சமீபத்திய பதிவுகள்

குளிரூட்டப்பட்ட தமிழர்களின் பிரேத அறை: திடுக்கிடும் தகவல் படங்கள் இணைப்பு

>> Wednesday, May 13, 2009

பொலநறுவையில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை: திடுக்கிடும் தகவல்
பொலநறுவை மாவட்டம் குருநாகல் பகுதியில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை ஒன்று இருப்பதாக நேரில் பார்த்த பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத் திடுக்கிடும் தகவலை தந்திருப்பது ஒரு கத்தோலிக்க பாதிரியார். பாதுகாப்புக் கருதி அவர் பெயர், விபரங்கள் எதனையும் நாம் பிரசுரிக்கவில்லை. இங்கு வவுனியா, புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சியில் கைதாகி காணமற்போகும் இளைஞர்களை கொண்று அவர்களின் உடல் உறுப்புக்களை (இருதயம், ஈரல், சிறுநீரகம் மற்றும் கண்கள்) என்பன எடுக்கப்பட்ட பின்னர் குளிரூட்டப்பட்ட செயற்கை சவச்சாலை அறைக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்த பாதிரியார், அவை பின்னர் மலையகம் செல்லும் பார ஊர்திகளில் ஏற்றப்படுவதாகவும், மலையக்த்தில் உள்ள சிங்கள கிராமங்களில் அவ் உடல்கள் புதைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிங்கள இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் பிள்ளைக்கு ஞானஸ்தானம் செய்யச் சென்ற பாதிரியார் அங்கு நின்ற வேளை அவ் உயர் அதிகாரியின் உறவினர் ஒருவர் பாம்புக்கடிக்கு உள்ளானதால் ஏற்பட்ட பரபரப்பில் உயர் அதிகாரி அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டதாகவும், அதனால் அயல் அட்டையில் நடந்த இக் கொடூரக் காட்சிகளை அவர் தற்செயலாக பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு தின்பண்டம் கொண்டுவந்த அதிகாரியின் சீருடையில் இரத்தக்கறை காணப்பட்டதையடுத்து, சந்தேகமடைந்த அவர் மறைந்திருந்து பலவிடயங்களை பார்த்ததாகவும் வாசலில் இருந்த உடலங்களை தமது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
 
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

2 கருத்துரைகள்:

எட்வின் May 13, 2009 at 11:26 AM  

கொடுமை அய்யா

தெய்வமகன் May 15, 2009 at 5:21 AM  

நீங்கள் சொல்லுவதை போல் தான் அதிர்வு இணையதளமும் இந்த செய்தி தவறானது என்று விளக்க அளித்துள்ளது.

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP