சமீபத்திய பதிவுகள்

ஈழத்தமிழர்களுக்கு அடுத்த வழிகாட்டும் தலைவர் இல்லை என்பது வருத்தமளிக்கிறது: சொலவது காங்கிரஸ்

>> Wednesday, July 1, 2009

ஈழத்தமிழர்களுக்கு அடுத்த வழிகாட்டும் தலைவர் இல்லை என்பது வருத்தமளிக்கிறது: பீட்டர் அல்போன்ஸ்

இலங்கை தமிழர்களுக்கு அடுத்த வழிகாட்டும் தலைவர் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

சட்டசபையில் நேற்று, இலங்கையில் போர் முடிவுக்குப் பின்பு தமிழர்களுக்கு வாழ்வுரிமையைப் பெற்றுத் தருவது என்பதோடு மருந்து மற்றும் உணவுப் பொருள்களை ஏற்படுத்தித் தருவது குறித்து ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்,

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னரும் 3 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து பாதுகாப்பின்றி வாழ்கிறார்கள் என்கிற போது துடித்துப்போகிறோம். பிரதமர் ரூ.500 கோடி நிதியுதவி அளித்தார். ஆனாலும் இலங்கையில் இருந்து வருகிற செய்திகள் மனநிறைவை தரவில்லை. தமிழர்களை இலங்கை அரசு திருப்தியாக நடத்தவில்லை என்று நமது உள்துறை மந்திரியே கூறியிருக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்கு அடுத்த வழிகாட்டும் தலைவர் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இலங்கையில் நடந்திருப்பது மிகப்பெரிய வரலாற்று பிழை. இலங்கை தமிழர்கள் மீண்டும் வாழ்வுரிமை பெற வேண்டும். அதைப் பெறுகிற முயற்சியை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றார்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP