சமீபத்திய பதிவுகள்

தளராது போராளிகளுக்கு ஊக்கம் கொடுப்போம் உறுதியுடன் மீண்டெழுவோம்

>> Saturday, March 7, 2009

 
 
ஒருபுறம் இந்துப் பெருங்கடல் ஏனைய முப்புறமும் சிங்களப் படைகள். சிங்கத் தின் குகைக்குள் சிக்கியிருப்பதுபோன்ற நிலையிலேயே நாமிருப்பது உண்மையே. வெளிப்பார்வைக்குத் தெரிவனவும் இன வாத ஆய்வாளர்களின் ஆய்வுகளும் கோடாரிக்காம்புகளான ஒரு சில தமிழர் களின் கூற்றுக்களும் புலிகளைப் பலமிழந்தவர்களாகவே காட்டி நிற்கின்றன.

 
ஆனால் புலிகளின் பலம் தொடர்பில் வேறெந்த அமைப்பையும் விடவும் சிறப்பாக ஆய்வு செய்யும் இந்தியப் புலனாய்வுத்துறையும் இந்திய அதிகாரபீடமும் புலிகள் பலத்துடன் இருப்பதாக வெளிப் படையாக ஏற்றுக்கொண்டுள்ளன.

 
கடந்த 2009.02.18 அன்று இந்தியப் பாராளு மன்றத்தில் உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சிங்களத்தின் காலில் விழவேண்டும் என்று தனது அரசின் நிலைப் பாட்டைக் கூறினார்.

 
அவரது கூற்று பலராலும் கண்டிக்கப்பட்டபோதிலும் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். சிங்களத்தின் பிடரியில் விழுந்தது அடி. 2009.02.21 இரவு சிங்கள வான்படைத் தலைமையகம் தாக்குதலுக்குள்ளானது.

 
வான்படைத் தலைமையகத்தைத் தாக்கியழித்த கரும்புலி கேணல் ரூபன் மாபெரும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.ஒரு கல்லில் இரு மாங்காய் போன்று சிங்களப் பொருண்மியத்தின் இரண்டா வது முதன்மை மையமான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலும் அழிவுகளை ஏற்படுத்தினார்.

 
லெப்.கேணல் சிரித் திரன் சிங்கள வான்படை செயற்பாட்டு மையமான கட்டுநாயக்கா படைத்தளத் தில் தாக்குதல் நடத்தியிருந்தார். வான் கரும்புலிகளின் தாக்குதல் வெற்றியென்பது மதிப்பீடுகளுக்கு அப் பாற்பட்டது.

 
ஒருபுறம் கடலும் மூன்று புற மும் சிங்களப் படைகளாலும் சூழப்பட்ட சிறு நிலப்பரப்பில் புலிகளை முடக்கி விட்டதாக சிங்களம் கூறிக்கொண்டிருக்க, அதனை முழு உலகும் நம்பியது. எம்மவர் பலர்கூட ஊக்கமிழந்து தோற்றுவிட்டோ மோ என்று துயரப்படும் நிலையிலிருந்த போதுதான் வான் கரும்புலிகள் தமது சாதனையை செய்து காட்டினார்கள்.

 
வானூர்தி மேலெழுந்தவுடன் சுட்டு வீழ்த்தக்கூடிய ஆயுதபலம் சிங்களப் படை களுக்கு இருந்தது. ஆனால் வானோடிகளின் துணிச்சல், திறமை காரணமாக அவர்கள் தமது இலக்கை அடையும்வரை பறந்தார்கள். ஆக வான் கரும்புலிகளின் இலக்கு முழுமையாக அடையப்பட்டது.

 
உண்மையான சேதவிபரங்களை அறிய முடியாதளவிற்கு மூடிமறைப்பதில் வெற்றிபெற்றது சிங்கள அரசு. ஆனாலும் சில அவதானிப்புக்கள் மூலம் சில மதிப் பீடுகளைச் செய்யமுடியும்.

 
கடந்தகால வான் தாக்குதல்கள் அனைத்தின்போதும் சிங்கள வான்படை விமானங்கள் பறந்து வந்து வன்னியில் ஓர் சுற்றுச்சுற்றி தாம் பலமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வார் கள். அவ்வாறான பறப்புக்கள்மூலமாக சிங்கள மக்களின் உளவுரணை உறுதி செய்துகொள்வார்கள்.

 
ஆனால் வான் கரும்புலிகளின் தாக்குதல் நடந்து மூன்று நாட்களுக்குப் பறப்புக்களையே மேற் கொள்ளமுடியாத பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டது சிங்கள வான்படை. சிங்கள வான்படை மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டதன்மூலம் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரது வினைதிறன்மிக்க தாக்குதலின் வெற்றியின் பரிமாணம் வெள்ளிடை மலையானது.

 
எல்லாவற்றுக்கும் மேலாக நம்பிக்கையிழந்து போயிருந்த தமிழர்கள் வெற்றிக்களிப்பிலிருந்த சிங்கள எதிரிகளும் தமிழ் துரோகிகளும் இந்திய அதிகாரபீடமும் பன்னாட்டுச் சமூகமும் ஆச்சரியப்படுமள விற்கு தாக்குதலை நடத்தியதன்மூலம் ஒருபோதும் வீழமாட்டோம் என்ற செய்தி இடித்துரைக்கப்பட்டது.

 
அதிலும் குறிப்பாக இலக்குத் தெரிவும் புலிகளின் பலத்தை எடுத்துக்காட்டியது. அண்மைக்கால தற்கொடை வான்தாக்குதல் அமெரிக்காவில் நடந்தது. அத்தாக்கு தலில் பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப் பட்டார்கள். அத்தாக்குதல்மூலம் பின்லாடன் உலகப் பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டார்.

 
ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றின் விடுதலைப் போராளிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் தமது தற்கொடைத் தாக்குதலில்கூட எதிர்த்தரப்பு பொதுமகன் ஒருவர்கூட பாதிப்படையக்கூடாது என்ற இலட்சிய உறுதிப்பாட்டைக் கண்டு வியந்துநிற்கிறது பன்னாட்டுச் சமூகம்.

 
தாக்குதல் உத்தரவை வழங்கும் தலைவர் தொடர்பான மதிப்பீட்டையும் மீளாய்வுக்குட்படுத்த வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருக்கிறது. கொடூரமான போரைத் தொடுத்து அப்பாவிகளைப் பலியெடுத்துவரும் சிங்களத்தரப்பு தமது இனப்படுகொலையின் உச்சத்தில் நிற்கிறது.

 
பச்சிளம் பாலகர் முதல் முதியோர்வரை அகவை வேறு பாடின்றி தமிழர்களைக் கொன்றொழித்து வருகிறது சிங்களம். அப்படியான சூழ் நிலையில் சிங்களத்தின் கோட்டையில் நடத்தும் தாக்குதல் ஒன்றின்போது பொது மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால்கூட எவருமே புலிகள் மீது குற்றம்சாட்டியிருக்கமுடியாது.

 
அப்படியான களச்சூழல் இருந்தும்கூட சிங் களப் பொதுமகன் எவரையும் பாதிக்காத வகையில் தாக்குதலை நடத்தியதன்மூலம் இலக்கைத் தீர்மானித்ததன்மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் உலக அளவில் உயர்வாகப் பார்க்கப்படுகின்றனர்.

 
அத்தாக்குதலில் வீர காவியமான கருவேங்கைகள் நினைத்திருந் தால் பல்லாயிரம் உயிர்களைப் பலியெடுத் திருக்கலாம். பலநூறு கோடி பெறுமதியான சொத்தழிவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை. அதுதான் விடுதலைப் புலிகளின் உயர் மரபு.

 
ஒழுக்கம். உலகமே உற்று நோக்க வைத்த உறுதி.மூன்று நாட்களில் புலிகளின் பலம் தொடர்பான மதிப்பீட்டை மாற்றம் செய்யவேண்டியநிலை ஏற்பட்டது இந்தியாவிற்கு. ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அடைக்கலம் அடைய வேண்டுமென்று புலிகளுக்குப் போதித்த பிரணாப் முகர்ஜி, புலிகள் ஆயுதங்களை வைத்துக்கொண்டே போர்நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்குமளவுக்கு நிலைமாறி யது.

 
இந்திய நிலைப்பாட்டை மாற்றினார் கள் கேணல் ரூபனும், லெப்.கேணல் சிரித் திரனும். தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு போதும் வீழமாட்டார்கள். உறுதியுடன் மீண் டெழுவார்கள் என்ற செய்தியைக்கூறி தனது இன்னுயிரை இருப்போர் வாழ்விற்காக ஈகம் செய்த உயர்ந்தமனிதர்கள்.களத்தில் எமைக்காக்கும் எமதருமைப் போராளிகள் போற்றுதலுக்குரியவர்கள்.

 
பல நாடுகளின் இராணுவ உதவிகள் போர்த் தளபாட நன்கொடைகள், ஆலோசனைகள், ஊக்குவிப்புக்களுடன் வெறிகொண்டு வரு கிறது சிங்களப்படை. பத்து நாட்களுக் கொரு வெடிபொருள் கப்பல் பாகிஸ்தானி லிருந்து வருவதாகக் கூறுகிறது சிங்களம். அப்படி வரும் பெருமளவு ஆயுதபலத்துடன் தமிழின அழிப்பில் ஈடுபடுகிறது சிங்களப் படை.

 
ஆனால் அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில் எதிரடி கொடுத்துவருகின்றனர் களத்தில் நிற்கும் போராளிகள். அவர்களது காப்பில் நாம் வாழ்ந்துவருகிறோம். போதியளவு உணவின்றி, உறக்கமின்றி, ஓய்வின்றி எமைக்காக்கும் போராளிகளுக்கு என்ன கைமாறு செய்யப்போகின்றோம்?

 
உலகப்போர் நியதிகளை மீறி வேதியல் குண்டுகளையும், கொத்துக்குண்டுகளையும் பயன்படுத்தி மனிதாபிமானமற்ற போரைத் தொடர்கிறது சிங்களம்.2009.02.14 ஆம் நாள் மத்திய, வடமேல் மாகாண தேர்தல் நாள். அன்றைய நாளுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளை அடியோடு அழித்து அனைத்து வன்னிமக்களையும் வதைமுகாமிற்குக் கொண்டுவருவேன் என்று சபதம் எடுத்தார் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.

 
கிரிசாந்தி குமாரசாமி படுகொலை விசாரணை, செம்மணி புதைகுழி விசாரணை போன்ற எந்தவொரு விசாரணைகளும் நடை பெறமாட்டாது என்றும் இராணுவத்தினர் விரும்பிய எதனையும் தமிழர்கள் தொடர்பில் மேற்கொள்ளலாம் என்றும் படையினருக்கு ஊக்கம் கொடுத்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச. வவுனியாவிலுள்ள வதைமுகாம்களிலுள்ள தமிழர்கள் சொர்க்கத்தில் இருப்பதுபோன்று சுகம் அனுபவிப்பதாகவும் தானே முன்னின்று அந்த மக்களை மூன்று ஆண்டுகளுக்கு சிறையில் வைத்திருக்கப்போவதாகவும் ஐ.நா. அதிகாரியிடமே கூறியிருந்தார் அரச தலை வரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச.

 
மூன்று ராஜபக்சாக்களும் கண்ட கனவுகள் பலிக்கவில்லை.14ஆம் நாளுக்குள் புலிகளை வெற்றி கொள்ள மகிந்த ராஜபக்சவால் முடியவில்லை. தோற்கடித்தார்கள் போராளிகள். வன்னியிலுள்ள தமிழ்ப் பெண்கள் எல்லோரையும் கிருசாந்தியாகவும் கோணேஸ்வரியாகவும் நடத்தமுடியாமல் போனது கோத்தபாய ராஜபக்சவுக்கு. தடுத்துக்காத்தார்கள் களப் போராளிகள்.

 
வன்னி மக்கள் அனைவரை யும் வதைமுகாமுக்குக் கொண்டுசெல்லமுடிய வில்லை பசில் ராஜபக்சவால். காத்தனர் புலிகள். இங்கிருக்கும் தமிழர்கள் அனை வருமே சிங்களத்தின் எறிகணை வீச்செல் லையில் இருந்தபோதிலும் உயிரிழப்புக்களைக் குறைப்பதில் வெற்றிகண்டுள்ளனர் கரும்புலிகள். இப்போது எம்மைப் பாதுகாப்பது புலிகளின் வீரமும் விவேகமுமே என்பதனை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டும்.

 
மதித்து நடக்க வேண்டும். இப்போது வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் போர் நடக்கிறது. விடுதலைப் புலிகள் தமது தாக்குதல்கள் தொடர்பாக எதனையும் சொல்லா விட்டால்கூட, அவ்வப்போது நீண்ட தூரத்திற்கு ஏவப்படும் எறிகணைகளும் சிங்கள ஏடுகளும், இந்திய ஊடகங்களும் கொழும்பில் சவச்சாலைகளும், மருத்துவ மனைகளும் பல செய்திகளைக் கூறிக் கொண்டே இருக்கின்றன.

 
அச்செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் புலிகளை அழிப்பதோ வீழ்த்துவதோ சிங்களத்தின் பகற் கனவே என்றுதான் கூறவேண்டியுள்ளது. ஏனைய ஊடகங்களின் செய்திகளை மேலோட்டமாகப் பார்த்தால்கூட இன்றும் புலிகளே பலமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

 
பெப்ரவரி 14 அன்று மட்டும் உருக்குலையாத நிலையில் இருந்த 400 இராணுவ உடலங்கள் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டன. பெப்ரவரி 14 புதுக்குடியிருப்பு மேற்கில் 200 படையினர் கொல்லப்பட்டனர் என்று தென்னிலங்கை ஊடகம் கூறியது, பெப்ரவரி 25 விசுவமடுப் பகுதியில் கடும் சண்டை நடைபெறுவ தாக அரச ஊடகம் கூறியது.

 
28 ஆம் நாளுக்கு முந்திய வாரத்தில் புலிகளின் சிறப்பு கமாண் டோ அணிகள் பல பெரும் தாக்குதல்களை நடத்தியதாக லக்பிம பத்திரிகை கூறியது. மார்ச் 2 சாலைப் பகுதியில் கரும்புலித் தாக்குதல் நடத்தியதாக தென்னிலங்கை ஊடகம் கூறியது. கிபிர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக இந்திய ஊடகமும் கண்ணால் கண்ட மக்களும் கூறினர்.

 
மார்ச் 3 அன்று வெற்றிலைக்கேணி, வண்ணாங் கேணிப் பகுதியில் கரும்புலித் தாக்குதல் நடந்ததாக தென்னிலங்கைச் செய்திகள் கூறியன. மற்றும் நாம் நாளாந்தம் கேட்கும் போரொலிகள் வெல்லாவெளி, கதிர்காமம் தாக்குதல்கள் அனைத்துமே புலிகள் பலம்மிக்கவர்கள். மிக வலிமை மிக்கவர்கள் என்பதையே பறைசாற்றி நிற்கின்றன.

 
ஆக நாம் வீழமாட்டோம் என்பது உறுதி. உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளைப் படித்துப் பார்த்தவர்கள் கூறும் விடயமொன்று உள்ளது. அதாவது எந்தவொரு நாட்டிலும் நடந்திராத பல்திறன் மிக்க சொந்தக் காலில் நின்று போராடும் அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு திகழ்கின்றது.

 
பல்லாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த ஆரிய திராவிடப் போர் 1958 இல் சிங்கள வெறி யாட்டத்தின்மூலம் புதுப்பிக்கப்பட்டது. எமது தேசியத் தலைவருக்கு நான்கு வயதாக இருந்தபோது நடந்த இனப்படுகொலையில் இங்கினியாக்கல கரும்புத் தோட்டத்தில் பணிபுரிந்த 150 தமிழர்கள் சிங்களவர்களால் வெட்டிக்கொல்லப்பட்டனர்.

 
சிறு குழந்தைகள் சிங்களக் காடையர்களால் கொதிக்கும் தார் கொள்கலனில் அமிழ்த்திக் கொல் லப்பட்டனர். அன்றுதொட்டு 1983 வரை தமிழி னம் குட்டுவாங்கியபடியே இருந்தது. பல்லா யிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தட்டிக்கேட்க எவரும் இல்லை என்ற மமதை சிங்களத்திற்கு. மெல்ல மெல்ல வளர்ந்த புலிகள் திருப்பித் தாக்கும் வல்ல மைபெற்றபோது தமிழருக்கு என்று ஓர் மதிப் பும் மரியாதையும் கிட்டியது.

 
சிறு கைத்துப்பாக்கியுடன் தொடக்கப் பட்ட தமிழரின் வாழ்வுப் போரானது இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை யில் விவாதிக்கப்படுமளவுக்கு முனைப்புப் பெற்றுவிட்டது. இனி எவராலும் இந்த விடு தலைப்போரை முடக்கமுடியாது. இது எமக் கான காலம். அறுபடைக்காலம்.

 
ஆம். நாம் சந்தித்த துன்ப, துயரங்கள், சாவுகள், சதிகள், துரோகங்கள், அவலங் கள் அனைத்தையும் தாண்டி வந்துள்ளது எமது போராட்டம். எழுத்தில் வடிக்கமுடியாத ஈகங்கள், உயிர்கொடைகள்மூலம் வளர்க் கப்பட்ட செடி அறுவடையை நெருங்கிநிற்கும் காலம் இது. தற்போது நாங்கள் சிறுபகுதிக் குள் முடக்கப்பட்டிருப்பது உண்மையே. இருப் பினும் இதிலிருந்து மீண்டெழும் வல்லமையை எமது தலைவரும் அவருக்குத் தோள்கொடுக்கும் போராளிகளும் கொண்டுள்ளனர்.

 
இது உண்மையானது.இந்தப் போராட்டம் வெல்லும். தியாகி லெப்.கேணல் திலீபனும், கப்டன் மில்லரும், 2ஆம் லெப்.மாலதியும், கேணல்.ரூபனும் தோற்கடிக்கடிக்கப்பட முடியாதவர்கள். அவர்களது எண்ணம் ஈடேறும். இது உறுதி.

 
நாம் உறுதியுடன் மீண்டெழுவோம். அந்த எழுச்சி ஓர் நாட்டை உருவாக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து அறுவடைக்குத் தயாராவோம். போராளிகளுக்குத் தோள்கொடுப்போம். துணைநிற்போம். வெல்லும்வரை செல்வோம். உறுதிதளராது ஊக்கம் கொடுப்போம். உறுதியுடன் மீண்டெழுவோம்.
 
 
 
 
 
 
 
 
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP