சமீபத்திய பதிவுகள்

விடுதலைப் புலிகளைப் பற்றிய மதிப்பீடுகள் என்றுமே மாறப் போவதில்லை. ஏனெனில், மக்களே புலிகள் புலிகளே மக்கள்.

>> Wednesday, March 25, 2009

ஒரு சிறிய நிலப்பரப்புக்கு உள்ளே விடுதலைப் புலிகளை முடக்கி வைத்துள்ளோம் என சிங்கள தேசம் மார்தட்டி வந்த நிலையில் மார்ச் மாத ஆரம்பம் முதல் கள முனையில் நடைபெற்று வரும் சம்பவங்கள், களமுனை விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக மாறி வருவது போன்ற உணர்வைத் தோற்றுவித்துள்ளது.

முதலாம் திகதி முதல் முல்லைத் தீவு மாவட்டத்தில் முன்னரங்கக் களமுனைகளில் நடைபெற்றுவரும் மோதல்களுக்கு அப்பால் இராணுவத்தினர் எதிர்பார்த்திராத இடங்களில் பல ஊடுருவல் தாக்குதல்களும் கரும்புலித் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

இதில் மகுடம் வைத்தாற் போன்று 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேராவில் பகுதியில் நடைபெற்ற ஊடறுப்புச் சமரில் ஆறு ஆட்டிலறித் தளங்கள் அழிக்கப் பட்டுள்ளன. இந்தத் தளங்கள் அழிக்கப்பட முன்னதாக அதனைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் அந்த ஆட்டிலெறிகளைக் கொண்டே இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தியிருப்பதும் 3 கரும்புலிகள் தவிர ஏனையோர் தப்பிச் சென்றிருப்பதாகவும் படைத் தரப்பிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது.


மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP