சமீபத்திய பதிவுகள்

தமிழக பெண்களை சிங்கள ராணுவம் விபசாரம் செய்ய வற்புறுத்துகிறது

>> Monday, July 6, 2009

தமிழக பெண்களை சிங்கள ராணுவம் விபசாரம் செய்ய வற்புறுத்துகிறது:கி.வீரமணி

தஞ்சை பெரியார் இல்லத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,

''ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை நித்தம், நித்தம் கேள்விக்குறியாக உள்ளது. போர் முடிந்து 2 மாதங்கள் ஆகவிட்டன. விடுதலைப்புலிகளை எதிர்த்துதான் போர் புரிகிறோம். மக்களுக்கு எதிராக அல்ல என்று ராஜபக்சே கூறினார்.

விடுதலைப்புலிகளை முற்றிலும் அழித்துவிட்டோம் என்று சொல்லும் ராஜபக்சே, தங்களது சொந்த இடங்களுக்கு தமிழர்களை செல்லவிடாமல் தடுத்து முள்வேலிக்கு பின்னால் ஆண்கள் வேறு, பெண்கள் வேறாக பிரித்து வைத்து இருப்பது ரத்த கண்ணீரை வரவழைக்கிறது.
 
தமிழக பெண்களை சிங்கள ராணுவம் விபசாரம் செய்ய வற்புறுத்துகிறது என ஆஸ்திரேலிய பத்திரிகையில் செய்தி வருகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் எல்லையற்று சென்று கொண்டிருக்கிறது.
 
அவர்களை எல்லாம் சுதந்திரமாக செயல்பட விடாமல் அப்படியே 10, 15 ஆண்டுகளுக்கு அடைத்து வைக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது''என்று தெரிவித்தார்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP