சமீபத்திய பதிவுகள்

குஜராத் கலவரம்-அச்சுறுத்தும் ஆவணங்கள் சிக்குகிறார் நீரோ மன்னன் மோடி

>> Saturday, June 20, 2009

குஜராத் கலவரம்-அச்சுறுத்தும் ஆவணங்கள்
சிக்குகிறார் நீரோ மன்னன் மோடி!
<http://files.periyar.org.in/viduthalai/20090620/news01.html>

அகமதாபாத், ஜூன் 20- குஜராத்தில் முசுலிம் களுக்கு எதிரான கல வரத்தின் போது,
முதல் வர் நரேந்திர மோடி பேசிய தொலை பேசி அழைப்புகள் குறித்த விவரங்கள்
எஸ்.அய்.டி. எனப்படும் சிறப்புப் புலனாய்வுப் படையி டம் ஒப்படைக்கப்பட்
டுள்ளது.
குஜராத்தில் கல வரம் உச்சகட்டத்தில் இருந்த போது முதல் வர் நரேந்திர மோடி
யிடம், முன்னாள் அமைச்சர்கள் மாயா பென் கோத்னானி, கோர்தன் ஜடாபியா, வி.எச்.பி.
தலைவர் டாக் டர் ஜெய்தீப் படேல் மற்றும் பலர் போன் செய்து விரிவாகப் பேசி
உள்ளனர் என்று தொண்டு நிறுவனம் ஒன்று அறிக்கை அளித் துள்ளது.
பலமுறை அவர்கள் மோடியுடன் போனில் பேசியுள்ளதாகவும் அந்த தொண்டு நிறு வனம்
தெரிவித்துள் ளது. இவர்களில் மாயாபென் கோத் னானி மற்றும் ஜெய்தீப் படேல் ஆகிய
இரு வரும் நரோடி படியா மற்றும் நரோடா கிரா மத்தில் நடந்த ஒட்டு மொத்த படுகொலை
களைத் தூண்டிவிட் டும், நேரில் சென்று கல வரக்காரர்களை ஊக் கப்படுத்தியதாகவும்
கடும் குற்றச்சாற்றுக்கு ஆளாகியுள்ளவர்கள் ஆவர்.
இவ்வழக்கில் குஜ ராத் அமைச்சரான மாயாபென் கோத்னா னிக்கு வழங்கப்பட்டி ருந்த
ஜாமீன் சில நாள் களுக்கு முன் ரத்து செய்யப்பட்டதை யடுத்து, அவர் தலை
மறைவானார். இதைத் தொடர்ந்து அவரை நீக்கம் செய்ய மோடிக் குக் கோரிக்கை விடுக்
கப்பட்டதும், கோத்னா னியை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்க மோடி
மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. பின்னர் கோத் னானி பதவி விலகி
விட்டு சரணடைந்தார். தற்போது அவரும் படேலும் மீண்டும் தலைமறைவாகியுள் ளனர்.
எஸ்.அய்.டி.யிடம் மோடி தொடர்பு கொண்டு தொலை பேசி அழைப்புகள் குறித்து
ஆய்வறிக்கை அளித் துள்ள ஜன் சங் கர்ஷ் மன்ச் அமைப்பின் வழக் கறிஞர் முகுல்
சின்ஹா கூறுகையில், எங்களது ஆய்வுப்படி 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி
முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை மோடிக்கு வந்த, அவர் பேசிய தொலைபேசி உரையாடல்கள்
குறித்த விவரத்தைக் கொடுத் துள்ளோம்.
இதில் ஜெய்தீப் படேல் முதல்வர் அலுவலகத்து டன் 9 முறை பேசியுள் ளார். மாயாபென்
கோத் னானி 4 முறையும், ஜடாபியா 13 முறையும், அகமதாபாத் கூடுதல் ஆணையர் நான்கு
முறை யும், துணை ஆணையர் சவானி 2 முறையும் பேசி யுள்ளனர். இந்த தொலை பேசித்
தொடர்புகள் குறித்த விவரங்களை அய்.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா கொடுத்த
விவரங்களின் அடிப் படையில் நாங்கள் தொகுத்துள்ளோம் என்றார்.
குஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடியின் தொடர்பு கள் குறித்து எஸ்.அய்.டி.
விசாரிக்க வேண்டும் என அண்மையில்தான் உச்சநீதிமன்றம் ஆணை யிட்டிருந்த நிலையில்,
மோடிக்கு வந்த தொலை பேசி அழைப்புகள் குறித்த விவரத்தை ஜன் சங்கர்ஷ் மன்ச்
எஸ்.அய். டி.யிடம் வழங்கியுள்ளது.
இந்த விவரங்களில் இருந்து குஜராத் கல வரங்களில் நரேந்திர மோடிக்கு நெருங்கிய
தொடர்பு இருந்தது என் பது மெய்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.<http://files.periyar.org.in/viduthalai/20090620/news01.html>

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP