சமீபத்திய பதிவுகள்

கருணா எட்டப்பன்களுக்கு ராஜமரியாதை ஜேக்சன் துரை ராஜபக்சே அறிவிப்பு

>> Monday, February 2, 2009

புலிகள் சரணடைந்தால் ராஜமரியாதை: ராஜபக்சே

இலங்கையின் மத்திய மாகாணத்தில் வரும் 14-ந் தேதி அன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதற்காக ஹங்குரன்கேதா என்ற இடத்தில் ஆளும் கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ''தீவிரவாதத்துக்கு எதிராக ஒட்டு மொத்த இலங்கையும் ஒன்றுபட்டு நிற்கிறது. எனவே, இலங்கை ராணுவத்தின் போர் நடவடிக்கைகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

வடக்கு பகுதியில் இருக்கும் சிறிது இடத்தையும் பிடிக்கும் வரை போர் ஓயாது.'' என்று தெரிவித்தார்.

அவர் மேலும், 'ஆயுதங்களை கைவிட்டு விட்டு விடுதலைப்புலிகள் சரண் அடைந்தால் அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் அளிக்க தயாராக இருக்கிறோம்.

ராணுவத்திடம் சரண் அடையும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவர். கிழக்கு மாகாணத்தில் சரண் அடைந்த அவர்களுடைய சகாக்கள் (கருணா கோஷ்டியினர்) போலவே அவர்களுக்கும் அரச மரியாதை அளிக்கப்படும்.

இதற்கு மாறாக, போரில் ராணுவத்திடம் பிடிபட்டால் பேராபத்தை எதிர் நோக்க வேண்டி இருக்கும்'' என்று  தெரிவித்தார்.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP