சமீபத்திய பதிவுகள்

புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினரின் யுத்த டாங்கி புலிகளால் தாக்கியழிப்பு: தப்பியோடும் படையினர் தொகை அதிகரிப்பு

>> Saturday, March 28, 2009

புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினரின் யுத்த டாங்கி புலிகளால் தாக்கியழிப்பு: தப்பியோடும் படையினர் தொகை அதிகரிப்பு


முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலின் போது யுத்த டாங்கி (Tank) ஒன்று விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆனந்தபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர்யுத்த டாங்கிகள் சகிதம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர தாக்குதலின் போது படையினருக்கு பெரும் எண்ணிக்கையிலான இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் முன்நகர்வும் முறியக்கப்பட்டது.

இம் முறியடிப்புச் சமரில் படையினரின் யுத்த டாங்கி ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் விடுதலைப் புலிகளின் மறிப்புச் சண்டைகள் மற்றும் மட்டுப்படுத்திய வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் காரணமாக சிங்களப் படைகளிடையே மனச்சோர்வும் அச்சமும் அதிகரித்து வருவதாகவும் வலிந்த தாக்குதல்கள் நடத்தும் மனநிலையில் இருந்த சிங்களப் படைகள் தற்போது தற்காப்பு நிலையை எடுக்கும் மனநிலையை நோக்கிச் செல்வதாகவும் தெரிய வருகின்றது.


மேலும் வாசிக்க அழுத்தவும்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP