சமீபத்திய பதிவுகள்

சிங்கள வீரர்களின் இலங்கை தேசிய கொடி எரிப்பு!

>> Saturday, February 7, 2009


சர்வதேச அனைத்து தற்காப்பு கலை அமைப்பு சார்பில் சேலம் காந்தி ஸ்டேடியத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை கராத்தே, குங்பூ, பாக்சிங், டேக்குவாண்டோ போன்ற தற்காப்பு கலை போட்டிகள் நடந்தது.
இந்த போட்டியில் பங்கேற்க இலங்கையில் இருந்து 6 வீரர்கள், 2 வீராங்கனைகள் ஆகிய 8 பேர், பயிற்சியாளர் இந்தோனி கர்ண சேனா தலைமையில் வந்திருந்தனர். நேற்று மாலை விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவையொட்டி சிங்கள வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியை ஏந்தியபடி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் சேலத்தில் நடைபெறும் போட்டிகளில் சிங்கள வீரர்கள் பங்கேற்க வந்திருக்கும் தகவல் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரிய வந்தது.
அவர்கள் போட்டிகள் நடந்த உள்விளையாட்டு அரங்கின் முன்பு, இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து அனைவரும் போட்டியில் இருந்து சிங்கள வீரர்களை வெளியேற்றக்கோரி கோஷம் எழுப்பினார்கள். மேலும் இலங்கை வீரர், வீராங்கனைகள் வைத்திருந்த அவர்கள் நாட்டு தேசிய கொடியையும் தமிழ்நாடு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பறித்து தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP