சமீபத்திய பதிவுகள்

தமிழ் இனம் விடுதலைக்கு நம் பங்கு என்ன ? செத்து மடியும் தமிழ் இனம்.. இன்று அவர்கள் நாளை நீயும் நானும் ....

>> Friday, February 20, 2009



 
Subject:  தமிழ் இனம் விடுதலைக்கு நம் பங்கு என்ன ? செத்து மடியும் தமிழ் இனம்.. இன்று அவர்கள் நாளை நீயும் நானும் ....
 
 
To:

 
வன்னியில் இன்று அதிகாலையிலிருந்து அகோர எறிகணைத் தாக்குதல்: 46 தமிழர்கள் படுகொலை 126 பேர் காயம்
[வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2009, 07:18 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
வன்னிப் பகுதியில் இன்று அதிகாலையில் இருந்து சிறிலங்கா படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 24 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் உடலங்கள் உறவினர்களால் அந்த அந்த இடங்களிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன.



இரணைப்பாலை, ஆனந்தபுரம், வலஞர்மடம், மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று அதிகாலை 2:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 70 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

நா.சிவகுமார் (வயது 29)

க.பாலசுந்தரம் (வயது 45)

பா.பவானி (வயது 38)

சி.அனுசா (வயது 22)

தி.நளாயினி (வயது 33)

க.நாதன்லேக்கா (வயது 16)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களின் உடலங்களை உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டு சென்ற காரணத்தினால் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.

இதில் வலைஞர்மடம் சிறிலங்கா படையினர் அறிவித்த 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

வலைஞர்மடத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கிருஸ்ணபிள்ளை இசைக்கீரன் (8 மாதம்)

கிருஸ்ணபிள்ளை சயந்தன் (வயது 05)

கிருஸ்ணபிள்ளை யதுர்சன் (வயது 05)

ஆகிய மூவரும் சகோதரர்கள் ஆவர்.



போ.புஸ்பலதா (வயது 07)

 ந.கமலேஸ்வரி (வயது 26)

ஜீனஸ்ரீ (வயது 19)

பு.ராமசாமி (வயது 52)

அ.நாகம்மா (வயது 61)

யோ.அந்தோனிப்பிள்ளை (வயது 65)

ச.மயூரன் (வயது 15)

இ.குமுதா (வயது 26)

வ.வசந்தரூபன் (வயது 28)

சி.ரத்தினம் (வயது 58)

கு.விஜயஸ்ரீ (வயது 28)

ச.சின்னத்தம்பி (வயது 82)

ஜெ.பிலோமினா (வயது 32)

அ.நீதினி (வயது 54)

க.இராசேந்திரன் (வயது 32)

ந.நந்தகுமாரி (வயது 30)

வ.சிவராசா (வயது 50)

க.துர்க்கா (வயது 12)

த.பாலகுமார் (வயது 28)

கு.சுரேஸ் (வயது 33)

செ.சின்னம்மா (வயது 62)

த.சூரியகுமார் (வயது 32)

கி.சேகர் (வயது 28)

அ.விவேகானந்தன் (வயது 60)

பெ.நடராசா (வயது 52)

த.சக்திவேல் (வயது 32)

பவானந்தி (வயது 32)

மா.தியாகராசா (வயது 68)

த.குகானந்தன் (வயது 36)

க.கிருஸ்ணபிள்ளை (வயது 75)

சி.பவானி (வயது 42)

க.விமல் (வயது 30)

ந.ஜெயபாலன் (வயது 30)

க.சரோசினிதெவி (வயது 39)

து.கிருபாயினி (வயது 31)

பரமேஸ்வரி (வயது 56)

செல்வரஞ்சிதம் (வயது 60)

தவதர்சன் (வயது 17)

குமுதா (வயது 10)

ஜெயரூபன் (வயது 35)

மகாலிங்கம் (வயது 55)

ஜெயந்தன் (வயது 23)

புஸ்பமாலா (வயது 64)

நிலவன் (வயது 29)

குணபாலசிங்கம் (வயது 33)

சு.சந்திரன் (வயது 26)

சி.பிறேசன் (வயது 09)

பசுமதிசுதா (வயது 26)

ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்களின் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளரும் நெக்கட் பணிப்பாளருமான திருமதி சிறீகந்தராசா சாந்தி (வயது 43) இடது காலினை இழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் உள்ள பொக்கணை பகுதி மீது இன்று காலை 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.

பிந்திய 10 செய்திகள்

--
அன்புடன்,

         தமிழன்.

 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP