சமீபத்திய பதிவுகள்

கொலைகளை உறுதிப்படுத்தும் பிரச்சாரங்களின் பின்னால் மறைக்கப்படும் மனிதப் பேரழிவை எவரும் கண்டுகொள்ளவில்லை

>> Tuesday, May 19, 2009

புலிகளின் தளபதிகளின் கொலைகளை உறுதிப்படுத்தும் பிரச்சாரங்களின் பின்னால் மறைக்கப்படும் மனிதப் பேரழிவை எவரும் கண்டுகொள்ளவில்லை – அவலக்குரலொன்று:ஆங்கில மொழியாக்கம் இணைப்பு:

இந்த நிலையைச் சாதகமாகப் பயன்படுத்த தீர்மானித்துள்ள இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலமையிலான அணியினர் அதன் பின்னால் நடைபெற்ற நடை பெற்றுக் கொண்டிருக்கிற பாரிய மனிதப் படு கொலையை இனப் படுகொலையை மூடி மறைக்க  முற்படுவதாக  கரைமுள்ளி வாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறிய ஒருவர் அவலக் குரல் எழுப்பியுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட மூத்த தளபதிகளின் கொலைபற்றிய தகவல்களுக்குள் சர்வதேசம் முடங்கிக் கிடப்பதாகவும் இந்த மக்களின் அவலங்களில் இருந்து அவர்களை மீட்பதற்கு அனைத்து தரப்பினரும் முயல வேண்டும் என்ற கோரிக்கையை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துமாறும் அவர் குளோபல் தமிழ்ச் செய்தியாளரிடம்  தளதளத்த குரலில் வேண்டியுள்ளார்.
சற்று முன்னர் எமக்கு கிடைத்த இந்த தகவலில் பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காணச் சென்ற கருணா என்ற அமைச்சர் முரளீதரன் அல்லது அவருடன் கூடச் சென்றவர்கள், மற்றும் கொழும்பில் நிலை கொண்டுள்ள ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலமைகள் கடந்த 72 மணி நேரத்துள் மிகப்பெரிய அவலத்தைச் சந்தித்துள்ள தற்போதும் அவலத்தில் சிக்கியுள்ள இந்த மக்கள் குறித்து இதுவரை அரசாங்கத்திற்கான அழுத்தங்களை கொடுக்காமை வருந்தத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP