவர்கள் உயிருக்கு பயந்து இஸ்லாமியராக மாறியிருக்கவேண்டும் அல்லது அவர்கள் இஸ்லாமுக்கு மாறியது ஒரு "வெளி வேஷமாக" இருக்கவேண்டும். இதில் எது சரியானதாக இருந்தாலும், "இஸ்லாமிய கோட்பாடுகளைக் கண்டு, நாடுகள் அப்படியே முன்வந்து இஸ்லாமுக்கு மாறியது" என்று இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்கள் அனைத்தும் பொய்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.

அபூ பக்கர் ஒரு நல்ல இஸ்லாமிய‌ ஆட்சி செய்யவில்லை என்று பொருளா?

மேலே சொன்னது சரியானது அல்ல என்று நீங்கள் சொன்னால், இன்னொரு தெரிவை நாம் கவனிக்கலாம், அதாவது ஒரு இஸ்லாமிய ஆட்சி செய்வதற்கு அபூ பக்கர் அவர்கள் தகுதியானவர் அல்ல என்று அந்நாடுகள் கண்டுக் கொண்டு, நல்ல ஆட்சியாளர்(முஹம்மது) மரித்துவிட்டார், இந்த அபூ பக்கர் நமக்கு தேவையில்லை, அவருக்கு இனி நாம் ஜிஸ்யா கட்டவேண்டியதில்லை என்று அந்நாடுகள் மாறியிருக்கவேண்டும். இதையாவது, இஸ்லாமியர்களாகிய நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இதையும் நீங்கள் ஏற்கமாட்டீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் உங்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை.

அப்படியே, அபூ பக்கர் அவர்கள் காலிபா அல்ல என்று அவர்கள் நினைத்து, ஜிஸ்யா வரி கட்ட மறுத்து இருந்தாலும், எதிர்த்து இருந்தாலும், ஏன் அவர்கள் இஸ்லாமிலிருந்து வெளியேற வேண்டும்? அவர்கள் அபூ பக்கரை மட்டும் எதிர்க்க திட்டமிட்டு இருந்தால், இஸ்லாமை விட்டு ஏன் வெளியேற வேண்டும்? (அபூ பக்கர் அவர்கள் காலிபாவாக மாறியதை, முஹம்மதுவின் மகளான‌ பாதிமாவும், அலி அவர்களும் எதிர்த்தாலும், அவர்கள் இஸ்லாமியராகவே இருந்தார்கள், இவர்களுக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தது, ஆனால், யார் தலைவராக வரவேண்டும் என்ற கருத்து வேறு பாடு மட்டும் இருந்தது).

அருமை இஸ்லாமிய சகோதரரே, முஹம்மது மரித்ததும் மற்ற நாடுகள் இஸ்லாமை விட்டு வெளியேறின என்றுச் சொன்னாலே, அவர்கள் ஆரம்பத்தில் எப்படி இஸ்லாமுக்குள் வந்தார்கள்? என்பது சந்தேகத்திற்கும் விவாதத்திற்கும் உரியதாக மாறிவிடுகிறது.

எனவே, உங்கள் நபி உயிரோடு இருக்கும் போது, மற்ற நாடுகளை இஸ்லாமிய நாடுகளாக மாறியது இஸ்லாமின் போட்பாடுகளைக் கண்டு வியந்து, சந்தோஷமாக மாறிய நாடுகள் அல்ல, அப்படி இருந்திருந்தால், ஏன் அவர்கள் அபூபக்கரை அதாவது முஹமமதுவிற்கு பிறகு இஸ்லாமை நடத்த நியமிக்கப்பட்ட ஒருவரை அவர்கள் எதிர்க்கபோகிறார்கள்? அப்படி எதிர்த்தார்கள் என்பது உண்மையானால், அவர்கள் இஸ்லாமியராக‌ மாறியது வெறும் வெளி வேஷமே!

அப்துல் மஜீத் அவர்கள்:

ச‌ரி விஷ‌ய‌த்திற்கு வ‌ருவோம்,ந‌பிக‌ள் நாய‌க‌ம் மெக்காவில் இருந்து ம‌தினாவுக்கு ஹிஜ்ர‌த் செய்து போன‌ பொழுது அங்கே இருந்த‌வ‌ர்க‌ளுட‌ன் போர் செய்து வாள் முனையில்தான் எல்லோரையும் முஸ்லிமாக‌ மாற்றினாரா அல்ல‌து அக‌தியாக‌ போனாரா?பிற‌கு எப்ப‌டி அவரால் அங்கிருந்த‌வ‌ர்க‌ளை க‌த்தியின்றி ர‌த்த‌மின்றி வென்றெடுக்க‌ முடிந்த‌து.

Umar said:

எப்படி எப்படி, கத்தியின்று இரத்தமின்றியா? எங்கே மறுபடியும் சொல்லுங்கள்?

உங்களுக்கு உண்மை சரித்திரம் தெரியுமா அல்லது உங்கள் இமாம்கள் உங்களுக்கு சொல்வது மட்டும் தெரியுமா?

நீங்கள் சொல்வதைப் பார்த்தால், முஹம்மதுவும் அவரது மக்களும் மதினாவிற்குச் சென்று, அங்கு ஒரு ஆசிரமம் போட்டு, அவர் அமர்ந்துக்கொண்டு, வருகிறவர்களுக்கு அல்லாவைப் பற்றிச் சொல்லி, தன்னை பின்பற்றுகிறவர்களை ஊர் ஊராக அனுப்பி, அல்லாவின் வழியை தெரிவித்து வாருங்கள் என்றுச் சொன்னது போலவும். இவரது ஆன்மீக, தெய்வீக நடத்தையைக் கண்டு, மதினாவின் மக்கள், இவர் தான் பெரிய மகான், இவர் சொல்வது தான் வேதவாக்கு என்றுச் சொல்லி, இவரது காலடியில் தங்கள் நாட்டை ஆளும் ஆட்சிப்பொருப்பை வைத்துவிட்டுச் சென்றது போலச் சொல்கிறீர்கள்? உண்மையாகவே அமைதியாக தன் மார்க்கத்தை பரப்புகிறவர்களும் உங்களைப்போல பெருமைப் படமாட்டார்கள்.

கீழ் கண்ட கொலைகள் பற்றி படிக்கவும்: இவைகள் "கத்தியின்றி இரத்தமின்றி" என்றுச் சொல்வார்களா? என்று சிந்திக்கவும்.

"எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கைபார்க்கப்போகிறீர்கள்?" என்று நபி கேட்டார். இதைக்கேட்டு, சலிம் பி. உமர் சென்று அபு அபக்கை கொன்றுவிட்டு வந்தான். (முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் - http://www.answering-islam.org/tamil/authors/green/assassins.html)

அந்த பெண் சொன்னதை நபி கேள்விப்பட்டவுடனே, "
எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?" என்று கேட்டார். அப்போது "உமர் பி. அதிய அல்கத்மி" என்பவர் நபியோடு இருந்ததால், நபி சொன்னதை கேட்டுக்கொண்டு இருந்தார், மற்றும் அன்று இரவே, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சொன்று, அவளை கொன்றுவிட்டார். மறுநாள் காலை அவர் நபியிடம் வந்து, அவர் என்ன செய்தார் என்றுச் சொன்னார். அதற்கு நபி "ஓ உமர், நீ இறைவனுக்கும் அவரது நபிக்கும் உதவி புரிந்தாய்!" என்றார்.( "மர்வானின் மகள் அஸ்மா" வை கொலை செய்ய உமர் பி. அடிய்யாவின் பயணம்: - http://www.answering-islam.org/tamil/authors/green/assassins.html)

எனவே, நபியவர்கள் அல்-ஜுபைர் பி.அவ்வம் என்பவருக்கு கட்டளையிட்டு, "
இவனிடம் மிதமுள்ள பொக்கிஷங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளும் வரை இவனை கொடுமைப்படுத்துங்கள்(Torture)" என்றுச் சொன்னார். எனவே, அல்-ஜுபைர் நெருப்பை மூட்டி, இரும்பை சூடுபடுத்தி கினானாவின் மார்பிலே வைத்தான். கினானா கிட்டத்தட்ட மரித்தவன்போல் ஆகிவிட்டான். பிறகு நபி கினானாவை முஹம்மத் பி. மஸ்லமாவிடம் ஒப்புக்கொடுத்தார், அவன் தன் சகோதரன் மஹ்மத்காக பழிக்கு பழிவாங்க கினானாவின் தலையை துண்டித்து விட்டான். - http://www.answering-islam.org/tamil/authors/green/torture.html

மார்ச் மாதம் கி.பி. 624: அக்பா பின் அபூமுயத்(Uqba bin Abu Muayt)- அக்பா மக்காவில் முஹம்மதுவை மதிப்புக் குறைவாக விமர்சித்து எழுதி கேலி செய்தார். அவ‌ர் பத்ரூ போரில் பிடிக்க‌ப்ப‌ட்ட‌போது முஹம்மது அவருக்கு ம‌ர‌ண‌ த‌ண்டனையை வழங்கினார். அப்போது அக்பா மிகுந்த ம‌ன‌ச்ச‌ஞ்ஞ‌ல‌த்துட‌ன் "
முஹம்மதுவே! என் பிள்ளைக‌ளை யார் காப்பாற்றுவார்க‌ள்?" எனக் கதறினார். உனக்கு "நரகம்" தான் என்று நபி அமைதியாக கூறினார். அதன் பின்பு இறைத்தூதரின் அடியார்க‌ளுள் ஒருவ‌னின் வாள் அக்பாவின் கழுத்தை வெட்டியது. (http://www.answering-islam.org/tamil/authors/arlandson/ten_reasons.html)

முஹம்மது அநியாயமாக‌ சுமார் 600 யூத ஆண்மக்களைக் கொன்று பெண்களையும் குழந்தைகளையும் அடிமைப்படுத்துகிறார் …….முஹம்மதுவின் தீர்ப்பு: 600 ஆண்க‌ளை சிர‌ச்சேத‌ம் செய்த‌ல் (சில‌ இஸ்லாமிய‌ ஆதார‌ங்க‌ள் 900 ஆண்கள் என‌க் குறிப்பிடுகின்ற‌ன‌), பெண்க‌ளையும் குழந்தைக‌ளையும் அடிமைகளாக எடுத்துக்கொள்ளுதல் (அவ‌ர் ஒரு யூத‌ அழ‌கியைத் த‌ன‌க்குப் ப‌ரிசாக‌ எடுத்துக் கொண்டார்). (http://www.answering-islam.org/tamil/authors/arlandson/ten_reasons.html)

இவைகள் எல்லாம் "கத்தியின்று இரத்தமின்றி" உங்கள் முஹம்மது நாடுகளை ஜெயித்தார் என்றுச் சொன்னீர்களே, அவைகளுக்கான ஒரு சில‌ ஆதாரங்களாகும். இவைகள் எல்லாம் தமிழ் கட்டுரைகள் தான், உங்கள் இதயத்திற்கு தாங்கிக்கொள்ள வலிமை இருந்தால், சென்று படிக்கவும்.

அப்துல் மஜீத் அவர்கள்:

மேலும் இந்தியாவில் எப்பொழுது,எப்ப‌டி இஸ்லாம் ப‌ர‌விய‌து? எந்த‌ கலிஃபா போர் எடுத்தார்? ந்தோனேஷியா,ம‌லேஷியா,சிங்க‌ப்பூர்,ஃபிலிப்பைன்ஸ்,புருனே போன்ற நாடுக‌ளுக்கு யார் க‌டித‌ம் எழுதி மிர‌ட்டி வாள் முனையில் இஸ்லாத்தை ப‌ர‌ப்பினார்க‌ள்? ந‌ண்ப‌ரே காழ்ப்புணர்ச்சி இல்லாம‌ல் ந‌டு நிலையாக‌ கொஞ்ச‌ம் சிந்தித்து பாருங்க‌ள்,

Umar said:

முஹம்மதுவை விட நாங்கள் நல்லவர்கள் என்று காட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்கள்

அருமையான அப்துல் மஜீத் அவர்களே, நான் கேட்டது, முஹமம்து எப்படி இஸ்லாமை பரப்பினார் என்று, நீங்கள் பதில் சொல்வது இஸ்லாம் எப்படி இப்போது ஒரு சில நாடுகளில் பரவியுள்ளது என்று. இதைப் பற்றி நான் ஏற்கனவே, "இஸ்லாமிய இணைய பேரவைக்கு" ஒரு பதிலை எழுதியிருந்தேன். அதனை கீழே தருகிறேன். முதலாவது உங்கள் நபி எப்படி தன் இஸ்லாமை பரப்பினார் என்று விளக்குங்கள், அவரது கடிதங்கள் என்ன சொல்கின்றன அவைகளின் உண்மை விளக்கம் என்ன? என்று விளக்குங்கள்.

பிறகு தற்கால நாடுகளில் இஸ்லாம் எப்படி பரவிக்கொண்டு இருக்கிறது, நிலை நிற்கிறது என்பதை பிறகு சிந்திக்கலாம். ஒரு மரத்தின் வேரே சரியில்லை என்றுச் சொல்லும் போது, அந்த மரத்தின் கிளையைப் பற்றி பெருமையாக பேசுவதில் என்ன பயன்? அப்படி பேசினால், வேரை விட கிளைகளே முக்கியமானவைகள் என்று சொல்வதற்கு சமமாகும்.

Colgate Close- Up Technique

இஸ்லாமிய அழைப்புப்பணி செய்யும் இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு டெக்னிக் என்னவென்றால், நாம் ஒன்றைச் சொன்னால், அவர்கள் வேறு ஒரு பதில் சொல்வார்கள். உதாரணத்திற்கு, ஒரு மலிகை சாமான் கடைக்குச் சென்று, கோல்கேட் பேஸ்ட் இருக்கின்றதா என்று கேட்டால், அந்த கடையில் அப்போதைக்கு கோல்கேட் இல்லையானால், அந்த கடைக்காரார் புத்திசாலியாக இருந்தால், "க்ளோசப் பேஸ்ட்" இருக்கிறது என்பார். ஆனால் கேட்டது கோல்கேட், அவர் சொல்வது க்ளோசப் இருப்பதாக. இப்படி இருக்கும் இவர்களின் வாதம்.

நான் பதித்த கட்டுரை "முகமது எப்படி இஸ்லாமை பரப்பினார்?" என்பதைப் பற்றியது. இவர்கள் அதைப்பற்றி மூச்சு விடாமல், இஸ்லாம் எப்படி இப்போது பரவுகிறது என்று சொல்கிறார்கள். இதைத் தான் நான் "கோல்கெட், க்ளோசட் டெக்னிக் – Colgate Close-up Technique" என்பேன்.

இஸ்லாமிய இணைய பேரவை அண்ணன்களா? முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார் என்று முதலில் விளக்குங்கள், அவர் எழுதிய கடிதங்களில் அமைதியை கண்டுபிடியுங்கள். அதை விட்டுவிட்டு, இந்தோனேஷியாவில் எப்படி பரவியது, இன்று மேற்கத்திய நாடுகளில் எப்படி பரவுகிறது என்றுச் சொல்லி, கோல்கேட் கேட்பவருக்கு, க்ளோசப்பை விற்க முயற்சி எடுக்காதீர்கள்.

ஒன்று செய்யுங்கள், உங்கள் நபி அனுப்பிய கடிதங்கள் போல, எல்லா உலக நாடுகளுக்கும் கடிதங்கள் எழுதுங்கள், இஸ்லாமை ஏற்றுக்கொள், மறுத்தால் சண்டை தான் என்று எழுதுங்கள். நீங்கள் தான் உங்கள் நபியின் அடிச்சுவடிகளில் நடப்பவர்கள் தானே. இப்படி எழுதிப்பாருங்கள், பிறகு தெரியும், மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமை எப்படித்தான் பரப்ப வேண்டும் என்று. மேற்கத்திய நாடுகளுக்கும் வேண்டாம், சைனாவிற்கும், ஜப்பானுக்கும் இப்படிப்பட்ட கடிதம் எழுதி அனுப்பும் படி இஸ்லாமிய நாடுகளை கேட்டுக்கொள்ளுங்கள், பிறகு பாருங்கள் என்ன நடக்கும் என்று?

இப்படி சொல்வதினால், நீங்கள் இஸ்லாமை பரப்பும் விதம் உங்கள் நபியைப்போல வன்முறையில் இல்லாமல், அமைதியான முறையில் பரப்புகிறோம் என்று உங்கள் நபிக்கு எதிராக நீங்களே சாட்சியிடுகிறீர்கள். உங்கள் நபியை விட நீங்கள் நல்லவர்கள் என்று காட்டிக்கொள்கிறீர்கள்.

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/iiop/iiop-colgate-closeup.html

மீதமுள்ள இஸ்லாமிய சகோதரத்துவம், கிறிஸ்தவ ஜாதிகள் போன்ற அப்துல் மஜீத் அவர்களின் வரிகளுக்கு அடுத்த பதிவில் பதிலைக் காணலாம்.




Isa Koran Home Page Back - Debate Index page
1
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP