சமீபத்திய பதிவுகள்

ஆங்கிலத்தில் வெளிவந்த அருந்ததிராயின் இந்தக் கட்டுரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

>> Tuesday, March 31, 2009

படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, இனவதைமுகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப்படுகிற போது, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட  மக்கள் பட்டினியால் மரணத்தை எதிர்நோக்கும் போது, ஒரு இனப்படுகொலை நடக்க இருக்கும் போது ஒரு மாபெரும் தேசம் மரண அமைதி காக்கிறது.
 
இலங்கையைச் சூழ உள்ளவர்களது மௌனம் அங்கு பயங்கரம் படிப்படியாக அதிகரித்து வருவதற்குக் காரணமாக இருக்கிறது. இந்தியாவின் பிரதான ஊடகங்களில் அது பற்றிய எவ்வித அறிக்கைகளும் வெளியாவதில்லை. உண்மையில் சர்வதேச ஊடகங்களிலும் நிலைமை அவ்வாறு தான் உள்ளது.  அங்கு என்ன தான் நடைபெறுகிறது?  அவை பற்றி நாம் ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும்?


அங்கிருந்து வடிகட்டப்பட்டு வெளிவரும் செய்திகளினூடாக இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் நாட்டின் ஜனநாயகத்தையே சிதைத்து அழித்து வருவதை அறிய முடிகிறது. அது மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் மேல் சொல்லுந்தரமற்ற குற்றங்களைப் புரிந்து வருகிறது.




மேலும் வாசிக்க அழுத்தவும்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP