சமீபத்திய பதிவுகள்

இலங்கைக்குள் நுழைந்து விட்ட கரும்புலிகள்

>> Thursday, April 2, 2009

கொழும்புவிற்குள் 16 கரும்புலிகள் புகுந்துவிட்டனர்: அமைச்சர்களுக்கு ராஜபக்சே எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிகள் 16 பேர் ஏற்கனவே கொழும்புக்குள் நுழைந்திருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதாத் தெரிவித்துள்ள இலங்கை மகிந்த ராஜபக்சே, இதனால் அமைச்சர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்திருக்கின்றார்.



நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற வார அமைச்சரவைக் கூட்டத்தின்போதே மகிந்த ராஜபக்சே, அமைச்சர்கள் அனைவரையும் பார்த்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் நாள் மேல் மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவிருக்கின்ற போதிலும், இந்தத் தேர்தலை முன்னிட்டு நடத்தப்படும் பிரச்சாரக் கூட்டங்கள் எதிலும் கலந்துகொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர்களுக்கு ராஜபக்சே கட்டளையிட்டுள்ளார்.

பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் அதிகளவில் இருப்பதாலேயே இவ்வாறு தான் உத்தரவிடுவதாகவும் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவினரின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அமைச்சர்களின் நடமாட்டம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் செய்திகள் வாசிக்க அழுத்தவும்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

வஜ்ரா April 4, 2009 at 7:45 PM  

http://www.srilankaguardian.org/2009/04/catholic-church-ally-of-tamil-tiger.html

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP