சமீபத்திய பதிவுகள்

குடித்துவிட்டு ரோட்டில் தூக்கம்: வாய் வழியாக உடலுக்குள் புகுந்தது பாம்பு!

>> Saturday, April 25, 2009

 
 
காஷ்மீர் மாநிலம் ஜம்முவை அடுத்த பக்ஷிநகரை சேர்ந்தவர் அஸ்வின்குமார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் நாள் முழுவதும் போதையில்தான் உலா வருவார்.

நேற்று மாலை அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். போதை அதிகமானதால் ரோட்டோரத்தில் படுத்தார். வாயை திறந்தபடி குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
 
அப்போது 31/2 அடி நீளமுள்ள விஷபாம்பு திடீரென அஸ்வின்குமார் வாயில் புகுந்தது. பின்னர் அது அவரது வயிற்றில் புகுந்தது. இதனால் அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
 
அப்போது அஸ்வின்குமார் வாயில் பாம்பின் வால் இருந்தது. உடனே அவர்கள் வாலை பிடித்து பாம்பை வெளியே எடுத்தனர்.
 
அப்போது பாம்பு இறந்த நிலையில் வெளியே வந்தது.
 
அஸ்வின்குமார் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால் பதறிப்போன அவர்கள் அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிலமணி நேரத்தில் அவர் மயக்கம் தெளிந்தார். இதைப்பார்த்ததும் அவரது குடும்பத்தினர் மிகழ்ச்சி அடைந்தனர்.
 
டாக்டர்கள் அஸ்வின் குமாருக்கு இனியாவது மது அருந்துவதை விட்டு விடுங்கள். அந்த விஷ பாம்பு கடித்திருந்தால் உயிர் பிழைத்திருக்க முடியாது என்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP