சமீபத்திய பதிவுகள்

சுவிஸ் ஜெனீவா ஐநா முன்றலில் நடைபெற்ற அழிவிலும் எழுவோம் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் !

>> Wednesday, February 4, 2009

 

February 4, 2009

swis-4.jpg 
சிங்கள சிறீலங்கா அரசின் சுதந்திர நாளான 04.02.2009 புதன்கிழமை தமிழர் வாழ்வின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் "அழிவிலும் எழுவோம்" என்ற குறியீட்டுப் பெயருடன் சுவிஸ் தமிழ் இளையோர்கள் விடுத்த அழைப்பை ஏற்று சுவிசில் பல பாகங்களிலும் வாழும் தமிழ் மக்கள் ஐநா வளவை நோக்கி அணி திரண்டு நிற்கின்றனர்.

ஜெனீவாவைச் சேர்ந்த சுபாஸ் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைக்க அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஐநா வளவில் அணிதிரண்டிருக்கும் மக்கள் தமது கரங்களில் தாயக அவலத்தை வெளிப்படுத்தும் பதாதைகள், மக்கள்  தாங்கி நின்றனர். ஐநா முன்றலை நிறைத்து நின்ற தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் எழுச்சியுடன் காணப்பட்டனர். தமது கோரிக்கைகளை உலகின் உச்சிக்குக் கேட்கும் வண்ணம் தமது குரல்களை உயர்த்தி உரக்கக் குரல் எழுப்பிக் கொண்டு நின்றனர். 

கடந்த 28.01.2009 புதன்கிழமை ஏழு இளையோருடன் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது இளையோர்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று இளையோருக்கு நாளை 05.02.2009 அன்று சாதகமான பதிலை அளிப்பதாக உறுதி கூறியதை அடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தி இருந்தனர். தொடர்ந்து 02.02.2009 திங்கள், 03.02.2009 செவ்வாய் ஆகிய இருதினங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தி இருந்தனர். நாளை வியாழன் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தும் இளையோர் சாதகமான பதிலை ஐநா சமூகம் தராத பட்சத்தில் தொடர்ந்து தமது உண்ணாநிலைப் போராட்டத்தை தொடருவோம் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP