சமீபத்திய பதிவுகள்

லால்கர் மீட்கப்பட்டது ‐ மேற்குவங்கம் இராணுவக் கட்டுப்பாட்டில் அடுத்தது ஜார்கண்டா?

>> Tuesday, June 30, 2009

லால்கர் மீட்கப்பட்டது ‐ மேற்குவங்கம் இராணுவக் கட்டுப்பாட்டில் அடுத்தது ஜார்கண்டா? 


 
மேற்குவங்கம் லால்கரில் மாவோயிஸ்டுகள் கைப்பற்றி வைத்திருந்த ஐம்பது கிராமங்களை மீட்கும் நடவடிக்கையும் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இப்போது அப்பகுதி முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மத்திய இராணுவத்தின் ஐந்து கம்பெனிகளும் மாநில அரசின் சிறப்பு அதிரடிப்படையும் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் முதலில் ராம்கர், லால்கர் ஆகிய பகுதிகள் மீட்கப்பட்டு விட்டன. மாவோயிஸ்டுகள் வசம் கடைசியாக இருந்த முக்கியப் பகுதியான காந்தாபஹாரி பகுதியையும் நேற்று மீட்டதாக இராணுவம் அறிவித்தது.
 
இந்நிலையில் இராணுவம் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி கிராம மக்களை துன் புறுத்துவதாக மனித உரிமை அமைப்பினரும் எழுத்தாளர்களும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெர்வித்திருப்பதோடு மத்தியப் படைகளை உடனடியாக மேற்குவங்கத்தில் இருந்து வெளியேறுமாம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இராணுவம் தன் இறுதித் தாக்குதலைத் தொடுத்த போது மாவோயிஸ்டுகளிடம் இருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லை. அவர்கள் காடுகளுக்குள் ஓடி ஒளிந்து விட்டதாகவும். ஆங்காங்கே கெரில்லா முறையில் இராணுவக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

ஜூன் 18‐ஆம் தேதி துவங்கிய மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை நேற்றுடன் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.
 
 

அதே நேரத்தில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பள்ளிக்கூடங்களிலும், வழிப்பாட்டுத்தலங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மாவோயிஸ்ட் தலைவர்களுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ள தேடுதல் வேட்டையில் சில தலைவர்களை கைது செய்திருந்தாலும் மூத்த தலைவர்களை பிடிக்க இராணுவம் தீவீரம் காட்டுகிறது.
 

தவிரவும் கடைசியாய் கைப்பற்றப்பட்ட காந்தா பஹாரியில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்ப்தில் துரிதமாக ஈடுபட்டிருக்கும் இராணுவம். லால்கர் உடபட பல இடங்களில் இராணுவ முகாம்களை அமைக்க திட்டமிடப்படுகிறது. ஆனால் இதற்கு மேற்குவங்க ஆளும் மார்க்ஸ்சிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாங்கள் அவர்களை அரசியல் ரீதியாகவே வெல்ல நினைக்கிறோம். இராணுவ ரீதியாக அல்ல. என்பதுதான் மார்க்ஸ்சிஸ்டுகளின் கோஷமாக இருக்கிறது.

இந்நிலையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின் கொல்கத்தாவின் பத்திரிகையாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வர் புத்ததேவ்பட்டாச்சார்ய இசட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழே மாவோயிஸ்டுகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாலேயே நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் அதே சமயம் அச்சட்டத்தை முழுமையாக பாரபட்சம் இன்றி நடைமுறைப்படுத்த மாட்டோம். என்று தெர்வித்தார். ஆனால் மார்க்சிஸ்டு அரசின் இன்னொரு அமைச்சரோ  மாவோயிஸ்டுகளிடம் இருந்து 95மூ பகுதிகள் மீட்கப்பட்டு உள்ள நிலையில் அவர்கள் இப்போது ஜார்கண்ட் மாநிலத்துக்குள் சென்று விட்டார்கள். ஆகவே ஜார்கண்டில் இப்படியான நடவடிக்கையை எடுப்பதுதான் மாவொயிஸ்டுகளை மீண்டும் வளரவிடாமல் தடுக்கும்  என்றார். ஆனால் மத்திய அரசும் விரைவில் ஜார்கண்டில் மவோயிஸ்ட் தேடுதல் வேட்டையை நடத்தும் என்றே தெரிகிற்து.
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP