சமீபத்திய பதிவுகள்

முஸ்லிமாக மதம் மாறிய முன்னாள் துணை முதல்- மந்திரி இந்து மதம் மாறுகிறார்

>> Wednesday, July 29, 2009



சண்டிகார், ஜூலை. 28- அரியானா மாநில முன்னாள் முதல்- மந்திரி பஜன் லாலின் மகன் சந்தர்மோகன். இவர் அரியானா மாநில துணை முதல்- மந்திரியாக இருந்து வந்தார்.ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருந்த அவர் பிசா என்ற பெண்ணை காதலித்தார். பின்னர் அவர் முஸ்லிமாக மதம் மாறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பிறகு அலுவலகத்துக்கே வராமல் பல மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இதனால் அவருடைய துணை முதல்- மந்திரி பதவி பறிக்கப்பட்டது. சந்தர்மோகன் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பிசாவுடன் குடித்தனம் நடத்தி வந்தார் . திடீரென அவர் மனைவியை பிரிந்து அரியானா வந்துவிட்டார். பின்னர் லண்டனுக்கு சென்று அங்கு தங்கி இருந்தார். அப்போது பிசாவை டெலிபோன், எஸ். எம்.எஸ். மூலம் விவாகரத்து செய்தார். கடந்த மாதம் இந்த ஜோடி மீண்டும் இணைந்தது. சண்டிகார் அருகே உள்ள மொகாலியில் தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்தனர் கடந்த 8-ந்தேதி சந்தர்மோகன் விபத்தில் சிக்கினார். கால் முறிந்து டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் பிசா உடன் இருந்து கவனிக்காமல் மலேசியா சென்று விட்டார்.<இதனால் கோபம் அடைந்த சந்தர்மோகன் இனி பிசாவுடன் சேர்ந்து வாழமாட்டேன். முஸ்லிமாக மாறிய நான் இனி மீண்டும் இந்து மதத்துக்கு திரும்ப போகிறேன் என்று கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது சமுதாய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.







NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP