சமீபத்திய பதிவுகள்

தலைவர் பிரபாகரன் பாதுகாப்புடன் இருக்கிறார்: விடுதலைப்புலிகள் அறிவிப்பு: நக்கீரன் செய்தி உறுதி செய்யப்பட்டது

>> Friday, May 22, 2009

 

விடுதலைப்புலிகளின் சர்வதேச உளவுப்பிரிவை சேர்ந்த செயலகத்தின் அறிவழகன் இன்று விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளம் ஒன்றை தொடர்பு கொண்டு பிரபாகரன் உயிருடன் இருப்பதை உறுதி செய்து உள்ளார். இலங்கை அரசு பரப்பி வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று நக்கீரன் செய்தி வெளியிட்ட நிலையில் விடுதலைப்புலிகளும் இதை உறுதி செய்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று இலங்கை அரசாங்கமும், அந்நாட்டு ராணுவமும் மேற்கொண்டு வருகிற பொய்ப்பிரச்சாரத்திணை திட்டவட்டமாக மறுத்துள்ள விடுதலைப்புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இதுபற்றி கூறியுள்ள அவர், எங்கள் பாசத்துக்குரிய தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்.

விடுதலை போராட்டத்துக்கு உலகு எங்கும் பரந்து விரிந்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஆதரவுக்குரலை அடக்கி ஒடுக்கும் முகமாக இலங்கை அரசாங்கம் தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP