சமீபத்திய பதிவுகள்

ஐ.நா. அதிகாரிகள் 9 பேர் சுட்டுக்கொலை:

>> Wednesday, October 28, 2009

ஆப்கானிஸ்தானில் ஐ.நா. அதிகாரிகள் 9 பேர் சுட்டுக்கொலை: விருந்தினர் மாளிகைக்குள் புகுந்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்


காபூல், அக். 28-

தலிபான் தீவிரவாதிகள் பிடியில் இருந்து ஆப்கானிஸ்தான் மீட்கப்பட்டு விட்டாலும் நாட்டின் பல பகுதிகளில் இன்னும் அவர்களின் ஆதிக்கம் உள்ளது.
 
அவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி ஆப்கானிஸ் தானை நிலைகுலைய செய்து வருகின்றனர்.
 
ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்கும் அமெரிக்கா கூட்டுபடைகள் மற்றும் ஐ.நா. சபை ஊழியர்களை குறிவைத்து அவர்கள் தாக்குகின்றனர்.
 
ஆப்கானிஸ்தான் தலை நகரம் காபூலில் மைய பகுதியில் ஐ.நா. சபை விருந்தினர் மாளிகை உள்ளது. தனியாருக்கு சொந்தமான ஓட்டலை விருந்தினர் மாளிகையாக மாற்றி இருந்தனர். இங்கு ஐ.நா. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கி இருந்தனர். இவர்களுடன் பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் அதிகாரிகளும் தங்கி இருந்தனர்.
 
இந்த விடுதிக்கு ஏற்கனவே தீவிரவாதிகள் குறிவைத்து இருந்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தன.
 
ஆனால் பலத்தபாது காப்பையும் மீறி இன்று காலை 7 மணியளவில் தலிபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 3 பேர் இந்தமாளிகைக்குள் புகுந்தனர். அப்போது ஐ.நா. அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 100 பேர் அங்கு இருந்தனர்.
 
தீவிரவாதிகளை பார்த்ததும் அவர்களை நோக்கி பாது காப்புபடையினர் சுட்டனர். பதிலுக்கு தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி விட்டு உள்ளே அதிரடியாக புகுந்து விட்டனர்.
 
கையில் எந்திர துப்பாக்கிளை ஏந்தி வந்த அவர்கள் எதிரில் பார்த்தவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டனர்.
 
தீவிரவாதிகள் புகுந்து விட்டதை அறிந்ததும் ஐ.நா. அதிகாரிகளும், ஊழி யர்களும் அறைக்குள் ஓடி சென்று மறைந்து கொண்டனர். ஆனால் தீவிரவாதி கள் வெடிகுண்டு வீசி கதவு களை உடைத்து விட்டு உள்ளே சென்று அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். சிலரை பணய கைதிகளாக பிடித்தனர்.
 
தீவிரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அதிகாரிகள், ஊழியர்கள் 9 பேர் பலியா னார்கள். 9 பேர் காயம் அடைந்தனர்.
 
வெடிகுண்டு வீசி தாக்கியதால் கட்டிடத்தில் ஒரு பகுதியில் தீப்பிடித்து கொண்டது. இதனால் அந்தபகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளது.
 
தாக்குதல் நடந்த இடத்துக்கு கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன. அவர்கள் இந்த இடத்தை சுற்றி வளைத்து நின்று தாக்கினர். இருதரப்புக்கும் கடும் சண்டை நடந்தது.
 
நீண்ட நேர சண்டைக்கு பிறகு 3 தீவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர். அதன் பிறகு விருந்தினர் மாளிகை பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டில் வந்தது.
 
இந்த தாக்குதலுக்கு நாங்கள்தான் காரணம் என்று தலிபான் இயக்கம் பொறுப்பேற்று உள்ளது.
 
தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாரித் செய்திநிறுவனம் ஒன்றை தொடர்பு கொண்டு பேசும் போது, ஆப்கானிஸ் தான் அதிபர் தேர்தலுக்கு உதவியதால் ஐ.நா. விருந்தினர் மாளிகையை தாக்கி இருக்கிறோம். இதுஎங்கள் முதல் தாக்குதல். மேலும் தாக்குதல்கள் தொடரும் என்று கூறினான்.

source:maalaimalar
 
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP